"ஹலோ தலைவரே, சசிகலா மீண்டும் தனது அதிரடியான அரசியல் பயணத்தைத் தொடங்கத் தயாராயிட்டார்''”
"ஆமாம்பா, அதனால்தான் போயஸ்கார்டன் ஏரியாவில் அவங்க ஆதரவாளர்களின் நடமாட்டம் அதிகமாத் தெரியுதா?''”
"உண்மைதாங்க தலைவரே, ஜெ’தனது கடைசிக்காலம் வரை வாழ்ந்த போயஸ்கார்டன் பங்களாவுக்கு நேர் எதிரில், அவரது பங்களாவைப் போலவே அச்சு அசலாக ஒரு பங்களாவைக் கட்டி வருகிறார் சசிகலா. அதன் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ இப்போது முடிவடைந்துவிட்டன. கதவுகள் பொருத்துவது உள்ளிட்ட ஃபினிஷிங் வேலைகள்தான் இப்ப நடக்குது. விரைவில் இந்த பங்களாவில் உட்கார்ந்துகொண்டு தனது அதிரடியான அரசியல் தர்பாரைத் தொடங்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் சசிகலா.''”
"அவரது பிறந்தநாள் கொண்டாட்டமும் திமிலோகப்பட போவுதாமே?''”
"உண்மைதாங்க தலைவரே, அவரது பிறந்தநாள் ஆகஸ்ட்டில் வருவதால், அதை போயஸ்கார்டன் புதிய பங்களாவிலேயே மிகவும் தடபுடலாகக் கொண்டாடிட லாம்ன்னு அவர் தரப்பு, சசிகலாவுக்குத் தெரியாமலே திட்டங்களை வகுத்துக்கிட்டு இருக்குதாம். ஆகஸ்டுக்குள் ஊரடங்குத் தளர்வுகள் முழுதாக நீங்கிவிடும் என்பது இவர்களின் கணக்கு. இந்தப் பரபரப்பைக் கவனித்த எடப்பாடித் தரப்பு, அந்த சாக்கில் அ.தி.மு.க. அலுவலகத்தை, சசிகலா டீம் கைப்பற்ற முனைந்தால் என்ன செய்வதுன்னு, குழம்பத் தொடங்கிடிச்சி. பிறந்த நாள் சாக்கில் சசி தரப்பு பெரும் கூட்டத்தை சென்னையில் கூட்டினால், அதை எப்படி மேனேஜ் செய்வதுன்னு கட்சி சீனியர்களுடன் சீரியசாகவே விவாதிக்கிறாராம் எடப்பாடி.''”
"சசிகலாவை சேர்க்க மாட்டோம்னு அ.தி.மு.க.விலிருந்து குரல்கள் கேட்டாலும் அவங்களுக்குள்ளேயே இன்னும் இணக்கம் வரலையேப்பா?''”
"ஓ.பி.எஸ். எதிர்ப்பை மீறி எதிர்க்கட்சித் தலைவராயிட்டாரு இ.பி.எஸ். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருப்பதில் ஓ.பி.எஸ்.ஸூக்கு உடன்பாடு இல்லை. அதேபோல் அ.தி.மு.க. கொறடாவாக வேலுமணியை நியமிக்கணும்னு எடப்பாடி சொல்ல, ஓ.பி.எஸ்.சோ, மனோஜ் பாண்டியனை கொறடாவா ஆக்கணும்னு சொல்கிறார். அதனால் இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படலை. இந்தப் பதவிகளில் ஏதேனும் ஒன்றில் வேலுமணி அல்லது தங்கமணியை எடப்பாடி உட்காரவைத்தால், அதை வைத்து, அ.தி.மு.க.வில் கொங்கு ஆதிக்கமான்னு கொடிபிடிக்கத் தயாராக இருக்கிறாராம் ஓ.பி. எஸ். இந்த உரசல்களை எல்லாம் ஆர்வமாகக் கவனிக்குது சசி தரப்பு.''”
"கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு தெரியுதே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சிவில் சப்ளை கார்ப்பரேசனுக்குத் தேவையான துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் டெண்டரை கிறிஸ்டி ஃபுட் நிறுவனமே தொடர்ந்து எடுத்துவந்தது. இதில், 6 லட்சம் கிலோ துவரம் பருப்பை, வெளி மார்க்கெட்டை விட அதிக விலைக்கு சப்ளை செய்ததில் 1700 கோடியும், பாமாயிலை சப்ளை செய்ததில் 900 கோடியும், சர்க்கரையை சப்ளை செய்ததில் 300 கோடி அளவுக்கும் ஊழல் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததால், இனி கிறிஸ்டி ஃபுட்டிடம் பர்ச்சேஸ் பண்ணக்கூடாதுன்னு தி.மு.க. அரசு முடிவு செய்தது. ஆனால், பிளாக் லிஸ்டில் வைக்கப்பட வேண்டிய கிறிஸ்டி ஃபுட்டோ, பல்வேறு வகையிலும் காய்களை நகர்த்தி, மீண்டும் அர சின் டெண்டரை வாங்கிவிட்டதாம். இந்த நிறுவனத்துக்கு டெண்டரைக் கொடுக்கக் கூடாதுன்னு, நுகர்பொருள் வாணிபக் கழக எம்.டி.யான ராஜாராம் ஐ.ஏ.எஸ். போராடியும், கிறிஸ்டிதான் ஜெயித்திருக்கிறதாம்.''
"குற்றச்சாட்டுக்கு ஆளானவங்களும் முதல்வருக்கு நிதி கொடுக்கும் சாக்கில், அவருடன் படம் எடுத்துக்க றாங்கன்னும் இன்னொரு சர்ச்சை வலம் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி, கோட்டைக்குள் காலெடுத்து வச்சப் பவே, இதுபோன்ற சர்ச்சைகள் தொடங்கிடிச்சி. இந்த நிலையில், கலைஞரிடம் தனி பாதுகாப்பு அலுவலராக இருந்தவர் சி.கணேசன். இவரை ஓய்வு பெறவிடாமல், சிக்கலில் நிறுத்தி வைத் திருந்தது கடந்த அ.தி.மு.க. அரசு. இதனால், அவருக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களும், மாதந்திர ஓய்வூதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அவர் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதல்வரின் நிதிக்கு தனது ஒரு மாத ஓய்வூதிய தொகை என்று 36,264 ரூபாயை வழங்கி னார். இதுபற்றிய செய்திக் குறிப்பையும் புகைப் படத்தையும் அரசின் செய்தித்துறை வெளியிட்டிருக் கிறது. அதிகாரிகள் வட்டாரமோ, ஓய்வூதிய பலனை யே பெறாத ஒருவரால், ஓய்வூதியப் பலன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், எப்படி அவரால் இந்தத் தொகையைத் தரமுடிந்ததுனு கேள்வி எழுப்புது.''”
"அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரம் ஒன்றும் சர்ச்சையாகி இருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இப்ப தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்குது. அது தொடர்பான சர்ச்சைதான் உயர்கல்வித் துறையில் சுழன்றடிக்கிது. ’செட் தேர்வு’ என்று செல்லப்படும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பை அண்ணாமலை பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்திருந்தது உயர்கல்வித் துறை. அப்போது இந்தத் துறையின் செயலாளராக மங்கத்ராம்சர்மா ஐ.ஏ.எஸ். இருந்தார். அதன்படி இந்தத் தேர்வை நடத்த முயற்சிகள் நடந்தபோது, கொரோனா பரவலும் அதைத் தொடர்ந்து ஊரடங்கும் தொடங்கிடிச்சி. எனவே செட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் துறைச் செயலாளரான சர்மா மாற்றப்பட்டு, புதிய செயலாள ராக அபூர்வா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் செட் தேர்வை நடத்தப்போறோம்ன்னு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் கேட்டபோது, தேர்வுகளையே அர சாங்கம் நடத்தவில்லை. அப்படியிருக்க நீங்கள் செட் தேர்வை நடத்தப்போறீங்களா?ன்னு கடுப்படித்தார் அபூர்வா. இதற்கிடையே, செட் தேர்வுக் கமிட்டி, இந்தத் தேர்வை நடத்துவதற்கான வசதிகள் இந்தப் பல்கலைக் கழகத்தில் இல்லைன்னு சொல்லிவிட்டதாம்.''”
"ரொம்ப சிக்கலான விவகாரமா இருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட, உயர் கல்வித் துறையின் செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப் பட்டிருக்கிறார். அவரைச் சந்தித்த துணை வேந்தர் முருகேசன், வேறுசில கோப்புகளில் கையெழுத்து பெறும்போது செட் தேர்வு நடத்துவதற்கான கோப்பிலும் சாதுர்யமாகக் கையெழுத்து வாங்கி விட்டாராம். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் நோட்டிபி ஃகேசன் ஒன்று அண்மையில் வெளியிடப் பட்டிருக்கு. அதில் செட் தேர்வை எழுத விரும்புகிறவர்கள் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ஆன் லைனில் பதிவு செய்ய ணும்னு சொல்லப்பட்டிருக்க, இதைப் பார்த்த கல்வியாளர் கள் திகைத்துப்போய், மேலே புகார்களை அனுப்பியிருக் காங்க. இந்த நிலையில் கார்த்திகேயன், துணைவேந் தர் முருகேசனை தலைமைச் செயலகத்துக்கு வரச்சொல்லி, ஏகத்துக்கும் வறுத்தெடுத்துட் டாராம். இந்த விவகாரம் பூதாகரம் எடுக்கத் தொடங் கிய நிலையில், கடந்த வாரம், சைலண்டாக ஓய்வுபெற்று வீட்டுக்குக் கிளம்பிவிட்டா ராம் து.வே. முருகேசன்.''”
"பிரபல இயக்குநரும் சீனியர் பத்திரிகையாளருமான சொர்ணம் மறைவு, பல ரையும் கலங்க வைத்திருக்குதே?''
"உண்மைதாங்க தலை வரே, இயக்குநர் சொர்ணம் உடல்நலக் குறைவால் மரண மடைந்திருக்கிறார். அவர் கலைஞரின் நெருங்கிய உறவினர் மட்டுமல்லாமல், அவரால் பத்திரிகையாள ராக வளர்க்கப்பட்டவர். ஆரம்பத்தில் முரசொலியில் துணை ஆசிரியராக இருந்த சொர்ணம், பின்னர் ஸ்டா லின் நடத்திய இளையசூரி யன் ஏட்டின் பொறுப்பாசிரி யராகவும் பணியாற்றி இருக் கார். வசனம் எழுதுவதிலும் வல்லவரான இவர், எம்.ஜி. ஆர். நடித்த 17 படங்களுக்கு உரையாடல்களை எழுதி இருப்பதோடு, கலைஞரின் கதை வசனத்தில், ஸ்டாலின் நடித்த ’ஒரே ரத்தம்’உட்பட சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் உட் பட தமிழக அரசின் பல் வேறு பதவிகளை வகித்தவர் சொர்ணம். மாண வப் பருவத்திலேயே கலைஞரால் கூர்மைப்படுத்தப் பட்டவர் சொர்ணம்னு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக, அனைத்து ஊராட்சிகளி லும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு, முரசொலி, குங்குமம், தினகரன், தமிழ்முரசு ஆகிய 4 பத்திரிகைகளையும் வாங்கும் வகையில், ஒரு வருடத்திற்கான சந்தாவை முன்கூட்டியே செலுத்திட வேண்டும் என்ற உத்தரவு போயிருப்பது சம்பந்தமான ஆவணங் கள் வெளியாயின. முந்தைய தி.மு.க ஆட்சியிலும் இந்தப் பத்திரிகைகள் வாங்கப்பட்டு பின்பு அ.தி.முக. ஆட்சியில் நிறுத்தப்பட்டு, நமது எம்.ஜி.ஆர்., நமது அம்மா நாளிதழ்கள் வாங்கப் பட்டன. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸோ தமிழகத்தின் முன்னணி பத்திரிகைகள் அனைத்தையும் தமிழக அரசு நூலகங்களுக்கு வாங்க வேண்டும்னு அரசுக்குக் கோரிக்கையை வைத்திருக்கிறார்.''”
---------------------------------------
அமைச்சர்களுக்குள் மோதல்! பற்ற வைத்தாரா எம்.எல்.ஏ?
புதுக்கோட்டை மாவட் டத்தில் 9-ந் தேதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பணிகளுக்காக தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மெய்யநாதன், ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு இரு அமைச் சர்களும் ஒரு தனியார் அமைப்பு மருத்துவ உபகரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரகுபதி மழையூர் நிகழ்ச்சிக் கும் மெய்யநாதன் திருக்கட்டளை, ஆலங்குடி நிகழ்ச்சிக்கும் சென்ற னர். ஒரே நிகழ்ச்சி என்பதால் ரகுபதி 11 மணிக்கு மருத்துவக் கல்லூரி வந்துவிட, மெய்யநாதன் வர 15 நிமிடம் தாமதம் ஏற்பட்ட நிலையில்... ரகுபதி வந்த தகவல் மெய்யநாதனுக்கு தெரிவிக்கப்பட "விழாவை தொடங்குங்கள் நான் வந்துவிடுகிறேன்' என்று பதில் கூறியுள்ளார்.
அப்போது எனக்கு திருமயம் பகுதியில் நிறைய நிகழ்ச்சிகள் இருப்பதால் கிளம்புகிறேன் என்று சொன்ன ரகுபதி மைக்கில்... "தங்களுக்கான பணி புனிதமானது. சிறப்பாக செயல்படுங்கள்'' என்று சொன்ன வர், "உங்களுக்கான பணி உத்தரவை அமைச்சர் மெய்யநாதன் வழங்குவார்'' என்று பேசிவிட்டுப் புறப்பட்டார். அவர் வெளியே செல்லும்போது மெய்யநாதன் உள்ளே வந்துவிட்டார். தொடர்ந்து பணி ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் வர தாமதமானதால் காத்திருந்த அமைச்சர் ரகுபதி வெளியேறினார் என்று பரவலாக தகவல்கள் கசிந்தது. இந்த சம்பவம் அமைச்சர்களிடையே மோதல் உருவாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து விபரமறிந்தவர்கள் கூறும் போது... "இரு அமைச்சர்களும் இணக்கமாகத் தான் இருக்கிறார்கள். தனித்தனியாக இவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில்கூட ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் மேடைகளில் பேசுவார்கள். அப்போதுகூட இந்த ஒற்றுமை கடைசிவரை நீடிக்க வேண்டும் என்பார்கள். ஆனால் மருத்துவக் கல்லூரி சம்பவம் எதார்த்தமாக நடந்ததுதான். ஆனால் புதுக்கோட்டையில் இதேபோல அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருக்கும் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் முத்துராஜா இருவரையும் உடைக்க திட்டமிட்டு இப்படி பரப்பிவிடுகிறார். இந்தத் தகவல் தலைமைவரை போனதால், அமைச்சர் ரகுபதியை சென்னைக்கு அழைத்துள்ளனர் விளக்கம் கேட்க'' என்றனர்.
ஆனால் எம்.எல்.ஏ முத்துராஜா தரப்பிலோ... "நாங்க யாரையும் உடைக்க நினைக்கல. நடந்த சம்பவத் தைத்தான் வெளியிட்டிருக் கிறார்கள்'' என்றவர்கள் அதே நிகழ்ச்சியில்கூட அமைச்சர் ரகுபதி, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வைப் போல விழா தொடங்கும் முன்பு வி.ஐ.பி. வரிசையில் அமர்ந்திருந்தார் அதை படம் எடுத்த பத்திரிகை யாளரிடம், "ஏன் எடுக்கு றீங்க' என்று ரகுபதி கேட்க... அடுத்த நிமிடமே "அவரது ஆதரவாளர் களும் போலீசாரும் செல் போனை பிடிங்கி முழு படங்களையும் அழித்துள்ள னர்' என்றனர். புதுக் கோட்டை தி.மு.க.வில் பரபரப்பு தொடங்கியுள்ளதை மாஜிக்கள் தரப்பு நன்றாகவே ரசிக்கிறது.
-செம்பருத்தி