"ஹலோ தலைவரே, தேர்தல் பண விவகாரத்தில் தி.மு.க. தரப்பை மட்டும் குறிவச்சு பிடிப்பதாகவும், அ.தி.மு.க. பணத்தை விட்டுவிடுவதாகவும் புகார்கள் கிளம்பியிருக்கே...''’’

""ஆளுங்கட்சிக்கு ஆதரவா தேர்தல்ஆணையம் செயல்படுவதா புகார் வருவது இயல்புதான்.. இப்ப என்ன நிலவரமாம்?''’’

ttv""இப்ப நடக்கும் ரெய்டுகளுக்குக் காரணம் இந்திய ரிசர்வ் வங்கி, டெல்லிக்கும் தமிழக வருமான வரித்துறைக்கும் கொடுத்த அலர்ட்தான். தமிழக நிலவரம் பற்றிக் குறிப்பிடும் அந்த அறிக்கையில், கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழக வங்கிகள் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இங்குள்ள அரசியல்வாதிகளும் அவங்க தரப்பினரும் எடுத்திருக்காங்க. அதோட தேர்தல் களத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணப் புழக்கம் இருக்குன்னு சொல்லியிருக்கு. இதைத் தொடர்ந்து டெல்லி, தமிழக பார்ட்னர்களுக்கு சிக்னல் கொடுத்திருக்கு. அப்புறம்தான், தமிழக வருமான வரித்துறையின் தலைமைப் புலனாய்வு அதிகாரியான வீரகுமாரும், எடப்பாடிக்கு நெருக்கமான ஒரு டாக்டரும் அதிரடி ரெய்டுகளுக்கு ரூட் போட்டுக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த பிளான் படிதான் தி.மு.க. துரைமுருகன் குறி வைக்கப்பட்டாரு.''’

""விடாமல் விரட்டிப் பிடிச்சதன் மூலம் வேலூர் எம்.பி. தேர்தல் நடப்பதே சந்தேகமாகியிருக்கே''…

Advertisment

""தலைவரே...… வருமான வரித்துறையினர் துரைமுருகன் வீட்டையும், அவர் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரியையும் சுற்றி வளைச்சப்ப பெருசா எதுவும் கிடைக்கலை. தொடர்ந்து கண்காணிச்சதுல, ஒரு ஸ்டேஷனரி ஹோல்சேல் வியாபாரியிடம் ஒரு டீம், ஒரு லட்சம் கவரை வாங்குனது தெரிய, அவங்களை அதிகாரிகள் டீம் மடக்கியபோது, நாங்கள் ஸ்டேஷனரி கடையில் விற்பதற்காக இதை வாங்கினோம்ன்னு டபாய்ச்சாங்களாம். அவங்களை ரகசியமா ஃபாலோ பண்ணியதில்தான், கவர் பார்ட்டிகள் துரைமுருகன் வீட்டுக்கும், அங்கிருந்து பூஞ்சோலை சீனிவாசனோட சிமெண்ட் குடோனுக்குப் போனதும் தெரிஞ்சி, ரெய்டு நடத்தியதில், 10 சி வரை அள்ளியிருக்காங்க. இதே பாணியில் வங்கியில் கண்காணிச்சிதான் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்களிடம் இருந்து திருச்சி பக்கத்தில் 2 கோடி ரூபாய் அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கு. ஆனா தர்மபுரி அருகே பஸ்ஸில் சிக்கிய பணம் மட்டும் யாருதுன்னு தெரியலைன்னு தேர்தல் ஆணையம் சொல்லுது. இதுதான் டவுட்டை அதிகமாக்குது.''’

""என்ன தில்லாலங்கடி வேலைகள் செஞ்சாலும் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தேர்தல் பத்தின பயத்திலேதான் இருக்குதாமே?''’

""அண்மையில் மத்திய புலனாய்வுத் துறை டெல்லிக்குக் கொடுத்திருக்கும் ரிப்போர்ட்டில், தினகரனின் அ.ம.மு.க. தீவிரமா களமிறங்கினால், அ.தி.மு.க.வின் ஓட்டுக்களை 5-ல் இருந்து 8 சதவீதம் வரை பிரிக்கும்னு ஏற்கனவே மத்திய அரசு கணக்கெடுத்து கணிச்சிருந்தது. ஆனால் இப்போதைய ரிப்போர்ட்டின்படி, அ.ம.மு.க. 5-ல் இருந்து 15 சத அ.தி.மு.க. வாக்குகளைப் பிரித்து, அதன் வெற்றியை பலமாக டேமேஜ் பண்ணலாம்னு சொல்லப்பட்டிருக்கு. இதனால் பா.ஜ.க. தலைமை ஷாக் ஆயிடுச்சி. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரான பியூஷ்கோயல், முதல்வர் எடப்பாடியிடம் பேசியிருக்காரு. தி.மு.க.வுக்கு நெருக்கடி தருவார்னு எதிர்பார்க்கப்பட்ட தினகரனால் தங்கள் முதலுக்கே மோசமாயிடும்னு பா.ஜ.க. நினைப்பதால், எடப்பாடி அரசு மூலம் செக் வைக்க வியூகம் வகுக்குது.''’

Advertisment

""தேர்தல் பயத்தில் இருக்கும் முதல்வர் எடப்பாடி, கோட்டை அதிகாரிகளைக் கூட தன் பிரச்சார டூரில் அழைச்சிக்கிட்டுப் போறார்ன்னு தகவல் வருதே?''’

a

ra

""உண்மைதாங்க தலைவரே, செய்தித்துறை கூடுதல் இயக்குநரா, பதவி நீட்டிப்பில் இருக்கும் எழிலழகன், இன்னும் 2 வருடம் நீட்டிப்புக் காலம் இருக்கும்போதே போனவாரம் ராஜினாமா கடிதம் கொடுத் துட்டார். அதேபோல் அதே துறையில் இணை இயக்குநரா இருந்த முத்துசாமி போன 31-ந் தேதியோடு ஓய்வு பெற்றுவிட்டார். இந்த ரெண்டு பேரும்தான் அ.தி.மு.க. அணிக்கான எடப்பாடியின் பிரச்சார டூரை அவர் கூடவே இருந்து கவனிச்சிக்கிறாங்க. செய்தித்துறை துணை இயக்குந ரான சுப்பிரமணி, கோட்டையில் இருந்தபடியே இவங்க ரெண்டுபேரின் உத்தரவுகளையும் செயல் படுத்திக்கிட்டு இருக்காராம். தேர்தல் முடிஞ்சதும், எழி லழகன் தன் ராஜினாமா கடி தத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வாராம். அதேபோல் ஓய்வுபெற்ற முத்துசாமிக்குப் பணி நீட்டிப்புக் கொடுக்கப் படுமாம். இந்த மூன்று அதிகாரிகளும், முதல்வர் எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களாம்.''’

""காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வரவேற்பைப் பெற் றுள்ள நிலையில், பா.ஜ.க. நிலவரம் என்னப்பா?''’

ka""தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின், அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்புகொண்டு, தமிழக மக்களை அதிகம் வருத்துவது நீட் தேர்வுதான். அதை நீக்கும் வாக்குறுதியையும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் வாக்குறுதியையும் உங்கள் தேர்தல் அறிக்கையில் எதிர்பார்க்கிறேன்னு சொல்லியிருக்கார். அதை ராகுல் உடனே ஏத்துக் கிட்டாராம். தமிழக வாக்காளர்களைக் கவர்ந் துள்ள வாக்குறுதியை தமிழகப் பிரச்சாரத்தின் போது மக்களிடம் நேரிடையாக சொல்ல வேண்டும் என்றும் ராகுலிடம் ஸ்டாலின் சொல்லியிருக் காராம். காங்கிரஸ் ஸ்பீடு காட்டிய நிலையில், தேர்தல் அறிக்கை வெளியீட்டில் பா.ஜ.க. தலைமை காட்டிவரும் தாமதத்தை அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர்களே ரசிக்கலை.''’

""மோடியும்கூட தமிழக பா.ஜ.க.வினர் மீது கடும் கோபத்தில் இருக்காராமே?''’

""சமீபத்தில் தூத்துக்குடி, கோவைன்னு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பிரச்சாரத்துக்கு வந்த போது, எதிர்பார்த்த கூட்டம் இல்லை. இதனால் லோக்கல் பா.ஜ.க.வினர் மேலே அமித்ஷா கோபப் பட்டிருக்கார். காசை இறைத்தும் கதைக்கு ஆகலைங்கிற விபரம் அமித்ஷா மூலம் மோடிக்குப் போனதால், வருகிற 8, 13 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதாக ஒப்புக்கொண் டிருந்த மோடி, இந்த டூர் குறித்து யோசிக்க ஆரம் பித்துவிட்டாராம். இதையறிந்த தமிழக பா.ஜ.க. தலைவர்கள், "நீங்கள் தமிழகத்துக்கு 2 முறையாவது வந்தாதான், மக்களை நாம் ஈர்க்க முடியும். ஏற் பாடுகளை சிறப்பா கவனிச்சிக்கிறோம்'னு சொல்லி, மோடியின் முடிவுக்காக வெயிட் பண்ணுறாங்க.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். மக்கள் நீதி மய்யத் தலைவரான நடிகர் கமல், தொடர்ச் சியா பிரச்சாரம் செய்றாரு. ஆனா, வைட்டமின் ’ப’ பத்தலையாம். பூத் செலவுக்கே நெருக்கடிங் கிறதால அம்பானி, அதானிகளை பாலிவுட் புள்ளி கள் மூலம் கமல் நன்கொடைக்காக அணுகியிருக் கார். அவங்க சைடில் பெரிய ஒத்துழைப்பு இல்லை. சிலரிடம் கோடிக்கணக்கில் அவர் கடன் கேட்க, அவங்க யோசிக்க... கமலோ நான் படம் நடிச்சி கடனை அடைச்சிடுவேன்னு சொல்லி யிருக்கார். அவங்க இன்னும் யோசிக்க ஆரம்பிச் சிட்டாங்க. நட்புமுறையில் சில லகரங்கள் மட்டும் கொடுத்து உதவியிருக்காங்களாம். இதுக்கிடை யில், நாமக்கல்லில் "அகிம்சா சோசலிஸ்ட்' என்கிற கட்சியின் சார்பில் போட்டியிடும் ரமேஷ் என்பவர், தேர்தல் செலவுக்கு 50 லட்சம் லோன் கேட்டு, எம்.பியானதும் மாச சம்பளத்தில் அடைச்சிடுறேன்னு சொல்லி, பேங்க் மேனே ஜரை தெறிக்கவிட்டிருக்காரு.''

___________

இறுதிச் சுற்று!

ரெய்டுக்கு காரணம் தமிழிசை! -குற்றம்சாட்டும் அனிதா

துரைமுருகனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் பொறுப்பாளரான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் திருச்செந்தூர் தண்டப்பத்து பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது வருமான வரித்துறை. இரண்டு முறை பறக்கும் படையினர் சோதனை நடத்தியும் எதுவும் பிடிபடாத நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் நம்மிடம், “""தி.மு.க.வின் தேர்தல் பணிகளை முடக்குவதற்காக நடந்த சதி இது. இது பற்றி கலெக்டரிடம் நான் கேட்ட போது, "ரெய்டு நடந்த விவரம் தங்களுக்கே தெரியாது' என்கிறார். கலெக்டரிடம் அனுமதியும் கேட்கவில்லை. "ரெய்டு நடத்தியது ரொம்ப தவறு... மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று கலெக்டர் சொல்கிறார்'' என்றார்.

"தேர்தல் நேரத்தில் பணமே இல்லை என்று சொன்னால் யார் நம்புவார்கள்? உங்களை ஏன் குறி வைக்கவேண்டும்? இதற்கு காரணம் யார் என நினைக்கிறீர் கள்' எனக் கேட்டோம். ""என்னை முடக்கி விட்டால், கனிமொழியின் வெற்றியை தடுத்துவிடலாமென நினைத்து ரெய்டுக் குத் திட்டம் போட்டுக் கொடுத்தவர் பா.ஜ.க. மாநிலத் தலைவரும் அக்கட்சியின் வேட்பாளருமான தமிழிசைதான். 5 வருட மோடி ஆட்சியில், ஒரு மாநிலக் கட்சித் தலைவராக இருந்தும்கூட தமிழிசையால் ஒரு திட்டத்தைக்கூட தூத்துக்குடிக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால், ராஜ்யசபா எம்.பியான கனிமொழி பல திட்டங்களை இந்த மாவட்டத்துக்கு செயல்படுத்தியிருக்கிறார். அவருக்குள்ள வெற்றிவாய்ப்பைக் கண்டு பயந்துதான், என்னைக் குறி வைத்து ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் தி.மு.க. பயப்படாது'' என்கிறார் அனிதா தெம்பாக.

-இரா.இளையசெல்வன்