"ஹலோ தலைவரே, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் ராஜினாமா கடிதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால, அவரோட அரசியல் வருகை எதிர்பார்க்கப்படுது.''’’
""ஆமாப்பா... லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துங்கிறதுதான் சகாயத்தின் முழக்கம். அவர் பங்கேற்றிருந்த மக்கள்பாதை அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்களால், அவர் தனி பாதை காணலாம்னு எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாருன்னும் அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.''
""ஆளுங்கட்சியில்கூட பல வியூகங்கள் இருக்குதுங்க தலைவரே... ரஜினியின் புதிய கட்சியை என்ஜினாக்கி, அதன் பின்னால் அ.தி.மு.க இல்லாத ஒரு புதிய கூட்டணியை உருவாக்க பா.ஜ.க. திட்டமிட்டுச்சி. நாம இதுபற்றி பேசி, நம்ம நக்கீரனில் இதுபற்றிய செய்தியை நக்கீரன் அம்பலப்படுத்தியதும் அ.தி.மு.க.வில் பலத்த பரபரப்பு உண்டாயிடுச்சு. அதனால், இனி பா.ஜ.க.வோடு நமக்கு கூட்டணியே வேண்டாம்ங்கிற எண்ணத்துக்கு எடப்பாடி, கே.பி.முனுசாமி, மதுசூதனன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட சீனியர்கள் பலரும் வந்துட்டாங்க. அதே சமயம், எப்படியாவது தன் மகன் ரவீந்திரநாத்தை மத்திய மந்திரியா ஆக்கிடனும்னு நினைக்கும் ஓ.பி.எஸ். ஸின் மனசை மெல்ல மாற்ற முயற்சி செய்தாலும், அவர் மகனும் எம்.பி.யுமான ஒ.பி. ரவீந்திரநாத் விடுறதா இல்லையாம். பா.ஜ.க.வின் அரவணைப்பு இல்லாம நான் எப்படி மத்திய அமைச்சரா சைரன் காரில் போறதுன்னு அப்பாகிட்டே கேட்டு அடம்பிடிக் கிறாராம்.''’
""எடப்பாடியின் அடுத்த கட்ட மூவ் என்னவாம்?''
""வரும் 9-ந் தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூடுது. அதில் பா.ஜ.க. கூட்டணி பற்றி விவாதிச்சி முடிவெடுக்கலாம்னு அவர் நினைக்கிறார். அ.தி.மு.க.வை ஓரம்கட்ட நினைத்த பா.ஜ.க.வின் ஆசைக்கு, ரஜினியே முற்றுப்புள்ளி வச்சிட்டாருன்னு சந்தோசப்படும் எடப்பாடி, நம்மை விட்டால் பா.ஜ.க.வுக்கு வேறு வழியில்லை. அதிகாரத்தில் இருப்பதால் என்னதான் மிரட்டிப் பார்த்தாலும், நம்மகிட் டேதான் சீட் வாங்கி ஆகணும். பா.ஜ.க மேலிடம் இதை உணர்ந்து தான் தேர்தல் நேரத்தில் செயல் படும். அப்ப, தமிழக பா.ஜ.க.வோட அ.தி.மு.க.வுக்கு எதிரான தெனாவெட்டுக் குரல் எல்லாம் அடங்கிப் போயிடும் பாருங்கன்னும் அவர் கமெண்ட் அடித்து வருகிறாராம்.''
""அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க. அதிக சீட்டுக்களை வாங்கப் பார்க்குதுன்னும் எடப்பாடி வருத்தப்பட்டாரமே?''
""உண்மைதாங்க தலைவரே, நீங்க எங்களுக்கு அதிக சீட்டுக்களைத் தர்றதோட, அனைத்துத் தொகுதிகளுக்குமான செலவையும் நீங்கதான் கவனிச்சாகனும்னு பா.ஜ.க. தரப்பு நிர்பந்தம் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. அதேபோல் பா.ம.க.வும் 40 சீட்டுக்களுக்குக் குறையாமல் வேணும்ன்னு சொன்னதோட மத்த விசயங் களையும் வெயிட்டாவே எதிர்பார்க்குது. தே.மு.தி.க.வோ சீட்டுக்களைப் பற்றிக் கூட்டிக் குறைச்சிப் பேசிக்கலாம். ஆனால் மத்த விசயங்கள்ல எங்க எதிர்பார்ப்பை நீங்கள் ஈடுகட்டுங்கன்னு சொல்லியிருக்கு. அதனால் கொஞ்ச நாளாவே குழப்பத்தில் இருந்தார் எடப்பாடி. இப்ப ரஜினியின் அரசியல் துறவறம். எடப்பாடியை நிமிரவச்சிருக்கு.''
""அ.தி.மு.க. வின் பொதுக்குழு கூடும் அதே 9-ந் தேதி, பா.ம.க.வின் நிர்வாகக்குழு கூடுதே?’’
""ஆமாங்க தலைவரே, கடந்த 31-ந் தேதிதான் பா.ம.க.வின் பொதுக்குழு கூடியது. இந்த நிலையில் 9-ந் தேதி தங்கள் நிர்வாக குழுவை, டாக்டர் ராமதாஸ் கூட்டியிருப்பதால், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க விலகப் போகிறதாங்கிற கேள்வி பரபரப்பா அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கு. இந்தக் கூட்டத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியும் கூட்டணி பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக டாக் அடிபடுது. வன்னியர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டை எடப்பாடி அரசு கொடுக்க மறுத்தால், என் தலைமையில் அடுத்தக்கட்ட போராட்டம் நடக்கும்னு பா.ம.க. பொதுக்குழுவில் எச்சரித்தும், அதை எடப்பாடி பெரிதாக எடுத்துக்கொள்ளாதது டாக்டர் ராமதாஸை எரிச்சலாக்கி இருக்கிறதாம். அதனால் ராமதாஸின் குரல் இந்தக் கூட்டத்தில் காட்டமாக ஒலிக்கும்னும் சொல்லப்படுது.''
""உயர் கல்வித்துறையை டாஸ்மாக் அதிகாரி ஒருத்தர் தள்ளாட வைக்கிறாராமே?''’
""உண்மைதாங்க தலைவரே, அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் மோகன் ஐ.ஏ.எஸ். கன்ஃபேர்ட் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், உயர் கல்வித் துறையிலும் வீட்டுவசதி வாரியத்திலும் ஏகத்துக்கும் தலையிடுவதாகப் புகார்கள் எழுந்திருக்கு. குறிப்பாக, உயர்கல்வித் துறை செயலாளரான அபூர்வா ஐ.ஏ.எஸ்.சை, மூச்சுக்கு மூச்சு, அக்கா...அக்கா..ன்னு அழைக்கும் இவர், அவர் துறையில் பதவி உயர்வு, நியமனம், இட மாறுதல்னு புகுந்து விளையாடுகிறாராம். அதேபோல, வீட்டு வசதி வாரியத்திலும் மோகனின் தலையீடு அதிகம்னு அங்கிருக்கும் அதிகாரிகளும் முனகறாங்க. இது குறித்துத் தலைமைச் செயலாளர் சண்முகம்வரை புகார்கள் பறக்குதுன்னு சொல்லுது கோட்டை வட்டாரம்.''
""ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போக்கில் மாற்றம் தெரிவதாகவும் எடப்பாடி வருத்தப்படுகிறாராமே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செல்வாக்கான அதிகாரியாகத் திகழ்ந்த அசோக் வரதன் ஷெட்டி ஓய்வு பெற்றுவிட்டார். இந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அவர், ஸ்டாலினிடம் சிறப்பு அதிகாரி யாகப் பணியாற்றுவார்ன்னு அதிகாரிகள் மட்டத்திலேயே டாக் இருக்கு. அதனால் இப்பவே பெரும்பாலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அசோக் வரதன் ஷெட்டியிடம் இப்போது நல்லுறவைப் பேண ஆரம்பிச்சிட்டாங்களாம். இந்த நிலையில், ஊழலுக்கு துணையாக உடந்தையாக இருந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மீதான புகாரின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்குப் பதிவுசெய்யும்படி டெல்லி மேலிடத்திலிருந்து பிரஷ்ஷராம். அதனால அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு அனுசரணையாக இருந்த 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், அமைச்சர்களின் கடைசி நேரக் கல்லா கட்டலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாத 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்களுக்குத்தான் வழக்கு, விசாரணைன்னு நெருக்கடி வரும்ங்கிறதால இப்பவே வேலையை ராஜினாமா செய்யும் முடிவில் இருக்காங்களாம்.''
""இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் டெக்னாலஜி யுத்தத்தைத் தீவிரமாக் கையில் எடுத்திருக்கே?''
""ஆமாங்க தலைவரே, இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு நவீன டெக்னாலஜிகளை வைத்து தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மோதிக் கொள்ள ஆரம்பிச்சிருக்கு. குறிப்பாகச் சொல்லனும்னா ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தரப்பு, எடப்பாடியின் அரசியல் ஆலோசகர் சுனிலின் ஐடியாவின் படி, வெற்றி நடை போடும் தமிழகம்ங்கிற பேர்ல பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரச்சார யுத்தத்தை ஆரம்பிக்க, தி.மு.க. தரப்பும், அ.தி.மு.கவை நிராகரிப்போம்ங்கிற தலைப்பில் 16ஆயிரத்து 500 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்தி, பெண்களை அதிகளவில் திரட்டி தீர்மானம் நிறைவேற்றுது. அதோடு, தி.மு.கவின் தேர்தல் வியூக வகுப்பாளரான "ஐபேக்' பிரசாந்த் கிஷோரின் வியூகத்தின்படி "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்'ங்கிறதை ஆண்ட் ராய்ட் களத்தில் ட்ரண்ட் ஆக்கி வருது. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவங்க இதனை ஆதரிச்சி க்ளிக் பண்ணியிருக்காங்க. தொடர்ந்து க்ளிக் ஆகுதாம். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த ஆன்லைன் யுத்தத்துக்கு தாராளமாகவே கரன்சிகளை அள்ளி இறைக்குது. எடப்பாடியும் ஸ்டாலினும் ஒருவரையொருவர் பொதுவெளியில் கடுமையா விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க-தி.மு.க இடையிலான டிஜிட்டல் யுத்தம் சுனிலுக்கும் பிரசாந்த் கிஷோருக்குமான பிராண்டிங் யுத்தமாக உக்கிரமடைஞ்சிக் கிட்டிருக்கு.''
""டி.டி.வி.தினகரன் டெல்லியில் ஹால்ட் அடிச்சிருக்காராமே?''
""உண்மைதாங்க தலைவரே, புதுவையில் தினகரன் ஓய்வில் இருக்கிறார்னு சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர் ரகசியமாக டெல்லிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறாராம். அங்கே என்ன செய்கிறார் என்று கேட்டால், சின்னம்மா சசிகலாவை ரிலீஸ் செய்வதில், பல்வேறு சிக்கல்களை பா.ஜ.க. தரப்பும் எடப்பாடித் தரப்பும் உண்டாக்குது. அதனால் அவர், டெல்லியில் தங்கி சிக்கல்களைக் களைந்துகொண்டு இருக்கிறார்ன்னு சொல்றாங்க. சசிகலா சொந்த பந்த தரப்போ, அரசியலில் ஆயிரம் நகர்வுகள் இருக்கும்னு, அர்த்தத்தோட சிரிக்குது.''
""புதுவை மாநிலத்தை தமிழகத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லைன்னும் முதல்வர் நாராயணசாமி திசை திருப்புறார்னும் மத்திய அமைச்சர் சொல்லியிருக்காரே?''
""இது ரொம்ப கால பிரச்சினைங்க தலைவரே... புதுவை மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்கனும்ன்னு 79-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒரு முயற்சியில் இறங்கினார். அதை, அப்போது தமிழக முதல்வரான எம்.ஜி.ஆரும் புதுவையில் ஆட்சி செய்த அ.தி.மு.க முதல்வர் டி.ராமசாமியும் ஆதரிச்சாங்க... ஆனால் மக்கள் போராட்டத்தால பின்வாங்கிட்டாங்க. இப்ப ஆளுநர் கிரண்பேடி ஆளுமை செலுத்துற நிலையில் புதுவையை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு திட்டமிடுவதாக, நாராயணசாமி குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழலில் புதுவை வந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, புதுவை மாநிலத்தை எந்த மாநிலத்தோடும் இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லைனு அறிவிச்சிருப்பதால, புதுச்சேரி மக்கள்கிட்ட லேசான நிம்மதி பெருமூச்சு வெளிப்படுது.''
""புதுச்சேரியை வேற மாநிலத்தோடு இணைக்கலைன்னாலும், அங்கே அமைச்சரா இருக்கிற மல்லாடி கிருஷ்ணாராவ், வேற மாநில அரசியலில் இணையப் போறாராமே?''
""ஆமாங்க தலைவரே, புதுச்சேரியின் ஏனாம் தொகுதி, ஆந்திராவில் இருக்குது. அங்கிருந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மல்லாடி கிருஷ்ணாராவ். மீனவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, அங்கே 7 தொகுதிகளில் பலமாக இருக்கும் அந்த சமூக மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். இவரைத் தனது கட்சிக்கு அழைத்திருந்தார் ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது அவர், உங்களைப் போன்ற அனுபவம் மிக்கத் தலைவர்கள், ஆந்திர அரசியலில்தான் இருக்கனும்னு சொல்ல, அதை மல்லாடியும் ஏற்றுக் கொண்டுவிட்டாராம். அதனால்தான் இந்த ராஜினாமா முடிவாம். மல்லாடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில், ராஜ்யசபா எம்.பி.யாக்கி டெல்லிக்கு அனுப்பத் திட்டமிட்டி ருக்கிறாராம் ஜெகன்மோகன்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கொரோனா கால நெருக்கடியை உத்தேசித்து, அரசுத் துறைகளுக்கு எந்த வொரு புதிய வாகனத்தையும் வாங்கக் கூடாதுன்னு அரசாணையே போடப்பட்டிருக்கு. இருந்தும் இதை அரசுத் தரப்பே மீறி, 10 கோடி ரூபாய்க்கு புதிய வாகனங்களை வாங்கியிருக்கு. இதற்கான நிதியை, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அனுமதிச்சிருக்கார். எடப்பாடி அரசின் இதுபோன்ற விதிமீறிய பர்சேஸ்கள், கமிஷனுக்காகவே நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கு.''’’