ஹலோ தலைவரே, உத்தரவு போடும் அதிகாரம் இப்போது இல்லாததால், தன்னை எந்த அதிகாரியும் மதிக்கிறதில்லைன்னு முதல்வர் எடப்பாடி புலம்பறாராம்.''’’
""தேர்தல் நடத்தை விதிகள், நடைமுறைக்கு வந்தால், அனைத்து அதிகாரமும் அதிகாரிகள் கைக்கு வர்றது சகஜம் தான். ஆனாலும் அடுத்த ஆட்சி அமையும்வரை முதல்வர்ங்கிற மரியாதை அவருக்கு, தொடரத்தானே செய்யும்?''’’
""ஆமாங்க தலைவரே, ஆனா அது குறைஞ்சிடிச்சாம். கொரோனா தொடர்பா கோட்டையில் கடந்தவாரம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி. கூட்டத்துக்கு அவர் 3 முறை கிளம்பியும், இன்னும் அதிகாரிகள் யாரும் வரலை. லேட்டா வாங்கன்னு தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் சொல்லிக்கிட்டே இருந்தாராம். இதனால் கடுப்பான எடப்பாடி, "முதலமைச்சரான நான் கூட்டும் கூட்டத்தையே அதிகாரிகள் அலட்சியம் பண்றாங் களா? தேர்தலுக்குப் பிறகு மறுபடியும் அதிகாரத்தோடு நான் கோட்டைக்கு வருவேன்னு அவங்ககிட்ட சொல்லுங்க'ன்னு, அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். அதிகாரிகளோ தேர்தல் ட்ரெண்ட் தெரிய ஆரம்பிச்சிடிச்சின்னு தங்களுக்குள் பேசிக்கிறாங்களாம்.''’’
""தனக்கான மரியாதையை முதல்வர் எதிர்பார்ப்பது சரி. ஆனால், பிரதமர் நடத்துன கொரோனா ஆலோசனைக் கூட்டத்துக்கு அவர் மரியாதை தரலையே?''’’
""மாநில முதல்வர்களோடு கொரோனா பற்றி 17-ந் தேதி பிரதமர் நடத்திய ஆலோ சனைக்காக எடப்பாடியை, தலைமைச் செயலாளர் அழைத்தபோது, "நான் வரலை. உங்க அதிகாரிகளை வச்சி நீங்களே கூட்டத்தை நடத்துங்க. டெல்லித் தரப்பில் கேட்டா, நான் பிரச்சாரத்தில் இருக்கேன்னு சொல்லி டுங்க'ன்னு எடப்பாடி சொல்லிட்டாராம். முதல்வர் சொன்னப்ப வராத அதிகாரிகளெல்லாம் பிரதமர் நடத்திய கூட்டத்தில் ஷார்ப்பா கலந்துக்க
ஹலோ தலைவரே, உத்தரவு போடும் அதிகாரம் இப்போது இல்லாததால், தன்னை எந்த அதிகாரியும் மதிக்கிறதில்லைன்னு முதல்வர் எடப்பாடி புலம்பறாராம்.''’’
""தேர்தல் நடத்தை விதிகள், நடைமுறைக்கு வந்தால், அனைத்து அதிகாரமும் அதிகாரிகள் கைக்கு வர்றது சகஜம் தான். ஆனாலும் அடுத்த ஆட்சி அமையும்வரை முதல்வர்ங்கிற மரியாதை அவருக்கு, தொடரத்தானே செய்யும்?''’’
""ஆமாங்க தலைவரே, ஆனா அது குறைஞ்சிடிச்சாம். கொரோனா தொடர்பா கோட்டையில் கடந்தவாரம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி. கூட்டத்துக்கு அவர் 3 முறை கிளம்பியும், இன்னும் அதிகாரிகள் யாரும் வரலை. லேட்டா வாங்கன்னு தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் சொல்லிக்கிட்டே இருந்தாராம். இதனால் கடுப்பான எடப்பாடி, "முதலமைச்சரான நான் கூட்டும் கூட்டத்தையே அதிகாரிகள் அலட்சியம் பண்றாங் களா? தேர்தலுக்குப் பிறகு மறுபடியும் அதிகாரத்தோடு நான் கோட்டைக்கு வருவேன்னு அவங்ககிட்ட சொல்லுங்க'ன்னு, அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். அதிகாரிகளோ தேர்தல் ட்ரெண்ட் தெரிய ஆரம்பிச்சிடிச்சின்னு தங்களுக்குள் பேசிக்கிறாங்களாம்.''’’
""தனக்கான மரியாதையை முதல்வர் எதிர்பார்ப்பது சரி. ஆனால், பிரதமர் நடத்துன கொரோனா ஆலோசனைக் கூட்டத்துக்கு அவர் மரியாதை தரலையே?''’’
""மாநில முதல்வர்களோடு கொரோனா பற்றி 17-ந் தேதி பிரதமர் நடத்திய ஆலோ சனைக்காக எடப்பாடியை, தலைமைச் செயலாளர் அழைத்தபோது, "நான் வரலை. உங்க அதிகாரிகளை வச்சி நீங்களே கூட்டத்தை நடத்துங்க. டெல்லித் தரப்பில் கேட்டா, நான் பிரச்சாரத்தில் இருக்கேன்னு சொல்லி டுங்க'ன்னு எடப்பாடி சொல்லிட்டாராம். முதல்வர் சொன்னப்ப வராத அதிகாரிகளெல்லாம் பிரதமர் நடத்திய கூட்டத்தில் ஷார்ப்பா கலந்துக்கிட்டாங்க. இதுவும் எடப்பாடியை எரிச்சல்படுத்தியிருக்கு.''’’
""முதல்வரின் பொறுப்பில் உள்ள காவல்துறையில் சம்பந்தமேயில்லாம சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பவர் காட்டுறாராமே?''’’
""அமைச்சர் விஜயபாஸ்கரிடம் டிரைவராக இருந்த பவ் என்கிற ராதாகிருஷ்ணன், சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் மரணமடைந்தது தெரியும். அவர், சென்னை ராயப்பேட்டையில் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். அவர் மரணம் அடைந்ததும், அவர் தரப்பினர், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். இருந்தும் வீட்டுச் சாவியை உரிமையாளரிடம் ஒப்படைக்கலை. வாட கையும் கொடுக்கலை. அதனால் பொறுமை இழந்த வீட்டு உரிமையாள ரான சாருலதா, வீட்டுப் பூட்டை உடைத்து, தங்கள் பூட்டை வைத்துப் பூட்டிவிட்டார். இது அமைச்சர் விஜயபாஸ்கர் காதுக்குப் போக, அவர் தனக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அந்த வீட்டில் தனக்கு நெருக்கமான டிரைவர் சம்பந்தப்பட்ட பணம், நகை, டாக்குமெண்ட் எல்லாம் இருந்திருக்கலாம்னு செக்பண்ணச் சொல்ல... உடனே போலீஸ் தரப்போ, அந்த சாருலதாவை ஸ்டேஷனுக்கு அள்ளிவந்து கடுமையாக டார்ச்சர் செய்திருக்கு. அப்புறம், சாருலதாவின் 16 வயது மகன் அஜித்தை அழைத்துக்கொண்டு போய், கடுமையாக டார்ச்சர் பண்ணியிருக்காங்க.''’’
""தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், தேர்தல் நேர பரபரப்பிற்கு இடையில் பிரதமர் மோடியை சந்திச்சிருக்காரே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பிரதமர் அலுவலகம் அழைத்ததின் பேரில் கடந்தவாரம், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியுடன் 20 நிமிடங் கள் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பில், எடப்பாடி உள்ளிட்ட அமைச் சர்கள் சிலருக்கு எதிராக, தம்மிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த கோப்புகள் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம்னு ஆலோசிச்சாராம். இதற்கிடையே, இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில்அரோரா, ஏப்ரலில் ஓய்வுபெற இருக்கிறார். புதிய தேர்தல் கமிஷனராக துணை கமிஷனர் சுஷில் பொறுப்பேற்கும் நிலையில், துணை தேர்தல்கமிஷனர் பதவியில் ராஜீவ்ரஞ்சனை நியமிப்பது தொடர்பாகவே பிரதமர் மோடி, அவரிடம் பேசுனதா டெல்லி சோர்ஸ் சொல்லுது.''’’
""கூட்டணியில் ஒதுக்கப்பட்ட சீட்டுகள் பத்தலைன்னு பல கட்சிகளும் சொல்றப்ப, கூடுதல் சீட்டுகளை ஒதுக்கியதா ஒரு கட்சி திருப்பிக் கொடுத்திருக்கே?''’’
""கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சரத், மிச்சமுள்ள 3 தொகுதிகளுக்கு சரியான வேட்பாளர் கிடைக்காததால் அவற்றை கமலிடமே திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னார். கமல் டென்ஷனாகி ஏற்கலை. ராதிகாவும் கமலிடம் நிலைமையைச் சொல்ல... சரி, கொடுங்க. அதுக்கு நான் வேட்பாளரைத் தேடிப்பிடிக்கிறேன்னு ஒத்துக் கிட்டாராம் கமல். அந்த 3 சீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வரை வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருந்தார் கமல்.''’’
""3 சீட்டில் இரண்டு இடத்தில் சரத்தும் ராதிகாவுமே நின்றிருக்கலாமே?''’’
""இரண்டு பேரும் போட்டியிடாமல் ஒதுங்கியது ச.ம.க.வினரை சோர்வடைய வச்சிருக்கு. இதுபற்றி சரத்திடம் கட்சி நிர்வாகிகள் பேசுனப்ப, நெகட்டிவ் இமேஜ் உருவாகும்னு சொல்லியிருக்காங்க. சரத்தோ, "இந்தத் தேர்தலில் நம் கட்சி கணிசமான வெற்றியைப் பெறணும். நாங்க போட்டியிட்டால், பிரச்சாரம் செய்ய நேரம் இருக்காது. அதனால், தமிழகம் முழுவதும் நானும் ராதிகாவும் நமக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்போறோம்'னு விளக்கம் கொடுத் திருக்காராம். இருந்தும் "ஸ்டாலினும் எடப்பாடியுமே தேர் தல்ல நிக்கலையா'ன்னு ச.ம.க. நிர்வாகிகள் முனகறாங்க.''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேன். காவல்துறை பெண் எஸ்.பி.யிடம், அத்துமீறி நடந்துகொண்ட கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்குது. இது 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை வழிமறித்த செங்கல்பட்டு மாவட்ட அதிகாரி மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த உயர்அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் பண்ணலைன்னு நீதிமன்றம் காட்டமாகவே கேள்வி எழுப்பி, அரசுத் தரப்பை திணற வச்சிடுச்சி. இதைத் தொடர்ந்து சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்துடலாமான்னு உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசித்த தமிழக அரசு, புதன் இரவு ராஜேஷ்தாஸ் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டது.''’’
___________
அப்படியா சேதி!
புதுக்கோட்டை தி.மு.க. மா.செ.செல்லப்பாண்டியன் தலைமையில் விராலிமலை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்த புகாரில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அமைச்சர் விஜய பாஸ்கரின் மேட்டுச்சாலை கல்லூரியில் பரிசுப் பொருட்களை வைத்திருப்பதாகவும் அதனை சோதனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. நடவடிக்கை எதுவும் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரி வளாகத்தில் இருந்து 17-ந் தேதி காலை 11.20 மணிக்கு ஆந்திரப் பதிவு எண் (ஏபி 99 யூ 9755) கொண்ட ஒரு கண்டெய்னர் வெளியேறி புதுக்கோட்டை நோக்கிச் சென்றது. இதன் மீது ஊடகத்தின் கவனம் திரும்பக்கூடாது என்பதால், அதே நாளில் டூவீலரின் பின்னாடி உட்கார்ந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்து ஊடகங்களை திசை திருப்பினார் விஜயபாஸ்கர்.
-இரா.பகத்சிங்
திருவிளையாடல் பாணியில், "இணைந்தே இருப்பது' என்று கேட்டால் விஷயமறிந்தவர்கள் எல்லாருமே "கட்சியும் வசூலும்' என கோஷமிடுவார்கள். தேர்தல் வருகையில், பசையுள்ள பார்ட்டிகளிடம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் கைநீட்டும். திருச்சியில் எதிர்க்கட்சி பெரிய தலையானவர், சீட் விஷயத்தில் அங்குள்ள ஒரு கல்விக்குழுமம் தரப்பிடமும், மற்றொரு பெரிய கல்விக்குழும வள்ளல் வேந்தரிடமும் பெரிய தொகையைக் கேட்டிருக்கிறாராம். "கொடுத்தா சீட்டு, இல்லைனா நேர்வழியைப் பார்த்துட்டு போய்க்கிட்டே இருங்க'னு சொல்லிட்டாராம். அமவுண்ட் கண்டு மிரண்டுதான் கூட்டணிக்கு டிமிக்கி கொடுத்துட்டாராம் அந்த வேந்தர்.
-மகி
பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய டாக்டர் வரதராஜன், "பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பொள்ளாச்சி பிரபலத்தின் மகன் குறித்து நிறைய செய்திகள் வருகின்றன. அது உண்மையா பொய்யா தெரியவில்லை' என்று சொல்லி சேம்சைடு கோல் போட்டிருக்கிறார். தளபதி முதற் கொண்டு பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஆளுங்கட்சிக்கு எதிரா பேசிவருகையில், தி.மு.க. வேட்பாளர் இப்படி பட்டும்படாமல் பேசியது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது. பொள்ளாச்சி ஆளுந்தரப்பு பிரமுகரோ, "எதிர்த்தரப்பில் இப்படிப்பட்ட வேட்பாளரைத்தான் எதிர்பார்த்தேன். நமக்கு ரூட் க்ளியராகிவிடும் போலிருக்கு'ன்னு எதிர்த்தரப்பு வேட்பாளருக்கு நெருக்கமானவர்களிடம் சொல்றாராம்.
-அருள்குமார்