ராங்கால் : ஜனவரி டூ ஏப்ரல்! சர்ப்ரைஸ் அறிவிப்புகளுடன் மோடியின் தமிழக டூர்!

modivisit

""ஹலோ தலைவரே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வியூகங்களை எல்லாக் கட்சிகளும் தீவிரமா வகுக்க ஆரம்பிச்சிடுச்சி.''

""எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதிச்சி, ஆட்சியைக் கண்ட்ரோலில் வைத்துக் ''கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் ப்ளான் என்னவாம்?''

""அதற்காக டெல்லி மும்முரமாத் திட்டமிடுது. பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைக்க மோடி ஜனவரியில் வருகிறாராம். ஏப்ரல் மாதத்திற்குள் குறைந்த பட்சம் 25 தடவையாவது இங்க வந்து, தமிழக மக்களின் இதயத்தை வசப்படுத்திடனும்னு மோடி திட்டமிட்டிருக்காராம். அதேபோல் ஒவ்வொரு விசிட்டின் போதும் ஏதேனும் சர்ப்ரைஸ் ஜாக்பாட் அறிவிப்புகளையும் அவர் அறிவிக்க இருக்கிறாராம். அந்த வகையில் மோடி முதலில் அறிவிக்க இருப்பது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலைதானாம்''

mm

""சட்டப்படி அதை ஆளுநர்தானே அறிவிக்கணும்?''

""எதுவா இருந்தாலும், அதில் உள்ள பயன்களை அடைவதில் பா.ஜக. தீவிரமா இருக்குது. ஆளுநரே பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டவர்தானே.. அதனால, 7 பேர் விடுதலை அறிவிப்பு வந்தாலும் பா.ஜ.க. க்ளெய்ம் பண்ணும். ராஜ்யசபாவில் போதுமான வலிமையில்லாத போதே, தான் நினைச்சதை எல்லாம் நாடாளுமன்றத்தில் சாதிக்கக் கூடிய வியூகங்கள் பா.ஜ.க.விடம் இருக்குது. நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட தனக்கானதா மாற்றிக்கொள்ள பா.ஜ.க. முயற்சி எடுக்கும். பா.ஜ.க எதிர்பார்த்தபடி எட்டுவழிச் சாலை தொடர்பான தீர்ப்பும் வந்திருக்கு. இதே பாணியில், அடுத்ததா ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வரப்போகுதாம்.''’

""அது எப்படி?''

""தலைவரே... ஸ்டெர்லைட் தொடர்பா அண்மைக்காலமா அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடி மக்கள் விரும்புகிற உத்தரவுகளைப் பிறப

""ஹலோ தலைவரே, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வியூகங்களை எல்லாக் கட்சிகளும் தீவிரமா வகுக்க ஆரம்பிச்சிடுச்சி.''

""எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதிச்சி, ஆட்சியைக் கண்ட்ரோலில் வைத்துக் ''கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் ப்ளான் என்னவாம்?''

""அதற்காக டெல்லி மும்முரமாத் திட்டமிடுது. பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைக்க மோடி ஜனவரியில் வருகிறாராம். ஏப்ரல் மாதத்திற்குள் குறைந்த பட்சம் 25 தடவையாவது இங்க வந்து, தமிழக மக்களின் இதயத்தை வசப்படுத்திடனும்னு மோடி திட்டமிட்டிருக்காராம். அதேபோல் ஒவ்வொரு விசிட்டின் போதும் ஏதேனும் சர்ப்ரைஸ் ஜாக்பாட் அறிவிப்புகளையும் அவர் அறிவிக்க இருக்கிறாராம். அந்த வகையில் மோடி முதலில் அறிவிக்க இருப்பது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலைதானாம்''

mm

""சட்டப்படி அதை ஆளுநர்தானே அறிவிக்கணும்?''

""எதுவா இருந்தாலும், அதில் உள்ள பயன்களை அடைவதில் பா.ஜக. தீவிரமா இருக்குது. ஆளுநரே பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டவர்தானே.. அதனால, 7 பேர் விடுதலை அறிவிப்பு வந்தாலும் பா.ஜ.க. க்ளெய்ம் பண்ணும். ராஜ்யசபாவில் போதுமான வலிமையில்லாத போதே, தான் நினைச்சதை எல்லாம் நாடாளுமன்றத்தில் சாதிக்கக் கூடிய வியூகங்கள் பா.ஜ.க.விடம் இருக்குது. நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட தனக்கானதா மாற்றிக்கொள்ள பா.ஜ.க. முயற்சி எடுக்கும். பா.ஜ.க எதிர்பார்த்தபடி எட்டுவழிச் சாலை தொடர்பான தீர்ப்பும் வந்திருக்கு. இதே பாணியில், அடுத்ததா ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கிலும் தீர்ப்பு வரப்போகுதாம்.''’

""அது எப்படி?''

""தலைவரே... ஸ்டெர்லைட் தொடர்பா அண்மைக்காலமா அரசும் நீதிமன்றமும் தூத்துக்குடி மக்கள் விரும்புகிற உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தாலும், இறுதித் தீர்ப்பில் எதுவும் நடக்கலாம்னு சொல்றாங்க. ஏன்னா, இதில் மத்திய பா.ஜ.க அரசின் ரோலும் இருக்குது. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தன் வாதத்தை வைக்கும் மோடி அரசு, அந்த ஆலை இயங்கிய போது 33 சதவீத ddதாமிரம் இந்தியாவில் உபரியாகவே இருந்ததுன்னும், அந்த ஆலை மூடப்பட்ட தும், வருடத்துக்கு 1300 கோடி ரூபாய் அளவுக்கு இங்கே தாமிரம் இறக்குமதி செய்யப்படுதுன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறது. இதனால் சீனாவுக்கு தான் லாபம் என்றும், இந்த லாபம் கருதியே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு சீனா நிதி உதவி செய்ததுன்னும் மத்திய அரசு நினைக்குது. அதனால்தான் போராட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்தி இருக்குன்னு அப்போதே சொன்னோம் என்றும் சொல்லத் தொடங்கியிருக்கு. அதனால் ஸ்டெர்லைட் ஆலை மறுபடியும் திறக்கக்கூடிய வகையில் இறுதித் தீர்ப்பு இருக்க லாம்னு டெல்லித் தரப்பிலிருந்து செய்திகள் வருது.''

""ராஜ்பவன் தன்னைத் தொடர்ந்து புறக்கணிப்பதாக முதல்வர் எடப்பாடி வருத்தப்படு கிறாராமே?''

""உண்மைதாங்க தலைவரே, முதல்வரான தன்னை அலட்சியப்படுத்தும் ராஜ் பவன், எதிர்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் தருதுன்னு எடப்பாடி ஆதங்கப்படறாராம். குறிப்பாக, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டைத் தருவதற்கான, அரசின் சட்ட திருத்த மசோ தாவை, கடந்த 7 மாதங்களாக பெண்டிங்கில் வைத்திருந்தார் கவர்னர். இது தொடர்பாக பலமுறை நினைவுபடுத்தியும் அதைக் கண்டுகொள்ளாத கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்த சட்ட திருத்த மசோதாவை இழுத்தடிக்காமல் கவர்னர் ஒப்புதல் தரனும்னு ஸ்டாலின் அறிக்கை விட்ட வேகத்திலேயே அதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறாராம். ஏற்கனவே அரசுப் பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீடு விவகாரத்திலும் தி.மு.க ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகுதான் நிலைமை மாறியது. இதில் அப்செட்டான எடப்பாடி, ஸ்டாலினுக்கு கேட்டதும் அப்பாயின்மெண்ட் தரும் ராஜ்பவன், அவருக்கு முன்பிருந்தே கேட்டும் இதுவரை எனக்கு அப்பாயின்மெண்ட தரலையேன்னும் புலம்பறாராம்.''

vv

""அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்திலும் எடப்பாடிக்கு ராஜ்பவன் கடும் நெருக்கடியைக் கொடுத்துக்கிட்டிருக்கே?''

""உண்மைதாங்க தலைவரே, துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான ஊழலை விசாரிக்க, எடப்பாடி அரசு விசாரணைக் கமிசன் அமைத்ததை கவர்னர் ரசிக்கவில்லை. அதனால் சூரப்பா மீது புகார் கொடுத்தவர்கள் யார் யார்னு தெரிவிக்கும் படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் மாளிகை உத்தரவிட்டதோடு, சூரப்பா மீதான விசாரணையைத் திரும்பப் பெறனும்னும் அழுத்தமா வலியுறுத்திக்கிட்டிருக்கு. இதனால், ராஜ்பவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு திணறிப் போயிருக்கும் எடப்பாடி, சூரப்பா தொடர்பான கமிஷனை எதிர்த்து, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கின் போக்கு எப்படி போகிறது என்று பார்த்து விட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம்னு நினைக்கிறாராம்.''

""அ.தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும், மா.செ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், 14-ந் தேதி கூட்டப்பட்டிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கத் தான் இந்தக் கூட்டமாம். அதோடு, ரஜினியின் அரசியல் எண்ட்ரியை எப்படி மேனேஜ் பண்ணுவது என்பது குறித்தும் விவாதிக்கவே இந்தக் கூட்டத்தை இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் கூட்டியிருக்காங்களாம். அண்மையில் ரஜினியின் அரசியல் எண்ட்ரி பற்றி, அவர் பெயரைக் குறிப்பிடாமலே பேசிய கே.பி.முனுசாமி, திராவிட இயக்கத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள், தமிழகத்திலிருந்து திராவிடத்தை வெளியேற்ற கருங்காலிகள் சதி செய் கிறார்கள், ஜெ.’ உயிரோடு இருந்தவரை இவர்களுக் குக் கட்சி தொடங்கும் தைரியம் இருந்ததான்னு கடுமையான கேள்விகளை அடுக்கி, விமர்சித்திருந் தார். இவரைப் போலவே மற்ற கட்சி நிர்வாகிகளும் ரஜினியை இதே பாணியில் அட்டாக் செய்து, அது நெகட்டிவ்வாயிட்டா என்ன பண்ணறதுன்னு யோசித்த அவர்கள், ரஜினி பற்றி இப்போதைக்கு யாரும் அட்டாக் செய்யவேண்டாம் என்று இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்த இருக்கிறார்களாம்.''

""அ.தி.மு.க.வில் புதிதாக மா.செ.க்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தரப்பிலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கே?''

""அ.தி.மு.க.வில் நடந்திருக்கும் இந்த புதிய நியமனங்கங்கள் எல்லாமே பணத்தின் அடிப்படை யில்தான் நடந்திருக்குங்கிற குற்றச்சாட்டுக் குரல்கள் ஒரு பக்கம் ஒலிக்க, இன்னொரு பக்கம், நிய மிக்கப்பட்ட மா.செ.க்கள், தங்களுக்குக் கீழ் இருக்கும் பதவிகளை சரமாரியாக விற்றுக் கல்லாகட்டி வருவதாகவும் புகார்கள் எதிரொலிக்குது. உதாரணமாக தென் சென்னை தெற்கு- கிழக்கு மா.செ.வான அசோக்குமார், தன் லிமிட்டில் உள்ள கட்சிப் பதவிகளைக் கூறுகட்டி விற்பதாக எடப்பாடிக்குப் புகார்கள் பறக்குதாம். மத்திய சென்னை மா.செ.வான ஆதி.ராஜாராம் பல வகைகளிலும் லாபம் பார்ப்பதோடு, விரைவில் நடக்க இருக்கும் தன் மகள் திருமணத்துக்கும், நிறைய சாதித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்ற குழப்பமும் இப்போது எடப்பாடியை ஆட்டிப்படைக்கிறதாம்.''

dd

""தமிழக காங்கிரஸ் தரப்பிலும் ஒருவித பரபரப்பு தெரியுதே?''

""ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கு. அதனால், அவருடன் தொடர்பில் இருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் உடனடியாக சென்று கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள, சிலரோ டெஸ்டுக்கே ddபோகாமல் சித்த மருத்துவர்களிடம் தஞ்சமடைந்து வருகின்றனராம். இந்தக் களேபரத்துக்கு இடையிலும், சென்னைக்கு சமீபத்தில் வந்த காங்கிரஸ் மேலிடப் பார்வை யாளர் தினேஷ் குண்டுராவ், இங்கே தங்கியிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலின் வீடியோ ஃபுட் டேஜ்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஜரூராக இறங்கியிருக்கிறார்கள். அரசியல் லாபம் ரீதியான சில ஏடாகூட சந்திப்புகள் அதில் பதிந்திருக்கலாம்னு நினைக்கிறாங்களாம்.''

""நானும் ஒரு முக்கியமான தகவலை உங்க மூலம் பகிர்ந்துக்கறேன். சங்கரமடத் தரப்பிடம் நஷ்ட ஈடு கேட்டுவரும் கீர்த்திகா என்ற பெண்மணியைப் பற்றி ஏற்கனவே பேசியிருந் தீங்க. இந்த செய்தி வெளியானதில் இருந்தே சங்கரமடத் தரப்பு பதட்டமாயிடிச்சி. இப்போது அந்த கீர்த்திமதி பற்றி மேலும் சில தகவல்கள் நமக்கு கிடைச்சிருக்கு. சங்கரமட வேதபாட சலையில் இருந்த அந்த கீர்த்திமதியை, மடத்தின் ’அந்த’ பவர் புள்ளி, திருவண்ணா மலையைச் சேர்ந்த தொழிலதிபரான பால கிருஷ்ணாரெட்டி என்பவரிடம் அனுப்பிவைக்க, ரெட்டியோ அந்த கீர்த்தி மதிக்காக காஞ்சிபுரத்திலும் திருவண்ணாமலையிலும் எம்.பி.ஏ. கல்லூரிகளை வைத்துக் கொடுத்தாராம். இந்த நிலையில்தான் கீர்த்திமதி மடத்துக்குத் திரும்பிவந்து, ஒரு பெரிய முதலீட் டுக்காக மோதிக் கொண்டிருக் கிறாராம்.''

nkn121220
இதையும் படியுங்கள்
Subscribe