""ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் பா.ஜ.க., தன் மூவ்களில் தீவிரம் காட்டத் தொடங்கிடிச்சி.''
""இன்னமும் கட்சி தொடங்காத ரஜினியின் முதல்வர் வேட்பாளர்னு முன்னிறுத்தப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க.வில் சேர்ந்திருக்காரே?''
""தலைவரே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது தலைமையில்தான் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் களத்தைச் சந்திக்கனும்னு பா.ஜ.க. தலைமை விரும்புது. தமிழக பா.ஜ.க. தலைவராக முருகனும் எதிரணியில் இருக்கும் ஒரு சில அயிரை மீன்களைப் பிடிச்சதோட, பெரிய மீன்கள் வசப்படுமான்னு தூண்டிலும் கையுமா அலைகிறார். குறிப்பா தி.மு.க.வை ஜெயிக்க விடக்கூடாதுன்னு ப்ளான் பண்ணியிருக்கும் பா.ஜ.க., இப்பவும் ரஜினியைத்தான் எதிர்பார்க்குது.''
""ரஜினிதான் பா.ஜ.க. வலையில் சிக்காத மீனாகவே இருக்கிறாரே?''
""கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திச்சாலும், முதல்வர் வேட்பாளராக நான் இருக்கமாட்டேன்னு ரஜினி தெரிவிச்சிட்டார். அப்படின்னு ரஜினி யாரை அடையாளம் காட்டுவாருன்னு பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, ஐ.பி.எஸ். அதிகாரியாகி கர்நாடகாவில் சர்வீஸ் பண்ணி பெயர் வாங்கிட்டு, தற்சார்பு பொருளாதாரம்னு வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்க வந்து, ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டு போஸ் கொடுத் தாரு. இவர்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர்னு ப்ரமோட் பண்ண ஆரம்பிச்சாங்க. அவரைத்தான் அமித்ஷா விருப்பப்படி, தமிழக பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்திருக்காரு முருகன்.''
""நட்டாகிட்ட வாழ்த்து பெற்று, டெல்லியில் முரளிதர்ராவ் முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்த அண்ணாமலை, பாரதிராஜா கட்சியில் சேர்ந்திருக்கேன்னு சொல்லி சிரிப்பு மூட்டினாலும், அவருக்கு தேசிய அளவில் இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்படலாம்ன்னு டாக் அடிபடுது. அதேநேரத்தில், நீங்கதான் எங்க முதல்வர் வேட்பாளர்னு ரஜினிக்கு மறுபடியும் தூண்டில் வீச ஆரம்பிச்சிடிச்சி டெல்லி. வழக்கம்போல ரஜினி இன்னும் பிடி கொடுக்கலை.''
""ரஜினியை முதல்வராக்க நினைக்கும் பா.ஜ.க. தலைமையில் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. சம்மதிக்குமா?''
""பா.ஜ.க. அடிமைகள்னு அ.தி.மு.க.வை விமர்சிப்பதையே தொண்டர்கள் விரும்பலை. நிர்வாகிகள
""ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் பா.ஜ.க., தன் மூவ்களில் தீவிரம் காட்டத் தொடங்கிடிச்சி.''
""இன்னமும் கட்சி தொடங்காத ரஜினியின் முதல்வர் வேட்பாளர்னு முன்னிறுத்தப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க.வில் சேர்ந்திருக்காரே?''
""தலைவரே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது தலைமையில்தான் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் களத்தைச் சந்திக்கனும்னு பா.ஜ.க. தலைமை விரும்புது. தமிழக பா.ஜ.க. தலைவராக முருகனும் எதிரணியில் இருக்கும் ஒரு சில அயிரை மீன்களைப் பிடிச்சதோட, பெரிய மீன்கள் வசப்படுமான்னு தூண்டிலும் கையுமா அலைகிறார். குறிப்பா தி.மு.க.வை ஜெயிக்க விடக்கூடாதுன்னு ப்ளான் பண்ணியிருக்கும் பா.ஜ.க., இப்பவும் ரஜினியைத்தான் எதிர்பார்க்குது.''
""ரஜினிதான் பா.ஜ.க. வலையில் சிக்காத மீனாகவே இருக்கிறாரே?''
""கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திச்சாலும், முதல்வர் வேட்பாளராக நான் இருக்கமாட்டேன்னு ரஜினி தெரிவிச்சிட்டார். அப்படின்னு ரஜினி யாரை அடையாளம் காட்டுவாருன்னு பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, ஐ.பி.எஸ். அதிகாரியாகி கர்நாடகாவில் சர்வீஸ் பண்ணி பெயர் வாங்கிட்டு, தற்சார்பு பொருளாதாரம்னு வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்க வந்து, ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டு போஸ் கொடுத் தாரு. இவர்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர்னு ப்ரமோட் பண்ண ஆரம்பிச்சாங்க. அவரைத்தான் அமித்ஷா விருப்பப்படி, தமிழக பா.ஜ.க.வுக்கு கொண்டு வந்திருக்காரு முருகன்.''
""நட்டாகிட்ட வாழ்த்து பெற்று, டெல்லியில் முரளிதர்ராவ் முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்த அண்ணாமலை, பாரதிராஜா கட்சியில் சேர்ந்திருக்கேன்னு சொல்லி சிரிப்பு மூட்டினாலும், அவருக்கு தேசிய அளவில் இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்படலாம்ன்னு டாக் அடிபடுது. அதேநேரத்தில், நீங்கதான் எங்க முதல்வர் வேட்பாளர்னு ரஜினிக்கு மறுபடியும் தூண்டில் வீச ஆரம்பிச்சிடிச்சி டெல்லி. வழக்கம்போல ரஜினி இன்னும் பிடி கொடுக்கலை.''
""ரஜினியை முதல்வராக்க நினைக்கும் பா.ஜ.க. தலைமையில் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. சம்மதிக்குமா?''
""பா.ஜ.க. அடிமைகள்னு அ.தி.மு.க.வை விமர்சிப்பதையே தொண்டர்கள் விரும்பலை. நிர்வாகிகளும் தலைமைகிட்ட இதை வலியுறுத்துறாங்க. அதனாலதான், பா.ஜ.க.வுக்கு எதிரா அ.தி.மு.க சைடிலிருந்து கருத்துகள் வருது. பா.ஜ.க.வோ ரஜினி சம்மதிச்சிட்டா, அ.தி.மு.க. இல்லாமல் ஒரு அணியை கட்டமைச்சிடலாம்னு நினைக்குது. கூட்டணியில் உள்ள பா.ம.க.வைப் பொறுத்தவரை, மத்திய மந்திரி சபையில் அன்புமணியை அமைச்சராக்கினால், பா.ஜ.க. தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதில் ஆட்சேபனை இல்லைன்னு சொல்லிடுச்சாம்.''
""தே.மு.தி.க. வேற ரூட்டில் போகுது போலிருக்கே?''
""ஆமாங்க தலைவரே, ஆகஸ்ட் 25-ந் தேதி கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடனும்னு முதலில் பிரேமலதா விரும்பினார். கொரோனாவின் தீவிரம் பயமுறுத்துவதால் சிம்பிளா அவர் பிறந்தநாளை கொண்டாடி முடிச்சிட்டாங்க. கட்சி மா.செ.க்களிடம், அ.தி.முக. கூட்டணியில் தொடர்வது கடினம்னு சொன்ன பிரேமலதா, பத்திரிகையாளர்களிடம், "நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருந் தாலும், வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடனும்னு எங்கள் கட்சியினர் வலியுறுத்துகிறார்கள். இது குறித்து விரைவில் பொதுக்குழு, செயற்குழுவில் முடிவெடுப்போம்'னு முடிச்சிக்கிட்டார்.''
""தே.மு.தி.க. எந்தக் கூட்டணி பக்கம் நகரும்?''
""பா.ஜ.க.விடம் பேசுனப்ப, அ.தி.மு.க. இல்லைன்னா தே.மு. தி.க. தலைமையில் கூட்டணி அமைக்கணும்னு பிரேமலதா வலியுறுத்தியிருக்காரு. இதற்கிடையில், ஆகஸ்ட் முதல் வாரம் தி.மு.க. சைடிலிருந்து தே.மு.தி.க.வுக்கு தூது விட்டிருக்காங்க. அப்ப பிரேமலதா, 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி யில் எங்களுக்கு ஜெயலலிதா 41 இடங்களை ஒதுக்கினார். அந்த அளவுக்கு நீங்களும் சீட் ஒதுக்குவீங்களான்னு பேரத்தை ஆரம்பிச்சிருக்காரு. இதைக்கேட்டு தி.மு.க. தலைமை ஷாக் ஆயிடுச்சு. ஓட்டுக் கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு, உங்களுக்கு அதிகபட்சம் எங்களால் 13 சீட்டுகள் தான் தரமுடியும்னு தி.மு.க. சொல்லிடிச்சாம். அப்-செட்டான பிரேமலதா, தே.மு.தி.க. அதிக இடங்களில் ஜெயிக்கிற மாதிரி எந்தக் கூட்டணியில் எத்தனை சீட் வாங்குவதுன்னு யோசிக்க ஆரம் பிச்சிருக்காரு. உரிய சீட் தரப்படும்னு பா.ஜ.க.வும் சிக்னல் கொடுத்திருக்குதாம். பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தங்கள் அணியில் சசிகலாவையும் கொண்டுவர விரும்புவதால், கர்நாடக அரசிடம் அவர் விடுதலை நிலவரம் பற்றி டெல்லி ஆலோசிச்சிக்கிட்டு இருக்குதாம்.''’’
""சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக, அவரது முன்னாள் உதவியாளர் குடும்பம் கொடிபிடிக்க ஆரம்பிக்குதாமே?''
""விஜயபாஸ்கரிடம் தனி உதவியாளராக இருந்த வெங்கடேசன், கடந்த ஜனவரியில் கார் விபத்தில் சிக்கி இறந்து போய்ட்டார். இவரது அம்மா இந்திரா, பரம்பூர் ஊரட்சிமன்றத் தலைவராக இருக்கிறார். அமைச்சர் தரப்பிலிருந்து வெங்கடேசன் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லையாம். இருந்தும் அமைச்சரின் ஆட்கள் தொடர்ந்து அவர் வீட்டிற்குச் சென்று, வெங்கடேசனின் அப்பா ராமச்சந்திரனிடம் போய், வெங்கடேசன் பெயரில் நிறைய சொத்துக்கள் வாங்கிப் போடப்பட்டிருக்கு. அந்த டாக்குமெண்டுகளை எல்லாம் எங்களிடம் கொடுத்திடுங்கன்னு மிரட்டல் தொனியில் கேட்டிருக்காங்க. வெங்க டேசன் அப்பாவோ, அதுபற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்ல, மிரட்டல் தீவிரமாகி இருக்கு. இதனால் பயந்து போன வெங்கடேசன் குடும்பத்தினர், முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து முறையிட, அவரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டிருக்கிறார்கள். எடப்பாடியோ, இந்தத் தகராறில் நான் தலையிட விரும்பலைன்னு சந்திக்க மறுக்கிறாராம். அதனால் வெங்கடேசன் குடும்பத்தினர் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து முறையிடத் தயாராகி வருகிறார்களாம்.''
""இன்னொரு அமைச்சர் அரசுக்கு சொந்தமான ஓட்டலை தனியாருக்குத் தாரை வார்த்து லாபம் பார்க்கத் துடிக்கிறாராமே?''
""ஆமாங்க தலைவரே, மத்திய அரசு, தொலை தொடர்புத்துறை தொடங்கி விமான நிலையம், ரயில் வரை அனைத்தையும் தனியார் மயமாக்கி, லாபம் பார்ப்பதைப் பார்த்து ஜொள் விடும், தமிழக அமைச்சர்களும் தனியார்மய விவகாரத்தில் வரிந்துகட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். குறிப்பாக மகாபலிபுரத்தில் இருக்கும் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான ஓட்டலை, தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுக்கும் முயற்சி நடக்குது. இதை முறைப்படி டெண்டர் மூலம் விடாமல், ஆளுங்கட்சிப் புள்ளிகளில் யார் தங்களை வெயிட்டாக’ கவனிக்கிறார்களோ, அவர் களிடம் ஓட்டலை ஒப்படைப்பார்களாம். இதற்காகத் துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் ஆட்கள், டீலிங்குகளில் படு தீவிரமாக இறங்கியிருக் கிறார்களாம்.''
""இ.பாஸ். விவகாரத்தில் மத் திய அரசு கொடுக்கும் நெருக்கடி எடப்பாடியை டென்ஷனாக்கி இருக்குதாமே?''
""ஆமாங்க தலைவரே. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ.பாஸ். வழங்கப்படும் என்றாலும், அதற்கான நடைமுறைகள் தொடரும்ன்னு எடப்பாடி அறிவிச்சிருந்தார். ஆனால் மத்திய அரசோ, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்தே ஆகனும்ன்னு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்பல்லா மூலம், தமிழக அரசுக்கு கறார் கடிதம் அனுப்பியிருக்கு. இதனால் எரிச்சலான எடப்பாடி, தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் இது பற்றி விவாதிச்சிருக்கார். அப்ப, பொதுவா, மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை மாநில அரசுகளுக்கு அனுப்பும் போது, சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகளே அதுபற்றி முடிவெடுக்கலாம்னுதான் சொல்லும். அப்படி இருக்க இதில் மட்டும் ஏன் இவ்வளவு கறார் காட்டறாங்கன்னு கோபப்பட்டிருக்கார். அடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கான்ஃப்ரன்ஸ் மூலம் அவர் ஆலோசனை செய்ய, அவங்க எல்லோருமே, இ-பாஸ் முறையை ரத்து செய்தால் நிலைமை மோசமாகும்னு சொல்லியிருக்காங்க. மீண்டும் 29-ந் தேதி கலெக்டர்களுடன் இது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க இருக்கிறாராம்.''
""மத்திய அரசும் எடப்பாடி அரசு மீது, ஏக எரிச்சலில் இருக்குதாமே?''
""ஆமாங்க தலைவரே, எடப்பாடி அரசுக்கு எதிராக, டெல்லியில் ஏகப்பட்ட புகார்கள் குவியுதாம். அதில் முக்கியமானவற்றை, எடப்பாடி அரசுக்கே அனுப்பி, உடனடியாக நடவடிக்கை எடுங்கள்னு பிரதமர் அலுவலகமே உத்தரவிடுது. இருந்தும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லைன்னு கோபம். உதரணமாக, கடந்த ஜூன் 16-ந் தேதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி என்பவர், ஊரடங்கு நேரத்தில் குழந்தைக்குப் பால் வாங்க டூவீலரில் போயிருக்கார். அப்ப, அவரை வழிமறித்த புளியந்தோப்பு காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா, கடுமையாகத் திட்டியதோடு, அவரது டூ வீலர் சாவியைக் கூவத்தில் வீசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதில் டென்ஷனான வழக்கறிஞர் பாலாஜி, முதல்வர் தொடங்கி மத்திய உள்துறை அமைச்சகம் வரை புகார் அனுப்பினார். அந்தப் புகாரை உள்துறை அமைச்சகம், பணியாளர் துறை மூலம் தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு அனுப்பி, இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கு. ஆனால், எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். அதனால் ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு மறுபடியும் தலைமைச் செயலாளரைக் கோபத்தோடு கேள்வி கேட்டிருக்கு டெல்லி.''
""தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில் லைன்னும் டெல்லி கோபப்படுதாமே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, வடமாவட்டங்களில் கட்சி பிரமுகர்களின் தயவில் ரவுடிகள் இருப்பது போல், தென்மாவட்டங்களில் சாதி சார்ந்த ரவுடிகள் கோலோச்சறாங்களாம். இப்படிப்பட்ட சாதி ரீதியிலான ரவுடிகளுக்கு அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி களும், அமைச்சர்கள் வரையிலான அரசியல்வாதிகளும் பாதுகாப்பு அரணாக இருக்காங்களாம். இதனால் இப்போது வெடிகுண்டு கலாச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம்ன்னு நிலைமை மோசமாகி வருதாம். தமிழகத்தின் இந்த டேஞ்சரஸ் தட்பவெப்ப நிலை பற்றிய தகவல் டெல்லியின் கவனத்துக்குப் போயிருக்கு. இந்த நிலையில்தான் தலைமைச்செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. திரிபாதி, முதலமைச்சரின் செயலாளர் செந்தில்குமார் எல்லாரும் புதன்கிழமை மாலை டெல்லி கிளம்ப பரபரப்பு ஏற்பட்டது.''
""எதற்காக இந்த அவசர அழைப்பு?''
""கோவிட் 19 நிலவரம், கொரோனா நிதி முறைகேடுகள் இவை பற்றியும் சட்டமன்றத் தேர்தல் வியூகம் பற்றியும்தான் இந்த மீட்டிங் என்று தகவல் வந்தது. அதோடு, மேலும் சில அம்சங்களும் சேர்ந்திடிச்சி. தமிழகத்தில் இ-பாஸ் முறை, செப்டம்பர் வரை லாக்டவுனை தொடர்வது, ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பணி நியமனம், பணி மூப்பு, நேரடி ஐ.ஏ.எஸ்-நியமன ஐ.ஏ.எஸ் இடையே ஏற்படும் சிக்கல்கள் எல்லாத்தையும் டிஸ்கஸ் செய்யத்தான் இந்தப் பயணம்னு கோட்டை வட்டாரம் சொன்னது.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூத னன் ரொம்ப நாளா உடல் நலம் சரியில்லாமல் இருக்கார். அவருக்கு பதில், இன்னொரு சீனியரை அந்தப் பதவியில் உட்கார வைக்க நினைக்கிறார் எடப்பாடி. சீனியர்களான தம்பிதுரை, பொன்னையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இப்பவே காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாங்களாம்.''