ராங்-கால் : இடைத்தேர்தல்! அழகிரி-டி.டி.வி. டீல்! அ.தி.மு.கவுடன் ரகசிய உறவு!

alagiri-ttv

""ஹலோ தலைவரே, மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு, தி.மு.க.வின் முதல் மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 8-ந் தேதி நடந்திருக்கு.''’

""தலைவராகப் பொறுப்பேற்றபோது புதிதாக பிறந்திருக்கிறேன்னு ஸ்டாலின் சொன்னாரு. மா.செ.க்கள் கூட்டத்தில் புதுமுகத்தைக் காட்டினாரா?''’

stalin

""தலைவரே, ஸ்டாலினைவிட துரைமுருகன் தான் புதுமுகத்தை அதிகமா காட்டியிருக்காரு. தி.மு.க.வின் புதிய பொருளாளரான துரைமுருகன் தேர்தல் நிதிக்கான வசூலை ஆரம்பிச்சிட்டாரு. அவரோட வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று மா.செ.க்கள் மூலம் திரட்டிய ஒரு கோடி ரூபாயை, இந்தக் கூட்டத்தில் வச்சி ஸ்டாலினிடம் ஒப்படைச்சார் துரைமுருகன். அதோட அறிவாலயத்துக்கு வந்திருந்த தஞ்சை மாவட்ட கட்சிப் பிரமுகர்களிடம் அங்கேயே ஒன்றரை லட்ச ரூபாயைத் தேர்தல் நிதியா கறந்துட்டார்..''’

""வசூல் சக்கரவர்த்தியாயிட்டாருன்னு சொல்லு?''’

""மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகளால் சொல்லவும் முடியல.. மெல்லவும் முடியல. அ.தி.மு.க.. சார்பில் தேர்தல் நிதி வசூல் எல்லாம் நடத்துறதில்லை. ஆனா, தி.மு.க.வில் அந்த பழைய வழக்கம் இப்பவும் தொடருது. முன்புபோல் தேர்தல் நிதி கேட்டு கடைத்தெருக்களிலும் பொது மக்களிடமும் தி.மு.க நிர்வாகிகளால் போக முடியலை. அப்படியே போனாலும், "உங்ககிட்ட இல்லாத பணமா? ஆளுங்கட்சியா இருந்தப்ப நிறைய சம்பாதிச்சிருப்பீங்களே, அதைக்கொண்டு உங்க கட்சி செலவுகளைப் பார்த்துக்க வேண்டி யதுதானே'ன்னு மக்கள் திருப்பிக் கேட்டு சங்கடப்படுத்தறாங்களாம். அ.தி.மு.க., டி.டி.வி கட்சியெல்லாம் கொடுக்குது. தி.மு.க மட்டும்தான் பணம் வாங்குதுன்னு, நிதிகேட்டுப் போகும்போது காதுபட கிடைக்கிற மோசமான ரெஸ்பான்ஸால், வசூல்னு சொன்னாலே மா.செ.க்கள் அலர்ஜியாகறாங்க. ஆனா, புதுப்பொருளாளர் ரொம்ப கறாரா இருக்காரு. அதனால் இந்த வசூல் விவகாரத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை மு.க.ஸ்டாலின் ஏற் படுத்தணும்ன்னு தி.மு.க. மா.செ.க்கள் நினைக்கிறாங்க.''’

""அவங்க நினைக்கிறது சரிதானேப்பா… ஸ்டாலின் என்ன நினைக்கிறாராம்? ''’

""தேர்தல் களத்தில் எப்பாடுபட்டாவது ஜெயிச்சாக ணும்ங்கிறதில் தெளிவா இருக்கிற ஸ்டாலினைப் பொறுத்தவரை வேற ஒரு விசயத்தை மா.செ.க்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அழுத்தமா சொல்லியிருக்கார

""ஹலோ தலைவரே, மு.க.ஸ்டாலின் தலைவரான பிறகு, தி.மு.க.வின் முதல் மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 8-ந் தேதி நடந்திருக்கு.''’

""தலைவராகப் பொறுப்பேற்றபோது புதிதாக பிறந்திருக்கிறேன்னு ஸ்டாலின் சொன்னாரு. மா.செ.க்கள் கூட்டத்தில் புதுமுகத்தைக் காட்டினாரா?''’

stalin

""தலைவரே, ஸ்டாலினைவிட துரைமுருகன் தான் புதுமுகத்தை அதிகமா காட்டியிருக்காரு. தி.மு.க.வின் புதிய பொருளாளரான துரைமுருகன் தேர்தல் நிதிக்கான வசூலை ஆரம்பிச்சிட்டாரு. அவரோட வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று மா.செ.க்கள் மூலம் திரட்டிய ஒரு கோடி ரூபாயை, இந்தக் கூட்டத்தில் வச்சி ஸ்டாலினிடம் ஒப்படைச்சார் துரைமுருகன். அதோட அறிவாலயத்துக்கு வந்திருந்த தஞ்சை மாவட்ட கட்சிப் பிரமுகர்களிடம் அங்கேயே ஒன்றரை லட்ச ரூபாயைத் தேர்தல் நிதியா கறந்துட்டார்..''’

""வசூல் சக்கரவர்த்தியாயிட்டாருன்னு சொல்லு?''’

""மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகளால் சொல்லவும் முடியல.. மெல்லவும் முடியல. அ.தி.மு.க.. சார்பில் தேர்தல் நிதி வசூல் எல்லாம் நடத்துறதில்லை. ஆனா, தி.மு.க.வில் அந்த பழைய வழக்கம் இப்பவும் தொடருது. முன்புபோல் தேர்தல் நிதி கேட்டு கடைத்தெருக்களிலும் பொது மக்களிடமும் தி.மு.க நிர்வாகிகளால் போக முடியலை. அப்படியே போனாலும், "உங்ககிட்ட இல்லாத பணமா? ஆளுங்கட்சியா இருந்தப்ப நிறைய சம்பாதிச்சிருப்பீங்களே, அதைக்கொண்டு உங்க கட்சி செலவுகளைப் பார்த்துக்க வேண்டி யதுதானே'ன்னு மக்கள் திருப்பிக் கேட்டு சங்கடப்படுத்தறாங்களாம். அ.தி.மு.க., டி.டி.வி கட்சியெல்லாம் கொடுக்குது. தி.மு.க மட்டும்தான் பணம் வாங்குதுன்னு, நிதிகேட்டுப் போகும்போது காதுபட கிடைக்கிற மோசமான ரெஸ்பான்ஸால், வசூல்னு சொன்னாலே மா.செ.க்கள் அலர்ஜியாகறாங்க. ஆனா, புதுப்பொருளாளர் ரொம்ப கறாரா இருக்காரு. அதனால் இந்த வசூல் விவகாரத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை மு.க.ஸ்டாலின் ஏற் படுத்தணும்ன்னு தி.மு.க. மா.செ.க்கள் நினைக்கிறாங்க.''’

""அவங்க நினைக்கிறது சரிதானேப்பா… ஸ்டாலின் என்ன நினைக்கிறாராம்? ''’

""தேர்தல் களத்தில் எப்பாடுபட்டாவது ஜெயிச்சாக ணும்ங்கிறதில் தெளிவா இருக்கிற ஸ்டாலினைப் பொறுத்தவரை வேற ஒரு விசயத்தை மா.செ.க்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அழுத்தமா சொல்லியிருக்காரு. ஆளுங்கட்சி யான அ.தி.மு.க.வோடு லோக்கலில் கூட்டு சேர்ந்து காண்ட்ராக்ட் உட்பட பலவற்றிலும் பார்ட்னரா இருந்து பலரும் டீலிங்கில் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதை மா.செ.க்கள் கூட்டத்தில் சுட்டிக் காட்டிய ஸ்டாலின், "இப்படி ஆளுங்கட்சியோடு நீங்கள் டீலிங்கில் இருந்தால் பொதுமக்கள் மத்தியில் நம் கட்சிக்குத்தானே கெட்ட பெயர். அதனால் அப்படிப் பட்ட கள்ள உறவுகளை உடனடியாக நிறுத்திக்கங்க'னு அந்தக் கூட்டத்திலேயே எச்சரிச்சிருக்காரு.''

alagiri-ttv

""எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியோட அன்டர் ஸ்டாண்டிங்கில் இருக்காங்கன்னு ஏற்கனவே பேச்சு அடிபடுதே!''

""ஆமாங்க தலைவரே.. அதைத்தான் ஸ்டாலின் கண்டிச்சிருக்காரு. அதுவும், கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்ட விஷயத்தை சொல்லி விளக்கியிருக்காரு. "நானும் கனிமொழியும் மற்றவங்களும் நேரடியா எடப்பாடியை சந்திச்சி எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரமுடியாதுன்னு சொல்லி அரகண்டா நடந்துக்கிட்ட அ.தி.மு.க.. தரப்போட தொடர்பு வச்சிக்கலாமா? இனி அப்படி அவங்களோடு யாராவது தொடர்பு வச்சிக்கிட்டது தெரியவந்தால், அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னும் ஸ்டாலின் கறார்க் குரலில் சொல்லியிருக்கார். தேர்தல் பணிகள் பற்றியும் பேசியிருக்காரு. பூத் கமிட்டி அமைப்பதில் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். வாக்காளர்களை சரி பார்க்கும் போதும், டோர் பை டோர் போய் சரிபார்க்கணும்னும் அட்வைஸ் கொடுத்திருக்கார். கூட்டணி பற்றி அவர் ஏதாவது சொல்வார்ன்னு சிலர் எதிர்பார்க்க, அது பத்தி எதுவும் சொல்லாமல், தேர்தலுக்கு தி.மு.க.வினர் ரெடியாகணும்ங்கிறதில் மட்டுமே ஸ்டாலின் அக்கறை காட்டியிருக்கார்.''’

""கலைஞர் இல்லாத நிலையில் தி.மு.க.வின் முதல் முப்பெரும் விழா 15-ந் தேதி விழுப்புரத்தில் நடக்குதே?''’

""தி.மு.க.வின் முக்கிய விழான்னா, அது முப்பெரும் விழாதான். ஸ்டாலின் தலைவரான பிறகு அது இப்பதான் முதன்முதலா நடக்குது. கலைஞரின் கடைசி சொற்பொழிவு 2016-ல் நடந்த முப்பெரும் விழா சொற்பொழிவுதானே... அப்ப "நாளை நான் இல்லாமல் கூட போகலாம். ஆனால் தி.மு.க. என்கிற இயக்கத்தை யாராலும் சாய்க்கமுடியாது'ன்னு அவர் பேசியது இன்னும் காதுகள்ல இருக்கு. வன்னிய சமூகத்தைச் சேர்ந்த துரைமுருகன், தி.மு.க.வின் பொருளாளராக ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்னியர்களும் தலித் சமூகத்தினரும் அதிகமுள்ள விழுப்புரம் பகுதியில், இந்த இரண்டு சமூக மக்களையும் கவரணும்ங்கிற எதிர்பார்ப்பில் அங்கே முப்பெரும் விழா நடத்தப்படுது. இதை கவனித்த மு.க. அழகிரி, தன்னுடைய பேரணிக்கு வடமாவட்ட பகுதியில் இருந்து ஆட்களை அனுப்பி வச்ச எக்ஸ் எம்.எல்.ஏ., ஏ.ஜி.சம்பத்தின் அப்பா வான அண்ணா காலத்து அமைச்சர் ஏ.கோவிந்த சாமியின் நூற்றாண்டு விழாவை, அதே விழுப்புரத் தில் பிரமாண்டமா நடத்தி, ஸ்டாலினை திகைக்க வைக்கணும்னு வியூகம் வகுத்துக்கிட்டிருக்கார்.''’

communistyprotest

""இடைத் தேர்தல் ஆசையும் அழகிரிக்கு வந்துருக்குன்னு செய்தி வருதே?''’

""ஆமாங்க தலைவரே, அண்மையில் அழகிரி யின் மகன் துரை தயாநிதி, டி.டி.வி தினகரனைத் தொடர்புகொண்டு, "இடைத் தேர்தலில் திருவா ரூரில் எங்க அப்பா நின்னா, உங்க கட்சி ஆதரிக் குமா'ன்னு கேட்டிருக்காரு. இதைக்கேட்டதும் கொஞ்சம் திடுக்கிட்ட தினகரன், "யோசிச்சிச் சொல் றேன்'னு சொன்னார். பின் அவர் தரப்பிலிருந்து அழகிரி தரப்பைத் தொடர்பு கொண்டு, "திருவா ரூரில் அழகிரியை நாங்க ஆதரிச்சால், திருப்பரங்குன் றத்தில் எங்க அ.ம.மு.க. வேட்பாளரை அழகிரி ஆதரிப்பாரா'ன்னு பதிலுக்குக் கேட்டிருக்கு. இந்த டீல்தான் அழகிரி- டி.டி.வி. தரப்பில் ஓடிக்கிட்டிருக்கு.''

""அழகிரியைப் பொறுத்தவரைக் கும் தன்னோட வெற்றியைவிட, ஸ்டாலின் ஜெயிச்சிடக் கூடாதுங்கிற தில்தான் ரொம்ப கவனமா இருப்பாரு. இதை எப்படி ஸ்டாலின் எதிர் கொள்ளப் போறாராம்?''’’

""அறிவாலயத்தில் மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததும், இடைத்தேர்தல் குறித்து சம்பந்தப்பட்ட தொகுதிகளின் மா.செ.க்கள், பக்கத்து மாவட்ட செயலாளர்கள், சீனியர்கள் எல்லோருடனும் சீரியஸா டிஸ்கஸ் பண்ணியிருக் காரு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். கலைஞரின் தொகுதியான திருவாரூரில் தி.மு.க. சார்பில் எந்த அளவிற்குத் தேர்தல் வேலைகள் நடந்திருக்கு? அங்கே இன்னும் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டியிருக்கு, அ.தி.மு.க., டி.டி.வி. தரப்பு என்ன மாதிரி வேலை பார்க்குதுன்னு விசாரிச்சதோட, இடைத்தேர்தல் நடந்தால் அதிக ஓட்டுக்கள் வித்தி யாசத்தில் தொகுதியை எப்படித் தக்கவச்சிக்கிறதுன் னும் ஸ்டாலின் ஆலோசிச்சிருக்கார். இதுபோல தி.மு.க.வுக்கு சவாலா இருக்கிற திருப்பரங்குன்றம் தொகுதியில் எப்படி வேலை பார்ப்பது, என் னென்ன வியூகங்கள் வகுப்பதுன்னும் ஆலோசிக்கப் பட்டிருக்கு. அ.தி.முக., டி.டி.வி., அழகிரின்னு முத்தரப்பு சவாலையும் எதிர்கொள்ள ஸ்டாலின் ரெடியாகுறாரு.''’

""எதிரில் இருக்கிற கட்சிகளை எதிர்கொள்ளும் போது கூட்டணியில் உள்ள கட்சிகளை அரவணைச்சிக்கணுமே? '’

""அரசியலில் அது ஒரு முக்கியமான மூவ். பெட்ரோல் டீசல் உயர்வைக் கண்டிச்சி அகில இந்திய அளவில் ’பாரத் பந்த்தை நடத்தியது.. இந்த பந்த் தொடர்பாக ஆலோசிக்க 8-ந் தேதி காலை 11 மணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி, சத்தியமூர்த்தி பவனில், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதே நாளில் அதே நேரத்தில் தி.மு.க.வின் மா.செ.க்கள் எம்.எல். ஏ.க்கள், எம்.பிக்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தாலும், இதில் தி.மு.க. சார்பில் சீனியர் தலை வர்கள் யாராவது ஒருவரை ஸ்டாலின் அனுப்பி வைப்பார்ன்னு காங்கிரஸ் தரப்பு எதிர்பார்த்துச்சு. ஆனால், தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கிரிராஜன் மட்டுமே அதில் கலந்துக்கிட்டாராம். இது காங்கிரஸ் சைடில் அதிருப்தியை உண்டாக்க, காங்கிரஸில் இருக்கும் அனைத்து கோஷ்டித் தலை வர்களும் தங்கள் கட்சித் தலைமைக்குத் தங்கள் ஆதர வாளர்கள் மூலம் புகாரா அனுப்பியிருக்காங்களாம்.''’

""பந்த் அன்னைக்கு தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி களுக்கிடையிலான ஒத்துழைப்பு எப்படி இருந்ததாம்?''’’

""தி.மு.க.-காங்கிரஸ் மொத்தமா ஜெயிச்ச மாவட்டம் கன்னியாகுமரி. இதில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் ஜெயித்த 3 தொகுதிகளிலும் கடை கடையாக சென்று நோட்டீஸ் கொடுத்து பந்த்துக்கு ஆதரவு திரட்டினாங்க. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் போலீஸ் தயவுடன் கடைக்காரர்களை மிரட்டிய நிலையிலும் அந்த 3 தொகுதிகளுக்குட்பட்ட பல இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், தி.முக. வெற்றி பெற்ற நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மனாபுரம் 3 தொகுதிகளிலும் தி.மு.க.வினர் பெயரளவில்தான் ஆதரவு கொடுத்திருந்தாங்க. பந்த் அன்னைக்குக் கூட அவங்களை வெளியில் பார்க்க முடியலைன்னு காங்கிரஸ்காரங்க சொல்றாங்க. போக்குவரத்து தொழிற்சங்கத்தில் அதிகளவில் உள்ள தி.மு.க.வின் தொ.மு.ச.வினர் பஸ்களை எடுக்காமல் இருந்திருந்தாலே பந்த் பெரும் வெற்றி பெற்றிருக்கும்னு சொல்றாங்க.''’’

""ம்...''

""அதே நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகளும் குறைவாகத்தான் ஓடின. தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் செய்தாங்க. சி.பி.எம். பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன் இவங்க எல்லாம் சென்னையில் மறியல் செய்து கைதானாங்க.''’’

""அ.தி.மு.க.வுக்கும் சசிகலா தரப்புக்கும் இடையில் ஏதேதோ நடக்குது போலிருக்குதே?''’

""வெளியில் சண்டை போட்டுக்கிட்டாலும் உள்ளே இரு தரப்பிற்கும் இடையில் நெருக்கம் அதிகம் என்பது ஊரறிஞ்ச ரகசியம்தான். இந்த நிலையில், சசிகலாவின் மைண்ட் வாய்ஸில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன், "இடைத் தேர்தலில் அ.தி.மு.க தோற் றால், முதல்வர் எடப்பாடி கூண்டோடு எங்களுடன் இணையத் தயாரா'ன்னு பகிரங்கமாவே சவால் விட்டுக்கிட்டிருக்கார். இன்னொரு பக்கம், சசிகலாவின் வெல் விஷரான நாடாளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க., அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்குதுன்னு குரல் எழுப்பறார். அதேபோல், தினகரனுடன் முரண்பட்டுத் தனிக்கட்சி தொடங்கிய திவாகரன், மாவட்ட அமைச்சரான காமராஜ் மூலம் ஓ.பி.எஸ்.சோட நல்ல "டச்'சில் இருக்கார். இதனால் யாரை நம்பறதுன்னு தெரியாமல் இவர்களின் கீழ் இருக்கும் பிரமுகர்கள் குழம்பறாங்க. இந்த குழப்படிகளுக்கு நடுவில், சுகர் அதிகமானதால், சிறையில் இருக்கும் சசிகலா அங்கேயே இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவரை இளவரசியின் பிள்ளைகளான விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் பார்த்துட்டு வந்திருக்காங்க.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்பா. அ.தி.மு.க. எம்.பி.யான திருச்சி குமார், கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு எதிரா, தன் சார்பிலும் போட்டி நிர்வாகிகளை நியமிக்கிறாராம். இதனால் கூட்டுறவு சங்கத் தேர்தல் சமயத்தில் இவரை பல இடங்களிலும் கட்சிக்காரங்களே துரத்தியடிச்சிருக்காங்க. குறிப்பா, இவரது சொந்த ஊரான சாத்தனூர் கூட்டுறவு சங்கத் தேர்தலில், அ.தி.மு.க. ஜெயித்த நிலையிலும், இவரை ஊருக் குள் அ.தி.மு.க.வினர் நுழைய விடலையாம்.''’

alagiri
இதையும் படியுங்கள்
Subscribe