"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கு, சசிகலா கொடுத்த வாக்குமூலம் புதிய பலத்தைக் கொடுத்திருக்கு.''”
"ஆமாம்பா, அதைப்பற்றி நம்ம நக்கீரனில் வந்திருக்கும் கட்டுரையைப் படித்தேன். கூடுதல் செய்திகள் இருக்குதா?''”
"தலைவரே.. எடப்பாடிக்கு தெரி யாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப் பில்லைன்னு விசா ரணை டீமிடம் சசிகலா சொல்லி யிருக்கிறார். அதனால் சேலம் இளங்கோவனுக் கும் எடப்பாடிக்கும் சம்மன் அனுப்பப்படும்னு சொல்றாங்க.''”
"2012லில் நடந்த திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிட்டதா போலீஸ் சொல்லி யிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராம ஜெயம், 2012 மார்ச்சில் ஒரு அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்குப் போன போது அதிரடியாகக் கடத்தப்பட்டு, படுகொடூர மாகக் கொல்லப்பட்டார். ஜெ. ஆட்சியில் நடந்த இந்தக் கொலை பற்றியும் அதன் பின்னணியையும் நக்கீரன் பல முறை எழுதியிருக்கு. "அந்த வழக்கில் குற்ற வாளிகளை நெருங்கிவிட்டோம்' என்று நீதிமன்றத்தில் போலீஸ் சொல்லி இருக்குது. தொடர் விசாரணையில், சென்னை ரவுடியான சி.டி.மணி, திருச்சி ரவுடி சுந்தர பாண்டி, பந்தல் மாமுண்டி, இப்ப எம்.எல்.ஏ.வா இருக்கும் ஒருவர், கும்பகோணத்தை சேர்ந்த கணேசன் என 5 பேரை தங்கள் வளையத்தில் வைத்திருக்குது போலீஸ். இதில் தனிப்பட்ட பகை, தொழில் பகை, அரசியல் பகைன்னு 3 கோணங்களும் இருக்குது. ஜெ. ஆட்சியில் அதிகார மையமா இருந்த குடும்பத்தின் மீதும் போலீசின் கவனம் திரும்பியிருக்குது. கொலை தொடர்பா தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் வெகுமதின்னு அறிவித்து, போன் நம்பரும் கொடுத்திருக்கு போலீஸ்.''’
"தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் தொடர்பான பரபரப்பு அதிகமாக இருக்குதே?''”
"தி.மு.க.வில், பேரூர், நகரம், ஒன்றியம் அளவிலான தேர்தல் பணிகள் சூடு பிடிச்சிருக்கு. இதில் வெற்றி பெறும் நிர்வாகிகள்தான், மா.செ.க்களைத் தேர்வு செய்வார்கள். அதனால் சிட்டிங் மா.செ.க் களாக இருப்பவர்கள், தங்கள் ஆதரவாளர் களை இதில் ஜெயிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். கட்சித் தலைவரான ஸ்டாலினோ, சில மா.செ.க்களை மாற்றணும்னு நினைக்கிறாராம். குறிப்பா, சென்னையில் உள்ள 6 மா.செ.க்களில் 4 பேரை மாற்றலாம் என்பது அவர் விருப்பமாம். 3 சட்டமன்றத்துக்கு ஒரு மா.செ. என்ற ரீதியில், தி.மு.க.வின் மாவட்ட எல்லைகளை வரையறுக்கவும் ஸ்டாலின் திட்டமிடுகிறாராம்.''”
"காவல்துறையிலும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர நினைக்கிறாரே?''”
"ஆமாங்க தலை வரே, பிக்பாஸ் நடிகை ஒருவருடன் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூத்தடித்தது பற்றி சமீபத்தில் நாம் பேசிக்கிட்டோம். இது உள்பட இன்னும் சில விவரங்களும் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குப் போக, அவர் முழு ரிப்போர்ட் கேட்டு வாங்கியிருக்கிறாராம். உயரதிகாரிகள் மட்டத்தில் 4 கோஷ்டிகளாக செயல்படுவது முதல்வரின் கவனத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. இதனால் கடுப்பான ஸ்டாலின், காவல்துறையில் இருக்கும் இந்தத் தாறுமாறுப் போக்குகளை எப்படி சரிசெய்வது என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம்.''”
"பா.ஜ.க. தரப்பு மோடியின் புகழ் பாட சில அதிரடி முடிவுகளை எடுக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பிச்சிருக்கார். அதாவது, ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டம் எதுவாக இருந்தாலும், அதில் மாநில முதல்வர்களின் படத்துக்கு இணையாக பிரதமர் மோடியின், படத்தையும் சேர்த்து விளம்பரப் படுத்தச் செய்யுங்கள். அதற்கான அலுவலகங் களிலும் மோடியின் படத்தை வையுங்கள்னு அறிவுறுத்தியிருக்கிறார். இதைக்கேட்ட உடனே, தமிழக பா.ஜ.க.வினர், ஒன்றிய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எது எது?ன்னு லிஸ்ட் எடுப்பதோடு, மோடியின் படங்களை ஆங்காங்கே வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதனால், திருச்சி போன்ற இடங்களில் தி.மு.க.வினருக்கும் பா.ஜ.க.வுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டு, வழக்குப் பதிவாகியிருக்குது.''”
"ஒன்றிய அரசே மாநில அரசுகளின் வரி வருவாயில்தானே திட்டங்களை அறிவிக்குது. அப்படின்னா மோடி திட்டங்களில் எல்லா மாநிலத்து முதல்வர்களின் படங்களையும் மாட்டுவாங்களா?''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை மாநகராட்சியில் நிர்வாக அலுவலராக இருக்கும் குணசேகர னிடமிருந்து அலுவலர்களின் பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து கோப்புகளும் எதிர்பார்ப்பை நிறைவேற்றி னால்தான் நகருமாம். கமிஷனருக்குப் போகும் புகார் கடிதங்களையும், அவரே மடக்கிவிடு கிறாராம். ஒரே இடத்தில் 20, 25 ஆண்டு களாக இப்படிப்பட்டவர்கள் நீடிப்பதால்தான் அதீத தைரியமாம். இடமாற்றம் செய்தாலும் சிட்டிக்குள்ளேதான் மாற்றுகிறார்களாம். தொலைதூரத்துக்கு மாற்றணும்னு ரிப்பன் பில்டிங்கிலிருந்தே குரல் கேட்குது.''”