"ஹலோ தலைவரே, ரிமோட்டை வீசி டி.வி.யை உடைப்பது போன்ற வீடியோ காட்சியை அதிரடியாக வெளியிட்டு பிரச்சாரக் களத்தைச் சூடு பிடிக்க வச்சிருக்கார் "மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவர் கமல்.''’
""கலைஞர் கொடுத்த இலவச டி.வி.யை நினைவுபடுத்துற மாதிரியும், அதில் ஸ்டாலின் பிரச்சாரக் குரல் ஒலிப்பதும் தி.மு.க. தரப்பை டென்ஷனாக்க, கமல் தங்களைக் குறி வச்சித்தான் தேர்தல் களத்தை சந்திக்கிறாருன்னு விமர்சிக்கிறாங்க.''’’
""தலைவரே.. கமலின் பிரச்சார வீடியோவில், நீட் தேர்வால் உயிர் பறிக்கப்பட்ட மாணவி அனிதாவின் பெற்றோர் சொல்றதைக் கேட்டு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லியிருக்காரு. அனிதா குடும்பத்தினரோ நாங்க எங்க தொகுதியில் திருமாவளவனுக்கு ஓட்டுப் போடுறோம். நீட்டை எதிர்க்கும் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறோம்னு சொல்லிட்டாங்க. பிரச்சாரப் பயணத்தில் இருந்த கமலோ, நீட் தேர்வை ரத்து செய்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடைஞ்சிடுமான்னு கேட்க, அதுவும் இப்ப விவாதமாயிடிச்சி.''
""எல்லாப் பக்கமும் டார்ச்லைட்டை அடிக்கிறாரே கமல். அவரோட தேர்தல் இலக்கு என்ன?''’’
""காங்கிரஸோடு கூட்டணி வச்சி தேர்தலை சந்திக்கலாம்னு ஆசைப்பட்டார். ஆனா, காங்கிரஸ்-தி.மு.க. தொகுதிப் பங்கீடு கச்சிதமா முடிஞ்சிட்டதால, அந்தக் கூட்டணிக்குள்ளே கமல் வரமுடியலை. தினகரன் தரப்போடு பேசலாம்னு சொல்லப்பட்ட ஆலோசனைகளை கமல் ஏத்துக்கலை. தனிச்சி களமிறங்கி, டார்ச் லைட் சின்னமும் வாங்கிய கமல், தன்னோட சினிமா சகா ரஜினியின் ஆதரவை எதிர்பார்த்தார். ரஜினியோ வழக்கம் போல் யாருக்கும் தன்னோட ஆதரவு இல்லைன்னு அறிவிச்சிட்டு, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் நதி நீர் இணைப்புங்கிற அம்சம் ரொம்ப நல்ல அம்சம்னு சிக்னல் கொடுத்துட்டுப் போயிட்டாரு. இதுவும் கமலை அப்செட்டாக்கிடிச்சி. எம்.பி. தேர்தலை எதிர்கொள்கிற அளவுக்கு மக்கள் நீதி மய்யத்தில் பணபலமும் இல்லை. பிரச்சாரக் களத்தில் எடப்பாடி அரசை கடுமையா விமர்சிக்கிறார் கமல். விளம்பரத்தில், தி.மு.க.வை குறி வைக்கிறார். ஆனா, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடியையோ அவரோட அரசையோ டைரக்ட்டா டார்கெட் பண்ண ரொம்பவே யோசிக்கிறார். தமிழ்ந
"ஹலோ தலைவரே, ரிமோட்டை வீசி டி.வி.யை உடைப்பது போன்ற வீடியோ காட்சியை அதிரடியாக வெளியிட்டு பிரச்சாரக் களத்தைச் சூடு பிடிக்க வச்சிருக்கார் "மக்கள் நீதி மய்ய'த்தின் தலைவர் கமல்.''’
""கலைஞர் கொடுத்த இலவச டி.வி.யை நினைவுபடுத்துற மாதிரியும், அதில் ஸ்டாலின் பிரச்சாரக் குரல் ஒலிப்பதும் தி.மு.க. தரப்பை டென்ஷனாக்க, கமல் தங்களைக் குறி வச்சித்தான் தேர்தல் களத்தை சந்திக்கிறாருன்னு விமர்சிக்கிறாங்க.''’’
""தலைவரே.. கமலின் பிரச்சார வீடியோவில், நீட் தேர்வால் உயிர் பறிக்கப்பட்ட மாணவி அனிதாவின் பெற்றோர் சொல்றதைக் கேட்டு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லியிருக்காரு. அனிதா குடும்பத்தினரோ நாங்க எங்க தொகுதியில் திருமாவளவனுக்கு ஓட்டுப் போடுறோம். நீட்டை எதிர்க்கும் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறோம்னு சொல்லிட்டாங்க. பிரச்சாரப் பயணத்தில் இருந்த கமலோ, நீட் தேர்வை ரத்து செய்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடைஞ்சிடுமான்னு கேட்க, அதுவும் இப்ப விவாதமாயிடிச்சி.''
""எல்லாப் பக்கமும் டார்ச்லைட்டை அடிக்கிறாரே கமல். அவரோட தேர்தல் இலக்கு என்ன?''’’
""காங்கிரஸோடு கூட்டணி வச்சி தேர்தலை சந்திக்கலாம்னு ஆசைப்பட்டார். ஆனா, காங்கிரஸ்-தி.மு.க. தொகுதிப் பங்கீடு கச்சிதமா முடிஞ்சிட்டதால, அந்தக் கூட்டணிக்குள்ளே கமல் வரமுடியலை. தினகரன் தரப்போடு பேசலாம்னு சொல்லப்பட்ட ஆலோசனைகளை கமல் ஏத்துக்கலை. தனிச்சி களமிறங்கி, டார்ச் லைட் சின்னமும் வாங்கிய கமல், தன்னோட சினிமா சகா ரஜினியின் ஆதரவை எதிர்பார்த்தார். ரஜினியோ வழக்கம் போல் யாருக்கும் தன்னோட ஆதரவு இல்லைன்னு அறிவிச்சிட்டு, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் நதி நீர் இணைப்புங்கிற அம்சம் ரொம்ப நல்ல அம்சம்னு சிக்னல் கொடுத்துட்டுப் போயிட்டாரு. இதுவும் கமலை அப்செட்டாக்கிடிச்சி. எம்.பி. தேர்தலை எதிர்கொள்கிற அளவுக்கு மக்கள் நீதி மய்யத்தில் பணபலமும் இல்லை. பிரச்சாரக் களத்தில் எடப்பாடி அரசை கடுமையா விமர்சிக்கிறார் கமல். விளம்பரத்தில், தி.மு.க.வை குறி வைக்கிறார். ஆனா, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடியையோ அவரோட அரசையோ டைரக்ட்டா டார்கெட் பண்ண ரொம்பவே யோசிக்கிறார். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கான ஆல்டர் னேட் தான்தான்னு காட்டிக்கொள்வதில் ஆர்வமா இருக்கும் கமல், எம்.பி. தேர்தலில் தன்னோட கட்சி எவ்வளவு ஓட்டுகள் வாங்குதுங்கிறதைப் பார்த்து அடுத்த ஸ்டெப் வைப்பாராம்.''
""தி.மு.க., அ.தி.மு.க.ங்கிற ரெண்டு பெரிய அணிகளுக்கும் நடுவில், தினகரனின் அ.ம.மு.க.வும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடி ஓடுதே?''
""ஆமாங்க தலைவரே, அ.ம.மு.க.வின் பரிசுப்பெட்டி எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கப் போகுதுங்கிறதைவிட, அது பெரிய கட்சி களின் ஓட்டுகளை எந்தளவு பிரிக்கப் போகுதுங்கிற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகமாகவே இருக்குது. தினகரனைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட கரையேறிடக் கூடாதுன்னு நினைக்கிறார். அதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து இரட்டை இலைக்கு விழவேண்டிய ஓட்டுக்களைப் பிரிக்கிறார். அவர் பிரச்சாரத்துக்குப் போற இடங்களில் கூட்டம் கூடுது. அது ஆளும்கட்சித் தரப்பை மிரளவும் வைக்கிது. பதவி பறிப்புக்கு ஆளான எம்.எல். ஏ.க்களான தங்க தமிழ்ச் செல்வனையும் பழனியப்ப னையும் எம்.பி. வேட்பாள ராக்கியதோட, அவர்கள் சொன்ன கட்சிப் பிரமுகர் களுக்கு எம்.எல்.ஏ.சீட்டும் கொடுத்திருக்காரு. அதே போல் கர்நாடக மாநில அ.ம.மு.க. செயலாளரான பெங்களூரு புகழேந்தியை ஓசூரில் நிற்கவச்சி... அவர் மூலம் இலைத் தரப்பில் நிறுத்தப்பட்டிருக்கும் மாஜி பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவியான ஜோதிக்கு டஃப்பும் கொடுத்துக்கிட்டிருக்கார்.''’
""பாலகிருஷ்ணரெட்டி மனைவிக்கு எதிரா தினகரன் எடுக்கும் அதிரடி நடவடிக்கை கள சசிகலா ரசிக்கலை போலி ருக்கே?''
""உண்மைதாங்க தலைவரே, சசிகலா இதை ரசிக்கலை என்பதைவிட, இதனால் தினகரன் மீது கடும் கோபத்தில் இருக் காருன்னுதான் சொல்லணும். ஏன்னா, கலவர வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை பறி கொடுத்த பாலகிருஷ்ண ரெட்டி யால்தான், ஓசூர் சட்டமன்றத் தொகுதி, இடைத் தேர்தலை சந்திக்கிது. இந்த பாலகிருஷ்ண ரெட்டிதான் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சகல உதவிகளையும் செஞ்சிக்கிட்டு இருக்கார். அவருக்கு எதிரா, அதே பெங்க ளூரு புகழேந்தியை நிறுத்தி, தினகரன் தரப்பு குழிவெட்டற தைப் பார்த்து சசிகலா கொதிப் பில் இருக்காராம். சமீபத்தில் தன்னைச் சந்தித்த தினகரனிடம், எனக்கு சிறையில் பல்வேறு சலுகைகள் கிடைக்க பால கிருஷ்ணரெட்டி உதவுறார்ங்கிற கோபத்தில்தானே, அவரோட அமைச்சர் பதவியைப் பறிக்கிற தில் ஓ.பி.எஸ்.சோடு சேர்ந்து எடப்பாடியும் ஆர்வம் காட்டினார். அப்படிப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டிக்கு நீங்கள்லாம் எதிரா இருக்கணுமா? அவர் மனைவி ஜோதியை எதிர்த்து ஒரு டம்மி வேட்பாளரை நிறுத்தாமல் புகழேந்தியை நிறுத்தியது சரியா?ன்னு கடுமையா டோஸ் விட்டிருக்காரு.''’
""ஓகோ''’
""அதோட சசிகலா நிறுத்தலைங்க தலைவரே, எனக்கு உதவுற ரெட்டி மனைவியைத் தோற்கடிச்சே ஆகணும்னு ஒத்தைக்காலில் நிற்பதோட, பால கிருஷ்ண ரெட்டி பிரச்சாரக் களத்துக்கே வரக் கூடாதுன்னு அ.ம.மு.க. சார்பில் வழக்கும் போடு றீங்க. இப்ப நீதிமன்றம் அவர் பிரச்சாரம் பண்ண லாம்னு சொல்லிடிச்சி. எனக்கு நல்லது செய்யும் ரெட்டிக்கு, நீங்க எல்லா சேர்ந்து கெட்டது செஞ்சா அது எனக்குக் கெடுதல் செய்யறதாத்தானே அர்த்தம்? தொடர்ச்சியா நான் கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன். தேர்தல் பிரச்சாரத்தில் கூட என் படமோ என் பெயரோ இல்லாமல் என்னை ஓரங்கட்டுவதும், கட்சியை அனுராதாவும் டாக்டர் வெங்கடேசும் கைப்பிடியில் வச்சிருப்பதும் தெரியுது. தேர்தல் முடியட்டும். நான் யாருன்னு காட்டுறேன்னு எச்சரிச்ச சசிகலா, தினகரனுக்கு போகவேண்டிய தேர்தல் செலவுக்கான நிதியையும் நிறுத்தி வச்சிட்டாராம். அதேபோல் தேர்தல் முடிந்ததும் தினகரனை கட்சியில் இருந்து விலக்கிவைக்கும் முடிவிலும் அவர் இருக்கார்னு ஜெயிலிலிருந்து செய்தி கசியுது.''’
""அது குடும்பத்துக்குள்ள நடக்கும் அரசியல். இன்னைக்கு அடிச்சிக்குவாங்க. நாளைக்குக் கூடிக்கு வாங்க. மே 19-ல் நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக் கான இடைத் தேர்தல் வேட்பாளர்களை எல்லாருக்கும் முன்னாடி தி.மு.க. அறிவிச்சிருக்கே?''’
""எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிச்சப்பவே அரவக்குறிச்சிக்கு செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்துக்கு டாக்டர் சரவணன், ஒட்டப்பிடாரத்துக்கு சண்முகையான்னு இடைத் தேர்தல் வேட்பாளர்களை செலக்ட் பண்ணிட்டார் ஸ்டாலின். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் இறந்து போனதால் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூலூருக்கு பொங்கலூர் பழனிச்சாமியை வேட்பாளராக்கி இருக்கார். பொங்கலூர் பழனிச்சாமி கண்ட்ரோலில் கோவை மாவட்ட தி.மு.க. இருந்தப்ப தொடர்ச் சியா தோல்வி ஏற்பட்டதால, அவரை மாற்றிய தோடு, கட்சி நிர்வாகத்துக்காக மாவட்டத்தையும் பிரிச்சி 3 மா.செ.க்களை தி.மு.க. தலைமை நியமிச்சிது. பல சமூகத்தினருக்கும் பொறுப்பு கிடைச்சுது. இருந்தாலும், அ.தி.மு.கவில் கவுண்டர் சமூகத்தவர் முதல்வரா இருக்கிற நிலையில், கோவையில் அந்த சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் தரணும்னு சீனியரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சீட் தரப்பட்டிருக்கு. இது பற்றியும் கட்சிக்குள்ள நிறைய விவாதம் நடக்குது.''
""அ.தி.மு.க. தரப்பில் வேட்பாளர் தேர்வு எப்படி, எப்போது?''
""தி.மு.க. வேட்பாளர் பட்டியலைப் பார்த்த எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், சீனியர் மந்திரிகளிடம் ஆலோசனை பண்ணியிருக்காங்க. இதன் அடிப்படையில், இடைத்தேர்தல் தொகுதிக்குரிய மாவட்ட மந்திரிகளே, அவற்றிற்கான தகுதியான வேட்பாளர்களை சிபாரிசு பண்ணட்டும். அதை ஏற்றுக்கொண்டு அறிவிப் போம்ன்னு முடிவெடுத்தாங்க. இதன் அடிப் படையில் அ.தி.மு.க.வின் இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளிவரும்.''’
""ம்...''’
""தலைவரே.. ஓ.பி.எஸ். மகனுக்காக தேனியில் மோடி பிரச்சாரம் செய்தப்பவே, விஜயகாந்த்தை மேடையேத்த பா.ஜ.க. விரும்புச்சு. ஆனால் அவருக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்பட்டதால், அவர் மனைவியும் தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதாவை மேடை ஏத்தினாங்க. அப்பவே பா.ஜ.க. பிரமுகர்களிடம் கேப்டன் 15-ந் தேதி வடசென்னையில் பிரச்சாரத்தை தொடங்குவார்னு பிரேமலதா சொன்னார். இதைத் தொடர்ந்து சென்னையின் 3 தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்னு பிரேமலதா அறிவிக்க, தே.மு.தி.க. தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாயிடிச்சி.''’
""தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மேலே எடப்பாடி அரசு கண்காணிப்பை அதிகப்படுத்திருக்காமே?''’
""ஆமாங்க தலைவரே, தங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத எடப்பாடி அரசு மீது அரசு ஊழியர்களும் ஆசிரியர் களும் கடும் கோபத்தில் இருக்காங்க. அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் இருக்கும் அமைப்புகள் பெரும்பாலும் அங்கீகாரம் இல்லாத சங்கங்கள்தான். அதனால் அவர்கள் தைரியமாக, நாங்கள் எடப்பாடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம்ன்னு பகிரங்கமா களமிறங்கிட்டாங்க. அதேசமயம் அங்கீகரிக்கப்பட்ட சின்னச்சின்ன சங்கங்கள் வெளிப்படையா அறிவிக்க முடியாத நிலையில், தங்களுக்குள் ரகசிய சுற்றறிக்கைகளை அனுப்பி, அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடக் கூடாதுங்கிற கருத்தை பரப்பிக்கிட்டு இருக்காங்க. அண்ணா பல்கலைக் கழகத்தின் தற்காலிக துணைப் பேராசிரியர் கள் சங்கத்தினரும், தங்கள் பணியை நிரந்தரப்படுத்துவதாக வாக்கு தந்திருக்கும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம்ன்னு பகிரங்கமா அறிவிச்சிருக்காங்க. இதையெல்லாம் கவனிச்ச எடப்பாடி அரசு, வாக்குச்சாவடிப் பணியில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை கண்காணிப்பதோடு, பூத் கேப்ச்சர் வரைக்கும் யோசிக்குது. எந்த வகையிலும் ஆளுந்தரப்பின் அத்துமீறலுக்கு இடம் கொடுக்கக்கூடாதுன்னு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உறுதியாக இருக்காங்க.''’
""அதிகாரம் என்பது அரசாங்கம் கையிலேதானே இருக்கு..''’’
""அதுதானே வழக்கம். சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி. ஜாபர் சேட், ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர்களின் போனை, நவீன கருவிகள் மூலம் ஒட்டுக் கேட்டார்ன்னு குற்றச் சாட்டு இருந்தது. இப்போதும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் களின் பேச்சை ஒட்டுக் கேட்டு, அதை உரியவர்களிடம் ஒப்ப டைக்கிறார்னும், வருமான வரித்துறை ரெய்டுகள் நடப்பதற்கு இந்தத் தகவல்கள் உதவுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இன்னொரு குரூப்பில் மெசேஜ் பாஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க.''
""நானும் அதிகாரிகள் சம்பந்தமான செய்தியைத்தான் சொல்றேன்.. மத்திய உளவுத்துறை கடைசியா கொடுத்த ரிப்போர்ட்டில், தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி 27, அ.தி.மு.க. கூட்டணி 12ன்னும் அதில் பா.ஜ.க.வுக்கு 2, தே.மு.தி.க.வுக்கு 1-ன்னும் சொல்லியிருக்காம். எப்படி கணக்குப் பார்த்தாலும் எதிரணிதானே லீடிங்கில் இருக்குன்னு டெல்லி யோசிச் சிக்கிட்டிருக்காம்.''