லோ தலைவரே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மரண எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.''

""பிரதமருடன் மறுபடியும் முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்காரே... கொரோனா கட்டுப் பாட்டுக்கான நடவடிக்கைகள் ஏதாவது உண்டா?''’

""11ந் தேதியன்னைக்கு தமிழகத்தின் எடப்பாடி, மேற்கு வங்கம் மம்தா, உ.பி. யோகி ஆதித்யா, தெலுங்கானா சந்திரசேகரராவ், பஞ்சாப் அமரீந்தர் சிங் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துக்கிட்டாங்க. இவங்கள்ல பலரும், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவங்களைப் பாதுகாக்க நிதி வேணும்னு பலமுறை கேட்டுட்டோம். அதுபற்றி எதையுமே சொல்ல மறுக்கறீங் கன்னு மோடிக் கிட்ட ஓப்பனா சொல்லியிருக்காங்க.''

rr

Advertisment

""மோடி என்ன சொன்னாராம்?''

""புன்னகையோடு சமாளிச்ச மோடி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் இதுவரை வழங்கிய நிதியைச் சுட்டிக் காட்டிவிட்டு, இதையெல்லாம் சரியான வழியில் நீங்க பயன்படுத்தலை. அதனால்தான் கொரோனா அதிகமா பரவியிருக்குன்னு குற்றச்சாட்டை திருப்பிப் போட்டிருக்காரு. எடப்பாடியோ, தமிழகத்துக்கு 9,000 கோடி நிதி தேவைன்னும், உடனடியாக 3000 கோடியை ஒதுக்கனும்னும் கோரிக்கை வச்சார். மோடியோ, கொரோனா விசயத்தில் சீரியஸா நடந்துக்கங்கன்னு அவரைப் பார்த்து அட்வைஸ் செய்திருக்கார்.''

""சீரியஸா நடந்ததாலதான் சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைஞ்சுதா?''

Advertisment

""மூவாயிரத்துக்கு மேல் இருந்த தொற்று எண்ணிக்கை இப்ப ஆயிரத்துக்குக் கீழேன்னு ஆயிடிச்சி. எப்படி இவ்வளவு வேகமா சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தினீங்கன்னு சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஒரு முக்கியமான அதிகாரிகிட்ட கேட்டப்ப, பரிசோதனையின் எண்ணிக்கையைக் குறைச்சா, தொற்றின் எண்ணிக்கை தானா குறைஞ்சிடும். சென்னையிலும் டாஸ்மாக்கை திறக்கணும்னா, கொரோனா எண்ணிக்கையை குறைச்சுக் காட்டுனாத்தானே முடியும்னு சூட்சுமத்தை சொன்னாரு அந்த அதிகாரி.''

""இப்பவும் வெண்டி லெட்டர்களை வாங்க எடப்பாடி அரசு அதீத ஆர்வம் காட்டுதே?''

""உண்மைதாங்க தலைவரே, கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர்கள் கைகொடுக்கலைன்னும், அதைப் பயன் படுத்திய நோயாளிகளில் 97 சதவீதத்தினரின் மரணத்தை தடுக்க முடியலைன்னும் இப்ப மருத்துவர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. இருந்தும், பல லட்சம் விலையுள்ள வெண்டிலெட்டர்களை வாங்கினால், இஷ்டத்துக்கும் கட்டிங் வாங்கலாம்ங்கிற எண்ணத்தில், இதைக் கொள்முதல் செய்வதில் எடப்பாடி அரசு ஆர்வம் காட்டுது. இதைத் தெரிஞ்சிக்கிட்ட மத்திய அரசு, கவனமா இருங்க. உங்க ஆட்சிக்கு வெண்டிலெட்டர் கொடுக்கும் நிலையை ஏற்படுத்திக்காதீங்கன்னு நாசூக்கா எச்சரிக்கை செய்திருக்குதாம்.''’

""எச்சரிக்கையா உத்தரவா எடுத்து செயல்பட்டா சரிதான்?''

rr

""உத்தரவையே மதிக்காமல் கொரோனா ஊரடங்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு பள்ளிக்கூடம் இயங்கிக்கிட்டிருக்கு. அது, கோவையில் இருக்கும் ஈஷா மைய, ’ரெஸிடன்சியல் ஸ்கூல்’, ஈஷா ஆசிரமத்தில் கொரோனா பரவி இருந்த காலகட்டத்தில் கூட இது மூடப்படலை. கோடீஸ்வரக் குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளி, அரசுவிதிகளுக்குப் புறம்பா அத்துமீறி இயங்குவதை எடப்பாடி அரசு கொஞ்சமும் கண்டுக்கலை.''

""ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களும் எதையும் கண்டுக்காம பயிற்சிக்கு ரெடியாயிட்டாங்களாமே?''

""கிராமப் புறத் திடல்களிலும் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை ட்ரோன் கேமராவால் போலீஸ்காரங்க துரத்துவாங்க. ஐ.பி.எல். பயிற்சியைத் தடுக்க முடியுமா? சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள், நட்சத்திர ஓட்டலில் தங்கவும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி எடுக்கவும் அனுமதி வாங்கித் தரும்படி அந்த அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், அமித்ஷாவின் மகனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான ஜெய்ஷாவை அணுகினார். அவர் மூலம் எடப்பாடி அரசுக்கு சமிக்ஞை கொடுக்க, பயிற்சிக்காக மைதானமும், தங்குவதற்கு ஸ்டார் ஓட்டல்களும் ஓப்பனாயிடிச்சி.''

""வன்னியர் சமுதாயத்துக்குள்ளேயே அரசியல் சர்ச்சைன்னு செய்தி வருதே?''

""தலைவரே, வன்னியர் சமூக முன்னோடிகளில் ஒருவரான சாமி.நாகப்ப படையாச்சிக்கு கடந்த 5 ஆம் தேதி மயிலாடுதுறையில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தில், மார்பளவு வெண்கல சிலை திறக்கப்பட்டிருக்கு. இதை வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியத்தின் அனுமதியோடு வன்னியர் சத்ரிய சாம்ராஜ்யம், மாவீரன் குரு வன்னியர் சங்கம், வன்னியர் மேம்பாட்டு இயக்கம், வன்னியர் சத்ரியர் கூட்டு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. இந்த நிலையில் அந்த இடம் டாக்டர் ராமதாசின் வன்னியர் சங்கத்துக்கு சொந்தமானதுன்னும் அங்கே அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்னும் 10ந் தேதியன்னைக்கு போர்டு வைக்கப்பட, இதன் அடிப்படையிலேயே அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கு. அவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி, பேரணியும் நடத்தப்பட, இதனால் அங்கே பதட்டம் சூழ்ந் திருக்கு.''

""நானும் முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன்.. புதுக்கோட்டை மா.செ.வா அறிவிக்கப் பட்டிருக்கும் வைரமுத்து வுக்கும், அ.தி.முக சீனியரும் எம்.பி.யுமான வைத்திலிங்கத்துக்கும், கட்சிப் பதவி நியமனம் தொடர்பான உரசலாம். இதில் ரொம்பவும் ஆவேசமான வைரமுத்து, வைத்திலிங்கத்தை ஒருமையில் திட்டியிருக்காரு. இதில் வைத்திலிங்கத்துக்காக எடப்பாடியே களமிறங்க, வைரமுத்துக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் கோதாவில் குதிச்சிருக்காராம். இப்ப எடப்பாடிக்கும் விஜய பாஸ்கருக்கும் ஃபைட்.''