"ஹலோ தலைவரே, தமிழக ரவுடிகளை ஆளுங்கட்சிக்கு ஆதரவான ரவுடிகள்னும், எதிரான ரவுடிகள்னும் காவல்துறை ரெண்டா பிரிச்சிருக்கு.''
""ஓ... ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு போலீசே சப்போர்ட்டா?''
""ஆமாங்க தலைவரே, ஆளுங்கட்சிப் புள்ளிகள் தயவில் சென்னையில் ரவுடிகள் ராஜ்ஜியம் விரிவடைஞ்சிக்கிட்டே இருக்கு. உதரணமா, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவுக்கு வலதுகரமாக இருப்பது சி.டி. மணிங்கிற ரவுடி... சத்யா நடத்தும் சட்ட விரோத கிளப்புகளின் வசூலை எல்லாம் பார்த்துக்கறது இந்த மணிதானாம். சமீபத்தில் வெளி மாநிலத்தில் பதுங்கி இருந்த தன் தொழில்முறை எதிரியான திருவேங்கடம் என்கிற வேளச்சேரி பகுதி ரவுடியை, எப் படியாவது உள்ளே தள்ளிடுங்கன்னு, தன் ஆசையை அவர் சத்யாகிட்ட சொல்ல, அவர் அதைத் தென் சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருத்தரின் காதில் போட்டிருக்கார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்காக வேளச்சேரி வந்த திருவேங்கடத்தை, போலீஸ் டீம் ஒரே அமுக்காக அமுக்கி, ஜெயிலுக்கு அனுப்பி, ரவுடி சி.டி.மணியின் மனசைக் குளிர வச்சிருக்குதாம்.''
""ம்... ஆட்சி நீடிக்கிறவரை அவங்க ராஜ்ஜியம்தான்.''
""ஆட்சிமாற்றத்துக்கு என்ன வழின்னு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் தி.மு.க. வியூகம் வகுக்குது. மத்திய-மாநில ஆளுந்தரப்பு தனது உளவுப் பிரிவுகளின் எடுத்த சர்வேக்களே தி.மு.க.வுக்குத்தான் நிலைமை சாதகம்னு சொல்லியிருக்கு. தி.மு.க. தரப்பு சர்வேக்களும் அதையே சொன்னாலும், அதில் ஒரு புள்ளியும் வைக்கப்பட்டிருக்கு. அதாவது, தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டால் 60 சதவீதம் பேருக்கு டஃப்தான்னு ஐ-பேக் எடுத்த சர்வேயில்
"ஹலோ தலைவரே, தமிழக ரவுடிகளை ஆளுங்கட்சிக்கு ஆதரவான ரவுடிகள்னும், எதிரான ரவுடிகள்னும் காவல்துறை ரெண்டா பிரிச்சிருக்கு.''
""ஓ... ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு போலீசே சப்போர்ட்டா?''
""ஆமாங்க தலைவரே, ஆளுங்கட்சிப் புள்ளிகள் தயவில் சென்னையில் ரவுடிகள் ராஜ்ஜியம் விரிவடைஞ்சிக்கிட்டே இருக்கு. உதரணமா, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவுக்கு வலதுகரமாக இருப்பது சி.டி. மணிங்கிற ரவுடி... சத்யா நடத்தும் சட்ட விரோத கிளப்புகளின் வசூலை எல்லாம் பார்த்துக்கறது இந்த மணிதானாம். சமீபத்தில் வெளி மாநிலத்தில் பதுங்கி இருந்த தன் தொழில்முறை எதிரியான திருவேங்கடம் என்கிற வேளச்சேரி பகுதி ரவுடியை, எப் படியாவது உள்ளே தள்ளிடுங்கன்னு, தன் ஆசையை அவர் சத்யாகிட்ட சொல்ல, அவர் அதைத் தென் சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருத்தரின் காதில் போட்டிருக்கார். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்காக வேளச்சேரி வந்த திருவேங்கடத்தை, போலீஸ் டீம் ஒரே அமுக்காக அமுக்கி, ஜெயிலுக்கு அனுப்பி, ரவுடி சி.டி.மணியின் மனசைக் குளிர வச்சிருக்குதாம்.''
""ம்... ஆட்சி நீடிக்கிறவரை அவங்க ராஜ்ஜியம்தான்.''
""ஆட்சிமாற்றத்துக்கு என்ன வழின்னு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் தி.மு.க. வியூகம் வகுக்குது. மத்திய-மாநில ஆளுந்தரப்பு தனது உளவுப் பிரிவுகளின் எடுத்த சர்வேக்களே தி.மு.க.வுக்குத்தான் நிலைமை சாதகம்னு சொல்லியிருக்கு. தி.மு.க. தரப்பு சர்வேக்களும் அதையே சொன்னாலும், அதில் ஒரு புள்ளியும் வைக்கப்பட்டிருக்கு. அதாவது, தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டால் 60 சதவீதம் பேருக்கு டஃப்தான்னு ஐ-பேக் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்குதாம். சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 97 பேரில், 37 பேருக்கு மட்டுமே ரிசல்ட் பாஸிட்டிவாக வந்திருக்கு. அதனால் இவங்களுக்கு மட்டும் சீட் கொடுக்கத் திட்டமிட்டிருக்கு அறி வாலயம். இந்த விசயம் தெரிஞ்ச தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேரும், நாம் பாஸாயிட்டோமான்னு தெரிஞ்சிக்கிற தவிப்பில் இருக்காங்க.''
""இப்பவே காங்கிரஸுடன் தி.மு.க. தன் முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி டிச்சின்னு செய்தி வருதேப்பா?''
""தி.முக. சார்பில் ஒரு குழு, காங்கிரஸ் சீனியர் தலைவரான சோனியாகாந்தியை டெல்லியில் சந்திச்சி பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சிருக்கு. அப்ப, சோனியா, எங்கக்கட்சி திமு.க. கூட்டணியில் தொடர்வதையே விரும்புது. அதே நேரம், போன முறை ஒதுக்கிய சீட்டைவிடக் கூடுதலாக தி.மு.க.விடம் எதிர்பார்க்கிறோம்னு சொல்லியிருக்கார். இது ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டிருக்கு. இதற்கிடையே இதற்கு முந்தைய தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டுகள் ஒதுக்கப்பட் டன? அதில் எத்தனையில் அந்தக் கட்சிகள் கரையேறின? தி.மு.க. நின்ற சீட்டுகளில் எத்தனையில் வெற்றி? என்ற கணக்கெல்லாம் ஆராயப்பட்டிருக்கு. அ.தி.மு.க.வோடு தி.மு.க. நேருக்கு நேர் மோதிய தொகுதிகளில் தி.மு.க.விற்கு அதிக வெற்றி கிடைத்திருப்பதையும், அ.தி.மு.க.வுக்கு எதிராக மோதிய காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், அதிக அளவில் தோல்வி அடைஞ்சதையும் கூட ஆராய்ந்திருக்காங்க. குறைந்த பட்சம் 180 தொகுதிகளிலாவது போட்டியிடுவது என்ற முடிவில் தி.மு.க. உறுதியா இருக்குதாம்.''
""ஆட்சியைத் தக்க வைப்பதற்காக எடப்பாடி சளைக்காமல் டூர் போறாரே?''
""மக்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் தன் செல்வாக்கைப் பெருக்கிக்க நினைச்சி, மாவட்டம் தோறும் டூர் அடிச்சிக்கிட்டிருக்கார் எடப்பாடி. ஆனால் இந்த டூரின் மூலம் அவர் எதிர்பார்த்த பாசிட்டிவ் அம்சங்களுக்கு பதில் நெகட்டிவ் விளைவுகளே அதிகம் ஏற்பட்டிருக்கு. எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் விமர்சிக்குதுன்னா, சொந்தக் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு நிலவுது. முதல்வர் பதவி மீதான ஆதங்கம் அடங்காத ஓ.பி.எஸ், கொரோனா ஆய்வுப்பணிகள்ங்கிற பேரில், எடப்பாடி தனி ஆவர்த்தனம் செய்றது சரியா? நானும் அவரைப் போல டூரை ஆரம்பிக்கட்டுமா?ன்னு சக அமைச்சர்களிடம் கோபத்தைக் கொட்டிக்கிட்டே இருக்கார்.''
""அப்புறம்?''
""மதுரையை இரண்டாவது தலைநகராக்கும் திட்டமில்லைன்னும் அது ஒரு அமைச்சரின் தனிப்பட்ட விருப்பம்தான்னும் எடப்பாடி முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ, இது தென்மாவட்ட மக்களின் கோரிக்கைன்னு சொல்லி வர்த்தக பிரமுகர்களிடம் ஆலோசிச்சிருக்காரு. இதையெல்லாம் எடப்பாடியிடம் தெரிவித்த அமைச்சர்கள், டூர்களை எல்லாம் நிறுத்துங்க. உங்க டூரால், நீங்க போகும் பகுதிகளில் உங்களுக்கு முன்னும் பின்னுமா பிரச்சினைகள் வெடிக்குதுன்னும் சுட்டிக்காட்டி இருக்காங்க. ஆனால், முன்னாள் உளவுத்துறை அதிகாரி சத்தியமூர்த்தியும், எடப்பாடி மகன் மிதுனும், ஓ.பி.எஸ்.சை எல்லாம் பொருட்படுத்தா தீங்கன்னு சொல்ல, எடப்பாடி மறுபடியும் டூரை ஆரம்பிச்சிட்டார்.''
""எடப்பாடியின் மகன் மிதுன்மீதும் அமைச் சர்கள் உள்ளிட்டோருக்குக் கோபமாமே?''
""ஆமாங்க தலைவரே, கட்சி விவகாரங்களிலும் ஆட்சி நிர்வாகத்திலும் மிதுனின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் குடும்ப அரசியலால் கட்சி சரிஞ்சிடக் கூடாதுன்னும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சிப் பிரமுகர்கள் பரவலா விமர்சிக்க ஆரம்பிச்சாங்க. இவங்க வாயை அடைக்க நினைச்ச எடப்பாடி, அமைச்சர்கள், மா.செ.க்களின் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். இந்த வகையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பன், ஜெ.’பேரவை மா.செ.வா ஆக்கப் பட்டிருக்கார். இதேபோல் வாரிசுகள் பலரையும் அவர் தட்டிக்கொடுக்க, ஆதங்கப் பட்டவங்க எல்லாம் அமைதியாயிட்டாங்க.''
""கொரோனா விவகாரத்தில் ஊழலைக் கண்டுபிடிச்ச பெண் அதிகாரி ஒருவர் கடுமையாக மிரட்டப்பட்டதா செய்தி வருதே?''
""ஆமாங்க தலைவரே, திருச்சி மாவட்டத்தில் கொரோனாப் பணியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளுக்கான உணவு ஏற்பாட்டுச் செலவுகளை கவனிக்கும் நோடல் அதிகாரி சித்ரா, உணவு விவகாரத்தில் மட்டும் ஏறத்தாழ 1 கோடியே 50 லட்ச ரூபாய் அளவுக்கு போலிபில்கள் போடப்பட்டதைக் கண்டு பிடிச்சதால், ஓ.கே. பண்ண மறுத்துட்டாரு. மாவட்ட கலெக்டர் சிவராஜ், ""நான் கலெக்டரா? நீங்கள் கலெக்டரா? தாசில்தார் முத்துச்சாமி சொல்ற மாதிரி நடந்துக்கங்க''ன்னு நம்பியார் தொனியில் பேசியிருக்கார். இந்த விவகாரம் கோட்டை வரைக்கும் பரபரப்பாகி, நேர்மையான அதிகாரிகள் சிலர் டெல்லிக்கு புகாரா அனுப்பியிருக்காங்களாம்.''
""இ-பாஸ் விவகாரத்தில் மாநில அரசு களை டெல்லி எச்சரிச்சிருக்கே?''
""இ.பாஸ் விவகாரத்தில் தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை நம் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் அம்பலப்படுத்தின. பா.ஜ.க. உள்பட பல கட்சிகளும் கண்டித்தன. இதைத் தொடர்ந்து, இ-பாஸ் நடை முறைகள் தொடர்ந்தாலும், விண்ணப்பிக்கும் அனைவரும் அனுமதி தரப்படும்னு அறிவிச்சார் எடப்பாடி. தமிழகத்தின் இ.பாஸ் ஊழல் டெல்லி வரை எட்டிய நிலையில், கடுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா இ-பாஸ் நடை முறையை முழுசா நீக்கனும்ன்னு தனது துறைச் செயலாளர் அஜய் பல்லா மூலம், அனைத்து மாநில அரசு களுக்கும் கறார் கடிதம் அனுப்பியிருக்கார்.''
""சசிகலா விரைவில் ரிலீஸாவார்ங்கிற நம்பிக்கையில் அமைச்சர்கள் பலரும் அவர் தரப்பிடம் நெருக்கம் பாராட்டறாங்களாமே?''’
""சசிகலாவின் 4 ஆண்டுகால தண்டனைக் காலம் ஜனவரியோடு முடிவடையுது. ஆனாலும் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி அப ராதத்தை இன்னும் அவர் தரப்பு செலுத்தலை. அ.ம.மு.க. பிரமுகர்களிடம் இருந்து நிதி வசூலித்து, அதை அபராதமாகக் கட்டுவதுபோல் கணக்குக் காட்ட சசி குடும்ப வகையறா தயாராகுது. அதேநேரம், சசிகலாவின் நன்னடத்தைக்கு எதிரான ஊழல் மற்றும் ஷாப்பிங் விவகாரங்களைக் கண்டுபிடிச்ச சிறைத்துறை அதி காரியான ரூபா, இப்போது கர்நாடக உள்துறைச் செயலாளராக இருப்பதால், சசிகலா வெளியே வருவதில் சிக்கல்னு சொல்லப்படுது. சசிகலாவும் ரூபா தயவில் இப்போது நான் வெளியே வர விரும்பலைன்னு சொல்றாராம். இதுக்கிடையில் டெல்லித் தரப்பு, கர்நாடக உள்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்விடம், சசி ரிலீஸ் நிலவரம் குறித்து விசாரிச்சிருக்குதாம்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். ஹெச்.ராஜா, கே.டி.ராகவன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மீது, தங்கள் டெல்லித் தலைமைக்கு சீரியஸான புகார்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறார்களாம். அதில், முருகன் தன் சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கே கட்சிப் பொறுப்பு தர்றாரு. கேஸ்ட் பாலிடிக்ஸை வளர்க்குறாரு. இது டேஞ்சர்னு இந்த கேஸ்ட் பிரமுகர்கள் குறிப்பிட்டிருக்காங்களாம்.''