ராங்கால் : ஸ்டாலினுக்கு எதிராக சாதிக்பாட்சா மனைவி? வில்லங்க வியூகத்தில் அ.தி.மு.க! அரசு கஜானாவில் அமைச்சர்கள் போல எம்.எல்.ஏ.க்களுக்கும் பங்கு! -எடப்பாடி பச்சைக் கொடி!

rang

லோ தலைவரே, தமிழக அரசியல் களத்தைக் கலக்க, பல விதங்களிலும் பா.ஜ.க. ரூட் போட்டுக்கிட்டு இருக்கு.''

""ஆமாம்பா, அ.தி.மு.க. முதுகில் குதிரை ஏறும் பா.ஜ.க., இன்னொரு பக்கம் கட்சி தொடங்கிவிட்ட கமலையும், கட்சி தொடங்க இருக்கும் ரஜினியையும் தனக்கு ஆதரவான திசையில் ஓடவைக்கப் பார்க்குதேப்பா.''

modi

""உண்மைதாங்க தலைவரே, எல்லாம் நெருங்கிவரும் தேர்தலின் மாயம். தேர்தல் ஆணையம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை பிப்ரவரி இறுதியில் அறிவிக்கும் திட்டத்தில் இருக்குது. ஏப்ரல்-மே மாதங்களில் 4 கட்டமாக நடத்தப்படும் தேர்தலின், இரண்டாம் கட்டத்தில், தமிழகம் ஒரே நாள் வாக்குப்பதிவின் மூலம் தேர்தலைச் சந்திக்கும்னு டெல்லியிலிருந்து தகவல் வருது. தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு கட்சியும் பரபரப்பான வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு. டிசம்பர் இறுதியில் தனது அரசியல் கட்சிக்கான தேதியை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே ரஜினி சொல்லியிருக்கிறார். அதையொட்டி பா.ஜ.க.வின் அரவணைப்பு ரஜினிக்கு அதிகமாகி இருக்குது.''

""கட்சி ரிஜிஸ்டர் வரைக்கும் வேலைகள்பற்றி போன முறையே நம்ம நக்கீரனில் விரிவா எழுதியிருந்தாங்களே?''

""ஆமாங்க தலைவரே, ரஜினி புதிய கட்சியைத் தொடங்கும் நாளில், அவர் தங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கனும்னுதான் பா.ஜ.க., தலை வர் ஜே.பி. நட்டாவை, டிசம்பர் 30, 31 தேதிகளில் தமிழகத்துக்கு அனுப்பிவைக்க இருக்கிறார் மோடி. பலரது இயக்கத்தில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரது புதிய கட்சி அறிவிப்பின் போது, அவரை ஜே.பி.நட்டா சரியானபடி இயக்கு வாராம். ரஜினி மூலம் பலவகையிலும் தங்களுக்குச் சாதகமாகக் காய்நகர்த்த நினைக்கிறார்களாம் மோடியும் அமித்ஷாவும். அதேபோல் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் லகானையும், அவர் கட்சிக்கு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். மூலம் அழுத்தமாகப் பிடிக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க.''

""ரஜினியோட அரசியல் வியூகம் என்ன?''

""அதுபற்றி நம்ம நக்கீரனில் வந்திருக்க தனி கட்டுரையைப் படிச்சிக்குங்க. புதுக்கட்சி தொடங்குவது- பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளைப் பார்த்து மலைப்படைந

லோ தலைவரே, தமிழக அரசியல் களத்தைக் கலக்க, பல விதங்களிலும் பா.ஜ.க. ரூட் போட்டுக்கிட்டு இருக்கு.''

""ஆமாம்பா, அ.தி.மு.க. முதுகில் குதிரை ஏறும் பா.ஜ.க., இன்னொரு பக்கம் கட்சி தொடங்கிவிட்ட கமலையும், கட்சி தொடங்க இருக்கும் ரஜினியையும் தனக்கு ஆதரவான திசையில் ஓடவைக்கப் பார்க்குதேப்பா.''

modi

""உண்மைதாங்க தலைவரே, எல்லாம் நெருங்கிவரும் தேர்தலின் மாயம். தேர்தல் ஆணையம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை பிப்ரவரி இறுதியில் அறிவிக்கும் திட்டத்தில் இருக்குது. ஏப்ரல்-மே மாதங்களில் 4 கட்டமாக நடத்தப்படும் தேர்தலின், இரண்டாம் கட்டத்தில், தமிழகம் ஒரே நாள் வாக்குப்பதிவின் மூலம் தேர்தலைச் சந்திக்கும்னு டெல்லியிலிருந்து தகவல் வருது. தேர்தல் நெருங்க நெருங்க, ஒவ்வொரு கட்சியும் பரபரப்பான வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு. டிசம்பர் இறுதியில் தனது அரசியல் கட்சிக்கான தேதியை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே ரஜினி சொல்லியிருக்கிறார். அதையொட்டி பா.ஜ.க.வின் அரவணைப்பு ரஜினிக்கு அதிகமாகி இருக்குது.''

""கட்சி ரிஜிஸ்டர் வரைக்கும் வேலைகள்பற்றி போன முறையே நம்ம நக்கீரனில் விரிவா எழுதியிருந்தாங்களே?''

""ஆமாங்க தலைவரே, ரஜினி புதிய கட்சியைத் தொடங்கும் நாளில், அவர் தங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கனும்னுதான் பா.ஜ.க., தலை வர் ஜே.பி. நட்டாவை, டிசம்பர் 30, 31 தேதிகளில் தமிழகத்துக்கு அனுப்பிவைக்க இருக்கிறார் மோடி. பலரது இயக்கத்தில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, அவரது புதிய கட்சி அறிவிப்பின் போது, அவரை ஜே.பி.நட்டா சரியானபடி இயக்கு வாராம். ரஜினி மூலம் பலவகையிலும் தங்களுக்குச் சாதகமாகக் காய்நகர்த்த நினைக்கிறார்களாம் மோடியும் அமித்ஷாவும். அதேபோல் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் லகானையும், அவர் கட்சிக்கு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். மூலம் அழுத்தமாகப் பிடிக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க.''

""ரஜினியோட அரசியல் வியூகம் என்ன?''

""அதுபற்றி நம்ம நக்கீரனில் வந்திருக்க தனி கட்டுரையைப் படிச்சிக்குங்க. புதுக்கட்சி தொடங்குவது- பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளைப் பார்த்து மலைப்படைந்திருக்கார் ரஜினி. ஆனா, அதில் பெரும் பகுதி சுமையை பா.ஜ.க.வே ஏற்றிருப்பதால் ரஜினி கொஞ்சம் தெம்பாவே இருக்கார். கட்சிக் கான தலைமை அலுவலகத்தை, தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திலேயே அமைக் கலாமான்னு யோசித் தாலும், இந்த நிமிடம் வரை, அதுபற்றி அவர் உறுதியான முடிவுக்கு வரலை. தனது கட் சிக்கான சட்ட விதிகளை உருவாக்கும் பொறுப்பை, முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடமும், கட்சிக்கான கொள்கைகளை வடிவமைக்கும் பொறுப்பை பா.ஜ.க.வின் தேசிய அறிவுசார் குழுவினரிடமும் ஒப்படைச்சிருக் காராம் ரஜினி. அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும் தி.மு.க. சிட்டிங் எம்.பி. ஒருவரும் ரஜினியின் புதுக் கட்சியில் இணையப் போறாங்கங்கிற பேச்சும் பரபரப்பா அடிபடுது.''

""தமிழகத்துக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு எடப்பாடி அழைப்பு விடுத்திருக்கிறாராமே?''

ministers

""ஆமாங்க தலைவரே, ஜெ.’ மறைந்த நேரத்தில், அவரது படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்கனும்ன்னு எடப்பாடி நேரில் போய் அழைத்தும், அப்போது நிர்தாட்சண்யமாய் மறுத்துவிட்டார் மோடி. அதே போல் ஜெ.’நினைவிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைத்த போதும், மோடி அதற்கு சம்மதிக்கலை. அப்படிப்பட்ட அவர், தேர்தல் நேரத்தில் தமிழக மக்களைக் கவரனுங்கிற எண்ணத்தில், ஜெ பிறந்த நாளான வரும் பிப்ரவரி 24-ந் தேதி சென்னைக்கு வரப்போகிறாராம். புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெ.’சமாதியை அவர் திறந்து வைத்து, உருக்கமாகப் பேசவும் இருக்கிறாராம். இப்படி ஆர்வமாக அவர் ஜெ.’மீது அக்கறை காட்டுவதை சாக்காக்கி, அவரிடம் எடப்பாடியும் சில கோரிக் கையை வைத்திருக் கிறாராம்.''

rang

""மாநில நலன்களுக்கான கோரிக்கையா?''

""அதெல்லாமா முக்கியம்? அவரவர் நலன் சார்ந்த கோரிக்கைதான் முக்கியம். ஜனவரியில் சசிகலா ரிலீஸ் ஆகறதை எடப்பாடி விரும்பலையாம். அவர் வெளியெ வந்தால், அ.தி. மு.க.வின் முதல்வர் வேட்பாளர்ங்கிற தனது ஒளிவட்டம் பறிபோகலாம்னு எடப்பாடி பயப்படறாரு. அதனால தேர்தல் முடியும்வரை சசிகலாவை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி, சிறையிலேயே வைக்கனும். அல்லது தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல்னு அ.தி.மு.க.வின் தேர்தல் திட்டங்கள் அனைத்தும் இறுதியான பிறகு பிப்ரவரி அல்லது மார்ச்சில் அவரை ரிலீஸ் பண்ணுங்கன்னு தனது வேண்டுகோளை மோடியிடம் எடப்பாடி வைத்திருக்கிறாராம். மோடிகிட்டேயிருந்து சாதகமான பதில் எதுவும் வரலையாம்.''

""எனக்கும் ஒரு தகவல் கிடைச்சுதுப்பா. டிசம்பர் 13ந் தேதி டி.டி.வி. தினகரன் பிறந்தநாள். அதற்காக சசிகலாவை சந்திச்சி ஆசிர்வாதம் வாங்கணும்னு இரண்டு நாள் முன்னாடியே பெங்களூருவுக்குப் போயும் பரப்பன அக்ரகாரம் சிறையில் சசிகலாவை தினகரனால் சந்திக்க முடியலையாம்.''

""தலைவரே.. நான் ஒரு செய்தி சொல்றேன்.. உயர்கல்வி துறை சார்பாக தஞ்சை, ஸ்ரீரங்கம், தர்மபுரி,போடி ஆகிய 4 இடங்களில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் கட்டுவதற்கான டெண்டர் விவகாரத்தில் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் ஆர்வமாக இறங்கினார். இது ஜெ.’ காலத்திலேயே அறிவிக்கப்பட்ட திட்டங்கள். அன்பழகனின் ஆர்வத்தை அறிந்த அமைச்சர் வேலுமணி, அந்த காண்ட்ராக்ட் வேலைகளைத் தனது ஆதரவாளரான கோவை பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைக்கத் துடிக்கிறார். இதற்காக அவர் கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசினார். இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி, கிண்டியி லுள்ள தொழில் நுட்ப கல்வி இயக்குநரக தலைமையகத்தில், கமிஷனர் விவேகானந்தன் ஐ.ஏ.எஸ்., அந்த காண்ட்ராக்ட்டை எடுக்க நினைத்த 10-க்கும் மேற்பட்ட காண்ட்ராக் டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.''

""ஓ...''

""அதாவது, அமைச்சர் வேலுமணியின் ஆளுக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதை எவரும் எதிர்க்கக் கூடாது என்பதற்கான சமாதான முயற்சிதான் இந்தக் கூட்டமாம். டெண்டர் விதிப் படி கலந்துக்கிட்ட பலரும் இதை எதிர்த்ததால் காலை 11 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் இரவு 9 மணி வரை இழுத்திருக்கு. இதற்கு மறுநாள், கோவை மாவட்ட பிரபல காண்ட்ராக்டர் முத்துக்குமார் விவேகானந்தனை சந்தித்து, ரகசியமாக 2 மணி நேரம் விவாதித்து விட்டுச் சென்றிருக்கிறார். இதையெல்லாம் அறிந்த துறை அமைச்சரான கே.பி.அன்பழகன், என் துறையில் எப்படி அமைச்சர் வேலுமணி தலையிடலாம்னு கோபமடைய, இது தொடர்பாக இரு அமைச்சர்களுக்கு இடையில் இப்ப உரசலாம்.''

""அமைச்சர்கள் சொந்த லாபத்துக்கு அடிச்சிக்கிறது மாதிரியே, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும், எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்ன்னு எடப்பாடியிடம் கோரிக்கை வச்சிருக்காங்களாமே?''

""ஆமாங்க தலைவரே, எல்லா அமைச்சர்களும் அனைத்து வகையிலும் செழித்துக் கொழித்துக் கொண்டிருக்கும் நிலையில், தங்களால் பெரிதாக சம்பாதிக்க முடியலையேங்கிற ஆதங்கம், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் அதிகமாய் இருக்குது. அதனால்தான், அவர்கள் தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்திலாவது, துறை வாரியான நியமனங்கள் மூலம், நாங்களும் நாலு காசு சம்பாதிக்கனும்ன்னு எடப்பாடியிடம் கேட்டிருக்காங்க. அவர்களின் நிலையை உணர்ந்த எடப்பாடி, அனைத்துத் துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கையை சேகரிக்கச் சொல்லியிருக்கிறாராம். இதன் அடிப்படையில் அவர்கள் காட்டையும் பண மழை நனைக்குமாம்.''

""ஏற்கனவே பண மழையில் நனைந்ததா சொல்லப்பட்டு, கொரோனாவுக்குப் பலியான விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பற்றி, துருவத் துருவ பூதாகரத் தகவல்கள் வந்துக் கிட்டே இருக்குதே?''

""ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரம் தேர்தல் பூத்துகள் அமையப் போவுது. ஒரு பூத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் ஏற்கனவே தேர்தலுக்கான செலவுத் தொகை அனுப்பப்பட்டுவிட்டது. இதேபோல் டெல்டா மாவட்டங்களுக்கான தேர்தல் செலவுக்காக துரைக்கண்ணுவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி பணத்தை, இன்னும் எடப்பாடித் தரப்பால் மீட்க முடியலையாம். அதனால் வெளியே தெரியாத விசாரணைகளும் ரெய்டுகளும் நடந்த படியே இருக்குதாம். துரைக்கண்ணு தன் துறை மூலமாகவும் சக அமைச்சர்களையே திகைக்க வைக்கும் அளவுக்கு ஏகத்துக்கும் சம்பாதித்திருக்கிறாராம். இதற்கெல்லாம் துறையின் முக்கிய அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்திருக் கிறார்கள். அவர்களில் ஒருவர் தனது சொந்த மாநிலத்தில் கல்லூரியே கட்டியிருக்கிறாராம்.''’

""அவர்களின் புனித(?) வரலாறு இருக்கட்டும். ஜெ.’ மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விமர் சித்த தி.மு.க. எம்.பி. ஆ.இராசாமீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கும் எடப்பாடி அரசு, தி.மு.க.வுக்கு எதிரான அடுத்த அஸ்திரத்துக்கும் தயாராகுதாமே?''

rr

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, முதலமைச்சரையும் முன்னாள் முதல்வர் ஜெ.வையும் அவதூறாப் பேசினார்னு ஆ.இராசா மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கும் எடப்பாடி அரசு, 2ஜி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை சிக்க வைக்க, சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தைக் கையில் எடுக்கவும் திட்டமிட்டிருக்காம்.. கடந்த வாரம் சாதிக்பாட்சா மனைவி ரேஹா பானு, பத்திரிகையாளர்களை சந்தித்து என் கணவர் மரணத்துக்கு நீதி இன்னும் கிடைக்கலைன்னு முறையிட்டார். இதன் வீடியோ பதிவைப் பார்த்த அமைச்சர் வேலுமணி, சாதிக் பாட்சாவின் மனைவி மூலம் ஸ்டாலினுக்கு செக் வைக்க நினைக்கிறார். 2ஜி வழக்கில் தொடர்புடைய ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் சாகித் பால்வாவை ஸ்டாலின் சந்தித்தார் என்றும், அது தொடர்பாக சாட்சி சொன்ன சாதிக்பாட்சா, தற்கொலை செய்துகொண் டார் என்றும் சொல்லிவருகிற அ.தி.மு.க. தரப்பு, தேர்தல் நேரத்தில் ரேஹா பானுவை ஸ்டாலினுக்கு எதிராகப் பேச வைக்கப் போகுதாம்.''

""அ.தி.மு.க., பா.ஜ.க. மீதான கோபத்தால் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடப் போகுதுன்னு செய்தி வருதே?''

stain

""அது தொடர்பாக நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரி ஒன்னும் விரிவா வருது. தே.முதி.க.வின் கோபத்திற்கு என்ன காரணம்ன்னா, அ.தி.மு.க கூட்டணியில் இப்போதும் நாங்கள் இருக்கிறோமான்னு கேட்டு, தே.மு.தி.க. பொருளாளரான பிரேமலதா, தன் தம்பி இளைஞரணி சுதீஷை எடப்பாடியிடம் அண்மையில் அனுப்பிவச்சார். எடப்படியோ, இது தொடர்பாக பா.ஜ.க.விடம் பேசிக்கொள்ளுங்கன்னு அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதன்பின் பா.ஜ.க தரப்பைத் தொடர்புகொண்ட போதும், அங்கிருந்து எந்தவிதமான ரெஸ்பான்ஸும் இல்லையாம். அதனால் இரு தரப்புமே தங்களைக் கழற்றிவிடுதுன்னு புரிஞ்சிக்கிட்ட பிரேமலதா, தனித்துப்போட்டின்னு சொல்லத் தொடங்கி விட்டாராம். 13ந் தேதி நடந்த தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி பற்றி பொதுக்குழுவைக் கூட்டி கேப்டன் விஜயகாந்த் முடிவெடுப்பார்னு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.''

""’நான் ஒரு ரகசியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன். சில அமைச்சர்கள் கொடுக்கும் பிரஷரால், நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும்கூட துறை மாற்றிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. இப்போது இதே போன்ற இன்னொரு பட்டியல் தயாராகி வருகிறதாம். இதனால் எடப்பாடியை ஆதரித்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்கூட இப்போது அவர் மீது ஏக வருத்தத்தில் இருக்காங்க.''

nkn161220
இதையும் படியுங்கள்
Subscribe