"ஹலோ தலைவரே, தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்பாகவே கோட்டையில் அதிகாரப் போட்டி அமர்க்களமா நடக்குதாம்?''

""இரண்டு கழகங்களுக்கும் இடையிலா?'' ’’

""இல்லீங்க தலைவரே.. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும். தேர்த லுக்கு முன்னாடி, நியமனங்கள் மூலம் கல்லாக் கட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும் நினைக்கிறாங்க. அதனால், அந்தந்த துறையிலும் காலியிடங்களுக்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவற்றுக்கு நேர்முகத்தேர்வு வரை நடத்தப்பட்டிருக்கு. அமைச்சர்கள் தரப்பு ஆர்வமாகக் காத்திருந்த நேரத்தில், இப்போதைக்கு நியமன ஆர்டர்களைப் போட வேண்டாம். எல்லாம் மார்ச்சுக்குப் பிறகு பார்த்துக்கலாம்னு துறையின் உயரதிகாரிகள் பிரேக் பிடிக்கிறாங்களாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாச்சுன்னா, அமைச்சர்களின் அதிகாரம் செல்லாததாகிவிடும். அதன்பிறகு நாம் பார்த்துக்கலாம் என்பதுதான் அதிகாரிகளின் திட்டமாம்.'' ’’

""இதை எப்படி அமைச்சர்கள் ஒத்துக்கு வாங்க?'' ’’

Advertisment

rang

""அமைச்சர்கள் கறார்க் குரலில் பேசியும், அதிகாரிகள் அசைந்து கொடுக்கலையாம். அதனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் பற்களை "நற நற' வெனக் கடித்துக்கொண்டிருக்க, பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜியோ, ஆர்டர் பிறப்பிக்காத ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலாரை தொழிலாளர் நலத்துறைக்குத் தூக்கியடிச்சிட்டார். இதனால் எரிச்சலான வள்ளலார், ஆவின் ஊழல் பற்றிய அத்தனை ஆவணங்களையும் எதிர்க்கட்சியிடம் கொடுத்துவிடுவேன்னு சொல்ல, தனக்கேயுரிய டெரர் பாணியில் மிரட்டிக்கிட்டு இருக்காராம் அமைச்சர். அதிகாரியோ எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்ங் கிறாராம். இதேபோல் பலதுறை யிலும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மிரட்டல் யுத்தம் நடந்துக்கிட்டு இருக்குது'' ’’

""சட்டமன்றம் கூடுற தேதியை எப்ப அறிவிப்பாங்க?'' ’’

Advertisment

""ஆளுநர் உரையோடு ஜனவரியில் சட்டமன்றம் கூடுவது வழக்கம். அதற்கு கவர்னரிடம் அனுமதி கேட்டிருந்தார் எடப்பாடி. அதேபோல் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தாகணும். கவர்னர் உரையையும் கூட ஓரலா ரெடி பண்ணி வச்சிட்டாராம் எடப்பாடி. இதுவும் ராஜ் பவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கு. ஆனால் அண்மைக் காலமாக முதல்வர் எடப்பாடியைப் புறக்கணித்துவரும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், இதுவரை பதில் சொல்லலையாம். ராஜ்பவனோட கனத்த மௌனத்தால் கதிகலங்கிப் போயிருக்கும் எடப்பாடி, அடுத்து என்ன செய்வதுன்னு யோசிக்கிறாராம்'' ’’ ""ரஜினி அறி வித்த முடிவு பற்றி அரசியல் தலைவர்கள் என்ன யோசிக்கிறாங்க?''

rr

""ரஜினியின் அரசியல் துறவற முடிவால, நடுநிலையாளர்கள், இளம் தலைமுறையினர், சிறு பான்மையினர் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே சிதறாமல் கிடைக்கும்னு அறிவாலயம் நிம்மதியோடு இருக்க. ரஜினி வந்திருந்தால் இந்த ஓட்டுகள் சிதறும்னு தி.மு.க. நினைத்தபடியே பிரசாந்த் கிஷோரும் எச்சரித்திருந்தாராம். ’தி.மு.க.வை வீழ்த்த சிலரை கட்சி ஆரம்பிக்க வைக்கிறார்கள்னு மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலினும் பேசியிருந்தார். இப்ப தி.மு.க. எனர்ஜியோடு இருக்குது.'' ’’

""அ.தி.மு.க. சைடில் என்ன ரியாக்ஷன்?'' ’’

r

""அ.தி.மு.க.வுக்கு சாதகமா உள்ள தலித் வாக்குகளை ரஜினி பிரிச்சிடுவாருன்னு தலைமை வரை பயம் இருந்தது. அதிருப்தி அ.தி.மு.க.வினர் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க தூண்டுதலால ரஜினி பக்கம் போகலாம்னும் எதிர்பார்ப்பு இருந்தது. அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சிப் பிரமுகர்கள் பலரும், எங்களுக்குத் தேர்தலில் சீட் தராட்டி, ரஜினி பக்கம் போய்டுவோம்னு செக் வச்சிக்கிட்டே இருந்தாங்க. அதனால ரஜினியின் அரசியல் துறவறத்தால், எடப்பாடி ஹேப்பி அண்ணாச்சி.'' ’’

""இரு அணிகளின் தோழமைக் கட்சிகள்?''

""அவங்கதான் ரொம்ப அப்செட் ஆயிட்டாங்க. ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், தி.மு.க., அ.தி.மு..க. இரண்டு அணிகளிலும் உள்ள கூட்டணிக் கட்சிகள் தங்கள் அணித்தலைமையிடம் சீட் அதிகமா டிமாண்ட் பண்ணலாம்னு இருந்தது. பெரிய கட்சிகளும், கூட்டணியில் உள்ளவங்க ரஜினி பக்கம் போயிடக் கூடாது, ஓட்டு சிதறிடக் கூடாதுன்னு கூடுதல் இடங்களை ஒதுக்கவும் ரெடியா இருந்தது. ரஜினி வராததால, இரு அணியிலும் இருக்கும் கூட்டணிக் கட்சிகள், பழையபடி சீட்டுக் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டிவருமேன்னு, சுணங்கிப் போயிருக்குதாம்''

’""அண்ணாத்தே அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பரபரப்புதாம்ப்பா...'' ’’

’""ஆமாங்க தலைவரே, ஹைதராபாத் அப்பல்லோவில் ரஜினி அட்மிட் ஆனதிலிருந்து அவரது உடல் நலம் எப்படி இருக்கிறது என்று அறிவாலயத் தரப்பிலிருந்து விசாரிச்சிருக்காங்க. ரஜினியின் உடல்நிலையை கவனித்துவரும் அவரது நெருங்கிய நண்ப ரான சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், தி.மு.க. தலைமைக்கும் மிக நெருக்கமானவராம். அவர் மூலமாகவே இந்த விசாரிப்பு நடந்திருக்கு. ரஜினியின் உடல் நலத்தை தி.மு.க தலைமை விசாரிப்பதை அறிந்த ஆளும் கட்சித் தலைமையும் விசாரித்திருக்குது. அப்போது, மத்திய அரசின் உதவியுடன் லண்டனிலிருந்து முக்கிய இன்ஜெக்சன் வரவழைக்கப் பட்டு அது ரஜினிக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதுங்கிற தகவல் அ.தி.மு.க தலைமைக்கு தெரியவந்திருக்குது.'' ’’

""ரஜினி அரசியலுக்கு வராத நிலையிலும், தேர்தலுக்குப் பிறகுதான் தமிழக முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படுன்னு பா.ஜ.க. சொல்லிடிச்சே'' ’’

rangg

""ஆமாங்க தலைவரே, எடப்பாடி முதல்வர் வேட்பாளரா அறிவிக்கப் பட்டதை, டெல்லி பா.ஜ.க. தலைமை ரசிக்காதது பற்றி, நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கோம். அதை உணர்த்துகிற மாதிரியே தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனும், அண்ணாமலை ஐ.பி.எஸ்., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பிரமுகர்களும் பேசிவந்தாங்க. அது மட்டுமில் லாமல், பா.ஜ.க.வுக்கு அதிக சீட், கூட்டணி அமைச்சரவை, துணை முதல்வர் பதவிங்கிற வரைக்கும் செய்தி கசிய விட்டாங்க. இது எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்திவந்த நிலையில் 30-ந் தேதி, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் மேலிடப் பார்வை யாளரான சி.டி.ரவி, தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் வேட்பாளரைப் பற்றி முடிவு செய்வோம்ன்னு சொன்னாரு.'' ’’

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஜனவரி 3-ந் தேதி ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அறிவித்திருந்தார் மு.க.அழகிரி. அவர் நண்பரான ரஜினி, கட்சி ஆரம்பிக்கலைன்னு அறிவிச்சதால, அரசியலுக்கு வரத் தயங்குறாராம். ஆனாலும் அவரோட ஆதரவாளர்களோ, ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்யாதீங்க. திட்டமிட்டபடி கூட்டத்தைக் கூட்டி விட்டு அதன் பிறகு முடிவு செய்யுங்க. எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்னு சொல்றாங்களாம்.''