லோ தலைவரே, அ.தி.மு.க.வின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழாவை, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தனித் தனியா கொடி ஏத்திக் கொண்டாடியதை கவனிச்சீங்களா?''

""கொடி அரசியல் கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்தேன்...''

eps-ops

""உண்மைதாங்க தலைவரே, அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டிருக்கு. ஜெ. மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்.சும் எடப்பாடியும் சேர்ந்துதான் கட்சிக் கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால் இந்த முறை "யார் முதல்வர் வேட்பாளர்'ங்கிற கோதாவில் இருவரும் இறங்கி, கடைசியில் எடப்பாடியே இதில் ஜெயித்ததால், எரிச்சலான ஓ.பி.எஸ்., கட்சியாவது தன் கட்டுப்பாட்டில் இருக்கனும்னு நினைச்சார். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் போனா லும், கட்சியின் லகான் தன் கையில் இருந்தால்தான், சசிகலா ரீ-என்ட்ரி ஆனாலும் தன் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக்க முடியும்கிறது அவரது கணக்கு. அதுக்கு தோதா, அக்டோபர் 17ந் தேதி, தான் மட்டும்தான் கொடி ஏற்றணும்னு முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தப்பவே வலியுறுத்தினாரு. அப்ப அதற்கான முடிவு ஏற்படலைன் னாலும், இயல்பாகவே அவர் மட்டும் கொடியேத்துற மாதிரி சூழ்நிலை அமைஞ்சிடிச்சி.''

""ஆமாம்ப்பா, எடப்பாடியின் அம்மா இறந்ததால் அவர் தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இருந்தது, ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமா ஆயிடுச்சே?''

""தன் அம்மாவின் இறுதி காரியங்களுக்காக சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்குப் போன எடப்பாடி, 16-ந் தேதி சென்னை திரும்பி 17-ந் தேதி ஓ.பி.எஸ்.சுடன் சேர்ந்து, கட்சிக் கொடியை ஏற்றனும்ன்னு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது ஆஸ்தான ஜோதிடர்களும் அர்ச்சகர்களும் உங்கள் தாய்க்கு செய்ய வேண்டிய காரியங்களை அவசரம் அவசரமாக செய்தால், உங்கள் எதிர்காலத்துக்குப் பிரச்சினைகள் வரலாம். அதனால் கிராமத்தை விட்டு காரியம் முடியும் வரை போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால் அ.தி.மு.க. தொடக்க விழாவை, தன் கிராமத்திலேயே நடத்தி, அதில் தான் கொடியேற்றும் செய்திதான் பெரிய அளவில் வரனும்னு எடப்பாடி அதிரடியாகக் களமிறங்கினார். அதன்படியே கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். இதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் கொடி ஏற்றிய செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எடப்பாடி கொடியேற்றிய செய்தி அதிக அள வில் முன்னிலைப்படுத்தப்பட்டது.''

""ஓ...''

r""தலைவரே, பீகார் தேர்தல் முடிஞ்சதும் மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்தும்போது, ஓ,பி.எஸ். மகனான ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் வாக்களித்திருக்கிறர் மோடி. இந்த நிலையில் ரவீந்திரநாத், திடீர்னு மாலத்தீவு போறதாச் சொல்லிவிட்டு மொரீசிய ஸுக்குப் பறந்தார். மொரீசியஸில் ஒரு லெட்டர் பேடு கம்பெனியைத் தொடங்கினால் கூட, அதற்கு எந்த நாட்டில் இருந்தும் பணத்தைக் கொண்டுவரலாம். அதே போல் அங்கிருந்து இரட்டை வரிவிதிப்பு இல்லாமல் அந்தப் பணத்தை இங்கேயும் கொண்டுவர முடியும்.''

""கறுப்புப் பணத்தைப் பெருக்க செமத்தியான ரூட் ஆச்சே!''

""ஆமாங்க தலைவரே, அப்படியொரு பணப் பரிமாற்றத்துக்காகத்தான் அங்கே ரவீந்திரநாத் போனாரான்னு மத்திய புலனாய்வுத்துறை கண்டுபிடிச்சிருக்கு. அதனால அமலாக்கத் துறை ரவீந்திரநாத்மீது விசாரணை நடத்தப் போகுது. மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்பவர்கள், உளவுத்துறையின் கிளியரன்சைப் பெற்றிருக்கனும். இந்த புது சிக்கலால, ரவீந்திரநாத் தன்னோட மந்திரி பதவிக்கு சொந்தக் காசில் சூனியம் வச்ச மாதிரி ஆயிடிச்சி. ஓ.பி.எஸ், கடுமையாகக் கோபித்துக்கொண்டாராம். உன்னை மத்திய மந்திரியாக்க இத்தனை காலமாக நான் பட்டபாடெல்லாம் விரயமாயிடும் போலிருக்கேன்னு டோஸ் விட, இதனால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் உரசல்ன்னு இலைத் தரப்பிலேயே டாக் அடிபடுது.''

""ஆளுங்கட்சிக்கு எதிரா டெல்டா விவசாயிகள் தரப்பிலிருந்தும் குமுறல் வெடிக்கிதே?''

""ஆமாங்க தலைவரே, விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை அரசின் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு போனால், அங்கே டோக்கனை கொடுத்து அவர்களைக் காக்கவைத்து விடுகிறார்களாம். அ.தி.மு.க. ஒ.செ.க்கள், கி.செ.க்கள் உள்ளிட்ட ஆளும்கட்சிப் பிரமுகர்கள், அவர்களிடம் மூட்டைக்கு 40 ரூபாய் கொடுத்தால் உடனே நெல் மூட்டைகளை எடுத்துக்கொள்வார்கள் என்று டீலிங் பேசி, கலெக்ஷன் செய்கிறார்களாம். இப்படி வசூலிக்கப்படும் கமிஷன், அமைச்சர் தரப்பு வரை செல்கிறதாம். நேரிடையாக அதிகாரிகளை அணுகும் தனியார் வியாபாரிகளிடமும் அதே கமிஷன்தானாம். வெளி மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகளையும் அமைச்சர் தரப்பு விடாது துரத்தி கறக்கவேண்டியதைக் கறந்துவிடுகிறதாம்.''

""தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்திலேயே, "ஸ்டாலின் வாழ்க; உதயசூரியன் ஒழிக'ன்னு அதிரடி கோஷம் எழுந்திருக்கே?''

Advertisment

r

""ஆளுங்கட்சி மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான குமரகுருவுடன் திருவெண்ணெய்நல்லூர் தி.மு.க. கிழக்கு ஒ.செ. துரைராஜும் கள்ளக்குறிச்சி தி.மு.க மா.செ. உதயசூரியனும், நெருக்கமாக இருக்காங்கன் னும் இவர்களின் அனுசரணையால்தான் குமரகுரு மூன்று முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்றும் அந்தப் பகுதி தி.மு.க.வினர் கோபமா இருந்தாங்க. இந்த விவகாரத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சொல்வதற்காக அவர்களில் சிலர் அறிவாலயத்துக்கு வந்தாங்க. அங்கே ஸ்டாலினைப் பார்த்ததும், ஸ்டாலின் வாழ்கன்னும் மா.செ. உதயசூரியன் ஒழிகன்னும் கோஷம் போட்டு எல்லோரையும் அதிரவச்சிட்டாங்க. இதுபற்றி தி.மு.க.சீனியர்களிடம் கேட்டபோது, உதயசூரியனும் துரைராஜும் நீண்டகால தி.மு.க.வினர். அவர்களை சந்தேகப்படுவது தவறானது. அவர்களை பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக கோஷம் போட்டிருக்காங்க. அவர்களை சமாதானம் செய்துவிடுவோம்ங்குறாங்க. கொங்கு மண்டலத்திலும் இப்படி ஆளுந்தரப்புக்கு ஆதரவா இருக்கும் தி.மு.க. மா.செ.க்கள், கட்சிக்காக உழைக் கும் வட்டச்செயலாளர்கள் உள்ளிட்ட தொண்டர்களை மதிப்பதேயில்லைன்னு புகார் குவியுது.''

""மாவட்ட- ஒன்றிய நிர்வாகிகளோடு மு.க. ஸ்டாலின் நடத்தப் போகும் ஆலோசனையிலாவது விடிவு பிறக்குமான்னு தி.மு.கவினர் எதிர்பார்ப் போடு இருக்காங்க.''

""தலைவரே, சென்னைக்கு வந்த பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, அண்மையில் பா.ஜ.க.வில் ஐக்கியமான நடிகை குஷ்புவையும் அவரது கணவரான டைரக்டர் சுந்தர்.சி.யையும் சந்திச்சிப் பேசியிருக்கார். அப்ப சுந்தர்.சி, என் நண்பர்கள் நிறைய பேர் காண்ட்ராக்டர்களாக இருக்காங்க. அவங்களுக்கு மத்திய அரசின் காண்ட்ராக்ட் வேலைகளை ஒதுக்கித்தர ஆவன செய்யனும்ன்னு கேட்க, அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறாராம் ரவி. அதேபோல் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்துவதற்கு மாறாக, இங்கிருக்கும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளை நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து, அவர்களிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், பா.ஜ.க. வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் அவர் ஆலோசித்திருக்கிறாராம்.''

""தமிழக பா.ஜ.க.வின் பழைய முகங்களுக்குப் பதில், புதுமுகங்களே தலைப்புச் செய்தியாகுறாங்களே?''

""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.கவின் தடாலடி பிரமுகரான ஹெச்.ராஜாவிடமிருந்த தேசிய செயலாளர் பதவியை பா.ஜ.க. தலைமை பறித்துக்கொண்டது. இதில் மனசங்கடத்தில் இருந்த ராஜா பெருசா ரியாக்ஷன் காட்டலை. அதே நேரத்தில், rrஉ.பி.யில் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 8 ராஜ்யசபா உறுப்பினர்களில் ஒருவராய்த் தன்னையும் தன் சீனியாரிட்டி கருதி செலக்ட் செய்யனும்னு டெல்லித் தலைமையிடம் கோரிக்கை வச்சிருக்கார். எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துவிடவேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். ஆனால், உ.பி.முதல்வரான யோகி ஆதித்யாவோ, சர்ச்சைக்குரிய ஒருவரை எங்கள் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பமாட்டோம்ன்னு ஹெச்.ராஜாவுக்கு செக் வைத்திருக்கிறாராம்.''

""ரஜினிக்கு அரசியல் வேண்டாம்ன்னு அவருக்கு நெருக்கமானவங்க ஆலோசனை சொல்றாங்களாமே?''’’

""ரஜினிக்கு நெருக்கமான அமெரிக்க நண்பர் ஒருவரும், ரஜினியின் குடும்ப டாக்டர் ஒருவரும் அவர்கிட்ட, உங்கள் உடல்நிலை ரொம்ப முக்கியம். அதோடு, டென்ஷனான அரசியல் சூழல்களால் உங்க இயல்பான-அன்பான மனநிலையை மாற்றிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்னு ஆலோசனை சொல்லியிருக்காங்களாம். அதேபோல் சென்னையிலுள்ள ரஜினியின் நீண்ட கால நண்பர் அமலநாதனும் இதையே அவரிடம் அறிவுறுத்தியிருக்கிறாராம். அதே நேரம், ரஜினிக்குத் தரப்படும் இந்த அறிவுறுத்தலின் பின்னால் தி.மு.க இருப்பதாக உளவுத்துறை சொல்கிறது. அதற்குக் காரணம், அந்த அமெரிக்கா நண்பர் ரஜினிக்கு மட்டுமல்ல; திமுக தலைமைக்கும் மிக நெருக்கமானவராம்.''

""நானும் முக்கியமான தகவலைச் சொல்றேன். சட்டமன்றத் தேர்தலுக்குள் தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்கவும்-அதன் முக்கிய நிர்வாகிகளை முடக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு குறிவைப்பது குறித்து அண்மையில் நம்ம நக்கீரனில் அட்டைப் படக் கட்டுரையே வெளிவந்தது. அந்த செய்தியின் சூடு குறைவதற்குள், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம சிகாமணியைக் குறிவைத்து நடவடிக்கை எடுத்திருக்கும் அமலாக்கத்துறை அவரது 8.60 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியிருக்கு.''

Advertisment