"ஹலோ தலைவரே, அடுத்த முதல்வர் யாருங்கிற விவகாரத்தில், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.சுக்கு இடையிலான பவர் யுத்தம் உள்ளுக்குள்ளே கனன்றாலும் வெளியே புகைச்சல் தெரியக் கூடாதுன்னு கூட்டறிக்கை விட்டுப் பார்த்தாங்க.’’அதற்குப் பிறகும் அங்கங்கே போஸ்டர் யுத்தம் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. ஓ.பி.எஸ்.சின் மனக்குமுறல் இன்னும் முழுசா அடங்கலையே?''
""உண்மைதாங்க தலைவரே, அடுத்த முதல்வர் யாருங்கிற நீயா? நானா? யுத்தத்தை ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் நடத்திக்கிட்டிருந்தாலும், வெளியில் ஏற்படும் விவாதங்களைத் தவிர்ப்பதற்காக, ஆகஸ்ட் 15ல் சமாதான முடிவுக்கு வந்தாங்க. அமைச்சர்களின் தூது படலமும் நடந்தது. இதன் பிறகும் தன் ஆதங்கம் மாறாத ஓ.பி.எஸ்., தன்னைச் சந்திக்கும் அமைச்சர்களிடமும் கட்சி சீனியர்களிடமும், தன் மனக்குமுறலை பகிரங்கமாகவே கொட்டிக்கிட்டுதான் இருக்காராம் ஓ.பி.எஸ். மனுசனுக்கு பதவியைவிட, மானம்தான் முக்கியம்ன்னு அவர், கொந்தளிக்கவும் செய்யறாராம்.''
""ஓ.பி.எஸ்.சுக்கு அவ்வளவு மனக்குமுறலா?''
""ஆமாங்க தலைவரே, கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், விருது வாங்குவோர் பட்டியலில் ஓ.பி.எஸ்.சை 6 ஆவது நபராக நிற்கவைத்து, அவருக்கு எடப்பாடி விருது கொடுத்துச் சங்கடப்படுத்தியதை அவரால் இன்னும்கூட ஜீரணிக்க முடியலை. அம்மா ஜெ.வால் இரண்டுமுறை முதல்வராக ஆக்கப் பட்ட எனக்கு, இப்படியொரு அவமானம் தேவையான்னு பரி தாபமாக் கேட்கறாராம் ஓ.பி.எஸ். மேலும், தான் விருது வாங்கும் வரிசையில் நின்னப்ப, தன்னைப் பார்த்து ஒரு அதிகாரி, வரிசையில் வாங்கன்னு சொல்லி மேலும் இளக்காரம் செய்ததையும் அவர் களிடம் சுட்டிக்காட்டிய ஓ.பி.எஸ்., அந்த அதிகாரி என்ன? சாதி அரசியல் பண்றானா? அவனை செக்ரட் டேரியேட்ல இருந்து தூக்கனும் னும்னு ஒருமையிலே திட்டி, ஏகத்துக்கும் குமுறுகிறாராம். முதல்வ ரால் ஓரம்கட்டப்படறார்ன்னு தெரிஞ் சதும் ஒரு அதிகாரி அவரை அலட்சியமா டீல் செய்ய, அதுதான் அவரை ரொம்பவும் பாதிச்சிருக்கு.''
""இந்த நேரத்தில், மேலும் இரண்டு மந்திரிகள், முதல்வர் பதவியைக் குறிவைத்துத் தனி ஆவர்த்தனம் பண்றாங்களாமே?''
""உண்மைதாங்க தலைவரே, இதுதான் இப்ப இ.பி.எஸ்.சையும் ஓ,பி.எஸ்.சையும் ஒரே நேரத்தில் ஹை வோல்ட் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கு. அவர்களில் ஒருத்தர், நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் சுகா தாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தன் கைவசத்தில் 25 எம்.எல். ஏ.க்களை வச்சிக்கிட்டு, அவங்களுக்கு மாதந்திரப் படியையும் கொடுத்துக் கிட்டு இருக்கார். அந்த தைரியத்தில், கொரோனா விவகாரத்தில் இப்பவும் மக்கள் மத்தியில் நான்தான் ஹீரோவாக இருக்கிறேன். மக்களும் சுகாதாரத் துறையினரும் என்னைத் தான் நம்பறாங்கன்னு டெல்லியிடம் பீலாவையும் நினைவூட்டி பீலா விடறாராம். அதனால் தன்னையே முதல்வராக்கனும்னு டெல்லிக்கு அவர் தூது விட்டுக்கிட்டு இருக்கார்.''
""முதல்வர் கனவில் மிதக்கும் இன்னொருவர் யார்?''
""சொல்றேங்க தலைவரே, உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணிதான் அந்த பிரகஸ்பதி. அவர் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது பற்றியும் நாம ஏற்கனவே பேசியிருக்கோம். பெரும்பாலான பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை காண்ட் ராக்டுகளை, தனது மகன் மிதுன் மற்றும் தன் உதவியாளர் சேகர், ஆதரவாளர் சேலம் இளங்கோவன் ஆகியோர் மூலம், எடப்பாடி தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் ஒதுக்கி அவர்களைத் தன்பக்கம் தக்க வச்சிருப்பது போல், அமைச்சர் வேலுமணி, தனது உள்ளாட்சித்துறை காண்ட்ராக்ட்டுகளை, ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கே ஒதுக்கி, நேரடியாவே அதற்கான பயன்களையும் அனுபவிச்சிக்கிட்டு இருக்கார்.''
""ஆமாம்பா, தமிழகம் முழுக்க அவர், தனியா குரூப் பாலிடிக்ஸ் பண்றாராமே?''
""உண்மைதாங்க தலைவரே, நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை, தன் உள்ளாட்சித் துறை அதிகாரம் மூலம் தனக்குன்னு ஆதரவாளர்களை உருவாக்கி வச்சிருக்கார் வேலுமணி. கொங்கு மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தென் மாவட்டங்களிலும் அவருக்கு ஆதரவாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கு கட்சிப் பதவி வாங்கிக் கொடுத்திருக்காரு. அதனால், தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக, ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மூலம் டெல்லியிடம் அவர் மந்திரம் ஓதறார். தமிழகம் முழுக்க ஈ.பி.எஸ், ஓ. பி.எஸ்.சைத் தாண்டி தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்ப தாகச் சொல்லும் அவர், இப்பவே தன்னை தமிழக முதல்வராக்கினால், வருகிற தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியைப் பெரிய அளவிற்கு தன்னால் ஜெயிக்க வைக்க முடியும்ன்னு டெல்லிக்கு உறுதி கொடுத்திருக்காராம்.''
""சரிப்பா, பா.ஜ.க. தலைமை என்ன நினைக்குது?''
""இப்படி முதல்வர் பதவிக்கு அ.தி.மு.க.வில் திடீர்னு ஆளாளுக்கு வரிஞ்சி கட்ட ஆரம்பிச் சதை பார்த்த பா,ஜ.க. தலைமை, சசிகலா ரிலீசாகப் போறார்ன்னு வெளியாகும் செய்திகளால், இவர்கள் கணக்கு வழக்கை தங்களுக்கு லாபமாக்கிடும் முயற்சியில் அடிச்சிக்கிறாங்களோன்னு சந்தேகப்படுது. இருந்தாலும், அதி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் மூவ்களையும் அது கூர்ந்து கவனிச்சிக்கிட்டுதான் இருக்கு. மேலும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிய எடப்பாடியை அது முழு மையாக நம்பத் தயாராக இல்லை. அதே மாதிரி ஓ.பி.எஸ். தங்களிடம் தொடர்ந்து காட்டிவரும் விசுவாசத்தையும் பா.ஜ.க. தலைமை மறக்க விரும்பலை.''
""சரிப்பா, எடப்பாடி, குற்றவாளிகளை ஊக்கப் படுத்தறாருன்னு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பிலேயே முணுமுணுப்பு கேட்குதே?''
""உண்மைதாங்க தலை வரே, சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை விவகாரத்தில் கைது செய் யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை, பதவி உயர்வு மூலம் டி.எஸ்.பி.யாக ஆக்கியிருக் கிறது எடப்பாடி அரசு. இது துறை அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கு. எனினும், புகாருக்கு ஆளான காவல்துறை அதிகாரி ஒருவர்மீது, துறை ரீதியிலாக நடவடிக்கை எடுக்காத நிலையில், பதவி உயர்வு அளிக்க சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்கிறது காவல்துறை விதி. ஸ்ரீதர் கைதான போதே அவர்மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம் எடப்பாடி. அதன் விளைவுதான் இந்தப் பதவி உயர்வு.''
""கொரோனா கட்டுக்குள் வந்துடுச்சுன்னு விரைவில் அறிவிப்பு வரப்போவுதாமே?''
""உண்மைதாங்க தலைவரே, நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி, சென்னை மண்டலத்திலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்கனும்ன்னுதான், எடப்பாடி அரசு, கொரோனா பரிசோதனைகளைக் குறைத்து, தொற்றின் எண்ணிக்கையைக் குறைத்தது. இப்போது நிதி நெருக்கடியால் அனைத்து தனியார் பள்ளிகளும், தங்கள் கதவுகளைத் திறப்பதில் தீவிரம் காட்டுது. இதற்காக மேலிடங்கள் வரை டீலிங்குகளும் பேரங்களும் நடக்குது. இதேபோல் பெரும் நெருக்கடியில் இருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களும், பொதுப் போக்குவரத்தைத் திறந்துவிடும்படி டீலிங் பேசிவர்றாங்க. அதனால் தமிழகத்தில் கொரோனாவை அதிரடியாகக் குறைக்கும் முடிவில் இருக்குதாம் அரசு.''
""ஆமாம்பா, கொரோனாத் தொற்றே தமிழ்நாட்டில் இல்லைன்னு அறிவிச்சாலும் அறிவிப்பாங்க?''
""தலைவரே, அரசு கேபிள்ங்கிற கயிறு மூலமா ஊடகங்களைக் கட்டிப் போட்டிருக்கும் எடப்பாடி அரசு, அதன் மூலமா கொரோனா குறையுதுன்னும் குணமாகித் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்குதுன்னும் செய்திகளை பூஸ்ட் அப் பண்ணுது. கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவது பற்றி யாரும் கவலைப்படலை. இப்ப அரசுக் கணக்குப்படியே தமிழகத்தில் 6 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் உயிரிழந் திருக்காங்க. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்குப் பின், குணமானதா சொல்லி வீட்டுக்கு அனுப்பிய பிறகும் மரணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து கிட்டிருக்கு.''
""செப்ஸிஸ் என்று சொல்லப்படும் உடலுறுப்புகள் மீதான கடுமையான பாதிப்பினால் இந்த மரணங்கள் ஏற்படுதுன்னு நம்ம நக்கீரனில் கட்டுரையே எழுதியிருந் தாங்களே?''
""ஆமாங்க தலைவரே... அண்மையில் ராமநாதபுரம் நர்ஸ் பாண்டியூர் கலைச்செல்வி கொரோனா சிகிச்சை முடிஞ்சி வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்திருக்கார். நெகட்டிவ் ரிசல்ட் வந்திடிச்சின்னு வீட்டுக்கு அனுப்பப்படும் பலருக்கு, கொரோனா நேரத்தில் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான தொடர் சிகிச்சைகள் செய்யப்படலை. அவங்களுக்கும் அது உடனடியா தெரியலை. திடீர்னு நோய் அதிகமாகி, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துடுறாங்க. இதுபோன்ற மரணங்களும் கண்டுகொள்ளப்படறதில்லை. இந்த நிலையிலும் கொரோனா கணக்குகளைக் குறைப்பதற்கான வியூகங்களும் கொரோனா வேகத்தில் வகுக்கப்பட்டு வருதாம்.''
""ஆமா.. அப்படியெல்லாம் குறைச்சிக் காட்டினால்தானே இயல்பு நிலை திரும்புதுன்னு சொல்லி, சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்த மாதிரி மற்ற வருமான வழிகளையும் ஓப்பன் பண்ண முடியும்?''’’
""தலைவரே, எதிர்க்கட்சி ஏரியாவில் என்ன நடக்குதுன்னு சொல்றேன்... வட மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், ஜெ.’ஆட்சிக் காலத்தில் இருந்தே எடப்பாடியோடு நெருக்கம் பாராட்டி வருகிறார். எடப்பாடி சென்னையில் இருந்து சேலத்துக்குப் போகும் போதெலாம், அந்த எம்.எல்.ஏ.வை வேலூர் டூ திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்துச் சந்திப்பது வழக்கமாம். இந்த நட்பின் அடிப்படையில் அண்மையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான காண்ட்ராக்டுகளை எடுத்திருக்கிறார் எம்.எல்.ஏ. வரும் தேர்தலில் அவர் தொகுதியில் வேறொருவரைக் களமிறக்க தி.மு.க. இளைஞரணி செய லாளர் உதயநிதித் தரப்பு முடிவு செய் திருக்கிறதாம். இத னால் விரக்தியடைந்த அவருக்கு எடப்பாடியே, கவலைப்படாதீங்க. நம்ம கப்பல்ல ஏறிடுங்கன்னு ஆறுதல் சொல்லித் தூண்டில் வீசியிருக்காராம். இதைத் தொடர்ந்துதான் இப்படி ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.''
""தி.மு.க.வுக்குள் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயலும் பா.ஜ.க.வின் மோடி வித்தை எந்த அளவில் இருக்குது?''
""சிக்கலில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களுக்குக் குறிவைத்தது பா,ஜ.க. அந்த வகையில் அமலாக்கப்பிரிவிடம் பல வகையிலும் சிக்கி இருக்கும் தி.மு.க. மாஜி மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனுக்கு டெல்லி சில சிக்னல்களைக் கொடுக்க, அதன் அடிப்படையில் அவர் அமித்ஷாவையும் மோடியையும் சந்திச்சார். டெல்லி எதிர்பார்க்கும் அளவுக்கு அரசியல் வியாபாரத்தில் பெரிய விலையைக் கொடுக்க ஜெகத் விரும்பலை. அதனால் குரோம்பேட்டை தோல் தொழிற்சாலை தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவர் ஸ்டே வாங்கிட்டார். எனினும் ஓட்டல், மதுபான ஆலைகள், மருத்துவமனை என அவரது மற்ற விவகாரங்களை இப்ப தன் புலனாய்வு அமைப்புகள் மூலம் டெல்லி துருவுது. ஆ.ராசா உள்ளிட்டவர்கள் மீதான 2ஜி விவகாரத்தை வைத்து, தங்களுக்கு சாதகமா வளைக்கும், பா.ஜ.க.வின் உருட்டல் மிரட்டல் எடுபடலை. அதனால் 2ஜி வழக்கை டெல்லி விரைவுபடுத்தப் பார்க்க, அதை சட்டரீதியா நிதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது ராசா தரப்பு.''’’
""தி.மு.கவின் அரசியல் ஆலோசனைக் குழுவான பிரசாந்த் கிஷோரின் ஐ.பேக் டீம் என்ன பண்ணுதாம்?''
""உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் டீம், பெரிசா ஒன்னும் சாதிக்கலைங்கிற முணுமுணுப்பு தி.மு.க. தரப்பிலேயே இருக்கு. இதைத் தெரிஞ்சிக்கிட்ட ஐபேக் டீம், இப்போது மீடியா ஆட்களைத் தங்கள் பக்கம் கொண்டுவந்து அவர்கள் மூலம், தி.மு.க.வுக்கு ஆதரவான பிரச்சாரத்தைக் கையில் எடுக்க நினைக்குது. இந்த வகையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றிய பெண் பத்திரிகை யாளரைத் தொடர்புகொண்ட ஐபேக், உங்களுக்குக் கீழ் ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு, நாங்கள் பரப்ப விரும்பும் செய்திகளை, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்புங்கள். அதற்கு வெயிட்டாக ஊதியம் தர்றோம்ன்னு தூண்டில் போட்டிருக்கு. அந்த பத்திரிகையாளரோ, நான் பிராமணப் பெண். தி.மு.க.வுக்கு ஆதரவான மனநிலை என்னிடம் இல்லைன்னு கழன்றுக்கிட்டாராம். இருந்தும் வலையோடுதான் அலை கிறதாம் ஐபேக்.''
""சென்னை விமான நிலைய அறிவிப்புகளில் தமிழ் மணக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, தனக்கு இந்தி தெரியாதுன்னு சொன்ன தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம், நீங்கள் இந்தியரான்னு பெண் காவலர் ஒருவர் கேள்வி எழுப்பிய விவகாரம், பெரும் கண்டனத்துக்கு ஆளானது. இப்படி யொரு கேள்வியால் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த காவலரிடம், உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரைக் கண்டிச்சிருக்காங்க. இதைத் தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களிலும், அந்தந்த மாநில மொழிகளிலும் அறிவிப்புகள் செய்ய வேண்டும்னு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, மொழிப் பிரச்சனையை விவாதப் பொருளாக்கக் கூடாதுன்னும் அறிவுறுத்தபட்டிருக்கு. அதனால்தான் இங்கேயுள்ள விமான நிலையங்களில், இப்ப மல்லிகைப் பூ மாதிரி தமிழ் மணக்குது.''’’
""அப்பகூட தாமரை பூவை உதாரணம் காட்ட மாட்டீங்களா?''
""நான் முக்கியமான செய்தியைச் சொல்றேன். இ-பாஸ் அப்ளை செய்யும் அனைவருக்கும் அனுமதி தருவதுன்னு எடப்பாடி அரசு அறிவித்திருந்தாலும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் ஒவ்வொருவரிடமும் தலா 2500 ரூபாயை வசூலிக்கிறார்களாம். அதேபோல் இங்கிருந்து வெளியேறுகிறவர்களிடமும் இதே அளவுக்கு வசூலிக்கப்படுகிறதாம். மேலிடங்கள் வரை கமிஷன் என்பதால், வசூல் மழையில் நனைகிறது அதி காரிகள் டீம்.''’’
___________
நீட் தேர்வுக்கு பலியான இன்னொரு அனிதா!
கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி சாமி ரோட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவரது 19 வயது மகள் சுபஸ்ரீ நீட் தேர்வு எழுதுவதற்கு கடந்த இரண்டு வருடங்களாய் தனியார் மையத்தில் பயிற்சி எடுத்து வந்தார். எனினும், நீட் தேர்வு முறைகளால் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படுவதால், இயல்பான பயம் சுபஸ்ரீக்கும் இருந்தது. கொரோனோ காலம் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால் இன்னும் பயம் கூடி விட்டது சுபஸ்ரீக்கு. இந்த நிலையில்தான் கடந்த 19ந் தேதி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோற்று விட்டதால் இந்த தற்கொலை முடிவை சுபஸ்ரீ எடுத்தார் என்ற கோணத்தில் .ஆர்.எஸ் புரம் போலீசார் விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கினர்.
-அருள்குமார்