திராவிட இயக்கத்தின் முன்னத்தி ஏர்களில் ஒருவரான சிவகங்கை ராமச்சந்திரனாரின் நினைவுப் பூங்கா தற்போது பராமரிப்பில்லாமல் படுமோச மான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தன்மானத்துடன் வாழவேண்டுமெனக் குரல் கொடுத் தவரின் பெயரிலான பூங்கா... பேரறிஞர் அண்ணா வால் திறந்துவைக்கப்பட்ட பூங்கா... தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக, போதை ஆசாமிகளாலும், மது பாட்டில்களாலும் நிறைந் திருக்கிறது. தற்போது தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், இந்த பூங்கா புதுப்பிக்கப்பட, பராமரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கிறார்கள்.

tt

மேலும், "திராவிட இயக்கத்தில் சுயமரியாதை குடும்பத்தில் பிறந்து பகுத்தறிவுக் கொள்கைகளை பார் புகழ வளர்த்த குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அந்த வகையில் சிவகங்கை ராமச்சந்திரனாரும் ஒருவர்.

இயக்கப் பணியே தனது தலையாய பணி என அமைச்சரவையிலும் இடம்பெற மறுத்தவர்.' எனக் கலைஞரால் பெருமை யாகப் பேசப்பட்ட சிவகங்கை ராமச்சந்திரனாரின் பெயரில் துவங்கப்பட்ட அரசு மருத்துவமனைக்கு தற்பொழுது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை என்றே பெயர் உள்ளது. மீண்டும் அவரது பெயரையே அம்மருத்துவமனைக்கு சூட்டி, அவ ரது சமூகப்பணிகளைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

tt"தன்னெழுச்சியான சுதந்திரப் போராட்டத்தில் பரங்கியர்களைச் சாய்த்ததில் என்றுமே சிவகங்கை சீமைக்கு தனி இடம் உண்டு. அதுபோல் சுயமரி யாதை இயக்க வரலாற்றில் சிவகங்கை சீமைக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. வீரத்தையும், சுயமரியாதையையும் பிரிக்க இயலாத சிவகங்கையில், 16-9-1884ஆம் நாளில் பிறந்தவர் ராமச்சந்திரனார். துவக்கத்தில் திருவனந்தபுரம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், தொடர்ந்து திருச்சியில் இளங்கலை பட்டம் பயின்றுள்ளார். அந்தக் காலத்தில் வழக்கறிஞர் பட்டம் படிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. எனினும் விடாமுயற்சியாக சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சிவகங்கையின் முதல் வழக்கறிஞர் எனும் பெருமையை பெற்றார்'' எனப் பெருமிதத்துடன் நினைவுகூர்கின்றனர் சிவகங்கையைச் சேர்ந்த பெரியவர்கள்.

வழக்கறிஞராகப் பட்டம் பெற்ற ராமச்சந்திரனார், இரண்டு ஆண்டுகள் மதுரையில் வழக்கறிஞர் தொழிலைத் திறம்பட நடத்தி னாலும், சுயமரியாதைக் கொள்கையால் சமூகத்தில் மாற்றம் செய்திட வேண்டுமென்ற எண்ணத்தோடு மதுரையிலிருந்து சிவகங்கைக்கு மாற்ற லானார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கொள் கையில் நின்றதோடு, உற்ற தோழனாகவும் விளங்கிய ராமச்சந்திரன், சாதியால் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைய சாதி ஒழிப்பில் முனைப்போடு, திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகச் செயல்படத் தொடங்கினார்.

ஆசிரியர் இளங்கோ கூறுகையில், "தான் கொண்ட கொள்கைக்காக ஆதிதிராவிட மாநாடு நடத்தி சொந்த சாதியினரால் வன்முறைக்கு ஆளானவர் ராமச்சந்திரனார். செங்கல்பட்டில் நடை பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டிலே, "சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்' என பெரியாரின் பாதை யில் தம் சாதிப் பெயரை நீக்கி சாதியைத் துறந்தவர் அவர். அத்துடன் இல்லாமல், "தன்னுடைய நிலம் ஆண்டைகளால் அபகரிக்கப்பட்டது. அதை மீட்டுத் தாருங்கள்' எனக் காலில் விழுந்த ஒருவரைத் தாங்கிப் பிடித்து, "எனக்கு வக்கீல் பீஸெல்லாம் வேண்டாம். அதற்குப் பதில், மேல்சட்டை போடாமல் இருக்கின்ற உன் பையன் தொடங்கி அனை வருக்கும் மேல்சட்டை அணிய வை! கல்வி கற்க அனுப்பி வை!' என்று, தன்னைப் பார்க்கவரும் அனைவரிடமும் தன்னுடைய கொள்கை களைப் பதியவைத்தவர். 49 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த அவருக்கு, சிவகங்கையில் சிலையுடன் கூடிய பூங்காவும், அவரது சாதி ஒழிப்பு தன்மான வரலாற்றை நினைவில் வைக்கும் விதமாக, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு ராமச்சந்திரனார் மருத்துவமனை எனப் பெயரும் சூட்டப்பட்டது. காலப்போக்கில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாறியுள்ளது. எனினும் மீண்டும்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ராமச்சந்திர னார் பெயர் சூட்டப்பட வேண்டுமென்பது அனைவரின் ஆசை'' என்றார்.

Advertisment

tttt

"முனுசாமி தலைமை யிலான நீதிக்கட்சி அமைச்சரவையில் நீங்களும் அமைச்சராகப் பங்கேற்க வேண்டுமென ராமச்சந்திரனா ருக்கு அழைப்பு வந்தபோது, எனக்கு இன்னும் ஆற்றவேண்டிய கடமை இருக்கின்றது என, வந்த வாய்ப்பை நாசூக்காக மறுத்தவர். கல்வியறிவு இருந்தால்தான் தலைமுறை மாறுமெனத் தம் முடைய சொந்தச் செலவில் இரவு நேரப்பள்ளிகளைத் துவக் கிய சாதனையாளர் ராமச் சந்திரனார். சிவகங்கை மன்னர் சத்திரம் மாணவர் விடுதியிலும், பிற நகரங்களில் உள்ள மாண வர் விடுதிகளிலும் குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே சேர்க்கப் பட்டதை எதிர்த்துப் போராடி, அதே மாணவர் விடுதிகளில் பிற் பட்ட, பட்டியலின மாணாக்கர் களையும் சேர்ப்பித்தவர் அவர்.

அவரது தன்னலமில்லாத செயல்பாட்டினை அனைவரும் அறிய வேண்டுமாயின் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அவரது பெயரைச் சூட்டிப் பெருமை சேர்த்திட வேண்டும்'' என்கிறார் புத்தகக் கடை முருகன். இன்றைய அரசுதான் இதற்கான பணிகளைச் செய்து, சுயமரியாதைப் போராளியைப் பெருமைப்படுத்த வேண்டும்.