""ஹலோ தலைவரே, ஃபாரின் டூர் போகும் அரசியல் புள்ளிகளை மத்திய உளவுத்துறை தீவிரமா வாட்ச் பண்ணுது.''

""ஆமாம்பா, சமீபத்தில் கூட ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் டூர் விவகாரத்தை உளவுத்துறை ஸ்மெல் பண்ணியது பற்றி நாம் பேசியிருக்கோமே?''

rangcall

""உண்மைதாங்க தலைவரே, ரவீந்திரநாத் விவகாரத்தில் ஏராளமான ஆதாரங்களை உளவுத்துறை திரட்டி வச்சிருக்குதாம். கடந்த 11-ந் தேதி மாலத்தீவு போவதாகச் சொல்லிட்டுத் தனி விமானத்தில் கிளம்பிய ரவீந்திரநாத் மொரீஸியசில் சில முதலீடுகளைச் செய்ததாகவும், பின்னர் அங்கிருந்து பிரான்ஸுக்குச் சென்று அங்கே ஏக்கர் கணக்கில் தோட்டங்களோடு கூடிய 18 வில்லாக்களையும், 12 பெட்ரோல் பங்குகளையும் வாங்கியிருப்ப தாகவும் உளவுத்துறை கண்டறிஞ்சிருக்குதாம். அவருடன் சென்ற அவரது நண்பர்களாக தொழிலதிபர்கள், ஏற்கனவே வழக்கு வில்லங்கங்களில் சிக்கியவர்களாம். அதனால் ரவீந்திரநாத்தும் விரைவில் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் வருவார்ன்னு சொல்லப்படுது.''

Advertisment

""எடப்பாடி மகன் மிதுனும் சமீபத்தில் இது போன்ற சிக்கலில் சிக்கினாரே?''

""ஆமாங்க தலைவரே, சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் இருந்து மொசாம்பியா, இந்தோ னேசியா ஆகிய rangநாடுகளுக்குச் சென்று வந்தார் மிதுன். அங்கே அவர் 13 ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடாக்கிவிட்டு வந்ததாக உளவுத் துறைத் தரப்பிலேயே டாக் அடிபடுது. இதையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பா.ஜ.க. மேலிடம், உரிய நேரத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்கலாம்னு சொல்றாங்க. தமிழக அரசியல்வாதிகளில் கட்சி பேதமின்றி பலரும் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதால் எல் லாவற்றையும் தோண்ட ஆரம்பிச்சிருக்குது அமலாக்கத்துறை.''

""ஆனா, நட வடிக்கை மட்டும் மத்திய அரசு மனசு வைக்கிற படிதான் நடக்கும். அப்படித்தானே?''

Advertisment

""அது தெரிஞ்சது தாங்க தலைவரே, தமிழக காவல் துறையில் உள்ள கூடுதல் டி.ஜி.பி.க்களான கந்தசாமி, ஷகீல் அக்தர், ராஜேஷ்தாஸ், வி.கே. ரவி ஆகிய 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எடப்பாடி கடந்தவாரம் சிறப்பு டி.ஜி.பி. என்கிற அந் தஸ்தைக் கொடுத்திருக்கார் எடப்பாடி. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக திரிபாதி இருக்கும் நிலையிலேயே ராஜேஷ்தாஸும் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக அறிவிக்கப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்காகவே சிறப்பு டி.ஜி.பி. என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடியின் இந்த அதிரடியை தற்போதைய டி.ஜி.பி.யான திரிபாதி கொஞ்சமும் ரசிக்கவில்லையாம்.''

""என்ன நோக்கத்தில் இந்த சிறப்பு டி.ஜி.பி. பதவிகள் உருவக்கப்பட்டதாம்?''

""எல்லாம் எலெக்ஷன் நேர சாதகத்துக் காத்தான்னு ஐ.பி.எஸ். வட்டாரத்திலேயே டாக் அடிபடுது. அதாவது, இப்போதைய டி,ஜி.பி. திரிபாதியை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பது கஷ்டம்னு எடப்பாடி நினைக்கிறாராம். அதனால், தேர்தல் சமயத்தில் தனது விருப்பப்படி செயல்படக் கூடிய அதிகாரிகள்தான் தன் பக்கத்தில் இருக்கனும்ன்னு அவர் ஆசைப்படறார். அதனால் தேர்தல் நேரத்தில் திரிபாதியை விடுமுறையில் அனுப்பிவைத்து விட்டு, ராஜேஷ் தாஸை டி.ஜி.பி. நாற்காலியில் உட்காரவச்சிட்டா, இங்கு போலீஸ் பவர் மூலம் நினைச்சதை எல்லாம் சாதிக்கலாம் என்பது அவரது திட்டமாம். அதற்காகத்தான் இந்த தாயக்கட்டை உருட்டல்கள்.''

""தமிழ்நாட்டில் மறுபடி மறுபடி மத அரசியலைக் கையில் எடுத்து பா.ஜ.க. பதட்டப் பரபரப்பை ஏற்படுத்துதே?''

""2018-ல் ஆண்டாள் பற்றிக் கட்டுரையாற்றிய வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புக்களைக் களமிறங்க வைத்து பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது பா.ஜ.க. இதன்பின் கடந்த ஜூலை மாதம் கந்த சஷ்டி கவசத்துக்கு விளக்க உரை சொன்ன கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சர்சையைக் கிளப்பியதோடு, அதன் மீது கைது நடவடிக்கைக்கும் அது வழிவகுத்தது. அதை வைத்து தி.மு.க.வுக்கு எதிரா அரசியல் செய்யப் பார்த்தது. அந்த வரிசையில் இப்போது பா.ஜ.க.வின் டார்கெட்டுக்கு ஆளாகியிருக்கிறார் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இந்த முறை, கட்சியின் புதிய வரவான குஷ்பு மூலம் இந்த அசைன்மெண்ட் ஆரம்பிச்சிருக்கு.''

sss

""ஏற்கனவே கற்பு சம்பந்தமா குஷ்பு சொன்ன கருத்துக்காக திருமாவளவனும் அவரது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் குஷ்புக்கு எதிரா போராட்டம் நடத்துனாங்க. அந்தப் பகை நெருப்பை ஊதி விடுதா பா.ஜ.க.?''

""ஆமாங்க தலைவரே, கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ’ஐரோப்பிய பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டத்தின்’ இணைய வழி கருத்தரங்கில் பேசிய திருமாவளவன், மனுஸ்மிருதி பெண்களைக் கீழ்மை செய்கிறதுன்னு, எடுத்துக்காட்டுகளோடு பேசியிருந்தார். இது மத்திய புலனாய்வுத்துறை மூலம் டெல்லியின் கவனத்துக்குப் போக, இதைக் கையில் எடுத்து தி.மு.க. கூட்டணிக்கு எதிராப் போராடுங்கன்னு தமிழக பா.ஜ.க.வினருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துடுச்சு. உடனே திருமாவின் அந்தப் பேச்சை, ஒட்டியும் வெட்டியும் எடிட் செய்து, தவறான வகையில் சித்தரித்த பா.ஜ.க. தரப்பினர், பெண்களை இழிவா பேசிட்டாருன்னு திருமாவுக்கு எதிராகக் கொளுத்திப்போட ஆரம்பிச்சாங்க. நடிகை குஷ்பு, மாஜி எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்ட மகளிர் அணியினர், திருமாவின் கருத்தை ஸ்டாலின் ஏத்துக்குறாரான்னு அறிவாலயத்தையும் சீண்டினாங்க.''

""ஸ்டாலின், வைகோ, இடதுசாரித் தலைவர்கள்னு எல்லாரும் திருமா பக்கம் நின்னு அறிக்கை விட்டிருக்காங்களே?''

""ஆமாங்க தலைவரே, சனாதன-வருணாசிரம-மனுஸ்மிருதிகளை மேற்கோள் காட்டித்தான் பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுதும் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தாங்க. திருமாவளவன் அதைச் சுட்டிக்காட்டிப் பேசியதை அபாண்ட மாகத் திரித்து, வன்முறையைத் தூண்ட மதவெறி சக்திகள் திட்டமிடுது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, திருமா மீது வழக்கைப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியதுன்னு ஸ்டாலின் காட்டம் காட்டியிருப்ப தோடு, தி.மு.க. கூட்டணிக்குள் கலகம் விளைவிக்கனும்னு வாய்பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிறை வேறாதுன்னும் சூளுரைத்திருக்கிறார். இப்போது திருமா மீது பல ஊர்களிலும் பா.ஜ.க. தரப்பு புகார்களைக் கொடுத்துப் பர பரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு. அவரோ விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தி பதிலடி கொடுத்திருக்காரு.''

""தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மும்முரமாகத் தயாராகுது போலிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, தி.மு.க. வின் தேர்தல் அறிக்கை இந்த முறையும் தேர்தல் களத்தில் கதாநாயகனாக வேண்டும்ங்கிற திட்டத் தோடு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, அதைக் கவனமாகத் தயாரிக்குதாம். வழக்கமாகத் தரப்படும் தேர்தல் வாக்குறுதி களுடன், சமூகம் சார்ந்தும், மாவட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்தும் இந்த அறிக்கை உருவாக்கப்படுதாம். தேர்தல் தொடர்பான வியூகங்களில் கவனம் செலுத்தும் ஸ்டாலின், தி.மு.க வுக்கு மண்டலவாரியா நிர்வாகிகளை நியமிக்கவும் திட்ட மிட்டிருக்காராம். அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது பற்றி எடப்பாடியிடம் பேசி யிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் அதில் அக்கறை காட்டாததால், கட்சியின் வழிகாட்டுக் குழுவினரிடம் இது பற்றி ஓ.பி.எஸ். தனி ஆவர்த்தனம் செய்து வருகிறாராம். இதனால் மறுபடியும் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையே உரசல் வெடிச்சிடுமோன்னு அமைச்சர்களே கவலைப் படறாங்களாம்.''

""காங்கிரஸுக்குள்ளும் விறு விறு வியூகங்கள் வகுக்கப்படுதாமே?''

""ஆமாங்க தலைவரே, தேர்தல் நேரத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியே நீடித்தால் சரிப்பட்டு வராதுன்னு பெரும்பாலான காங்கிரஸார் நினைக்கிறாங்களாம். அவரை மாற்றிவிட்டு புதிய தலைவரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க லாம்ன்னு, தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை மனதில் வைத்துக் கொண்டு சோனியாவிடம் வலியுறுத்தி வருகிறாராம் ப.சிதம்பரம். இது குறித்து அக்கட்சியின் சீனியர்களிடம் கேட்டபோது, ப.சி.யின் சிபாரிசை சோனியா ஏற்கும் பட்சத்தில், அவர் ப.சி.யையே அந்தப் பொறுப்பை ஏற்கச் சொல்வார். அதை சிதம்பரம் ஏற்காவிட்டால், அழகிரியை மாற்ற வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க.''

""பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்காரே?''

""ஆமாங்க தலைவரே, 83-ல் இந்தியாவுக்கு முதன்முதலில் உலகப் கோப்பையை வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் கிங் கபில் தேவ்தான். இந்தியாவின் முதல் ஆல் ரவுண்டர்ங்கிற பெருமையும் அவருக்குத்தான் உண்டு. ஹரி யானாவைச் சேர்ந்த கபில்தேவ், பிராமணிய ஆதிக்கத்தைக் கடந்து கிரிக்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஓய்வு பெற்றாலும், அவரை கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரோல் மாடலாகக் கருதறாங்க. இப்படிப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரரான கபில்தேவுக்கு திடீர்ன்னு மாரடைப்பு ஏற்பட்டதால், டெல்லியில் இருக்கும் தனியர் மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்கு. அவருடைய நிலை சீராக இருந்த போதும், அவர் டிஸ்சார்ஜ் ஆகி நல்லபடியா வெளியே வரனும்ன்னு கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை பண்றாங்க.''

ragag

""அந்தக் கிரிக்கெட்டிலும் பவர் யுத்தம் நடக்குதேப்பா?''

""உண்மைதாங்க தலைவரே, இந்திய கிரிக்கட் வாரியத் தலைவராக இருக்கும் சௌ ரவ் கங்குலியும், அதன் பேராளராக இருக்கும் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பதவியில் தொடரக்கூடாதுன்னு கடந்த வாரம் சுப்பிர மணியசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னணி யில் இருப்பவர், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்தானாம். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ்சின் தலைவராக இருந்த போது, அம்பயர்களை வசப்படுத்திவிடுவார். இதுபோன்ற வித்தைகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதிக வெற்றிகளைக் குவித்தது. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் டீம், சரிவைச் சந்திப்பதால் எரிச்சலான சீனிவாசன், சுப்பிரமணியசாமி மூலம் இந்த வழக்கைப் போட வைத்தாராம். வழக்கை பற்றி அறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாமியைக் கடுமையாக எச்சரிக்க, அதன் பிறகே அந்த வழக்கை சைலண்ட்டாக வழக்கை வாபஸ் வாங்கிவிட்டாராம் சாமி.''

crr

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். புதுக்கோட்டை மாவட்ட க்ரைம் பிராஞ்ச் காவல்துறையினரின் லஞ்ச விவகாரம் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன் நாம் பேசியிருந்தோம். இதை உறுதிப்படுத்திக்கொண்ட டி.ஜி.பி. அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட க்ரைம் பிராஞ்ச் எஸ்.ஐ. முத்துராமலிங்கத்தையும், அவருக்குக் கீழ் பணிபுரிந்த எஸ்.எஸ்.ஐ. மாரிமுத்துவையும் அங்கிருந்து திருச்சிக்குத் தூக்கியடித்திருக்கிறது.''