ராங்-கால் : மோடிக்கு எதிராக தமிழகம்! 7 பேரை விடுவிக்க பா.ஜ.க. பயம்!

modi-eps

""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம், அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக்குன்னு கோட்டை வட்டாரம் சொல்லுது.''’

""ரொம்பவும் உற்சாகமா, பெரும் பந்தோபஸ்து அலப்பறைகளோட எடப்பாடி டெல்லிக்குப் போனாரே?''’

modi-eps

""உண்மைதாங்க தலைவரே, ஜெ. முதல்வரா’ இருந்தப்ப, டெல்லிக்குப் போனா அவருக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பைவிட, அதிக பாதுகாப்பு எடப்பாடிக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியின் மேற்பார்வையிலேயே அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனா எடப்பாடி டெல்லி சென்றாலே அவரை வழக்கமாக 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் தடபுடலா வரவேற்பாங்க. ஆனால் இந்த முறை 10 எம்.பி.க்கள்கூட ஏர்போர்ட் வரலையாம். அதிலேயே அவர் அப்செட் ஆயிட்டார். அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திலும் பந்தோபஸ்து கெடுபிடிகள் அதிகம் இருந்ததால், அங்கே செய்தியாளர்களின் வெறுப்பையும் எடப்பாடி ஏகமா சம்பாதிச்சிருக்காரு. இதற்கிடையில், எப்படியாவது பிரதமர் மோடியைத் தனியா 5 நிமிடமாவது சந்திச்சிடணும்னு பல்வேறு வகையிலும் எடப்பாடி தரப்பில் முயற்சிகள் நடந்திருக்கு. குறிப்பா, நாமக்கல் திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மூலம் நடந்த முயற்சிகள் பலிக்கலை. இதன்பின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை லைனில் பிடிச்சி, முதல்வர் எடப்பாடிக்கு பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுங்கள்னு கேட்டிருக்கார்.''’

""தனி அப்பாயின்ட்மென்ட் கிடைச்ச மாதிரி தெரியலையே?''’

""ஆமா. நிர்மலா சீதாரா

""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம், அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக்குன்னு கோட்டை வட்டாரம் சொல்லுது.''’

""ரொம்பவும் உற்சாகமா, பெரும் பந்தோபஸ்து அலப்பறைகளோட எடப்பாடி டெல்லிக்குப் போனாரே?''’

modi-eps

""உண்மைதாங்க தலைவரே, ஜெ. முதல்வரா’ இருந்தப்ப, டெல்லிக்குப் போனா அவருக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பைவிட, அதிக பாதுகாப்பு எடப்பாடிக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியின் மேற்பார்வையிலேயே அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனா எடப்பாடி டெல்லி சென்றாலே அவரை வழக்கமாக 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் தடபுடலா வரவேற்பாங்க. ஆனால் இந்த முறை 10 எம்.பி.க்கள்கூட ஏர்போர்ட் வரலையாம். அதிலேயே அவர் அப்செட் ஆயிட்டார். அவர் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திலும் பந்தோபஸ்து கெடுபிடிகள் அதிகம் இருந்ததால், அங்கே செய்தியாளர்களின் வெறுப்பையும் எடப்பாடி ஏகமா சம்பாதிச்சிருக்காரு. இதற்கிடையில், எப்படியாவது பிரதமர் மோடியைத் தனியா 5 நிமிடமாவது சந்திச்சிடணும்னு பல்வேறு வகையிலும் எடப்பாடி தரப்பில் முயற்சிகள் நடந்திருக்கு. குறிப்பா, நாமக்கல் திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மூலம் நடந்த முயற்சிகள் பலிக்கலை. இதன்பின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனே, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை லைனில் பிடிச்சி, முதல்வர் எடப்பாடிக்கு பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுங்கள்னு கேட்டிருக்கார்.''’

""தனி அப்பாயின்ட்மென்ட் கிடைச்ச மாதிரி தெரியலையே?''’

""ஆமா. நிர்மலா சீதாராமன் பிரதமரை தொடர்புகொண்டு எடப்பாடி அப்பாயின்ட்மென்ட் பற்றி சொன்னப்ப, தனிப்பட்ட சந்திப்பிற்கு இப்ப அவசியம் எதுவும் இல்லை. அவர் என்னிடம் சொல்ல வேண்டியதை அதிகாரிகள் மூலமாகவே சொல்லலாம். அவர் தமிழகத்துக்கான நிதி குறித்து ஏதேனும் சொல்ல விரும்பினால், அது தொடர்பாக நாம் நடத்தும் ’நிதி ஆயோக்’கூட்டத்திலேயே சொல்லட்டும்னு கைவிரிச்சிட்டார். அதனால் அப்செட் மூடில்தான், மோடி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்துக்குப் போனார் எடப்பாடி. கூட்டம் முடிந்த பிறகாவது தனக்கு சந்திப்பு கிடைக்கும்னு நினைச்சி, அன்று இரவு 9 மணிக்குதான் சென்னை திரும்ப ஃபிளைட்டை புக் பண்ணியிருந்தார் எடப்பாடி. ஆனால் ஒருசில மாநில முதல்வர்களை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடி, கடைசிவரை தமிழக முதல்வரான எடப்பாடிக்கு நேரம் ஒதுக்க முன் வரலை. அதனால், மனம் நொந்துபோன எடப்பாடி 7 மணி ஃபிளைட்டிலேயே சென்னைக்குக் கிளம்பிட்டார்.''’

""நிதி ஆயோக் கூட்டத்தில் என்ன நடந்துச்சாம்?''’

peryarivalan""மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டதுதான் இந்த நிதி ஆயோக் அமைப்பு. மோடி, தலைமையிலான இந்த அமைப்பில் மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாய் இருக்காங்க. இதில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடுபற்றிய விவாதங்கள் நடக்கும். இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த விரும்பும் மோடி, இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்களிடம் இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் பேசினார். இதன் மூலம் கால விரயமும் பண விரயமும் தடுக்கப்படும்னு வாதிட்டார். ஏற்கெனவே தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், நாடாளுமன்ற நிலைக்குழு, சட்ட அமைச்சகம் ஆகியவற்றை தன் கருத்துக்கு இசைவாக நகர்த்திக் கொண்டுவந்து விட்ட மோடி, மாநில முதல்வர்களின் ஆதரவையும் கோரினார்.''

""அவங்க ரெஸ்பான்ஸ் என்ன?''

""பெரும்பாலான முதல்வர்கள், இது கூட்டாட்சிக்கு எதிரானதாக அமையும் என்று ஏற்க மறுத்தனர். இதில் பா.ஜ.க.வைச் சேர்ந்த மாநில முதல்வர்களும் அடக்கம். ஆனால் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி மட்டும், மோடியின் இந்தக் கருத்தை ஆதரித்தோ எதிர்த்தோ எதையும் சொல்லாமல் வாய்மூடி மௌனியாகவே இருந்திருக்காரு. கூட்டம் முடிந்ததும் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம், மோடி "என் கருத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, "நான் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருப்பதால், அந்தக் கட்சி ஏற்காததை நான் ஏற்க முடியாது'ன்னு குமாரசாமி நேரடியா அழுத்தமாவே சொல்லிட்டாராம்.''’

""இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக்கலையே?''’’

delihi-cm

""கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கலை. டெல்லி தலைமைச் செயலாளர் அன்ஷி பிரகாஷ், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில், அம்மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசைப் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்களின் அந்த முடிவை ஆளுநர் கைவிடச்சொல்ல வேண்டும்ங்கிற கோரிக்கையோடுதான் கெஜ்ரிவால், தர்ணாவில் இறங்கியிருக்கார். மற்ற மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராய் விஜயன் ஆகியோரோடு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.''’

""தி.மு.க. அடுத்தகட்ட வியூகத்தில் இறங்கியிருக்கு போலிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிச்சி அறிக்கை தரணும்னு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அண்மையில் உத்தரவிட்டிருக்கு. இதைப் பார்த்த தி.மு.க., மனதளவில் உற்சாகம் அடைஞ்சிருக்கு. காரணம், ஏற்கெனவே தி.மு.க. கையில் எடுத்த டான்சி நில ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புப் புகார்கள்தான், ஜெயலலிதாவைக் குற்றவாளியாய் அடையாளம் காட்டி, அரசியல் களத்தில் நெருக்கடியை உண்டாக்கி, தண்டனையும் வாங்கிக்கொடுத்தது. அதனால் அண்மையில் நெடுஞ்சாலைத் துறையில் இந்த அரசு நடத்தியிருக்கும் 4 ஆயிரம் கோடி ஊழல் குறித்து, தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரத்துடன் புகார் கொடுத்ததைப் போலவே, அனைத்து அமைச்சர்களைப் பற்றிய ஊழல் அறிக்கையைத் துல்லியமாகத் திரட்டி, புகார் கொடுக்கும் முயற்சியில் தி.மு.க. வேகமா இறங்கியிருக்கு.''’

judge-arumugasamy""அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் குறித்தும் விறுவிறு தகவல் ஒண்ணும் காதுக்கு வருதே?''

""ஜெ. மர்ம மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி கமிஷன், தன்னிடம் அப்பல்லோ கொடுத்திருக்கும் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறது. ஜெ.’அப்பல்லோவில் இருந்த காலத்தில், அவருக்கு இதயத்தில் இருக்கும் மிட்ரல் வால்வில் நுண்ணுயிர்த் தாக்குதல் இருக்கிறது என்றும், அதனால் இதயக் கோளாறால் அவர் அவஸ்தைப்படுகிறார் என்றும் அப்போதே "நக்கீரன்' எழுதியிருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அப்பல்லோ கொடுத்த ரிப்போர்ட்டிலும் 2016 அக்டோபரிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்றும் இரண்டாம் அட்டாக்தான், டிசம்பர் 4-ந் தேதி வந்தது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதோடு ஜெ.’வுக்கு சுகர் உச்சத்தில் இருந்த நிலையில், அங்கே அவருக்கு பாதாம் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகை உணவுகள் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இவையெல்லாம் விசாரணைக் கமிஷனுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.''’

""இன்னொரு நெருடல் விவகாரமும் இருக்கே... ராஜீவ் வழக்கில் விடுதலையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் குறித்து, டெல்லிக்கு உளவுத்துறை ஒரு அறிக்கையை அண்மையில் அனுப்பியிருக்கிறது. அதில், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவித்தால், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பார்கள் என்றும், மீத்தேன் எதிர்ப்பு போன்ற போராட்டங்களுக்கு அவர்கள் உத்வேகம் கொடுக்க முயல்வார்கள் என்றும், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கும் பிரதமருக்கும் எதிரான யுத்தத்தையே அவர்கள் கையில் எடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்களாம். தமிழ்த் தேசியம் வளர்ந்தால் அது இந்திய அரசுக்கு, அதாவது பா.ஜ.க. அரசுக்கு எதிராகத்தான் இருக்கும். ஏர் க்ஷஹஸ்ரீந் ஙர்க்ண் என்கிற குரல் வலுக்கும். அது மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கும்னு ரிப்போர்ட் கிடைத்ததாம். இதையே மத்திய உள்துறை, ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பியிருக்கிறது. இதுதான் 7 பேர் விடுதலையை ராஷ்டிரபதி பவன் நிராகரிக்க காரணமாம்.''’

""27 வருடமா தன் மகன் விடுதலைக்கு சளைக்காம போராடிய அற்புதம்மாள் மனம் நொந்து, "என் மகனைக் கருணைக் கொலை செஞ்சிருங்க'ன்னு சொல்லியிருக்கும் வார்த்தைகளில் உள்ள வலி எப்படிப்பட்டதுன்னு உணர்வுள்ளவர்களுக்குத்தான் புரியும்.''

nkn22.06.18 rangcall
இதையும் படியுங்கள்
Subscribe