"ஹலோ தலைவரே, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிரா 325 வாக்குகளும், ஆதரவா 126 வாக்குகளும் கிடைத்ததால் பா.ஜ.க. ஆட்சி, தப்பியிருக்கு. பா.ஜ.க.வோடு கை கோத்திருந்த இந்துத்வா அமைப்பான சிவசேனாவும், பிஜு ஜனதா தளமும் வெளிநடப்பு பண்ணிய நிலையில், அ.தி.மு.க., இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவா வாக்களிச்சி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே.''’
""ஆமாம்பா. காவிரி விவகாரத்துக்காக கடந்தமுறை நாடாளுமன்றக் கூட்டத் தொடரையே நடத்தவிடாமல் அமளி துமளி செய்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், இப்ப எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவா வாக்களிச்சாங்க?''’
""அந்த அமளி துமளியே, பா.ஜ.க.வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துடக் கூடாது என்பதற்காகத் தானே? மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிச்சி மோடி அரசுக்கு பாடம் புகட்டணும்னு அ.தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் எதிர்பார்த்திருந்தாங்க. ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜ.க. கொடுத்த ஸ்பெஷல் அழுத்தத்தால் நிலைமை மாறிடிச்சி.''’
""முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் முழுசா சரணாகதி அடைஞ்சிட்ட நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்களால் எப்படி பா.ஜ.க.வை எதிர்க்க முடியும்?''’
""சரியான கேள்விங்க தலைவரே, அ.தி.மு.க. எம்.பி.க்களைப் பொறுத்தவரை, இ.பிஎஸ்., ஓ.பி.எஸ். மீது ஏகக் கடுப்பில் இருக்காங்க. மாநிலத்தில் சகலவிதத்தில
"ஹலோ தலைவரே, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிரா 325 வாக்குகளும், ஆதரவா 126 வாக்குகளும் கிடைத்ததால் பா.ஜ.க. ஆட்சி, தப்பியிருக்கு. பா.ஜ.க.வோடு கை கோத்திருந்த இந்துத்வா அமைப்பான சிவசேனாவும், பிஜு ஜனதா தளமும் வெளிநடப்பு பண்ணிய நிலையில், அ.தி.மு.க., இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவா வாக்களிச்சி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கே.''’
""ஆமாம்பா. காவிரி விவகாரத்துக்காக கடந்தமுறை நாடாளுமன்றக் கூட்டத் தொடரையே நடத்தவிடாமல் அமளி துமளி செய்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், இப்ப எப்படி பா.ஜ.க.வுக்கு ஆதரவா வாக்களிச்சாங்க?''’
""அந்த அமளி துமளியே, பா.ஜ.க.வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துடக் கூடாது என்பதற்காகத் தானே? மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிச்சி மோடி அரசுக்கு பாடம் புகட்டணும்னு அ.தி.மு.க. எம்.பி.க்கள் பலரும் எதிர்பார்த்திருந்தாங்க. ஆனால் கடைசி நேரத்தில் பா.ஜ.க. கொடுத்த ஸ்பெஷல் அழுத்தத்தால் நிலைமை மாறிடிச்சி.''’
""முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் முழுசா சரணாகதி அடைஞ்சிட்ட நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்களால் எப்படி பா.ஜ.க.வை எதிர்க்க முடியும்?''’
""சரியான கேள்விங்க தலைவரே, அ.தி.மு.க. எம்.பி.க்களைப் பொறுத்தவரை, இ.பிஎஸ்., ஓ.பி.எஸ். மீது ஏகக் கடுப்பில் இருக்காங்க. மாநிலத்தில் சகலவிதத்திலும் எம்.எல்.ஏ.க்களும் மந்திரிகளும் லாபமடைந்துவரும் நிலையில், எம்.பி.க்களான தங்களை மட்டும் இவர்கள் கண்டுக்கலைன்னு நினைக்கிறாங்க. இந்த இருவர் தரப்பையும் வருமான வரித்துறை மிரட்டுதுன்னா அது அவங்க பாடு; நாம ஏன் பா.ஜ.க.வுக்கு அடிபணிஞ்சி போகணும்னு எரிச்சலடைஞ்ச அ.தி.மு.க. எம்.பி.க்கள், பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதா முடிவெடுத்தாங்க. இதையறிஞ்ச மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார், நாடாளுமன்றத் துணை சபாநாயகரான அ.தி.மு.க. தம்பிதுரையை அழைத்துப் பேசினார். தம்பிதுரை மசியலை. அடுத்து இ.பி.எஸ்.சையும் ஓ.பி.எஸ்சையும் தொடர்புகொண்ட அமித்ஷா, நெடுஞ்சாலைத்துறை விவகாரத்தில் பலமா சிக்கியிருக்கீங்க. அதை ஞாபகத்தில் வச்சிக்கங்கன்னு காரசாரமாச் சொல்ல, பதறிப்போன இருவரும் டெல்லியில் இருந்த எம்.பி.க்களைத் தொடர்புகொண்டனர். எம்.பி.க்கள் எவரும் பெரிதா ரெஸ்பான்ஸ் காட்டலை. இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே களமிறங்கி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரிடமும் ’லாபகரமா’ பேசிதான் சம்மதிக்க வச்சிருக்காரு.''’
""அங்கே மத்திய பா.ஜ.க. அரசுக்கு முழு சப்போர்ட்டா அ.தி.மு.க. மாறிய நிலையில், இங்கே எடப்பாடி அரசுக்கு எதிரான மனுவோட, கவர்னரை சந்திச்சிருக்காரே மு.க.ஸ்டாலின்?''’
""உண்மைதாங்க தலைவரே, நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பான மனுவோட 23-ந் தேதி, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திச்சார். வருமான வரித்துறையினர் முதல்வர் எடப்பாடியின் சம்பந்தி சுப்பிரமணியன், பினாமி செய்யாதுரை ஆகியோர் தொடர்பான இடங்களில் நடத்திய ரெய்டில், 3,120 கோடி ரூபாய் அளவிற்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதனால் இதை இதோடு விட்டுவிடாமல், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படணும்னு ஸ்டாலின் வலியுறுத்தினார். கவர்னரோ, நானும் கவனிச்சேன். இது சீரியசான மேட்டர்தான். இந்த மனுவை இன்றே மத்திய உள்துறைக்கு அனுப்பறேன். இது பிரதமர் பார்வைக்குப் போய், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்னு நம்பிக்கையா சொல்லியிருக்கார். அப்ப பேச்சுவாக்கில் ஸ்டாலின், எங்க மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு எதிரா, நீங்கள் மாவட்ட வாரியா ஆய்வுகள் நடத்துவதை நிறுத்தக் கூடாதான்னு கவர்னரிடம் கேட்க, கவர்னரோ, இந்த ஆட்சி செயல்படுதான்னு பார்க்க, அங்கங்கே ரோட்ல இறங்கிப் பார்க்கிறேன்; அவ்வளவுதான். இதைப்போய் நீங்க சீரியசா ஆக்கறீங்களே?. நான் என்ன இதைவச்சி தேர்தலிலா நிக்கப்போறேன்னு கேட்டிருக்கார். இதைக் கேட்டு, ஸ்டாலினும் பலமா சிரிச்சிருக்கார். மனு கொடுக்க வந்தவங்களுக்கு வடை பாயசம் கொடுத்து உபசரிச்சிருக்கார் கவர்னர்.''’
""தமிழக விவகாரங்களில் கவர்னரும் பிரதமரும் அல்வாதானே கொடுக்குறாங்க. சென்னை உயர்நீதி மன்றம், வி.வி.மினரல் தரப்புக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியா கொடுக்குது போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே விக்டர் ராஜமாணிக்கம் என்பவர், வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பை ஏற்படுத்தியிருக்குன்னு வழக்கைத் தொடுத்துட்டு, அதை வாபஸ் வாங்கிட்டார். ஆனால் இதை நீதிமன்றமே தன்னோட வழக்காக எடுத்துக்கிட்டு விசாரிக்க ஆரம்பிச்சிடுச்சி. ககன் தீப்சிங் பேடி தலைமையிலும், சத்யபிரதா சாகு தலைமையிலும் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டுகள், நெல்லை கலெக்டரா இருந்த கருணாகரன் கொடுத்த 2 ரிப்போர்ட்டுகள், பி.யு.சி.எல்.சுரேஷ் தலைமையிலான வழக்கறிஞர்கள் கொடுத்த ரிப்போர்ட்டுன்னு எல்லா ரிப்போர்ட்டுகளின் அடிப்படையிலும் வழக்கை நீதிமன்றம் விசாரிக்குது. இந்த எல்லா ரிப்போர்ட்களுமே வி.வி.மினரல்ஸின் கொள்ளையை அம்பலப்படுத்துது. இதில் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் கமிஷன் கொடுத்த ரிப்போர்ட்டை நீதிமன்றமே வெளிப்படுத்தியிருக்கு.''’
""அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்னதான் இருக்கு?''’
""மோனோசைட் என்கிற கனிமத்தில் அணுகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான தோரியம் என்கிற தனிமம் இருக்குதாம். இந்த மோனோசைட் அதிகம் இருக்கும் மணலை, அணுகுண்டு தயாரிக்கும் நாடுகளுக்கு வி.வி.மினரல்ஸ் ஏகத்துக்கும் ஏற்றுமதி பண்ணியிருக்குதாம். இந்தக் கனிமத்தை ஏற்றுமதி செய்யணும்னா, பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அணுசக்தித் துறையின் ஒப்புதலைப் பெறணும். ஆனால் இந்த ஒப்புதலைப் பெறாமல் 20 லட்சம் டன் வரையிலான மோனோசைட் கனிமத்தை வி.வி.மினரல்ஸ் ஏற்றுமதி பண்ணியிருக்கு. இதன் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்காம். இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணா, சேஷசாயி அடங்கிய பெஞ்ச்தான் தொடர்ந்து விசாரிக்குது. இந்த நீதிபதிகள் கறாரா தீர்ப்பளிக்கக் கூடியவர்கள். இருந்தபோதும் வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனோ மத்திய அரசின் பவர் புள்ளிகளுக்கும் இங்கிருக்கும் முதல்வர் எடப்பாடித் தரப்புக்கும் மிகவும் நெருக்கமானவர். அதனால் அவர் சில காய் நகர்த்தல்ல இருக்கார். வழக்கின் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பிலும் அதிகரிச்சிருக்கு.''’
""பா.ஜ.க.பிரமுகரான சுப்பிரமணிய சாமியையே மத்திய உளவுத்துறை கண்காணிக்குதுன்னு தகவல் வருதே?''’
""அதை நான் சொல்றேன்... ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மாதிரி சுப்பிரமணியசாமி, வீராத் இந்துஸ்தான் சங்கம்னு ஒரு இந்துத்வா அமைப்பையும் நடத்தறார். ஆண்டுதோறும் இந்த சங்கத்தின் மீட்டிங் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் நடப்பது வழக்கம். இந்தியா மற்றும் சர்வதேச அரசியல் பற்றி இந்தக் கூட்டத்தில் பேசுவார்கள். அதேபோல் வரும் ஆகஸ்ட் ரெண்டாம் வாரம் சாமி இந்தக் கூட்டத்தை டெல்லியில் நடத்த இருக்கார். இதில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யான்னு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கப் போறாங்க. இந்தக் கூட்டத்தில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் கலந்துக்கப் போறாராம். ராஜபக்சே இலங்கை அதிபரா இருந்தப்ப சீனாவோடு பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை தொடர்பான டீலிங்குகள் இன்னும் முடியலையாம். அதனால் அவர் சீனப் பிரமுகர்களுடன் இங்கே பேசப்போறார்ன்னு ஒரு தகவல் கசிஞ்சிருக்கு. இதைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை, சாமியை இப்பவே கண்காணிக்க ஆரம்பிச்சிருக்குதாம்.''’