""ஹலோ தலைவரே, கொரோனாவால தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தது, அ.தி.மு.க. தரப்பைத் தாண்டி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கு.''
""ஆமாம்பா, ரொம்பவும் அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர்னு எல்லோராலும் மதிக்கப்பட்டவராச்சே துரைக்கண்ணு.''
""உண்மைதாங்க தலைவரே, மக்கள் செல்வாக்கோடு பாபநாசம் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். எடப்பாடியின் அம்மா மறைந்த போது, துக்கத்துக்கு கிளம்பிய துரைக்கண்ணு, வழியிலேயே மூச்சுத் திணறலுக்கு ஆளான நிலையில்தான், மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவரது நுரையீரல் 90 சதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் 31-ந் தேதி இரவு 11.15-க்கு உயிர் பிரிஞ்சதா அறிவிக்கப்பட்டிருக்கு.'' ’’
""அமைச்சரின் மரணம், தாமதமாக அறிவிக்கப் பட்டதாகத் தகவல்கள் சிறகடிக்கிதே.''
""அதுக்கு கரணம், அ.தி.மு.க. தரப்பின் அவசரம்தான். அமைச்சர் மரணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப் குழுவில், அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டி ருக்குதாம். அதேபோல் தென்மாவட்ட அமைச்சர் ஒருவரும் முன்னதாகவே துரைக்கண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கார். இது தொடர்பாக விசாரித்த போது, அமைச்சர் துரைக்கண்ணுவுக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் நெருக்கமான நட்பு உண்டுன்னும், அந்த வகையில் இருவருக்கும் இடையில் நிறைய டிரான்சக்ஷன்கள் நடந்திருக்குன்னும் சொல் றாங்க. அது தொடர்பான தகவல் திரட்டுதல், க்ளியரன்ஸ்னு மருத்துவமனையிலேயே பஞ்சாயத்துகள் நடந்ததாம். எல்லாமே நேர் செய்யப்பட்ட பிறகுதான் அமைச்சரின் மரணம் அறிவிக்கப்பட்டதாக அ.தி.மு.க.சீனியர்கள் மத்தியிலேயே டாக் அடிபடுது.''
""அமைச்சர் துரைக்கண்ணுவின் இறுதிச்சடங்குக்கு முன்பாகவே அவரோட இலாகா யாருக்குன்னு போட்டியும் உருவாயிடிச்சே?''
""துரைக்கண்ணுவின் வேளாண்மைத் துறையைக் கைப்பற்ற, அமைச்சரவை சகாக்களான ஓ.பி.எஸ்., சி.வி.சண்முகம், காமராஜ், உள்ளிட்டோர் முயற்சித்தனராம். துரைக்கண்ணு வன்னியர் சமூகம் என்பதால், அவரது இலாகாவை தன்னிடம் ஒப்படைக்கனும்னு சி.வி.சண்முகம் எடப்பாடிக்கு பிரஷர் கொடுத்தாராம். வைத்தியலிங்கமோ, துரைக்கண்ணு என் மாவட்டத்துக்காரர். அதனால் நான் பரிந்துரைக்கும் ஒருவரைப் புதிதாக அமைச்சராக்குங்கள்னு சொல்ல, டெல்டா மாவட்ட அமைச்சர்களான காமராஜும் ஓ.எஸ். மணியனும்கூட கூடுதலாக அந்தப் பதவிக்கு மல்லுக்கட்டினராம். இந்நிலையில் உயர் கல்வித்துறை அன்பழகனுக்கு அந்தப் பதவியை கொடுத்துள்ளார்கள்.''
""பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலை எடப்பாடி கையில் எடுத்திருக்கிறார்னு அ.தி.மு.க. தரப்பில் இருந்தே செய்திகள் கசியவிடப்படுதே.''
""ஆமாங்க தலைவரே, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் ஒன்றரை மாதமாக இழுத்தடிச்சார். இதை எதிர்த்து தி.மு.க. நடத்திய போராட்டம் பெரிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதனால், அரசமைப்புச் சட்டம் 162- வது பிரிவைப் பயன்படுத்தி எடப்பாடி அரசு, அந்த உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணையைப் பிறப்பித்தது. இது கவர்னருக்கு எதிரானதோடு, கவர்னரை எதிர்த்து அதிரடி நடவடிக்கையா தேசிய அளவில் எதிரொலிப்பதா அ.தி.மு.க. அரசு நினைக்குது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணி கொண்ட கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளை அடிமைகளாக நடத்தும் மோடி அரசுக்கு, மம்தா-உத்தவ்தாக்கரே பாணியில் எடப்பாடியும் ரிவிட் அடிச்சிருப்பதா சொல்றாங்க.''
""ஆரம்பத்திலேயே இந்த ரிவிட்டை அடிச்சிருக்கலாமே?''
""இந்த வருச கலந்தாய்விலேயே உள்ஒதுக்கீட்டை கொண்டு வரணும்ங்கிறதுக்காக, அமைச்சர்களை ராஜ்பவனுக்கு அனுப்பி, உடனடியாக அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும்படி கவர்னருக்கு கோரிக்கை வச்சார் எடப்பாடி. கவர்னரோ, என்னை உங்கள் விருப்பம் போல் எல்லாம் நிர்பந்திக்க முடியாதுன்னும், மசோதா பற்றி முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் தேவைன்னும் சொல்லியிருக்காரு. இதுதான் தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது. அமைச்சர் களிடம் எடப்பாடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியபோது சி.வி. சண்முகம், 7.5 சதவீத இடஒதுக்கீட் டால் நமக்கு ஆதரவு பெருகிவிடக் கூடாதுன்னு தான் கவர்னர் மூலம் நமக்கு டெல்லி செக் வைக்குதுன்னு சொல்ல, அதன்பிறகுதான் அந்த இட ஒதுக்கீடுக்கான அரசாணையைப் பிறப்பிச்சாராம் எடப்பாடி.''
""இதே பாணியில், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய எழுவர் விடுதலை பற்றியும் எடப்பாடி ஆலோசிக்கிறாரா?''
""ஜெயலலிதா காலத்திலிருந்தே ஆலோசிக்கிறாங்க தலைவரே, 7 பேர் விடுதலை விவகாரத்திலும் அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் கவர்னர் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதால், அதுகுறித்தும் சிறப்பு அரசாணை வெளியிடலாமான்னு அமைச்சர்களிடம் ஆலோசிச்சாராம் எடப்பாடி. புது வருட தொடக்கத்தில் அது பற்றி நல்லதொரு முடிவெடுக்கலாம்னு நினைக்கிறாங்களாம். அமைச்சர்களிடம் எடப்பாடி பேசுறப்ப, நாம் நட்புறவைக் கருதி எல்லா விசயத்திலும் மத்திய அரசுக்கு ஒத்துழைச்சாலும், ரெய்டுங்கிற பேர்ல நம்மை, மோடி அரசு மிரட்டிக்கிட்டுதான் இருக்கு. அதனால் நாமும் நமக்குள்ள அதிகாரத் தைக் காட்டனும். இனி ராஜ்பவன் சொல்றதுக் கெல்லாம் செவி சாய்க்கக் கூடாதுன்னு சொன்ன தாகவும் தகவல். இதற்கிடையே, கவர்னரை தமிழக அரசு அவமதிச்சதாகக் கொதிக்கும் ஆர்.எஸ்.எஸ். தரப்பு, அந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டு மசோதா வுக்கு எதிரா வழக் குப் போட லாமான்னு ஆலோசிக்குதாம்.''
""உள்இட ஒதுக்கீடு குறித்து டெல்லியின் நிலைப் பாடு என்ன?''
""அவங்க வேறொரு கோணத்தை சொல்றாங்க.. உள்இடஒதுக்கீடு தொடர்பா தமிழக அரசு போட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் கொடுக்கலாமான்னு மத்திய அரசிடம் கவர்னர் ஆலோ சனை கேட்டிருந்தாராம். மத்திய அரசோ, தான் கொண்டு வந்த உயர் சாதிப்பிரினரில் ஏழைகளுக்கு 10 சத இட ஒதுக்கீடுங்கிற சட்டம் பற்றி, தமிழக அரசு எந்தவித முடிவும் எடுக்கலைங்கிறதைச் சுட்டிக்காட்டி இருக்கு. இதைத் தொடர்ந்து கவர்னர் அலுவலகம் கறார்க் குரலில் எடப்பாடி அரசிடம் கேட்டிருக்குது. அதற்கப்புறம்தான், மத்திய அரசின் அந்த உயர் சமூக ஒதுக்கீடு, தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும்னு எடப்பாடி அரசு உத்தரவைப் பிறப்பிச்சிருக்கு. அதற்கான சான்றிதழை வழங்கவும் ஒப்புக் கொண்டிருக்கு. இந்த டீலுக்குப் பிறகுதான், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 7.5.% உள் இடஒதுக்கீட்டுக்கு நீங்களும் ஒப்புதல் அளிக்கலாம்னு கவர்னருக்கு கடிதம் எழுதியிருக்கார். அது கிடைத்ததும் ராஜ்பவன் எடப்பாடிக்கு இந்தத் தகவலைச் சொல்லியிருக்கு. இதைத் தொடர்ந்தே, எடப்பாடி 162வது பிரிவின்படி அரசாணையைப் பிறப்பிச்சிருக்கார். அவராவது டெல்லி எஜமானர்களை எதிர்ப்ப தாவதுன்னு அங்கேயிருந்து தகவல் வருது.''
""ரஜினி வெளியிட்ட டுவிட்டர் பெரும் விவாதமாகி இருக்கே? எதற்காக தனக்கு உடல் நிலை சரியில்லாததை அவர் இப்ப வெளிப்படுத்தனும்?''
""அது சம்பந்தமா நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு... படிச்சிப் பாருங்க தலைவரே, சமீப காலமாகவே ரஜினியின் உடல்நிலை கருதி, அவரது இரண்டு மகள்களும், முதல்ல உங்கள் உடம்பை கவனி யுங்கள். வெளியே நிலைமை சரியில்லை. கொரோனா எப்ப யாரைத் தாக்கும்ன்னு தெரியலை. அதனால் நீங்கள் உழைச்சது போதும். ஓய்வெடுத்துட்டு குடும்பத்தோடு இருங்கள். அரசியலும் வேண்டால். நடிப்பும் வேண்டாம். எங்களுக்கு நீங்கள் வேணும்னு உருக்கமா வேண்டுகோள் வச்சி ருக்காங்க. ரஜினியால இதைத் தட்ட முடியல. கமிட் ஆன படங்களை மட்டும் முடிச்சித் தந்திட லாம்னு நினைக்கிறாராம். அதேபோல் தனக்கு மருத்துவர்கள் சொல்லிய அறிவுறுத்தல்களைக் குறிப்பிட்டு, ஒரு அறிக் கையை தனது நண்பர் ஒருவர்மூலம் தயாரித்த ரஜினி, தன் ஒப்புதலோடுதான் வெளியிட வச்சாராம். இதனால் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் அதிருப்தியடைய, அதை அறிந்த ரஜினி, அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட டாக்டர்களின் அறிவுறுத்தல் சரிதான். ஆனால் அறிக்கை என்னுதில்லைன்னு, படையப்பா பட செந்தில் போல் டுவிட் பண்ணிட்டார்.''
""சரிப்பா, விரைவில் ரிலீஸ் ஆகத் துடிக்கும் சசிகலாவுக்கு டெல்லியின் க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாமே?''
""உண்மைதாங்க தலைவரே, அமித்ஷாவுக்கு திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப, அவரும் பதிலுக்கு ஜெய் ஆனந்துக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கார். இதனால் டெல்லியின் பரிவுப் பார்வை தங்கள்மீது விழுந்திருப்பதாக மன்னார்குடித் தரப்பு மகிழ்ந்தது. அந்த நேரத்தில், சசிகலாவின் அபராதத் தொகை யைக் கட்டச்சொல்லி டெல்லி நேரடியாகவே சிக்னல் கொடுத்திருக்கு. அதனால் சசி தரப்பு அபராதத் தொகையைக் கட்டும் முயற்சியில் மும்முரமா இறங்கியிருக்கு.''
""இந்த நேரத்தில் சசிகலா தரப்புக்கு ஒருத்தர் செக் வச்சிருக்காராமே?''
""ஆமாங்க தலைவரே, ஏற்கனவே சசிகலா எப்போது ரிலீஸாகிறார்னு கர்நாடக சிறைத்துறைக்கு தகவல் உரிமை சட்டத்தின்படி கடிதம் எழுதி, பதில் வாங்கிய பெங்களூர் வழக்கறிஞர் நரசிம்மமூர்த்திமீது, சசிகலா தரப்பு கடுப்பில் இருந்தது. இனி என் தொடர்பான கேள்விகளுக்கு யாருக்கும் பதில் தரக்கூடாதுன்னு, தனது வழக்கறிஞர் மூலம் கர்நாடக சிறைத் துறையிடம் கடிதம் கொடுத்தார் சசிகலா. ஆனாலும் அவரை விடாத நரசிம்மமூர்த்தி, நான் சசிகலாவின் பர்சனல் வாழ்க்கையைப் பற்றிக் கேட்கவில்லை. அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி. அதனால் அவர் குறித்து எழுப்பும் கேள்களுக்கு பதில் கொடுத்து தான் ஆகவேண்டும்னு தெரிவித்திருக்கிறார். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதோடு, அவர்கள் திருடிய பொருட்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சட்டம். அதன்படி ஜெ-சசி அப்போது சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 66.6 கோடி. இப்போது இதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி. அதனால ஜெ’வும் சசிகலாவும் வாங்கிக் குவித்த ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை, சசிகலா தரப்பு மட்டும் அனுபவித்து வருவது எப்படி? எனவே அந்த சொத்துக்களைக் கைப்பற்றவேண்டும்னு அதிரடி கிளப்பி, சசி தரப்பின் முன் நரசிம்மாவதாரம் எடுத்திருக்கிறாராம் அந்த பெங்களுர்க்காரர்.''
""நானும் ஒரு முக்கியமான தலவலைச் சொல்றேம்பா. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருப்பதால், வாக்காளர்களைக் கவர நினைக்கும் எடப்பாடி, தீபாவளியை ஒட்டி ரேசன் கார்டுக்குத் தலா ரூபாய் 2 ஆயிரம் வீதமும், சுகாதாரத்துறையைச் சேர்ந்த களப் பணியாளர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் வீதமும் கொடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். அரசின் இந்த அன்பளிப்பை இப் போது தீபாவளிக்குக் கொடுத்தால் எஃபெக்டாக இருக்குமா? இல்லை, பொங்க லுக்குக் கொடுக்கலாமா? என்றும் அவர் தாயம் உருட்டுகிறாராம்.''