"ஹலோ தலைவரே, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கோகாய் தலைப்புச் செய்தியானதன் பின்னணி தெரியுமா?''’
""சொல்லுப்பா...''’
""தலைமை நீதிபதி ரஞ்சன் கோகா யிடம் வேலைக்காக கடந்த அக்டோபரில் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னிடம் கோகாய் தவறாக நடக்க முயன்றார்ன்னு புகார் கொடுத்து பரபரப்பாயிடிச்சி. அந்தப் பெண்மணி, ஒரு மாற்றுத் திறனாளியிடம் வேலை வாங்கித் தருவதாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினாராம். இது தொடர்பான புகார் காவல்துறைக்குப் போனதால், அந்தப் பெண்மணியை, கோகாய் வேலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதமே டிஸ்மிஸ் செய்துவிட்டா ராம். இந்த நிலையில்தான் இப்போது அந்தப் பெண்மணி கோகாய்க்கு எதிராக அதிரடியாகப் பாலியல் புகாரை எழுப்பி யிருக்கார். அதோட உச்ச நீதிமன்ற நீதிபதி கள் 22 பேருக்கு, இது தொடர்பாகக் கடிதமும் எழுதி நீதிகேட்டிருக்கார். இந்தப் புகார் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வைத்தே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடமே விளக்கம் கேட்டிருக்கார்.''’
""ஆமாம்ப்பா... இது பொய்ப் புகார் என்று விளக்கமளித்திருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன் மீதான இந்த புகாரை விசாரிக்கும் பொறுப்பை அருண் மிஸ்ரா, சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிடம் ஒப்படைச்சாரே?''’
""ஆமாங்க தலைவரே, இந்த வழக்கை விசாரிச்ச அந்த உச்சநீதிமன்ற பெஞ்ச், இந்த புகாருக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லைன்னு சொல்லியிருக்கு. சில முக்கிய மான வழக்குகள் குறித்த தீர்ப்பைத் தான் வழங்க இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட புகாரை தன் மீது எழுப்புவதன் பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதாக ரஞ்சன் கோகாய் சொல்லியிருக்கார்.''’
""தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. தரப்பு ஒரு பக்கம்னா எதிர்க்கட்சியான காங்கிரஸ் சீனியர் வழக்கறி ஞர்களும் களத்தில் இருக்காங்களே?''’
""ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக "இந்து' நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை, முற்றாக ஒதுக்கமுடியாது. அவற்றை உச்ச நீதிமன்றம் பரிசீலிச்சுதான் முடிவெடுக் கும்ன்னு அண்மையில் உச்ச நீதிமன்றம் உறுதியாகச் சொன்னது. இதனால பா.ஜ.க. அரசுக்கு ரஞ்சன் கோகாய்மீது கடுமையான கோபமாம். அதேபோல், நேசனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாங்கியது தொடர்பான வழக்கு, இப் போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல் ரபேல் ஊழல் வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் விசா ரணைக்கு வந்தது. இதனால்தான், கோகாய்க்கு எதி ரான புகாரில் காங்கிரஸ் வழக்கறிஞர்களான கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், துஷ்யந்த் தவே, பிருந்தா குரோவர் போன்றோர் தீவிர ஆர்வம் காட்டுகிறார் களாம். எது எப்படி இருப்பினும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் மீதே இப்படி ஒரு புகார் எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''’
""அதுசரிப்பா, இந்தியா முழுக்க 7 கட்டமா நாடாளுமன்றத் தேர்தல் நடந்துக்கிட்டு இருக்கு. இதுவரை நடந்த 3 கட்ட வாக்குப் பதிவுகளில் மக்கள் மனநிலை எப்படி இருந்ததாம்?''’
""இதே கேள்வியைத்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தனக்குத் தெரிந்த அகில இந்திய அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கிட்டு இருக் காராம். 11-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தலில் அன்றே 91 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. 18-ந் தேதி தமிழகம், புதுவை உள்ளிட்ட 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க, 23-ந் தேதி 116 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடந்தது. இப்படி இதுவரை 302 தொகுதி களில் மக்கள் தங்கள் ஜனநாயக ஆயுதமான வாக்குச்சீட்டை உற்சாகமாகப் பயன்படுத்தியிருக் காங்க. அவங்க மன நிலையை கவனிச்ச அகில இந்தியத் தலைவர்கள் பலரும் மக்களிடம் அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு மௌனச் சூறாவளி வீசியதை உணரமுடியுது. அந்த வகையில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரியுதுன்னு நம்பிக்கை தெரிவிச்சிருக்காங்க. இந்த நிலையில் தி.மு.க. தரப்பி லோ, மத்திய காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என் றும், தமிழ்நாட்டில் எம்.பி.- எம்.எல்.ஏ. இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமா இருக்கும்னு கணக்குப் போட்டிருக்காங்க. அதோடு தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றும் பலமான எதிர் பார்ப்பு நிலவுது. சபரீசனின் ஓ.எம்.ஜி. டீம் மூலம் 10-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் சீட் வாங்கிய தால், அவர்களிடமும் அமைச்சர் பதவி குறித்த எதிர்பார்ப்பு பலமாவே இருக்கு. இதற்கிடையே நெல்லை தி.மு.க. வேட்பாளரான ஞானதிரவியம், தேர்தலில் 50 "சி'யை அள்ளி இறைச்சேன். ஆனால் அதில் பெரும் பகுதி கீழ்மட்டம் வரை போய்ச் சேராமல், அங்கங்கே முடங்கிடிச்சி. தேர்தல் முடிவு வந்ததும், அறிவாலயத்தில் பஞ்சாயத்து வைப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்காராம்.''’
""நானும் தேர்தல் தொடர்பா ஒரு தகவலைச் சொல்றேன். தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த், கடைசி நேரத்தில் ஒருநாள் பிரச்சாரத்துக்கு வந்தார். அவருடைய குடும்ப மருத்துவர்கள் தடுத் தும், அவர் பிரச்சாரக் களத்துக்கு வந்து மைக் கைப் பிடிச்சதால், தொண்டையில் கடும் இன் பெக்ஷன் ஏற்பட்டிருக்குதாம். அவர் சரியா பேசத் தொடங்குற நேரத்தில் அவரைப் பிரச்சாரத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போய் இப்படி இன்பெக்ஷ னுக்கு ஆளாக்கிட்டீங்களே. அவரை மேல்சிகிச் சைக்காக உடனடியா அமெரிக்காவுக்கு அழைச் சிக்கிட்டுப் போங்கன்னு மருத்துவர்கள் பிரேம லதாவை எச்சரிக்கை செஞ்சிருக்காங்களாம். 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இருக்கேன்னு பலத்த யோசனையில் இருக்குதாம் கேப்டன் குடும்பம்.''’’