"ஹலோ தலைவரே, கலைஞர் மறைவுக்குப் பிறகு, தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகி இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு 9-ந் தேதி காணொலி மூலம் கூடியதை கவனிச்சீங்களா?''
""கவனிச்சேம்ப்பா... பொதுவாக தி.மு.க.வின் பொதுக்குழு அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கில் இடநெருக்கடியோடு நடக்கும். இந்த முறை கொரோனா சூழலால் அறிவாலயத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னணியினர் மட்டும் தனி மனித இடைவெளியுடன் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, அந்தந்த மாவட்டங்களிலிருந்து பொதுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காணொலி பொதுக் குழுவை டி.வி. லைவ் ரிலேயில் பார்த்தேன்.''
""கட்சியின் 67 மாவட்ட அமைப்புகளின் 3500 பொதுக்குழு உறுப்பினர்களுடனான காணொலிக் கூட்டம் என்பதால் 8ந் தேதியே தொழில்நுட்ப ரீதியான ரிகர்சல் நடந்திடிச்சி. 9-ந் தேதி கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு தொடங்குச்சு. பொதுச்செயலாளரா துரைமுருக னும் பொருளாளரா டி.ஆர்.பாலுவும் ரேஸில் முந்தியதை நக்கீரன் முன்கூட்டியே சொல்லியிருந்தது. அதுபோலவே துணைப் பொதுச்செயலா ளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்ங்கிறதை சில வாரங்களுக்கு முன்னாடி சொல்லியிருந்தோம்.''
""3 துணைப் பொதுச்செயலாளர்கள் என்பதை 5 துணைப் பொதுச்செயலாளர்கள்னு சட்டத் திருத்தம் செய்து, பொன்முடி-ஆ.ராசா இருவரை யும் நியமிச்சிருக்குதே தி.மு.க. தலைமை?''
""பட்டியலினத்தவரான ஆ.ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி மாதிரி பெரிய பதவியைக் கொடுக்கக் கூடாதான்னு கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கொஞ்ச காலமாகவே சமூகவலைத்தளங்களில் குரல்கள் ஒலித்தது. பொதுக்குழு கூடுவதற்கு முதல்நாள், ஒரு நாளிதழி லும் தி.மு.க.வில் பட்டியல் இனத்தவர்கள் புறக் கணிக்கப்படுகிறார்கள்னு கட்டுரையும் வந்தது. சூழலைப் புரிந்துகொண்ட ஸ்டாலின், புதிதாக நியமிக்கப்படும் இரண்டு துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரா ஆ.ராசாவை நியமிச்சிட்டாரு. பொருளாளர் ரேஸில் இருந்த பொன்முடிக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி. பொதுக்குழு நாளில் இரு வருமே அவரவர் மாவட்டங் களில் நடந்த காணொலி கூட்டம் மூலமாத்தான் பங்கேற்றாங்க.''
""அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அந்தியூர் செல்வராஜ், பட்டியல் இன சமுதாயத்திற்கான துணைப் பொதுச்செயலாளரா இருக் கிற நிலையில், பொதுப் போட்டிக்கான இடத்தில் தன்னை பொதுச்செயலாளராக்கிய ஸ்டாலினுக்கு ராசா நன்றி சொன்னதையும் கேட்டேம்ப்பா...''’’
""உங்க காதுக்கு வராத செய்தி ஒன்றை சொல்றேன். ஆ.ராசா சொன்னதுபோல அவருக்கும் துணைப்பொதுச்செயலாளர் பதவி, அருந்ததியர் சமூகத்து செல்வராஜூக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ள தி.மு.க தலைமை, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு ஒரு மா.செ.பதவி கூட கொடுக்கலைங்கிற ஆதங்கம் அந்தத் தரப்பில் இருக்குது. துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஐ.பெரியசாமியின் தென்மாவட்ட ஆட்கள் இதில் விளையாடுறதாகவும், மு.க.அழகிரி மனைவி காந்தி அழகிரியின் சமூகங்கிறதால தேவேந்திரகுல வேளாளர்களைப் புறக்கணிக்குதா தி.மு.க தலைமைன்னு உள்ளுக்குள்ளே புகையுது.''
""அழகிரிக்கு இது தெரியுமா?''
""தி.மு.க தலைமைக்கு தெரியணும்ங்கிறதுதான் அந்த சமுதாயத்தின் நோக்கம். அறிவாலய நிர்வாகிகளோ, புதிதாக உருவாகியுள்ள தென்காசி மாவட்டத்தை கட்சி நிர்வாகத்திற்கேற்ப பிரித்து புதிய மா.செ.க்கள் நியமிக்கப்படும்போது தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்னு சொல்றாங்க தி.மு.க தலைவர்- பொதுச்செயலாளர்- பொருளாளர் மூவரும் மிசா சிறைத்தழும்புகளை ஏற்றவங்க. 5 துணைப் பொதுச்செயலாளர்களும் அவரவர் அளவில் செல்வாக்கும் அனுபவமும் உள்ளவர்கள். கட்சியின் மற்ற அணிகளையும் வலுப்படுத்தி, தேர்தலை சந்திக்க ஸ்டாலின் டீம் ரெடியாகுது.''
""எடப்பாடியும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடிப்படையான ரகசிய வேலைகளைத் தொடங்கிட்டாரு போலிருக்கே...''
""கள வேலைகளைவிட கண்காணிப்பு வேலைகளில் எடப்பாடி கூடுதல் கவனம் செலுத்துறாரு. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள்னு உளவுத்துறை மூலம் அனைவரையும் வேவு பார்ப்பதோடு, அவங்க டெலிபோன்களும் ஒட்டுக்கேட்கப்படுது. டேப் செய்யமுடியாத விஷயங்களா இருந்த வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளையும் இஸ்ரேலில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவிகள்மூலம் டிரேஸ்பண்ணத் தொடங்கிட்டாங்க. அதோட ஆளுங்கட்சிக்குள்ளேயே இருக்கும் கோஷ்டித் தலைவர்களையும் எடப்பாடி இதன்மூலம் கண்காணிக்கிறாராம். இந்தக் கண்காணிப்பு, ஒட்டுக்கேட்பு வளையத்துக்குள் ரஜினியும் கமலும்கூட இருக்காங்கன்னு உளவுத்துறை தரப்பில் இருந்தே தகவல் கசியுது.''
""அரியர்ஸ் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி அரசு முன்னுக்கு பின் முரணாக செயல்படுதே?''
""அரியர்ஸ் தேர்வுகளை எழுதப் பணம் கட்டிய மாணவர்கள் அனைவரும், தேர்வு எழுதாமலே பாஸ் என்று எடப்பாடி அறிவிச்சிருந்தார். அப்படியென்றால் அரி யர்ஸுக்குப் பணம் கட்டாத மாணவர்கள் மட்டும் பெயிலாக வேண்டுமா என்ற குரல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து எழுந்தது. இந்த நிலையில். அரியர்ஸ் மாணவர்கள் தேர்வின்றி பாஸ் என்பது சரியல்லன்னு கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்க, அகில இந்திய தொழில் நுட்பக் கழகமும் இது மாணவர்களின் உயர்படிப்பையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும்னு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது.''
""அதெல்லாம் இல்லைன்னு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழ கன் சொல்லியிருந்தாரே?''
""கலை-அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி, அரசின் உத்தரவை மீறி எங்களுக்கு எதுவும் வரவில்லை எனத் தெரிவித்துவிட்டார். ஆனால், பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அனுப்பிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. அரியர்ஸ் மாணவர்கள் ஆல் பாஸ்ங்கிறதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுரு சாமியும் கேஸ் போட்டாரு. டெல்லி வரையிலும் புகார் போனதால் பல்கலைக்கழகங்களின் வேந்தரான கவர்னர் பன்வாரிலால் புரோஹித், எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து, உங்கள் இஷ்டத்துக்கு எப்படி அரியர்ஸ் மாணவர்கள் பாஸுன்னு அறிவிக்கலாம்?ன்னு கோபத்தைக் காட்டியிருக்காரு. திகைச்சுப்போன எடப்பாடி, "சரி, நாங்க, மாற்று அறிவிப்பை வெளி யிட்டு விடுகிறோம்'ன்னு சொல்லிட்டு ராஜ்பவனில் இருந்து வெளியே வந்திருக்கார். இதையடுத்து, தேர்வு நடத்துவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலிடம் தமிழக அரசு தெரிவித்ததா செய்திகள் வெளியாக, அது குறித்த மறுப்புகளும் கிளம்ப, இன்ஜினியரிங் மாணவர்கள் குழப்பத்திலும் பதட்டத்திலும் இருக்காங்க.''
""கல்லூரி மாணவர்களை பாஸ் போட்டால், ஓட்டுப் போடுவாங்கன்னு கணக்குப் போட்டு அரசியல் விளையாட்டு நடக்குது.''
""உண்மைதாங்க தலைவரே, அடுத்த மேட்டருக்கு வர்றேன். செப்டம்பர் 14-ல் தொடங்க இருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 18 நாட்கள் நடக்கப்போகுது. இதிலேயே துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க நினைக் கிறார் மோடி. ஒரு வருடமாகவே இந்தப் பதவி காலியாத் தான் இருக்கு. பொதுவா, இந்தப் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பதுதான் மரபு. ஆனால், இந்த முறை தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே இந்தப் பதவியில் உட்காரவைக்க நினைக்கிறார் மோடி. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தப் பதவிக்கு ஒருவரை நிறுத்த முடிவெடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவியான சோனியா. அப்படி தாங்கள் நிறுத்தும் வேட்பாளரைப் பொது வேட்பாளராகக் கருதி அவரை ஆதரிக்கும்படி தி.மு.க., அ.தி.மு.க. தொடங்கி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கோரும்படி தங்கள் கட்சி சீனியர்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறாராம். இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தாவிடம் தானே பேச இருக்கிறாராம் சோனியா. அதேபோல ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளரா தி.மு.கவின் திருச்சி சிவாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது.''
""காங்கிரஸ் சீனியர் ப.சிதம்பரம்மீது காங்கிரஸுக் குள்ளேயே அதிருப்தி நிலவுதேப்பா?''’
""உண்மைதாங்க தலைவரே, அண்மையில் மரணமடைந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு, கட்சியின் சீனியர் தலைவர் சோனியா சார்பில் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னியும் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபாலும் டெல்லியில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திய தோடு, மற்ற பிரமுகர்களுடன் சேர்ந்து அடக்க நிகழ்விலும் கலந்துக்கிட்டாங்க. ஆனால் சிவகங்கை யில் இருந்த ப.சி.யும், சென்னையில் இருந்த அவர் மகன் கார்த்திக் சிதம்பரமும் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தவே இல்லையாம். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த, அதை சோனியா மற்றும் ராகுலின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்காங்களாம்.''
""வசந்தகுமார் மரணத்தால் காலியான சீட்டுக்கு காங்கிரஸ் சைடில் போட்டி அதிகமாமே?''
""காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய்வசந்த்தை நிறுத்த விரும்புறது பற்றி நம்ம நக்கீரன் ஏற்கனவே எழுதியிருந்தது. கே.எஸ்.அழகிரி சாய்ஸூம் அவர்தான். அதேசமயம் நடிகை குஷ்புவை நிறுத்தினால், குஷ்புவின் அதிருப்தியும் குறையும், எளிதாகவும் ஜெயிக்கலாம்னு காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் வலியுறுத்த ஆரம்பிச்சிருக்காங்க. குஷ்புவுக்கும் இதில் ஆர்வம் இருப்பதால், தன் எண்ணத்தை ராகுலிடம் வெளிப்படுத்த இருக்கிறாராம். இதற்காக அவர் விரைவில் டெல்லி செல்வார் என்ற பேச்சும் அடிபடுது.''
""பா.ஜ.க.விலும் சலசலப்பு இருக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் பா.ஜ.க.வில் ஐக்கியமாக முயற்சித்தது பற்றியும், இதையறிந்து போலீஸ் முற்றுகையிட, அவர்கள் பா.ஜ.க. மாநில நிர்வாகி ஒருவரின் காரில் ஏறித் தப்பியது குறித்தும் நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். அப்படி தப்பிய ரவுடிகளில் ஒருவரான ராஜேஷ், அதன் பின்னரும் அடங்காமல் தி.மு.க. வழக்கறிஞர் மனோநிதி என்பவர் வீட்டில் வெடிகுண்டை வீசி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நில அபகரிப்பு உள்ளிட்ட புகார்களுக்கு ஆளான அ.தி.மு.க. பிரமுகரான பள்ளிக்கரணை ராஜசேகர் என்பவருக்காகத்தான், இந்த வெடிகுண்டு சாகசத்தைச் செய்தாராம் ராஜேஷ். இது பா.ஜ.க.வுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்திருக்கிட்டிருக்கு.''
""பா.ஜ.க.வில் பதவி குறித்த சர்ச்சையும் நிலவுதேப்பா?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, நடிகை காயத்ரி ரகுராமன் பா.ஜ.க.வின் தமிழக கலை கலாச்சாரப் பிரிவு தலைவராக, மாநிலத் தலைவர் முருகனால் நியமிக்கபட்டிருக்கிறார். காயத்ரியை முருகனுக்கு அறிமுகப்படுத்தியவர், மாநில இளைஞ ரணித் தலைவரான வினோஜ் வி.செல்வம்தானாம். பா.ஜ.க.வில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நடிகர் எஸ்.வி. சேகர் போன்றவர்களுக்கு பதவி கொடுக்கப்படாத நிலையில், செல்வம் அறிமுகப்படுத்திய வேகத்திலேயே காயத்ரிக்கு பதவி கொடுக்கப்பட்டது அங்கே புகார்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைப்பத்தி எல்லாம் அலட்டிக்காமல் அரசியல் செய்யும் முருகன், மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி , திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவில் வரை பிரார்த்தனை யாத்திரைப் பயணத்தை மேற் கொள்ள இருக்கிறாராம்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். அ.தி.மு.க.வில் புதிதாக அதிகாரம் செலுத்தும் ’எஸ்.எம். எஸ். குழு’ பற்றிய நக்கீரனின் அட்டைப் படச்செய்தியைப் பார்த்து, முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி டென்ஷனாகியிருக்கிறார்., அ.தி.மு.க.வுக்காக நாம் வகுக்கும் வியூகங்களையெல்லாம் யார் வெளியே சொல்கிறார்கள்னு கேட்டு, தீவிர விசாரணையை நடத்துறாராம்.''