"ஹலோ தலைவரே, சட்டமன்ற பட்ஜெட் மானியக் கூட்டத் தொடர் 35 நாட்களுக்குப் பின் முடிவடைந்திருக்கு. தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் களைகட்டியிருக்கு.''

"தி.மு.க. எதிர்க்கட்சியா இருக்கும்போதே உள்கட்சித் தேர்தலில் போட்டா போட்டி, அடிதடி, தேர்தல் பொறுப்பாளர்களின் பாரபட்சம்னு புகார்கள் குவியும். இப்ப ஆளுங்கட்சியாச்சே.. ஏகத்துக்கும் புகார்கள் குவியுது. கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தணும்னு குரல்கள் ஒலிக்குது.''

"தலைவரே.. சொந்தக் கட்சியிலும் பதவிக்குப் போட்டி, ஆளுங்கட்சியா இருந்தும் அதிகாரிகள், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் செல்வாக்குன்னு நிலைமை இருப்பதைப் பற்றி தி.மு.க.வினரிடம் நிறைய குமுறல்கள். கடந்த ஆட்சியில் அரசுத் தேர்வாணைய சேர்மனாக அமர்த்தப்பட்ட சசிகலாவின் உறவினரான பாலச்சந்திரனும், 2 உறுப்பினர்களும் தொடர்ந்துகொண்டிருக்காங்க. அதுபோலவே தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக கடந்த ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்.சே இப்பவும் தொடர்கிறார்.''”

"போன அ.தி.மு.க. ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை, முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற முன்வந்திருக்கிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தொழில் நிறுவனங்களுக்கான உரிமங்களின் காலக்கெடுவை ஓராண்டில் இருந்து 5 ஆண்டுக்கு நீட்டிக்கணும்னு, நீண்டநாளாக வணிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கிடையே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி, இது தொடர்பான தீர்மானத்தை 2014-ல் மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றி, அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவுக்கு அனுப்பினார். அதை ஜெ.’ கிடப்பில் போட, இ.பி.எஸ். ஆட்சியிலும் கண்டுக்கலை. தி.மு.க. ஆட்சி வந்ததும், இந்த தீர்மானம் அத்தியாவசியமானதுன்னு தெரிஞ்சிக்கிட்ட ஸ்டாலின், சமீபத்தில் திருச்சியில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில், தொழில் நிறுவன உரிமங்களின் கால நீட்டிப்பை ஏற்பதாக அறி வித்துவிட்டார். இப்ப, இது தொடர்பான அரசாணை ரெடியாவதன் மூலம், வணிகர்களின் மகிழ்ச்சியைக் கொள்முதல் செய்திருக்கிறார் ஸ்டாலின்.''”

"அ.தி.மு.க. பொதுக்குழு தள்ளிப்போகுதே?''”

Advertisment

rang

"இம்மாதம் 15-ந் தேதி வாக்கில் நடத்தப்படுவதாக இருந்த அ.தி.மு.க. பொதுக் குழுவை, கொஞ்ச நாளைக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள். காரணம், எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இடையில் மீண்டும் பவர் யுத்தம் ஆரம்பித்துவிட்டதாம். எடப்பாடியிடம் அண்மை யில் பேசிய ஓ.பி.எஸ்., வீட்டில் எனக்கு நிலைமை சரியில்லை. எனக்கு தெம்பாக இருந்த என் மனைவியும் இறந்து போய்விட்ட நிலையில், என் இரண்டு மகன்களும் மோசமாக அடித்துக்கொள்கிறார்கள். அதே போல் என் தம்பி ராஜா என்னோடு தகராறு செய்துகொண்டு இருக் கிறான். நிம்மதி இழந்திருக்கும் எனக்கு, கட்சியில் முக்கிய பதவியைக் கொடுத்து, என்னை இன்னும் ஒரு முறை மட்டும் முதல்வர் வேட்பாள ராக அறிவியுங்கள். எனக்கும் வய தாகிவிட்டது என்று சொல்லி இருக் கிறார். இதைக்கேட்டு எரிச்சலான எடப்பாடியோ, நான் நினைச்சா பொதுக்குழுவையே தள்ளிவச்சிடு வேன்னு சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாராம். இதுதான் பொதுக்குழு தள்ளிப் போனதற்கான காரணமாம்.''”

"ராஜ்யசபா சீட்டுக்கு அ.தி.மு.க. தலை மையே ரேட் பிக்ஸ் பண்ணியிருக்கே?''

"ஆமாங்க தலைவரே, தமிழகத் தில் அண்மையில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக் கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் 2 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றக் கூடிய வாய்ப்பு இருப்பதால், அக்கட்சியில் சீட்டுக்கான போட்டி அதிகரித்திருக்கிறது. சீனியர்கள் பலரும் முண்டியடித்துவரும் நிலையில், மாஜி மந்திரிகளான சி.வி.சண்முகம், கோகுல இந்திரா, மணிகண்டன் ஆகிய மூவரும் சீட்டைக் கேட்டு எடப்பாடிக்கு பிரஷர் கொடுத்திருக்காங்க. எடப்பாடியோ கொஞ்சமும் அசராமல், "50 சி' தயார் செய்யற வங்களுக்குத்தான் என்னால் ராஜ்யசபா பதவியைக் கொடுக்க முடியும். ஏன்னா, ராஜ்யசபா வுக்கு நிற்பவர்களுக்கு வாக் களிக்கும் நம் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும், தலா "ஒரு சி' கொடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.''”

"தினகரன்மீது சசிகலா கடும் எரிச்சலில் இருக்கிறாரே?''”

’"தினகரன் மீதான அதிருப்தியால் அ.ம.மு.க.வின் தலைமை நிலையச் செயலாள ராக இருந்த உமாதேவன், சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார். அதன்பின் சசி கலாவை சந்தித்த உமாதேவன், ’அ.தி.மு.க.வை உங்களால் எந்தக் காலத்திலும் கைப்பற்ற முடியாதுன்னு தினகரன் சொல் கிறார். அந்த உண்மையைக் கூட நீங்கள் உணரவில்லை என்றும் பகிரங்கமாகவே அவர் உங்களை விமர்சிக்கிறார். அதேபோல் அ.தி.மு.க. தலைவர்களை பலவீனப்படுத்தி, அக்கட்சியைக் கைப்பற்றும் சக்தி தனக்கு மட்டுமே இருப்பதாகவும் தினகரன் சுய தம்பட்டம் அடிக்கிறார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதை அமைதியாகக் கேட்டுக் கொண்ட அவர், கெடுவான் கேடு நினைப்பான்னு சொல்வாங்க. அதைத்தான் தினகரனின் நடவடிக்கையில் பார்க்க முடியுதுன்னு தினகரன் மீதான எரிச்சலை வெளிப்படுத்தினாராம்.''”

"’முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஒரு நட்சத்திர ஓட்டலில் தனியா கூட்டம் நடத்தியிருக்காங்களே?''

"ஆமாங்க தலைவரே, ஜெ.வின் 1991-96 ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறையின் சேர்மனாக இருந்த தியானேஸ்வரன், பலகோடி மதிப்பிலான ஊழல் விவகாரங்களில் சிக்கினார். கைது நடவடிக்கைக்கும் ஆளானார். அந்த தியானேஸ்வரன் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை அவர் தரப்பு, கடந்த 9-ஆம் தேதி, சென்னை அடையாறு கிரௌன் பிளாசா ஓட்டலில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில்தான் பணி ஓய்வுபெற்ற அவர் சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அதிகாரிகளும், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் கலந்துக்கிட்டாங்க. இதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், அங்கே தலைகாட்டவில்லையாம். இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள், அரசியல் அதிகாரம் பெறும் வகையில் சசிகலாவைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் உருகி இருக்கிறார்கள்.”

ff

"பா.ஜ.க. அண்ணாமலை மீது ஒரு பத்திரிகையாளர் மிரட்டல் புகாரை எழுப்பியிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் மாநில பா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப் பட்டனர். இதில் தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி குறித்து நமது நக்கீரனி லும் எழுதியிருக்கிறோம். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் விமர்சித்த நிருபர் சண்முகசுந்தரத்தின் மீது கோபமான அண்ணா மலை, அவரை அழைத்துக் கடுமையாக மிரட்டிய தாக சண்முகசுந்தரம் பா.ஜ.க. தலைமையிடம் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் ‘"நீ என்ன கிறிஸ்டினா? உன் மனைவி எந்த சர்ச்சுக்குப் போகி றார்.? இதேபோல் எங்களை விமர்சித்த உங்கள் பத்திரிகையில் இருந்த ஒருவரை, நாங்கள் துரத்தி யடித்தோம். இப்ப நீ எதிர்க்கிறாயா? உன்னையும் தொலைத்துவிடுவோம்'’என்றெல்லாம் மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார். அத்துடன், அண்ணாமலை தனது அலுவலகத்தில் மாட்டப் பட்டிருந்த அம்பேத்கர் படத்தை அப்புறப்படுத்தி யிருப்பதும் கட்சிக்குள் சர்ச்சையாகியிருக்கு.''”

"அண்மையில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 52-ஆவது ஆண்டு விழாவில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையி லேயே, பா.ஜ.க. அண்ணாமலையின் தலையில் ஆடிட்டர் குருமூர்த்தி குட்டு வைத்திருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, துக்ளக் இதழின் 52-ஆவது ஆண்டு நிறைவு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. அதில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, இந்தி திணிப்பை தமிழக பா.ஜ.க. அனுமதிக்காதுன்னு மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்லிவருகிறார். இது தவறு. இந்தியை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான், அவர் இனி சொல்லணும்னு பகிரங்க மாகவே அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்தார். அதற்குக் காரணம், அண்மைக் காலமாக சசிகலாவின் ஆதரவாளராக மாறியிருக்கும் குருமூர்த்தி, சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைத்து, அவருக்கு முக்கியத்துவம் தர நினைக்கிறார். ஆனால் அண்ணாமலையோ, சசிகலாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். இதனால்தான் ஆடிட்டருக்கு அண்ணாமலை மீது கோபமாம்.''”

ff

"நானும் இது தொடர்பா ஒரு முக்கியமான செய்தியைச் சொல்றேன். துக்ளக் விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாக முண்டியடிச்சிருக்காங்க. டெல்லியை நிர்மலா சீதாராமன் தொடர்புகொள்ள, அங்கிருந்து வந்த சிக்னல்படி, சந்திக்க நேரமில்லைன்னு இருவரிடமும் கைவிரித்து விட்டாராம்.''”