ருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும், பதிவுத்துறை அலுவலகங்களில் ரெய்டு நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் பதிவாளர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்திய பாடில்லை.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பதிவுத்துறை அலுவலகங்களுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கள் சொத்தை விற்கவும், வாங்கவும் வருகிறார்கள். இப்படி வரக்கூடிய மக்கள் உட்காருவதற்கு சரிவர இருக்கை கூட இல்லாததால் அலுவலகம் வெளியே உள்ள திட்டுகளில் உட்கார்ந்தும், வெயிலில் நின்றும் வருகிறார்கள்.

அதுபோல் மூன்று பதிவாளர் அலு வலக நடைபாதைகளிலும் மக்கள் ரேசன் கடைகளில் நிற்பதுபோல் நிற்கவேண்டிய சூழ்நிலையில் இருந்துவருகிறார்கள். இதையெல்லாம் சார்பதிவாளர்கள் உக்கரபாண்டியன், ராஜேஷ்கண்ணா, குணசேகரன் ஆகியோர் கண்டுகொள்ளாமல் எந்தெந்த பத்திர எழுத்தாளர்கள் எத்தனை பத்திரத்தை கொண்டுவந்து எழுதுவதன் மூலம் எவ்வளவு வருமானம் வரும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதுடன் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் வருமானம் பார்த்துவருகிறார்கள்.

ss

Advertisment

"என்னுடைய அப்பாவிற்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஐம்பது சென்ட் நிலத்தை வறுமையின் காரணமாக வேறொரு நபருக்கு விற்க முடிவுசெய்து அதற்கான வாரிசுச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பட்டா, சிட்டா, மூலப்பத்திரம் உட்பட அனைத்து சான்றிதழ்களையும் வைத்து பத்திரம் எழுதுபவர்களிடம் பத்திரம் எழுதிய பின்பு அதை பதிவுசெய்ய சார்பதிவாளர் குணசேக ரனிடம் கொடுத்தோம். தோட்டத்தை விற்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தது. அப்படியிருக்கும் போது யு.டி.ஆர். பட்டாவிற்கு முந்தைய ஆவணங்களை கொண்டுவந்தால்தான் பதிய முடியும் என்று சொன்னார். அது ஐம்பது வருடங்களுக்கு முந்தைய ஆவணங்கள். அதையெல்லாம் தேடமுடியாது வேண்டு மென்றால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியும்கூட "நாங்கள் பார்க்கமுடியாது நீங்கள்தான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் மூன்று லட்சம் கொடுங்கள், பதிவு செய்து கொடுக்கிறேன்' என்று வெளிப்படையாகவே அந்த சார்பதிவாளர் கேட்டார். வேறு வழியில்லாமல் அந்த சார்பதிவாளர் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு என் நிலத்தை பதிவு செய்து கொடுத்திருக்கிறேன். இப்படி பதிவாளர்களே நேரடியாக என்னைப்போல் பலரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் பதிவுசெய்து கொடுக் கிறார்கள்'' என்றார் சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குமார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜிடம் கேட்டபோது, "எனக்கு தானமாக 263 சென்ட் இடத்தை எங்க அப்பா சுப்பையா கடந்த 2005-ல் பாகப்பிரிவினை மூலம் எழுதிக்கொடுத்திருந்தார். இந்த நிலையில் எனது அண்ணன் முருகேசன் எனது இடத்திலுள்ள 133.63 சதுர அடியை போலிப் பத்திரம் போட்டு 2023-ல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் பதிவாளர் ராஜேஸ்வரி பதிவு செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் எனது இடம் நாகல்நாயக்கன்பட்டி பதிவாளர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது மாற்றி பதிவுசெய்து மோசடிசெய்திருப்பது தெரியவே உடனே முதல்வருக்கு புகார் மனு அனுப்பி அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பத்திரம் கொடுப்பதைத் தடுத்துவிட்டேன்.

அதைத் தொடர்ந்து அந்த பத்திரத்தை கேன்சல் செய்துவிடுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தியும்கூட இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறார்கள். அதோடு போலிப் பத்திரம் எழுதிக்கொடுத்த பதிவாளர் ராஜேஸ்வரி மேல் துறைரீதியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் அந்த பதிவாளர் டெம்ப்ரவரியாக பணியில் இருந்தபோது இப்படி எழுதிக்கொடுத் திருக்கிறார். அப்படிப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் எனது நண்பர் என்.எஸ். நகரில் வீடு வாங்கியிருக்கிறார். அதற்கு முத்திரை தீர்வுக் கட்டணம் மற்றும் கட்டடத்திற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பதிவு செய்ய சார்பதிவாளர் உக்கரபாண்டியனிடம் கொடுத்த போது ஆவணங்கள் சரியாக இருந்தும்கூட பத்தாயிரம் கொடுங்கள் என்று வெளிப்படை யாகவே கேட்டிருக்கிறார். அவர்கள் தர மறுத்துவிட்டனர். அதற்காக ஒரு வாரத்திற்குள் ஆய்வுசெய்து பத்திரத்தைக் கொடுக்கவேண்டிய சார்பதிவாளர் ஒரு மாதம் கழித்துதான் ஆய்வு செய்து கொடுத்திருக்கிறார். அதுவும் காருக்கு ஐநூறு, பியூனுக்கு ஐநூறு, பதிவாளருக்கு ஆயிரம் என இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இப்படி எந்த வழியிலும் வருமானம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பதிவாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கேட்கப் போனால் நானும் பல லட்சம் கொடுத்துத்தான் இங்கு வந்திருக்கிறேன். அதை இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசியும் வருகிறார்கள் என்றார்.

Advertisment

"இங்குள்ள பத்திர எழுத்தாளர்களிடம் பத்திரம் எழுதச் சென்றாலே இடத் திற்கு உண்டான முத்திரைத்தாள் பீஸ், கம்ப்யூட்டர் பீஸ், எழுத்துக் கூலி இப்படியெல் லாம் எழுதி கடைசியில் அலுவலக பீஸ் என ஐயாயிரம் ரூபாய் என்று சொல்வார்கள். அது எதற்கு என்று கேட்டால், அலுவலகத்திலுள்ள சார்பதிவாளர் முதல் பியூன் வரை மாமூல் கொடுப்பதற்காகத்தான் உங்களிடம் வாங்குகிறோம். இந்த பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் பத்திரப் பதிவின்போது அதை இதை சொல்லி பத்திரப் பதிவை தள்ளிப் போட்டுவிடுவார்கள். இலட்சக்கணக்கில் இடம் வாங்கக்கூடிய நீங்கள் இதையெல்லாம் பெரிது படுத்தவேண்டாம் என்று சொல்வார்கள். அத னால்தான் அலுவலக பீஸ் என்று சார்பதி வாளர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுக்கிறோம் என்று வெளிப்படை யாகவே லிஸ்ட் போட்டு ஐயாயிரம் முதல் பல ஆயிரங்களையும் அதற்குக் கூடுதலாக வாங்கித்தான் பதிவுக்கே அனுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பத்திரப் பதிவாளர்களே, பதிவாளர்களுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்துவருகிறார்கள்.

இப்படி வாங்கக் கூடிய பணத்தை மாலையில் அந்த அந்த எழுத்தாளர்கள், பதிவாளர்களை தேடிப் போய், இன்றைக்கு என்னுடைய பத்திரம் இத்தனைக்கு இவ்வளவு ரூபாய் என்றும் கப்பம் கட்டிவிட்டு வருகிறார்கள்'' என்றார் சமூக ஆர்வலரான தமிழ்ச்செல்வன்.

இதுசம்பந்தமாக திண்டுக்கல் டவுன், பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத் தலைவர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, "மாவட்ட அளவில் 80-க்கு மேற்பட்டோர் பத்திரம் எழுதுகிறார்கள். திண்டுக்கல் டவுனில் மட்டும் 30 பேர் வரை நகல் எழுத்தாளராக இருந்துவரு கிறார்கள். இவர்கள் முறையாகத்தான் பத்திரப் பதிவு செய்து கொடுத்து வருகிறார்கள். நீங்கள் சொல்வது போல் பதிவாளர்களுக்கு ஒருசிலர் பணம் வாங்கிக்கொடுப்பதாக புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அனைவரிடமும் அப்படி யெல்லாம் வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். நீங்கள் சொல்வதுபோல் யாராவது ஒருவர் வாங்கிக் கொடுக்கிறார் என்றால் அவர்களிடம் சொல்லிவிடுகிறோம். எங்களைப் பொறுத்த வரை அலுவலக பீஸ் என்று யாரும் வாங் கிக்கொடுப்பதில்லை. சில வக்கீல்களிடம் கையெ ழுத்து வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதத் தெரி யாதவர்கள்கூட பத்திரப் பதிவு செய்துவரு கிறார்கள். அதுபோல் புரோக்கர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு. அதனால் பத்திரம் எழுதும்போது எங்களையும் கைரேகை பதிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறோம்'' என்று கூறினார்.

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் அவலங்களுக்கு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதுதான் திண்டுக்கல் மற்றும் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாக உள்ளது.

-சக்தி

திண்டுக்கல்லின் மூன்று பத்திரப்பதிவு சார்பு அலுவலகத்திலும் லஞ்சம் வாங்கி வருவதால், அதை மறைப்பதற்காக போலி பத்திரிகையாளர்களுக்கு மாமூல் கொடுத்துவரு கிறார்கள். மாமூல் கொடுப்பதற்கும் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு நோட் போட்டு இருக் கிறார்கள். அதில் எந்த பத்திரிகை என்று எழுதி அதில் செல் நம்பருடன் கையெழுத்து போட வேண்டும். அப்படி போட்டுக் கொடுத்த உட னேயே பணத்தை லஞ்சமாக பிச்சைக்காரர் களுக்கு தூக்கி எறிவதுபோல் அந்த போலி நிருபர்களுக்கு விசிறியடிக்கிறார்கள்.!