"ஹலோ தலைவரே, நிவர் புயல் நிலவரங்கள் ரொம்ப கவலையளிக்குது. பாதுகாப்பும் நிவாரண மும்தான் மக்களை காப்பாத்தும்.''
""24-ந் தேதி ராஜ்பவனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போயிட்டு வந்தது, முதல்வர் ஏரியாவில் புயலைக் கிளப்பிடிச்சாமே?''
""உண்மைதாங்க தலைவரே, கடந்த சில நாட்களாவே முதல்வர் எடப்பாடி சைடிலிருந்து அப்பாயிண்ட்மென்ட் கேட்டும், ராஜ்பவன் ஓகே பண்ணலை. அதே நேரத்தில், 23ந்தேதி ஸ்டாலின் சைடிலிருந்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்க, மறுநாள் காலையிலே வரச் சொல்லிட்டாங்க. கவர்னர் வழக்கத்துக்கு மாறான உற்சாகத்தோடு ஸ்டாலினையும் தி.மு.க. சீனியர்களையும் கவர்னர் வரவேற்றிருக்கிறார்.''
""7 பேர் விடுதலை பற்றி கவர்னர் என்ன சொன்னாராம்?''
""சி.பி.ஐ. க்ளியரன்ஸ், உச்சநீதிமன்ற அதிருப்தி, உடனடி முடிவெடுக்க க்ரீன் சிக்னல் எல்லாத்தையும் சுட்டிக்காட்டி இனியும் தாமதிக்காமல் சட்டப்படியும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும், ஆயுள் தண்டனையை இருமடங்குக்கு மேல் அனுபவித்துவரும் அவர் களை விடுதலை செய்யனும்னு கவர்னரிடம் விரிவாவே எடுத்துச் சொல்லியிருக்கார் ஸ்டாலின். அவரிடம் கவர்னரும், "நானாக தாமதிக்கலை. மத்திய உள்துறைதான் இதில் அவசரம் காட்ட வேண்டாம்னு சொல்லியிருந்தது. இதுபத்தி ஃபைனலா ஒரு லீகல் ஆலோசனையை விரை வில் நடத்தி, நல்ல முடிவை விரைவில் எடுப்பேன்'னு சொல்லியிருக்காரு.’’
""ஸ்டாலினுக்கு கிடைச்ச ராஜ்பவன் அப்பாயிண்ட்மெண்ட் எடப்பாடிக்கு ஏன் கிடைக்கலை?''
""பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர், கவர்னர்தான். இருந்தாலும் பல்கலைக் கழகங்கள்- கல்லூரிகள் சம்பந்தப்பட்ட 7.5% உள்ஒதுக்கீடு, அரியர்ஸ் தேர்வு ஆல் பாஸ், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன் இதில் தன்னை மீறி எடப்பாடி அதிரடியா செயல்பட்டதை கவர்னர் ரசிக்கலை. அந்த அதிருப்திக்கான பழிதீர்த்தல் தான் இதுவாம். இருந்தாலும், ஸ்டாலின் வந்துபோன பிறகு, முதல்வர் அலுவலகம் மீண்டும் கவர்னர் மாளிகையிடம் அப்பாயின்ட்மெண்டைக் கேட்டிருக்கு.''
""’தமிழக விசிட் பற்றி பிரதமரிடம் அமித்ஷா பேசிட்டாராமா?''
""டெல்லிக்கு ரிட்டன் ஆனதும், ரஜினி தரப்பிடமும் அழகிரி தரப்பிடமும் அமித்ஷா பேசிட்டுத்தான் பிரதமரை சந்திச்சாருன்னு தலை நகரத் தகவல்கள் சொல்லுது. ரஜினியை நேரில் சந்திக்க முடியலைன்னாலும், அவர் அரசியலில் ஆர்வமா இருப்பது தெரிஞ்சதுன்னும், டெல்லிக்கு வந்து சந்திப்பதா சொல்லியிருக்காருன்னும் தெரிவிச்சாராம். அழகிரி சைடிலும் ஆஃபரை யோசிப்பதா சொல்லியிருப்பதாகவும், ஓவைசி மூலம் 25 தொகுதிகளில் தி.மு.க ஓட்டுகளைப் பிரிக்க சாதகமான ப்ளான் இருப்பதாகவும் மோடியிடம் அமித்ஷா சொல்லியிருக்காரு. அதோடு, அரசு விழா மேடையிலேயே கூட்டணி பற்றி அ.தி.மு.க தலைமையை அறிவிக்க வச்சதையும் சாதனையா சொன்ன அமித்ஷா, தி.மு.க.விடம் காங்கிரஸ் வாங்கும் தொகுதிக்கு குறையாம அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. சீட் வாங்கணும்னும், 35-க்கும் குறைவான சீட்டுகள்ன்னு அ.தி.மு.க. சொல்லுமானால், உறுதியாக வெற்றி கிடைக்கக் கூடிய தொகுதிகளை வாங்கிடணும். நாம் எதைச் சொன்னாலும் ஏற்கக் கூடிய நிலையில்தான் அ.தி.மு.க. இருக்குன்னும் சொல்லியிருக்கிறாராம்.''
""இந்த விசுவாசத்துக்கு பரிசு காத்திருக்குமே?''
""ஆமாங்க தலைவரே, வரும் 14-ஆம் தேதி மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் போது, அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தகுந்த இடம் தருவோம். குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு கேபினட் பதவியையும் 2 இணையமைச்சர் பதவியையும் ஒதுக்குவோம்ன்னு சொல்லியிருக்கார். இந்தத் தகவலை எடப்பாடியிடமும் அமித்ஷா சொல்லியிருக்காரு.''
""யார் அந்த மூணு பேரு?''
""அ.தி.மு.கவுக்கு ஒரு கேபினட் பதவின்னதும், அதைத் தன் மகன் ரவீந்திரநாத்துக்குதான் ஒதுக்கனும்னு ஓ.பி.எஸ். அழுத்தம் கொடுக்க ஆரம் பிச்சிட்டாராம். தம்பிதுரையோ, ரவீந்திரநாத் முதல் முறையா இப்பதான் பார்லிமெண்டுக்குள்ளேயே காலை வச்சிருக்கார். நானோ, நாடாளுமன்றத் துணை சபாநாயகராக இருந்தவன். டெல்லி அரசியல் எனக்கு அத்துப்படி. அதனால் கேபினட் பதவியை எனக்குன்னு சொல்லுங்க என்கிறாராம். இன்னொரு சீனியரான வைத்திலிங்கம் எம்.பி.யும், "எனக்குத்தான் கேபினட் பதவி'ன்னு கொடி பிடிக்கிறாராம். அதேபோல் மத்திய இணையமைச்சர் பதவிக்கும் முட்டல் மோதல் அதிகமாயிடிச்சி.''
""தமிழக பா.ஜ.க.வினர் வியூகம் என்ன?''
""21-ந் தேதி சென்னை வந்த அமித்ஷா, அன்று மாலை பா.ஜ.க. பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டப்ப, சட்டமன்றத்துக்குள் பா.ஜ.க நுழைவதற்கான வழி சொல்லுங்கன்னு கேட்டிருக்காரு. தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், "இந்தியாவின் விடிவெள்ளின்னா அது நீங்களும் மோடியும்தான்'னு பாராட்டிப் புகழ, அமித்ஷா டன் வந்திருந்த பா.ஜ.க.வின் அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ், எதுக்கு திராவிடக் கட்சிகள் பாணியில் தனிமனிதத் துதி பாடுறீங்கன்னு கோபப்பட்டிருக்கார். மற்ற நிர்வாகிகளோ, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காதது, ஊழல் அமைச்சர்கள்னு ரெய்டு நடத்திட்டு அவங்களோடவே கூட்டணி வச்சிருக்கிறது இதையெல்லாம் சுட்டிக்காட்டி தனி அணி பற்றிப் பேச, அமித்ஷா டென்ஷனாயிட்டாராம். தமிழகத்தில் கட்சி வளர்ச்சி எந்தளவு இருக்கு? இங்கே எத்தனை கோஷ்டிகள் இருக்குன்னு எனக்குத் தெரியும்னு செமையா டோஸ் விட்டதோடு, கூட்டணி விசயத்தை நாங்க பார்த்துக்கறோம்னு சொல்லியிருக்காரு.''
""தி.மு.க.வுக்கு எதிரா திரும்பவும் 2 ஜி வழக்கு சீரியஸாகும்னு டெல்லித் தரப்பு சொல்லுதே?''’
""2.ஜி வழக்கு விடு தலையை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, 30-ந் தேதி ஓய்வுபெறுகிறார். இந்த நிலையில், எங்கள் வழக்கில் எங்கள் மேல் தொடுக்கப்பட்ட சட் டப் பிரிவுகள், 2018-ல் நடந்த சட்டத் திருத்தத்தின் போது நீக்கப்பட்டு விட்டதால், இந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல் லன்னு தி.மு.க.தரப்பு மனு செய்தது. ஆனால் நீதிபதியோ, அதைத் தள்ளுபடி செய்துவிட்டார். இதில் மேல்முறையீடு செய்தால், அது விசாரணைக்கு வருவதற்குள் தேர்தலே வந்துடும்ன்னு தி.மு.க. நினைக்கிது. அதே சமயம் டிசம்பரில் புதிய நீதிபதியால் விசாரிக்கப்பட இருக்கும் 2 ஜி வழக்கில், தி.மு.க.வுக்கு எதிராகத் தீர்ப்பை வாங்கி, அதைத் தேர்தல் களத்தில் அதுக்கு எதிரான ஆயுதமாய் ஆக்கிடனும்ன்னு பா.ஜ.க. தீவிரமா காய் நகர்த்துது.''
""23-ந் தேதி நடந்த தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவில் என்ன பேசினாங்களாம்?''
""தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைதான். பா.ஜ.க.வின் வேல் யாத்திரை மீது போலித்தனமான நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு மறைமுக ஆதரவைத் தருகிற எடப்பாடி அரசு, உதயநிதியின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் நடத்தும் பிரச்சார டூரை மட்டும் கடுமையாக முடக்கப் பார்க்குது. உதயநிதியை தினம் தினம் கைது செய்து, நள்ளிரவுக்குப் பிறகுதான் விடுதலை செய்யுது. எடப்பாடி அரசின் இந்த அராஜகப் போக்கை அனுமதிக்கக் கூடாதுன்னு பேசிய எல்லோருமே சொல்லி, கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்காங்க.''
""கூட்டத்தில் கனிமொழியின் தலை தென் படாததால், அவர் கூட்டத்தைப் புறக்கணிச் சிட்டாருன்னும் தகவல் பரவுச்சே?''
""தென்மண்டல தி.மு.க. பொறுப்பாளர் பதவியை கனிமொழி ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்தப் பதவி, மாஜி மந்திரி எ.வ.வேலுவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. அதனால் கொஞ்சம் அப்செட்டில் இருந்த கனி மொழி, அந்தக் கூட்டத்தை புறக்கணிச்சிட்டதா, தி.மு.க. சீனியர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.''
""இது தொடர்பாக நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். கனிமொழி தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட் டத்தில் கலந்துக்காததற்குக் காரணமே வேறு. டெல்லியில் இருக்கும் கனிமொழி, தான் தலைவராக இருக்கும் நடாளுமன்ற வேதியியல் நிலைக்குழு கூட்டத்தை அதே 23-ந் தேதி நடத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். அதனால்தான் அவர் அறிவாலயக் கூட்டத்தில் கலந்துக்கலை. இது தொடர்பான தனது நிலையை அவர் ஸ்டாலினிடமே முறைப்படி தெரித்துவிட்டாராம்.''