ஹலோ தலைவரே, தமிழகத்தில் நிமிடத்துக்கு நிமிடம் கொரோனா வைரஸ் திகிலூட்டும் விதமா பரவுவதோட, உயிர்வேட்டையையும் அதிரடியா நடத்திக்கிட்டு இருக்கு.''
""ஆனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைஞ்சிக்கிட்டு இருக்குதுன்னு ஆளும் தரப்பு சொல்லுதே?''
""எல்லாம் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் தாங்க தலைவரே, ஜூன் 30-ல் இருந்து இந்த ஜூலை 30 வரையிலான ஒரு மாத காலகட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 49 ஆயிரத்து 811 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கு. அதேபோல் இந்த ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரத்து 636 பேர் கொரோனாவுக்குப் பலியாகியிருக்காங்க. கடந்த 1-ந் தேதி மட்டும் 97 பேரின் உயிரைக்குடிச்சி ஏப்பம் விட்டிருக்கு கொலைகாரக் கொரோனா.''
""அதிர்ச்சியா இருக்கேப்பா. இந்தக் கூத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஏராளமான குளறுபடிகள்னு தகவல் வருதே?''
""உண்மைதாங்க தலைவரே, ஒரு பக்கம் தளர்வுகளால் கொரோனாவை அதிகரிக்க வச்சி, இன்னொரு பக்கம் அதைக் குறைப்பதாச் சொல்லி ஏகப்பட்ட நிதி மோசடியிலும் ஊழலிலும் இறங்கறாங்க. சென்னை மாநகராட்சியில் பாதிக்கப்பட்ட ஏரியாக் களைக் கண்டறிந்து, அங்கே தடுப்புகளை அமைத்து வந்த 35 பொறியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்காங்க. இவர்களில் நந்தகுமார்ங் கிற தலைமைப் பொறியாளரும் கொரோனா அட்டாக்கிற்கு ஆளாகியிருக்கார். இவர் செல்வாக் கானவர் என்பதால் அடையாறில் இவர் குடியிருக் கும் தெருவுக்கு மட்டும் எந்தத் தடுப்பும் வைக்கப் படலை. அதனால் விபரம் புரியாத மக்கள் அங்க கவனமில்லாமல் புழங்கறாங்களாம்.''
""அது இருக்கட்டும்பா. ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பா வழக்கு தொடுத்திருக்கும் ஜெ.வின் அண்ணன் வழி வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கின் பின்னணியில் "அவாள்' பாலிடிக்ஸ் இருப்பதாகச் சொல்லப்படுதே?''
""தலைவரே, இந்த விவகாரத்தை 1983-ல் இருந்து கவனிக்கனும். அந்த காலகட்டத்தில் தீவிர அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவிடம், ஜெ.வின் அண்ணன் ஜெயக்குமார், சங்கரமட ஜெயேந்திரர், ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர்தான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிச்சாங்க. அப்பவே குருமூர்த்திக்கு எதிராக அரசியல் செய்துவந்த சுப்பிரமணிய சாமி, ஸ்பெஷல் ரூட் போட்டுக் கொடுக்க, அதன் அடிப்படையில், சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மூலம் சசிகலா, ஜெ.விடம் போய்ச் சேர்ந்தார். இதன் பின் னர் சு.சாமி கை ஓங்கியது. இதைத்தொடர்ந்து ஜெ., தன் அண்ணன் ஜெய குமார், ஜெயேந் திரர் தரப்பை ஓரம் கட்டினார்.''
""ஓஹோ...''
""பின்னர் மறுபடியும் ஆடிட்டர், துக்ளக் சோ வழியாக மீண்டும் மைலாப்பூர் லாபி ஆதிக்கம் செலுத்தியது. இந்த பவர் யுத்தத்தத்தின் அடிப்படையில்தான் சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச் செல்லாம் நடந்தது. இந்த நிலையில், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் வசமாகச் சிக்க, அவரை அதிரடியாகக் கைது செய்தார் ஜெ. இடையில் மீண்டும் தலையெடுத்த சோ, ஆடிட்டர் தரப்பு கார்டனில் இருந்து சசிகலா தரப்பை வெளியேறச்செய்து ஆட்டம் காட்டியது. பின்னர் சசிகலா மூலம் மீண்டும் சுப்பிரமணிசாமியின் கை ஓங்கியது. இந்த நிலையில் ஜெ. இறந்துபோனார். இப்போது சசிகலா சிறையில் இருந்தாலும் ஜெ.வின் சொத்துக்களில் தன் பிடிமானத்தை வலுவாக்க, தீபா, தீபக் மூலம் எடப்பாடி அரசுக்கு எதிராக வழக்கைத் தொடுக்கச் செய்திருக்கிறார். இதன் பின்னணியில் சுப்பிரமணியசாமியும் இருக்கிறாராம். அ.திமு.க.வை ஆட்டிப் படைப்பதில் இப்படியொரு இனக்குழு அரசியலும் இருக்கிறதாம்.''
""இந்த நேரத்தில் தி.மு.க. விறுவிறுப்பா மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தியிருக்கே?''
""தேர்தல் தொடர்பான சமிக்ஞைகள் டெல்லிப் பக்கம் தெரிய ஆரம்பிச்சதால், 30-ந் தேதி மா.செ.க்கள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்தினார் ஸ்டாலின். மா.செ.க்களின் உடல்நலத்தை விசாரிச்ச அவர், மறைந்த ஜெ.அன்பழகனுக்கு பதிலாக சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளரா நியமிக்கப்பட்ட சிற்றரசுவை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாராம். அடுத்து என்.ஆர். இளங்கோ சொல்றதை கவனமா கடைபிடிங்கன்னு ஸ்டாலின் சொல்ல, வழக்கறிஞ ரும் எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ, செப்டம்பர், அக்டோபரில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை தொடங்கப்போகுது. அந்த வாய்ப்பை நாம் தவறவிடாமல் அதிக வாக்காளர்களைச் சேர்ப்பதோட, ஆகஸ்ட் 15-க்குள் பூத் கமிட்டிகளை உருவாக்கி, அதற்கான பட்டியலை தலைமைக்கு அனுப்பி வையுங்கன்னு சொல்லியிருக்கார். கலைஞரின் நினைவு தினத்தை நலத்திட்ட விழாவா கொண் டாடறதுன்னும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கு.''
""இதே பரபரப்பு ஆளும்கட்சித் தரப்பிலும் தெரியுதே?''
""ஆமாங்க தலைவரே, டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கிய பிறகு, அ.தி.மு.க.வி.ல் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலைகள் நடந்துச்சு. அதன்படி அங்கங்கே உறுப்பினர்கள் சேர்க்கப்பட் டும்கூட, அதற்கான படிவங்களை யாரும் ஒப்படைக்கலையாம். அதனால் படிவங்களை ஆகஸ்ட் 31-க்குள் ஒப்படைக்கனும்ன்னு ஓ.பி.எஸ்.சும், எடப்பாடியும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்காங்க. அப்படி ஒப்படைக்கிறவங்க மட்டும்தான் கட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடவும் வாக் களிக்கவும் முடியும். இந்த அவசர அதிரடி, தேர்தலுக்காகவா? இல்லை சசி ரிலீஸாவ தற்கு முன் உள்கட்சித் தேர்தலை நடத்தறதுக் காகவா?ன்னு அவங்க மத்தியிலேயே டாக் இருக்கு.''
""டெல்லியின் தீவிரப் பார்வை தமிழக அரசியல் கட்சிகள்மீது திரும்பியிருக்குதாமே?''
""உண்மைதாங்க தலைவரே, பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அமுதா ஐ.ஏ. எஸ்.சுக்கு முக்கிய அசைன்மெண்டுகள் கொடுக்கப்பட்டிருக்குதாம். குறிப்பாக, தமிழகத்தில் இருக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வி.ஐ.பி.க்களுக்கு எதிராக வந்திருக்கும் புகார்களையும், அவர்களைக் குறிவைத்து நடத்தப் பட்ட ரெய்டுகள் உள்ளிட்டவைகளையும் கவனித்து, அவை தொடர்பான ஸ்பெஷல் ரிப்போர்ட்டுகளை ரெடிபண்ணி, பிரதமர் அலுவலக அதிகாரி களிடம் கொடுக்கச் சொல்லியிருக்காங்களாம்.''
""ஓ...''
""கிடப்பில் கிடக்கும் தி.மு.க. புள்ளிகளான கனிமொழி, அ.ராசாவுக்கு எதிரான 2 ஜி வழக்கை உடனே தூசுதட்டவும் உத்தரவிடப்பட்டிருக்குதாம். இந்த வழக்கில் ஸ்டாலினைத் தொடர்பு படுத்துவதற்கான விசயங்களை ஆராயும்படியும் அமுதாவுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்குதாம். இதேபோல அ.தி.மு.க.வில் எடப்பாடி தொடங்கி அவரது அமைச்சர்கள் பலர் மீதும் எழுப்பப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள் குறித்தும், விசாரணை நடத்த ரெடியாயிட்டாராம். இந்த ஊழல்கள் தொடர்பாக ராஜ்பவன் அனுப்பி வைத்திருக்கும் சீக்ரெட் ரிப்போர்ட்டுகளும் அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக டெல்லித் தகவல்கள் விறுவிறுக்குது.''
""இந்த நேரத்தில் தி.மு.க. வி.ஐ.பி.க்கள் இருவர் பிரதமர் மோடியை சந்திச்சிருக்காங்களே?''
""உண்மைதாங்க தலைவரே, மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும்படி பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவதற்காக என்று, தி.மு.க. எம்.பிக்களான ஆ.ராசாவும் ஜெகத் ரட்சகனும் அவரைச் சந்திச்சிருக்காங்க. அப்போது, அது தொடர்பான மனுவை மோடியிடம் கொடுத்து விட்டு, இருவரும் ஏறத்தாழ 40 நிமிடங்களுக்கும் மேலே மோடி யுடன் பேசிக்கிட்டு இருந்தாங்களாம். அப்ப, 2ஜி வழக்கில் தீவிரம் காட்ட வேண்டாம் என்றும், ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கப்பிரிவு வழக்குகளில் நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்ததாகவும் சொல்லப்படுது. மோடியோ, தி.மு.க.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவரான டி.ஆர்.பாலு ஏன் வரலை? இவர்கள் கட்சித் தலைவரான ஸ்டாலின் அனுமதியோடு தான் தன்னைச் சந்தித்தார்களா? என்றெல்லாம் தீவிரமாக விசாரித்தாராம்.''
""தி.மு.க.வில் கனிமொழிக்கு எதிரா உதயநிதி ஸ்டலின் காய் நகர்த்தறதா சலசலப்பு கேட்குதே?''
""தி.மு.க.வில் இளம்பெண்கள் பேரவையை உதயநிதி தொடங்கப் போறார்னு ஒரு தகவல் பரவ, கனிமொழி தலைமையில் இருக்கும் தி.முக. மகளிரணியை பலவீனப்படுத்தத்தான் உதயநிதி இப்படியெல்லாம் செய்யறார்னு கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல்கள் எதிரொலிக்கிது. இத்தனைக்கும் ஸ்டாலினோடு இணக்கமாவே கனிமொழி நடந்துவரும் நிலையில், எதுக்கு இந்த வேலைன்னு கேட்கும் அவங்க, மகளிரணிக்கு போட்டியாக ஒரு அணி உருவாக்கப் பட்டால் கனிமொழி தன் மகளிரணி பதவியை ராஜினாமா செய்வாருன்னும் சொல்றாங்க. உதயநிதி தரப்பில் இது சம்பந்தமா கேட்டப்ப, தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து மட்டத்திலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டியிருக்கு. இளம்பெண்கள் பேரவை பற்றிய ஆலோசனை ஊரடங்குக்கு முன்னாடி நடந்தது. கனிமொழி அனுமதியில்லாமல் இதில் முடிவெடுக்கக் கூடாதுன்னு எங்க தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்காரு. அதனால் ஒருங்கிணைந்த முடிவுதான் எடுக்கப்படும்னு சொல்றாங்க.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்... அண்மையில் அ.திமுக.வின் புதிய மா.செ.க்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தின்போது, ஓ.பி.எஸ் தவிர, தங்கமணியும் வேலுமணியும் கூட, தங்கள் ஆட்களை மா.செ.வாக்க லாபி செய்தார்களாம். அதையெல்லாம் முறியடித்துத்தான் அந்தப் பட்டியலை அறிவித்திருக்கிறார் எடப்பாடி. இதில் இன்னொரு சர்ச்சை என்னவென்றால், இந்த நியமனப் பட்டியலில் யாதவர், தேவேந்திர குல வேளாளர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று தரப்பினரும் முழுதாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தரப்பில் இருந்து குமுறல்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.''