ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 27ந் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமர்க்களமா தொடங்கிய முதல்வர் எடப்பாடி, கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரையும் பங்கேற்க வச்சதை கவனிச்சீங்களா?''’
""அதற்கு முன்பாகவே தன்னோட எடப்பாடியில், கட்சி சீனியர்கள் யாரிடமும் கலந்துக்காமல் தன்னிச்சையா பிரச்சாரம் செய்தாரே?''
""சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கனும்னு தனது ஜோதிடர்கள் திடீர்னு சொன்ன தால்தான், எடப்பாடியில் பிரச்சார செஞ்சதா சீனியர்களுக்கு முதல்வர் விளக்கம் சொன்னார். அவங்களை சமாளிக்கத்தான் 27ந் தேதி காலையில் நடந்த பொதுக் கூட்டம். இருந்தும் ஓ.பி.எஸ் உள்ளிட்ட சீனியர்கள் ரகசியமா கூடிப்பேசி, எட்டப்பாடியின் இமேஜைக் குறைக்கணும்னு ப்ளான் பண்ணி, டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாளின் போதே அதை ஆரம் பிச்சிட்டாங்க.''’
""எம்.ஜி.ஆர். நினைவு நாளில் என்ன நடந்ததாம்?''
""ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் புடைசூழ அவரது நினைவிடத்துக்கு எடப்பாடி அஞ்சலி செய்யப் போனப்ப, திடீர்னு, கூட்ட நெரிசலைச் சாக்காக்கி, மெதுவா அவரை நகர்த்தி விட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்ங்கிற முறையில் ஓ.பி.எஸ். முதலில் மலர் தூவி அஞ்சலி செய்திருக்கிறார். அடுத்து கே.பி.முனுசாமியும், மதுசூதனனும் அஞ்சலி செலுத்திய பிறகுதான், முதல்வரான எடப்பாடியால் அஞ்சலி செய்ய முடிஞ்சிது. திட்டமிட்டு நடப்பதை புரிஞ்சிக்கிட்டு, முகம் சுருங்கிப் போனாரு எடப்பாடி.''
""மத்த அமைச்சர்களும் எடப்பாடியை ஜாடையில் இன்சல்ட் பண்றாங்களாமே?''
""விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நம்ம கட்சியில் முதல்வர் வேட்பாளரா யார் வேண்டுமானாலும் இருந்துட்டுப் போகட்டும். அதையெல்லாம் பெருசா நினைக்காமல், ஒவ் வொருவரும் நம்ம வேட்பாளர் இரட்டை இலைச் சின்னம்தான் என்கிற எண்ணத்தோடு வாக்களிக்க வேண்டும்னு சொல்லியிருக்காரு. விஜயபாஸ்கர், காமராஜ் போன்ற அமைச்சர் களோ பகிரங்கமாகவே எடப்பாடியை விமர்சித்து வருவதோடு, அவர் வரும்போது மரியாதைக்குக்கூட எழுந்திருக்கிறதில்லையாம். விழா மேடைகளில் பொதுவெளியில்னு மந்திரிகள் அவமதிப்பதை எடப்பாடியால ஜீரணிக்க முடியலை.''
""தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு உள்ளடியா?''
""எடப்பாடிக்கு எதிராக பா.ஜ.க. தலைமை விறுவிறுப்பாகக் காய் நகர்த
ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 27ந் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமர்க்களமா தொடங்கிய முதல்வர் எடப்பாடி, கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாரையும் பங்கேற்க வச்சதை கவனிச்சீங்களா?''’
""அதற்கு முன்பாகவே தன்னோட எடப்பாடியில், கட்சி சீனியர்கள் யாரிடமும் கலந்துக்காமல் தன்னிச்சையா பிரச்சாரம் செய்தாரே?''
""சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கனும்னு தனது ஜோதிடர்கள் திடீர்னு சொன்ன தால்தான், எடப்பாடியில் பிரச்சார செஞ்சதா சீனியர்களுக்கு முதல்வர் விளக்கம் சொன்னார். அவங்களை சமாளிக்கத்தான் 27ந் தேதி காலையில் நடந்த பொதுக் கூட்டம். இருந்தும் ஓ.பி.எஸ் உள்ளிட்ட சீனியர்கள் ரகசியமா கூடிப்பேசி, எட்டப்பாடியின் இமேஜைக் குறைக்கணும்னு ப்ளான் பண்ணி, டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாளின் போதே அதை ஆரம் பிச்சிட்டாங்க.''’
""எம்.ஜி.ஆர். நினைவு நாளில் என்ன நடந்ததாம்?''
""ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் புடைசூழ அவரது நினைவிடத்துக்கு எடப்பாடி அஞ்சலி செய்யப் போனப்ப, திடீர்னு, கூட்ட நெரிசலைச் சாக்காக்கி, மெதுவா அவரை நகர்த்தி விட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர்ங்கிற முறையில் ஓ.பி.எஸ். முதலில் மலர் தூவி அஞ்சலி செய்திருக்கிறார். அடுத்து கே.பி.முனுசாமியும், மதுசூதனனும் அஞ்சலி செலுத்திய பிறகுதான், முதல்வரான எடப்பாடியால் அஞ்சலி செய்ய முடிஞ்சிது. திட்டமிட்டு நடப்பதை புரிஞ்சிக்கிட்டு, முகம் சுருங்கிப் போனாரு எடப்பாடி.''
""மத்த அமைச்சர்களும் எடப்பாடியை ஜாடையில் இன்சல்ட் பண்றாங்களாமே?''
""விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நம்ம கட்சியில் முதல்வர் வேட்பாளரா யார் வேண்டுமானாலும் இருந்துட்டுப் போகட்டும். அதையெல்லாம் பெருசா நினைக்காமல், ஒவ் வொருவரும் நம்ம வேட்பாளர் இரட்டை இலைச் சின்னம்தான் என்கிற எண்ணத்தோடு வாக்களிக்க வேண்டும்னு சொல்லியிருக்காரு. விஜயபாஸ்கர், காமராஜ் போன்ற அமைச்சர் களோ பகிரங்கமாகவே எடப்பாடியை விமர்சித்து வருவதோடு, அவர் வரும்போது மரியாதைக்குக்கூட எழுந்திருக்கிறதில்லையாம். விழா மேடைகளில் பொதுவெளியில்னு மந்திரிகள் அவமதிப்பதை எடப்பாடியால ஜீரணிக்க முடியலை.''
""தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு உள்ளடியா?''
""எடப்பாடிக்கு எதிராக பா.ஜ.க. தலைமை விறுவிறுப்பாகக் காய் நகர்த்திக்கிட்டு இருக்கு. முதல் வர் வேட்பாளரா அவரை ஏற்க பா.ஜ.க. தயாரா இல்லைங்கிறது பற்றி நம்ம நக்கீரனில் தனிக் கட்டு ரையே வந்திருக்கு. அதுமட்டுமில்ல, மாநிலத் தலைவர் எல்.முருகன் தொடங்கி அண்ணாமலை வரை முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. மேலிடம் தீர்மானிக்கும்னு சொல்றாங்க. மத்திய அரசு சொன்னபடியெல்லாம் 4 வருசம் நடந்தும், கூட்டணி அறிவிப்பையும் பகிரங்கமா வெளியிட்டும் தனக்கு டெல்லி குழி பறிக்கிறதா எடப்பாடி குமுறுறாரு.''
""சரிதான்... சனிப் பெயர்ச்சி வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி போல...''
""சொந்தக் கட்சி மந்திரிகள் நாக்கிலேயே சில சமயம் சனி குடியேறிடுதுங்க தலைலவரே... மதுரையில் அம்மா கிளினிக்கைத் தொடங்கிவச்சிப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவும் முதல்வர் வேட்பாளரை பாஜ.க. தலைமைதான் அறிவிக்கும்னு சொல்ல, அப்படி அறிவிப்பது அவர்களுடைய உரிமைன்னு அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜனும் அழுத்தம் கொடுத்துச் சொல்லி எடப்பாடியின் பிரஷரை அதிகமாக்கி இருக்காங்க. அதோடு பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க.வை உடைக்க, அதிரடி மூவ்களையும் நடத்திக்கிட்டு இருக்குதாம்.''
""என்னப்பா சொல்றே? தி.மு.க.வை வீழ்த்துவதற்காக சசிகலாவையும் சேர்த்து அ.தி.மு.க.வை வலிமையாக்க பா.ஜ.க. நினைக்குதுன்னு சொல்லப்பட்டதே?''
""ரஜினி களமிறங்குவதா அறிவிச்சதும், பா.ஜ.க.வோட வியூகம் மாறிடிச்சிங்க தலைவரே.. "அண்ணாத்தே' ஷூட்டிங்கில் கொரோனோ பாதிப்பினால், ஹைதராபாத் அப்போலோவில் அட்மிட்டான ரஜினிக்கு, கொரோனா இல்லைன்னாலும் ரத்த அழுத்தம் கூடிடிச்சி. டாக்டர்கள் அவர் உடல்நலனை சீராக்க, பாஜ.க தரப்பிலோ ரஜினி யின் கட்சி தொடக்கம் பற்றிய கவலை தெரிந்தது. ஜனவரியில் கட்சி, டிசம்பர் கடைசியில் அதற்கான அறிவிப்புன்னு ஏற்கனவே சொன்ன ரஜினி, தன்னோட உடல்நலன் தேறியதும் அதை அறிவிப் பாருன்னு எதிர்பார்ப்பு இருக்குது. அ.தி.மு.க.வில் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பவர்களை எல்லாம், ரஜினி பக்கம் அனுப்பி வைக்கும் திட்டத்தைப் பா.ஜ.க. வகுத்திருக்கு. சசிகலா ரிலீஸ் ஆகும் போது அ.தி.மு.க. மேலும் கலகலத்திடும்னு நினைக்குதாம். இதை யெல்லாம் புரிஞ்சிக்கிட்டதால்தான், அமைச்சர்கள் பலரும் எடப் பாடியை பகிரங்கமாவே அலட்சியப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்களாம்.''
""தேர்தல் பரப்புரை கூட்டத்தை ஆளுங்கட்சித் தரப்பு பிரம்மாண்டமா ஏற்பாடு செய்திருந்தும் பெரியளவில் கூட்டமோ எழுச்சியோ தெரியலையே? எடப்பாடிதான் முதல்வர்ங்கிற தொனியில் ஓபி.எஸ்.ஸூம் பேசலை. கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்கலையே?''’
""பா.ம.க.வை பங்கேற்ப வைப்பதற்காக சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்துக்கு போன அமைச்சர்கள் தங்கமணிகிட்டேயும் அன்பழ கன்கிட்டேயும் டாக்டர் ராமதாஸ், ""எங்களுக்கு குறைந்த பட்சம் 33 தொகுதிகள் வேண்டும். அதில் 28-ஐ, பா.ம.க.வுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் தரனும். மீதமுள்ள 5 தொகுதிகளைத் தென் மாவட்டங்களில் கொடுத்தாக ணும்''னு சொல்லியிருக்காரு. இதைக் கேட்டுத் திகைத்த அமைச்சர்களிடம், தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளின் பட்டியலையும் படித்துக்காட்டி, அவர்களை படபடப்புக்கு ஆளாக்கிவிட்டாராம் ராமதாஸ்.''
""பா.ம.க. கேட்கும் பட்டியலில் எந்தெந்தத் தொகுதிகள் இருக்குதாம்?''
""சொல்றேங்க தலைவரே, சென்னைன்னு எடுத்துக்கிட்டா, வேளச்சேரி அல்லது சைதாப் பேட்டை, அம்பத்தூர் அல்லது மாதவரம், வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர், கும்மிடிபூண்டி அல்லது சோழிங்க நல்லூர்னு ஒரு சில சாய்ஸைக் கொடுத்திருப்பதோடு, திருப்போரூர், திருத்தணி, சோளிங்கர், கலசப்பாக்கம், அணைக்கட்டு, செய்யார், உத்திரமேரூர், வானூர் (தனி), மைலம் அல்லது செஞ்சி, பண்ருட்டி அல்லது சிதம்பரம், ஜெயங்கொண்டம், குன்னம், மயிலாடுதுறை அல்லது பூம்புகார், வேதாரண்யம், வேப்பனஹள்ளி அல்லது கிருஷ்ணகிரி, பெண்ணாகரம், மேட்டூர், தர்மபுரி, வீரபாண்டி, சேலம் மேற்கு, பரமத்தி வேலூர், பவானி, அந்தியூர் ஆகிய தொகுதிகளின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்குதாம். இதுதவிர தென் மாவட்டங்களில் 5 தொகுதிகளாம். இதையெல் லாம் எடப்பாடியிடம் தெரிவிப்பதாக அமைச்சர்கள் சொன்னார்களாம். இருந்த போதும், 31-ந் தேதி கூட இருக்கும் பா.ம.க.வின் பொதுக்குழுவில் கூட்டணியா, தனித்துப் போட்டியான்னு கருத்துக்கேட்டு சொல் றேன்னு ராமதாஸ் சொல்லிட்டதால, அ.தி.மு.க. பிரச்சாரக் கூட்டத்தில் பா.ம.க. இல்லை. பா.ஜ.க. விடமிருந்து சிக்னல் கிடைக்கலைன்னு சொலறாங்க.''
""தனக்கும் அ.தி.மு.க.வுக்கும் எதிரான மூவ்களில் இறங்கியிருக்கும் பா.ஜ.க.வை, எடப்பாடி எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?''
""எடப்பாடியைப் பொறுத்தவரை முடிந்தவரை பா.ஜ.க. கூட்டணியில் தொடர்வது. முடியாத பட்சத்தில் எதிர்ப்பதுங்கிற முடிவில் இருக்கிறாராம். அதனால் தான் 27-ந் தேதி சென்னையில் நடந்த பிரச்சாரத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி, அ.தி. மு.க.வை வீழ்த்த சில புல்லுருவிகள் சதி செய்கிறார்கள்; வீழ்த்த நினைப்பவர்கள்தான் வீழ்ந்து போவார்கள்னு தாக்க, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை . அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருங்காலிகள் தமிழகத்திற் குள் நுழையப் பார்க்கிறார்கள். தேசிய கட்சியாக இருந் தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாதுன்னு பா.ஜ.க.வை கடுமையாகவே அட்டாக் பண்ணியிருக்கார்.''
""மேடையிலே வீராவேசமா பேசுறது வழக்கம்தான். உள்ளுக்குள்ளேயும் கட்சி அதே பலத்தோடு இருக்கணும்ல. ஆளுங்கட்சியா 10 வருசம் தொடர்ந்து இருந்த நிலையில் அதி காரத்தை அனுபவிச்சவங்க-அனுபவிக்காதங்கன்னு இரண்டு தரப்பு இருக்குதே?''
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் மீனவர் அணி மாநில செயலாளரான நீலாங்கரை முனுசாமி, அக்கட்சியில் இருந்து விலகி தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வில் இணைந்திருக்கிறார். சேர்ந்த வேகத்திலேயே அவருக்கு சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இரு தொகுதிகளை உள்ளடக் கிய தென்சென்னை தெற்கு மா.செ. பதவியைக் கொடுத்திருக்கிறார் தினகரன். இவர் இப்படி அ.தி. மு.க.வில் இருந்து விலகிவரக் காரணம், அமைச்சர் ஜெயக்குமார்தானாம். அதிகாரம் கையில் இருப்ப தால் தன்னோட மகன் ஜெயவர்த்தனை மீனவர் சமூகத்தின் அசைக்க முடியாத சக்தியாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்காகவே நீலாங்கரை முனுசாமியை எடப்பாடியிடம் சொல்லி ஓரங்கட்டி வைத்திருந்தாராம் ஜெயக் குமார். இது தொடர்பாக எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்.சிடம் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் அவர் தினகரன் பக்கம் போயிருக்கிறாராம். இன்னும் பலரும் தாவலுக்கு ரெடியாகிவிட்டார்களாம்.''
""இருக்கிற அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கலைன்னா இதே பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே?''
""உண்மைதாங்க தலைவரே, ராமநாதபுரம், திருவாடனை, முதுகளத்தூர், பரமக்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட, ராமநாத புரத்துக்கு மா.செ.வா முன்னாள் அமைச்சர் மணி கண்டன் இருந்தார். அவரிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட போது மா.செ. பதவியையும் பறித்தார் எடப்பாடி. புதிய மா.செ.வாக முனியசாமி நியமிக்கப்பட்டார். இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்ங்கிறதால மணிகண்டனோ, ராமநாத புரம், திருவாடனை ஆகிய தொகுதிகளைத் தனி மாவட்டமாகப் பிரித்து, அதுக்குத் தன்னை மா.செ.வாக ஆக்கணும்னு வலியுறுத்த ஆரம்பிச் சிட்டராம். இல்லைன்னா அவர் வேறமாதிரி யோசிப் பார்ன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.''
""இத்தனை களேபரத்துக்கு நடுவுல ஜனவரியில் சட்டமன்றத்தை எடப்பாடி அரசு கூட்டியாகணுமே?''
""ஆமாங்க தலைவரே, பொங்கலுக்கு முன்பாகவே சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருக் கிறார் எடப்பாடி. ஆளுநர் உரையுடன் கூடும் கூட்டத்தை நடத்தி விட்டு, பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். அது தொடர்பாக அதிகாரிகளுடம் ஆலோசித்து வருகிறார் ஓ.பி.எஸ். மேலும், சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் ஆட்சியாளர்கள் எழுதி தரும் உரையை, அண்மைக்காலமாக எடப்பாடி அரசோடு முரண்பட்டிருக்கும் ஆளுநர் எப்படி வாசிக்கப்போகிறார்ங்கிற யோசனையும் கோட்டை வட்டாரத்தில் இருக்குது. கொரோ னாவை காரணம் காட்டி இந்த முறையும் கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்துவ தான்னும் ஆலோசனை நடக்குது.''
""ம்.. எனக்கு கிடைச்ச தகவல் ஒண்ணு சொல்றேன்.. கேரள மாநில திருவனந்தபுரத்தில் இருக்கும் சங்கரமடத்துக்குச் சொந்தமான ஸ்வாதித் திருநாள் மருத்துவக் கல்லூரியை புதிய நீதிக்கட்சித் தலைவரான ஏ.சி.எஸ்.சிடம் விற்க நடக்கும் விவகாரம் பத்தி நாம் நிறையவே பேசியிருக்கோம். அவர் கர்நாடகாவில் நடத்திவந்த மெடிக்கல் கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்துசெய்யப் பட்டிருக்கும் நிலையில், இப்போது 110 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த கேரளக் கல்லூரியை 40 சி’க்கு விற்பதாக கணக்குக் காட்டப்பட்டு அது தொடர்பான சில காரியங்கள் நடந்தேறியிருக்கு. இதைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி ஏ.சி.எஸ்.சுக்கு ஒரு மெசெஜ் அனுப்பியிருக்கிறாராம். அதில், ’இந்த வர்த்தகத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த கௌடில்யர் நான். இதை மறந்துடாதீங்க என்ற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறாராம். இதுதான் இப்ப சங்கரமடத்துத் தரப்பின் ஹாட் டாப்பிக்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கிறேன். தி.மு.க சைடில் தனது கோரிக் கைகள் எப்போது பரிசீலிக்கப்படும்னு தெரியாத நிலையில் மு.க.அழகிரி ஜனவரி 3ல் தன் ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்துறதா சொல்லிட்டாரு. தனிக்கட்சி, ரஜினி ஆதரவுன்னு என்ன ரூட் எடுத் தாலும் அது தி.மு.க.வுக்கு குடைச் சல்தான் சொல்றாங்க.''