""ஹலோ தலைவரே, கலைஞரைப் பார்க்க சோனியா காந்தி வரப்போறாங்கன்னு டெல்லிப் பக்கமிருந்து தகவல் கிடைச்சிருக்கு.''’

""அது சரிப்பா, "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'ங்கிற கலைஞரின் அந்த காந்தக் குரல், மறுபடியும் எப்ப ஒலிக்கும்ங்கிற எதிர்பார்ப்புதானே தி.மு.க. தொண்டர்களிடம் அதிகமா இருக்கு! கலைஞர் எப்படி இருக்காராம்?.''’

kalaingar

""கலைஞர் குரல் கேட்கலைன்னாலும் அவரை மையமா வச்சுதான் அரசியல் நடக்குது. மூச்சுத் திணறலை சரிசெய்ய அவர் தொண்டையில் டிராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருப்பதால், கலைஞரால் இப்போதைக்கு பேச முடியாது. மற்றபடி முதுமையின் பிடியில் இருந்தபோதும், கலைஞரின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத் துடிப்பு எல்லாமே கட்டுக்குள் சீரா இருக்கு. மருத்துவர்களின் பராமரிப்போடு கோபாலபுரத்தில் கலைஞரை அவர் குடும்பத்தினர் அக்கறையா கவனிச்சிக்கிறாங்க. கலைஞரின் மகள் செல்வியும், மகன் தமிழரசுவும் எப்போதும் அவர் அருகிலேயே இருக்காங்க. கனிமொழியின் கவனிப்பும் கலைஞரை உற்சாகம் கொள்ளவைக்கிது. மு.க.ஸ்டாலின், லண்டன் போன நிலையிலும், தினமும் போன்போட்டு, அப்பாவின் உடல்நலன் எப்படி இருக்குன்னு விசாரிச்சிக்கிட்டே இருந்தார். சமீபத்தில் அழகிரியும் ஒருமுறை கலைஞரை சந்தித்தார். கலைஞரின் உதவியாளர்கள் அக்கறையா கவனிக்குறாங்க. ஆனாலும், பருவ நிலை மாறும்போது மட்டும் சின்னச் சின்ன மாற்றங்கள் கலைஞரின் உடல்நிலையில் தெரியுதாம்.''’’

Advertisment

""இப்பதான் திடீர் மழை, திடீர் வெயில்ன்னு வானம் அடிக்கடி கட்சி மாறுதே?''’

""ஆமாங்க தலைவரே, அதனால்தான் மருத்துவர்கள் கலைஞருக்கு சளித்தொல்லை ஏற்படாதபடி பார்த்துப் பார்த்து, உரிய மருந்துகளை அவருக்குக் கொடுக்கறாங்க. சந்திப்பவர்களை கொஞ்ச அவகாசம் எடுத்து புரிஞ்சுக்குறாரு கலைஞர். அதேபோல் கலைஞரின் கேட்கும் திறன் கூடுவதும் குறைவதுமா இருப்பதால், அதையும் கவனமா பரிசோதிக்கிறாங்க. அதேபோல் அவரின் பார்வைத் திறனையும் அதற்குரிய நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கிறாங்க. கலைஞருக்கு கண்ணில் காட்ராக்ட் அறுவை சிகிச்சையே செய்ற அளவிற்கு அவருடைய உடல்நிலை நல்லாவே இருக்குதாம். அதனால் கலைஞருக்கு செய்யவேண்டிய அடுத்தகட்ட சிகிச்சை குறித்து அவர் குடும்பத்தினர் மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்காங்க.''’

raghul-sonia

Advertisment

""சோனியா காந்தி கலைஞரைப் பார்க்க வருவது உடல்நிலை விசாரிப்பா? அரசியல் கணக்கா?''’

""ஆகஸ்ட் 30-ல் மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருக்கும் தி.மு.க., அகில இந்தியத் தலைவர்களான ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால்னு பலரையும் அழைக்க நினைக்கிது. இது தொடர்பாக ராகுலுக்கு தி.மு.க அழைப்பு விடுத்தப்ப, அவர் சோனியாவிடம் போய், தி.மு.க. மாநாட்டை நடத்தும் சமயத்தில் நான் வெளிநாட்டில் இருப்பேன். அதனால், குலாம்நபி ஆசாத் போன்ற நம் சீனியர் தலைவர்களை கலந்துகொள்ளச் செய்யலாமான்னு கேட்டிருக்கார். சோனியாவோ, அப்ப என் உடல்நிலை சரியாக இருக்குமானால், நானே தி.மு.க. மாநாட்டில் கலந்துக்கப் பார்க்கிறேன். அப்படியே கலைஞரின் உடல்நிலையை நான் விசாரித்தது போலவும் இருக்கும்ன்னு சொல்லியிருக்காரு.''’

""விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவும் தன்னோட மாநாட்டிற்கு ராகுலை நேரில் போய் அழைச்சிருந்தாரே?''’

""திருமாவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 17-ல் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆகஸ்ட் 17-ஐ ஒட்டி தேசப் பாதுகாப்பு மாநாட்டை நடத்த ராகுலை நேரில் சந்தித்தபோது, அவரிடம் தேதி கேட்டிருந்தார் திருமா. ராகுலோ, நான் அப்போதைக்குப் பார்த்துச் சொல்றேன்னு சொல்லியிருந்தார். இப்ப தி.மு.க. மாநாட்டில் ராகுல் கலந்துகொள்ள இயலாத நிலையில், சிறுத்தைகள் மாநாட்டில் மட்டும் கலந்துகொள்வதுபற்றி காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கு. தி.மு.க. மாநாட்டில் சோனியா காந்தி உறுதியாகக் கலந்துகொள்ளும் பட்சத்தில், ராகுல் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்துகொள்வதால் எந்த அரசியல் சிக்கலும் வராதுன்னும் அவங்களுக்குள்ளேயே விவாதிச்சிருக்காங்க.''’

thiruma,vasanthkumar

""காங்கிரசில் இது மாதிரி புரோட்டாக்கால் சிக்கல் மட்டுமா? இப்ப போட்டா போட்டிச் சிக்கலும் இருக்கேப்பா?''’

""தமிழ்நாடு காங்கிரஸில் இப்ப மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. அண்மையில் அவங்க சார்பில் கட்சித் தலைவர் ராகுலிடம் 2 கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கு. அதில் ஒரு கடிதம், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை மாற்றணும்னு வலியுறுத்தியிருக்கு. இன்னொரு கடிதம், அந்தப் பதவியில் தொழிலதிபரும் எம்.எல்.ஏ.வுமான வசந்தகுமாரை உட்கார வைக்கணும்னு வேண்டுகோள் வச்சிருக்கு. இது சம்பந்தமா விசாரிச்சதில், 8 எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் அந்தக் கடிதங்களில் கையெழுத்துப் போடலையாம். தேர்தலுக்கு முன் மாநிலத் தலைமையில் மாற்றம் இருந்தால், பா.ஜ.க.வுக்கு மாற்றான ஒரு தேர்தல் கூட்டணியை, பலமா உருவாக்க வசதியா இருக்கும்னு வசந்தகுமார் தரப்பு சொல்லிக்கிட்டு இருக்கு. இந்தக் கடித விவகாரம் காங்கிரஸ் தரப்பில் பலத்த பரபரப்பை ஏற்படுத்துதுங்க தலைவரே.''’

""தேர்தல்ல பா.ஜ.க.வுக்கு எதிரா ஒரு பலமான அணியை அமைக்கணும்னா, தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ.ன்னு பல கட்சிகளும் சேர்ந்தாத்தான் அது நடக்கும். ஆனால் முற்போக்கு முகாம்களிலேயே இப்ப உட்கட்சிப் புகைச்சல் தெரியுதே?''’

stalin""தலைவரே, பொதுவுடைமைச் சிந்தாந்தத்தை இந்த மண்ணுக்கு ஏத்தபடி கொடுக்கணும்ங்கிறதுதான் முற்போக்கு முகாம்களின் எண்ணம். ஆனால் இந்த மண்ணில் வேரோடியிருக்கும் சாதீயம் அவங்களுக்குள்ளும் அதிரடியா நுழைய ஆரம்பிச்சி அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கு. குறிப்பா சி.பி.எம். கட்சி சிவகங்கை மா.செ.வான கந்தசாமி, மாவட்ட நிர்வாகிகளை நியமிச்சதில், முக்குலத்தோருக்கே முன்னுரிமை கொடுக்கறார்ன்னு தலித் தோழர்களிடம் இருந்து புகார்கள் வலுவா எழுந்திருக்கு. இது சம்பந்தமா கட்சியின் மாநிலத் தலைமை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அங்கே பிரச்சினை தீரலை. அதனால் அங்கே மாவட்டக் குழுவே கலைக்கப்பட்டிருக்கு. இதேபோல் தென், வட மாவட்டங்களிலும் பரவலா சாதீய நோய் பரவிக்கிட்டிருக்குதாம்.''’

""கேக்குறதுக்கு வருத்தமாத்தான் இருக்கு. நிலைமை சீக்கிரம் சரியாகட்டும். விரைவில் நடக்கப்போகும் ராஜ்யசபா துணைத் தலைவருக்கான தேர்தல் எப்படி இருக்குமாம்?''’

""இப்ப ராஜ்யசபா துணைத் தலைவரா இருக்கும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் குரியனின் பதவிக்காலம் முடிவுக்கு வர்றதைத் தொடர்ந்தே, புதிய துணை சபாவுக்கான தேர்தல் நடக்கப்போவுது. ராஜ்யசபாவில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளில் ஒன்றுக்கே அந்தப் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் பா.ஜ.க. இருக்கு. இந்தமுறை பதவியை ஏற்க காங்கிரஸ் முன்வராது என்று தெரிவதால், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் மேமன், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த சுதாகர் நாயக் ஆகிய இருவரில் ஒருவரை அந்தப் பதவியில் அமரவைக்க, பா.ஜ.க. காய்களை நகர்த்துது.''’

""நானும் ஒரு சீக்ரெட் காய்நகர்த்தல் பற்றிய தகவலைச் சொல்றேன். இப்ப மத்திய பா.ஜ.க. அரசு தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் அவரது மகன் மிதுன், சம்பந்தி தங்கமணி, நண்பர் சேலம் இளங்கோவன், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரைக் குறிவைத்து, அவர்களின் நட்பு வட்டாரத்தில் வருமான வரித்துறை ரெய்டை நடத்திக்கிட்டு இருக்கு. இதுதொடர்பான அசைன்மெண்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அ.தி.மு.க. எம்.பி.யான மைத்ரேயன் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி செய்துக்கிட்டிருக்காராம். இதன் மூலம் எடப்பாடித் தரப்பை பலவீனமாக்கி, ஓ.பி.எஸ். தலைமையின் கீழ் அ.தி.மு.க.வைக் கொண்டுவருவதுதான் பா.ஜ.க.வின் திட்டமாம். இது தெரிஞ்சி ரொம்பவே கொதிச்சுப்போயிருக்காராம் எடப்பாடி. பா.ஜ.க. அரசின் அணை பாதுகாப்பு மசோதா, இந்திய மருத்துவப் படிப்புக்கு நீட், யு.ஜி.சி.க்கு பதில் உயர்கல்வி ஆணையம் இதையெல்லாம் எடப்பாடி எதிர்த்து செயல்பட்டதன் பின்னணி இதுதான்னு அவர் தரப்பில் சொல்றாங்க.''’