ஹலோ... தமிழகத்தில் இருக்கும் திராவிட இயக்கங்கள்மீது பிரதமர் மோடி கோபமா இருக்காராமே?''
""உண்மைதாங்க தலைவரே, திராவிட இயக்கங்களால்தான் தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியலைங்கிறது மோடி யின் ஆதங்கம். அதில் சமீபகாலமா திருக்குறளையும் தமிழின் பெருமையையும் பற்றி பல இடங்களிலும், தான் சுட்டிக்காட்டிப் பாராட்டியும் கூட, தமிழகத்தில் நாளுக்கு நாள் தனது இமேஜ் டேமேஜ் ஆவதால் அவரது எரிச்சல் அதிகமாகி இருக்கு. இதுக்கு அ.தி.மு.க.வும் அனுசரணையா இருக்குதுன்னு மோடி ரொம்பவே கோபமடைஞ்சிருக்காராம். போதாக்குறைக்கு செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள், திராவிடக்கட்சிகளை நம்பிதான் பா.ஜ.க. இருக்கு துன்னும், கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை தாங்கும்னும் சொன்ன தோட, மோடிக்கு இதெல்லாம் தெரியும்னு நக்கலடிச்சதும் அவர் காதுவரை போய், அவரை சூடாக்கியிருக்கு.''
""ஆமாம்பா, இதையெல்லாம் தமிழக பா.ஜ.க.வினரிடம் கோபமாச் சுட்டிக்காட்டிய மோடி, அவர்களுக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட் ஒன்றையும் கொடுத்திருக்காராமே?''
""அதுவும் உண்மை தாங்க தலைவரே, தன் இமேஜையும் தமிழக பா.ஜ.க.வின் இமேஜையும் தூக்கி நிறுத்த விரும்பும் மோடி, தி.மு.க., அ.திமு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் மக்களுக்கு அறி முகமான ஒரு பிரபலத்தை பா.ஜ.க.வுக்குக் கொண்டு வந்து, அவர்கள் வாயாலேயே அவர்கள் சார்ந்திருந்த திரா விடக்கட்சியை விமர்சிக்க வைக்கனும்ன்னு ஆசைப் படறார். பா.ஜ.க.வின் தமிழகப் புள்ளிகளும் வலை வீச ஆரம்பிச்சிருக்காங்க. தி.மு.க சைடில் டி.ஆர். பாலு மாட்டுவாருன்னு எதிர்பார்க்குறாங்களாம். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை துணை முதல்வர் ஓ.பி.எஸ். தங்களுக்கு தோதாக இருப்பார்னு நினைக்கிறாங்க. ஓ.பி.எஸ் மீது அ.தி.மு.க.வினருக்கும் அப்படியான ஒரு பார்வை இருக்குது...''
""ஓஹோ...''
""இது எப்படி உடனடிச் சாத்தியம்னு தமிழக பா.ஜ.க. பிரமுகர்கள் திகைக்க, எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. கர்நாடக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நம்மை நம்பி வந்தார். அவருக்கு நாம் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பதவி கொடுக்கலையா? அதுபோல் அவர்கள் வந்தால், நமது கேபினட் கூட இளகி இடம் கொடுக்கும்னும் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்காராம். இதனால் எப்படிப்பட்ட வலையை விரிப்பதுன்னு டீப் டிஸ்கஷனில் இருக்கு பா.ஜ.க. தரப்பு. இரண்டு திராவிட கட்சிகளிலிருந்தும் ஏதாவது ஒரு வி.ஐ.பி.யையாவது தூக்கணும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டராம். கு.க.செல்வம் மாதிரி மக்களுக்கு தெரியாத ஆட்கள் வேணாம்னும் சொல்லப்பட்டிருக்கு. இது சம்பந்தமா டெல்லியில் இருந்து போன்கால் வந்துக்கிட்டே இருக்குதாம்.''
""அதுசரிப்பா, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் இறுதிச் சடங்கு விவகாரத்தையும் பா.ஜ.க. சர்ச்சையாக்குதே?''
""ஆமாங்க தலைவரே, கொரோனா தொற்றால் மரணமடைபவர்களின் உடலை, அவர்கள் குடும்பத்தினரிடம் சுகாதாரத்துறை ஒபடைப்பதில்லை. தனது பொறுப்பிலேயே அந்த உடலை அடக்கம் செய்துவிடும். ஆனால் கொரோனாவால் அட்மிட்டான ஒருவர் இறந்த பிறகு, அவருக்கு பாசிட்டிவ்வா- நெகட்டிவ்வான்னு சர்டிபிகேட் கொடுப்பதில் நிறைய குளறுபடிகள் இப்பவும் தொடருது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வசந்தகுமாரின் உடலை ஒப்படைக்கும்போது நெகட்டிவ் ரிசல்ட்டுன்னுதான் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கு. இதைத் தொடர்ந்து வசந்தகுமாரின் உடல் அவரது சென்னை வீட்டிலும், காமராஜர் அரங்கிலும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, கடைசியாக அவரின் சொந்த ஊருக்கே கொண்டுபோய் இறுதிச் சடங்கையும் நடத்திவிட்டனர். பா.ஜக. தரப்போ, எந்த விதிமுறைகளின் கீழ் வசந்தகுமாரின் இறுதிச் சடங்கில் இவ்வளவு பெரிய கூட்டத்தை அனுமதித்தீர்கள், அங்கே வந்தவர்களுக்கு கொரோனா பரவாதுன்னு என்ன நிச்சயம் என்று எடப்பாடி அரசு மீது புகார் கேள்விகளை எழுப்பி வருகிறது.’''
""ஆளுந்தரப்பில் என்ன சொல்றாங்க?''
""கொரோனாத் தொற்று என்பது கடவுளின் செயல்னு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாரே, நாங்க என்ன செய்யமுடியும்னு நழுவுற மாதிரி சொல்றாங்க. அதேநேரத்தில், நிர்மலா சீதாராமனின் கமெண்ட், பா.ஜ.க.வுக்குள் ளேயே சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்குங்க தலைவரே... நாட்டின் பொருளாதாரச் சூழலும் நிதி நிலைமையும் மோசமா இருக்கிற நேரத்தில் நிதியமைச்சர் இப்படி சொன்னதன்மூலம், கடவுளையே குற்றவாளி ஆக்கிட்டார் நிர்மலா சீதாராமன்னு அவர் தரப்பிலேயே பலரும் விமர்சனம் செய்யறாங்க.''
""பா.ஜ.க. தலைவர்களில் எப்போதும் தனி ஆவர்த்தனம் செய்யும் சுப்பிரமணியசாமியும் கண்டிச்சிருந்தாரே?''
""ஆமாங்க தலைவரே.. கொரோனா கடவுளின் செயல்னா, இப்போது தவறான முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் கடவுளின் செயல்தானான்னு கேள்வி எழுப்பி, மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை சந்தடி சாக்கில் போட்டுத் தாக்கிவிட்டார். சாமிக்கு, எப்படியாவது மோடியின் கேபினட் ரயில்ல, தானும் ஒரு பெட்டியாக ஆகிடனும்கிறது தீராத ஆசை. இவரது குணாம்சங்களைத் தெரிஞ்சிவச்சிருக்கும் மோடி, அதைக் கண்டுக்கவே இல்லையாம். அந்தக் கோபம்தான் இப்ப நிர்மலா சீதாராமனின் கமெண்ட்டை காரணமா வச்சி வெடிச்சிருக்கு.''
""நீதித்துறை சார்பான சலசலப்பும் தமி ழகத்தில் தெரியுதே?''
""ஆமாங்க தலைவரே, உச்சநீதிமன்ற நீதிபதியா, தமிழகத்தைச் சேர்ந்த இருவரை அமரவைக்கனும்ங்கிற முயற்சியில் சிலர் தீவிரமாக் காய் நகர்த்தறாங்க. குறிப்பா அ.தி.மு.க. அனுதாபியான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் மகனான கிருஷ்ணன் வேணுகோபாலை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்கனும்னு அதற்கான கொலீஜியத்துக்கு பிரஷர் போய்க்கிட்டிருக்கு. அதேபோல், ராமஜென்ம பூமி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரனின் மகனான சத்தீஷ் பராசரனுக்காகவும் இப்படிப் பட்ட காய் நகர்த்தல்களில் ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு ஈடுபட்டிருக்குதாம்.''
""கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க எடப்பாடி அரசு மும்முரம் காட்டுதே?''
""கொரோனாவின் அதிதீவிர பரவலுக்குக் காரணம் என்கிற முத்திரையோடு இழுத்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட், திருமலிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு மழை நீரும் சேறும் இடையூறு செய்ததால் தங்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் தரப்பு மனம் குமுறியது. இதைத் தொடர்ந்து வரும் 28-ந் தேதி மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும்னு எடப்பாடி அரசு அறிவித்திருக்கிறது. அதே நேரம் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரும் பகுதியை, அமைச்சர் வேலுமணி தரப்பு ரகசியமாக டீலிங் பேசி அர்பசர்ஷா & சுமித் ஸ்பெஷாலிட்டீஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, அந்த நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களை வேலையில் அமர்த்தும் முயற்சியில் விறுவிறுப்பாக இறங்கியிருக்கு. கோயம்பேடு மார்க்கெட் தாரை வார்க்கப்பட்டதை அறிந்த வியாபாரிகள் அதிர்ச்சியில் இருக்காங்க.''
""நாம பேசி ராங்காலில் வந்த செய்தி பற்றி இரண்டு பேர்கிட்டேயிருந்து விளக்கம் வந்திருக்குப்பா. கொரோனா சிறப்பு அதிகாரி டி.பி.யாதவ் தஞ்சை பகுதிக்கு விசிட் அடித்தது பற்றிய செய்தியில் அவர் சம்பந்தப்பட்ட கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை ரிடையர்டு போலீஸ் அதிகாரி கணேசமூர்த்தி கவனிக்கிறதா சொல்லியிருந்ததை கணேசமூர்த்தி அடியோடு மறுக்கிறார். தனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார். அதேபோல, திருச்சியில் கொரோனா பணியில் உள்ள டாக்டர்-நர்ஸ்களுக்கு உணவு வழங்கப்படுவதில் போலி பில்கள் தயாரித்த தாசில்தாரின் செயலை ஏற்க மறுத்த நோடல் அதிகாரி சித்ராவிடம், திருச்சி கலெக்டர் சிவராஜ், நம்பியார் தொனியில் பேசியதா வெளியான செய்தியை மறுத்து விளக்கம் கொடுக்கும் கலெக்டர் சிவராஜ், திருச்சி மாவட்டத்தில் கொரோனா பணிகள் முறையாக நடைபெறுகிறது. நோடல் அதிகாரியிடம் அப்படி பேச வேண்டிய சூழலே ஏற்படலைன்னு சொல்றார்.''
""நானும் ஒரு முக்கியமா தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக முதல்வராக இருந்த ஜெ. அப்பல்லோவில் சசிகலா தரப்பால் மாதக் கணக்கில் மர்மமாக வைக்கப்பட்டிருந்த நிலை யில் 2016 டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மர்ம மரணம் குறித்து விசாரிக்க அ.தி.மு.க. அரசு 2017 செப்டம்பரில் ஆறுமுகசாமி கமிஷனை அமைத்தது. அது 7 முறைக்கு மேல் கால நீட்டிப்பை வாங்கிய நிலையில், இதன் விசாரணைக்கு அப்பல்லோ தரப்பு உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடையை வாங்கியது. தற்போது இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும், அப்படி விசாரிக்கும் போது சசிகலாவும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் வேதா என்கிற தாமோதரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, சசி தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கார்.