"ஹலோ தலைவரே, அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகள் தீயா பரவுதே...''”

"ஆமாப்பா.. அதிலும் உதயநிதி மந்திரியாவாருன்னு சமூக வலைத்தளங்களில் வைரலாகுது.''

"ஆமாங்க தலை வரே, உதயநிதி அமைச்ச ராகணும்னு இளைஞ ரணியிலும் அவரது குடும்ப உறவுகளிடமும் எதிர்பார்ப்பு இருக்குது. முதல்வர் ஸ்டாலின் நிதானமா இருந்தார். ஓராண்டு ஆட்சியில் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் மக்களிடம் செல்வாக்கு, உதயநிதி செயல்பாடுகளும் நல்ல முறையில் இருந்ததால் அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படலாம்னு பேச்சு பரவியிருக்கு. உள்ளாட்சித் துறை, விளையாட்டுத் துறைன்னு இலாகாக் களையும் சேர்த்தே செய்திகள் கசியுது.''

"கால்நடைத் துறையில் பணி நியமனத்துக்காக நடத்தப்பட்ட நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டிருக்குதே?''”

Advertisment

rang

"தமிழக அரசின் கால்நடைத் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த வாரம் நேர்காணல் நடந்தது. அனைத்து இடங்களுக்கும் தி.மு.க.வில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் தொடங்கி, ஒன்றிய செயலாளர்கள் வரை பலரும் சிபாரிசு செய்திருந்தனர். இதற்கென ரேட்டும் ஃபிக்ஸ் செய்யப்பட்ட சர்ச்சை பற்றி நாமும் ஏற்கனவே பேசிக்கிட்டோம். விவகாரம் பெரிதாகத் தொடங்கியதை அறிந்த சம்பந்தப்பட்ட நபர்கள் பதட்ட மாயிட்டாங்க. இது தெரிந்ததும், நேர்காணலை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து விட்டார் துறையின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ் ணன்.''”

"சென்னை சிட்டி கமிஷனர் சங்கர் ஜிவால் பற்றிய பரபரப்பான செய்திகள் அடிபடுதே?''”

"அவர் ஏற்கனவே டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில், மாநிலங் களின் காவல்துறை நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஜாயின்ட் செகரட்டரி யாக இருந்தவர். அதனால் இந்துத்வா மனநிலையில் செயல்படுவாராம். தமிழக போலீஸ் பற்றி ஒன்றிய அரசுக்கு நோட் போட்டுக்கொண்டு வருவதாகவும் சர்ச்சை உண்டு. தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து, பட்டனப்பிரவேசம் செய்வதற்கு மயிலாடுதுறை ஆட்சியர் தடைவிதித்துள்ள நிலையில், இது பற்றியும் ஒன்றிய அரசுக்கு இவர் மூலம் ரிப்போர்ட் போயிருக்குதாம். இது முதல்வர்வரை போக, விரைவில் மாறுதல்கள் இருக்கலாம்னு காவல்துறை வட்டாரத்தில் சொல்றாங்க.''”

"புதுச்சேரியிலும் மாற்றம் இருக்கும்னு பேச்சு அடிபடுதே?''”

"தங்கள் சப்போர்ட்டில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை கலைச்சு, தாங்களே ஆட்சி செய்ய பா.ஜ.க. முயற்சிப்பது பற்றி ஏற்கனவே நாம பேசியிருக்கோம். அமித்ஷாவின் புதுவை விசிட்டிலும் இது பற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கு. அமித்ஷா விசிட்டின்போது அவரை சந்திக்க புதுவை முதல்வர் ரெங்கசாமி ட்ரை பண்ணியும் நடக்கலை. அப்செட்டான புதுவை முதல்வர், பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சரும் தனது உறவினருமான நமச்சிவாயத்திடம், டெல்லி நினைக்கிற மாதிரிதானே நான் ஆட்சி நடத்துகிறேன். பிறகு ஏன் என் ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும்னு உருக்கமாகக் கேட்டிருக்கிறார். இதை நமச்சிவாயம் டெல்லிக்கு பாஸ் செய்தார். டெல்லியோ, அப்படியானால், என்.ஆர். காங்கிரசை நம் பா.ஜ.க.வுடன் ரெங்க சாமியை இணைக்கச் சொல்லுங்கள். அவர் பா.ஜ.க. முதல்வராகவே தொடரலாம்னு சொல்லியிருக்கிறது. இதைக்கேட்டு முகம் வெளிறிப்போய் விட்டாராம் ரெங்கசாமி. அடுத்து என்ன செய்வது என்று அவர் கவலையோடு கைபிசைந்து கொண்டிருக்கிறாராம்.''”

"’ராஜ்யசபா சீட்டைப் பிடிக்க அ.தி.மு.க.வில் ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சிடுச்சே?''”

Advertisment

rr

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் ஜூன் மாதம் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், 2 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கு. அதைக் குறிவைக்கும் மாஜி மந்திரி சி.வி.சண்முகம், தனக்கோ அல்லது தனது சகோதரர் ராதாகிருஷ்ணனுக்கோ ஒரு இடம் வேண்டும்னு வரிஞ்சி கட்டுகிறார். அதேபோல, மாஜி ஜெயக்குமாரும் ஒரு இடத்தை எனக்கோ அல்லது என் மகன் ஜெயவர்த்தனனுக்கோ ஒதுக்கவேண்டும்னு முரண்டு பிடிக்கிறார். ஆனால் எடப்பாடியோ, ஒரு இடத்தை தனது வலதுகரமான சேலம் இளங் கோவனுக்குக் கொடுக்கனும்னு ஆசைப்படுகிறாராம். இதைக் கேள்விப்பட்ட ஓ.பி.எஸ்., இளங்கோவ னுக்கு ராஜ்யசபா சீட்டைக் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்னு சொல்லி வருவதோடு, தனது ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகரனுக்கு ராஜ்யசபா கொடுக்கவேண்டும்னு வலியுறுத்த ஆரம்பிச்சிட்டார். கோகுலஇந்திரா உள்பட மேலும் சிலரும் முண்டி யடிப்பதால், ராஜ்யசபாவுக்கான ஜல்லிக்கட்டு களைகட்டுது.''

"தி.மு.க. அரசுக்கு குடைச்சல் தரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புது பிளான் பற்றி நான் சொல்றேன். தமிழ்நாட்டுக்கு பிழைப்புத் தேடி வந்துள்ள வட மாநிலத் தொழிலாளர் களில் 55 சதவீதம் பேர் கட்டுமான தொழிலில்தான் இருக்காங்க. இவங்களைப் பிரபல கட்டுமான நிறுவனங்கள் கொத்தடிமைகள் போல நடத்துவதாகவும், ஒழுங்கா சம்பளம் தரலைன்னும் ஒன்றிய அரசுக்குப் புகார்கள் போயிருக்கிறது. இதைப் பயன்படுத்தி, வட இந்திய தொழி லாளர்களுக்கான ஒரு அசோசி யேசனை உருவாக்கும் முயற்சிகளும் நடக்குது. இதை எல்லாம் வைத்து தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்ய முடியுமான்னு டெல்லி தரப்பு யோசிக்குதாம்.''”