"ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.''’
"ஆமாம்பா, அ.தி.மு.க. நடத்திய ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவில் ரஜினி உரை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, சில மாதங்களுக்கு முன் தி.மு.க. நடத்திய அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளி யீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்ட போதே, நாமும் ஒரு விழாவை நடத்தி, அதுக்கு ரஜினியை அழைக்கணும்னு எடப்பாடி தீர்மானிச்சிட்டாராம். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எம்.ஜி. ஆரின் மனைவியுமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை நடத்தத் திட்டமிட்டபோதே, ரஜினிக்கு எடப்பாடி அழைப்பு விடுத்தாராம். ஆனால் ரஜினி அப்போதே, "என்னால் விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியுமா? என்று தெரியவில்லை. வரஇயலாத சூழலில், நிச்சயம் காணொலிக் காட்சி வழியாக கலந்துகொள்வேன்'னு எடப்பாடிக்கு உறுதி கொடுத்தாராம். அதன்படி வானகரத்தில் 24ஆம் தேதி அ.தி.மு.க. நடத்திய ஜானகி நூற்றாண்டு விழாவில், காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார் ரஜினி. அப்போது, ஜானகி அம்மா ளைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இரட்டை இலைதான் அ.தி.மு.க. வின் அஸ்திரம். தேர் தல் ஆணையத்தால் அது முடக்கப்பட்ட போது அதனை மீட்டு ஜெயலலிதா விடம் ஒப்படைத்த வர் ஜானகி அம் மாள்னு பழைய சம்ப வத்தை நினைவு படுத்தினார்.''”
"தான் அரசிய லுக்கு வராதது பற்றியும் அதில் ரஜினி பேசியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, ரொம்பவும் அதை நகைச் சுவையாக விவரித்த ரஜினி, ’"நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் நிறையபேர் ஆலோசனை சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டிருந்தா அவ்ளோதான். நிம்மதி, பணம்னு எல்லாத்தையும் இழந்திருக்கணும்'னு சொல்லி, எல்லோரை
"ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.''’
"ஆமாம்பா, அ.தி.மு.க. நடத்திய ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவில் ரஜினி உரை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, சில மாதங்களுக்கு முன் தி.மு.க. நடத்திய அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளி யீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்ட போதே, நாமும் ஒரு விழாவை நடத்தி, அதுக்கு ரஜினியை அழைக்கணும்னு எடப்பாடி தீர்மானிச்சிட்டாராம். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எம்.ஜி. ஆரின் மனைவியுமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை நடத்தத் திட்டமிட்டபோதே, ரஜினிக்கு எடப்பாடி அழைப்பு விடுத்தாராம். ஆனால் ரஜினி அப்போதே, "என்னால் விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியுமா? என்று தெரியவில்லை. வரஇயலாத சூழலில், நிச்சயம் காணொலிக் காட்சி வழியாக கலந்துகொள்வேன்'னு எடப்பாடிக்கு உறுதி கொடுத்தாராம். அதன்படி வானகரத்தில் 24ஆம் தேதி அ.தி.மு.க. நடத்திய ஜானகி நூற்றாண்டு விழாவில், காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார் ரஜினி. அப்போது, ஜானகி அம்மா ளைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இரட்டை இலைதான் அ.தி.மு.க. வின் அஸ்திரம். தேர் தல் ஆணையத்தால் அது முடக்கப்பட்ட போது அதனை மீட்டு ஜெயலலிதா விடம் ஒப்படைத்த வர் ஜானகி அம் மாள்னு பழைய சம்ப வத்தை நினைவு படுத்தினார்.''”
"தான் அரசிய லுக்கு வராதது பற்றியும் அதில் ரஜினி பேசியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, ரொம்பவும் அதை நகைச் சுவையாக விவரித்த ரஜினி, ’"நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் நிறையபேர் ஆலோசனை சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டிருந்தா அவ்ளோதான். நிம்மதி, பணம்னு எல்லாத்தையும் இழந்திருக்கணும்'னு சொல்லி, எல்லோரையும் கலகலப்பில் ஆழ்த்தியிருக்கார். இந்த விழாவில் ஜெயலலிதாவோடு திரைப்படத்தில் நடித்த சீனியர் நடிகைகள் சிலரையும் அழைத்து, கௌரவிச்சிருக் காங்க. அதேபோல் இந்த விழாவில் பேசிய எடப் பாடி, "அ.தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளை யும் சிக்கல்களையும் சந்திக்கிறதோ, அப்போதெல் லாம் வெற்றிபெறும். அதேபோல இன்று அ.தி.மு.க. வை எவர் அழிக்க நினைத்தாலும் அது நடக்காது' என்று, கட்சியில் இருக்கும் தனது எதிரிகளுக்கு எச்ச ரிக்கை விடுத்ததோடு, தனக்கு எதிராகக் கொடி பிடித்து வரும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களை இந்த விழாவில் அவர் மைக் பிடிக்க விடவில்லை. இது அவர்களை மேலும் டென்சனாக்கியிருக்கிறதாம்.''”
"ரஜினியை அண்மையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் சந்தித்திருக்கிறாரே?''”
"தனது பிறந்தநாளை கடந்த 8ஆம் தேதி கொண்டாடிய சீமான், ரஜினியிடம் வாழ்த்து வாங்க ஆசைப்பட்டிருக்கார். ஆனால் அப்போது ரஜினி நேரம் ஒதுக்கவில்லை. இந்த நிலையில், ரஜினி நடித்த "வேட்டையன்'’படம் பற்றி, அவரது நண்பர் ஒருவரிடம் சீமான் பாராட்டிப் பேசியிருக்கிறார். இதையும் சீமான் சந்திக்க விரும்புவதையும் அறிந்த ரஜினி, அவரை அழைத் திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியுடன் சென்று ரஜினியை சந்தித்திருக்கிறார் சீமான். ஒருமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, சீமான் பேசு வதை ரஜினி அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். அப் போது, பேச்சுவாக்கில் பா.ஜ.க.வுடன் நட்புறவை ஏற்படுத்தித் தருமாறு சீமான் அவரிடம் கோரிக்கை வைத்தாராம். எனினும், ரஜினி எதற்கும் உத்தரவாதம் கொடுக்கவில்லையாம். நடிகர் விஜய்யை வெறுப்பேற்றும் நோக்கத்திலும் சீமான், இந்த சந்திப்பை உருவாக்கிக்கொண்டாராம். பா.ஜ.க. மீதான மையலால்தான் சங்கி என்றால் நண்பன் என்று பொருள் என சீமான் விளக்கம் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"தங்கள் வியூக அமைப்பாளரான சுனில் மீது காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த சுனில் ஆரம்பத்தில் தி.மு.க.வின் வியூக அமைப்பாளராக இருந்தவர். இதற்கிடையே, சுனிலுக்கு பதில் அவரது முன்னாள் பாஸ் பிரசாந்த்கிஷோரை தி.மு.க. நியமித்துக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக 2021 தேர்தலில், தமிழத்தில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தன்னைக் கைகழுவிய தி.மு.க. மீது எரிச்சலான சுனில், ராகுலோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு சில அசைன்மெண்ட்டுகளைச் செய்து வந்தார். இடையில் தி.மு.க. வுக்கு செக் வைக்க, தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை, அ.தி.மு.க. அணிக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கினார். இதற்காக சில ரகசியக் கூட்டங்களும் நடந்தன.''”
"ஆமாம்பா, இது பற்றியும் நாம் ஏற்கனவே பேசியிருக் கிறோம்.''”
"இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸில் தி.மு.க.வுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. எனினும் ராகுலின் உறுதியான முடிவால், சுனிலின் இந்த முயற்சி பலிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது நடந்த வடமாநில சட்டமன்றத் தேர் தல் களத்திலும் சுனிலை நம்பியது காங்கிரஸ். மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு எழுச்சி ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை பா.ஜ.க. அறிவித்ததால், அது அங்கே பெண்களின் வாக்குகளை அமோகமாக கடைசி நேரத்தில் அள்ளி வெற்றி பெற்றது. பா.ஜ.க.வுக்கு இந்த ஆலோசனையை சுனில்தான் சொல்லியிருப்பார் என்றும், அவர் டபுள் கேம் ஆடுகிறவர் என்றும் ராகுலுக்குப் புகார்கள் போயிருப்பதால், சுனிலை முழுதாக விலக்கிவைத்து குட்பை சொல்லும் முடிவுக்கு தற்போது காங்கிரஸ் வந்திருக்கிறதாம்.''”
"தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜாவைக் கைது செய்ய தமிழக காவல்துறை காத்திருக்கிறது என்கிறார்களே?''”
"அமரன் திரைப்பட எதிர்ப்பு என்கிற பேரில், காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரி மைப் போராளிகள் என மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் ஜவாஹிருல்லா பாராட்டியதாகக் கூறி, அவரை கடுமையாகக் கண்டித்தார் ஹெச்.ராஜா. இதைத் தொடர்ந்து, ஹெச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில், சென்னை விமான நிலைய போலீசார் 4 பிரிவின் கீழ் ராஜா மீது வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனடிப்படையில் ஹெச்.ராஜாவை கைது செய்து விசாரிக்க மேலிடத்தில் அனுமதி கேட்டுள்ளது போலீஸ். அங்கிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததும் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவார் என்கிறது காவல்துறைத் தரப்பு. இது ஹெச்.ராஜா தரப்பைப் பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கிற தாம். இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வின் கோர் கமிட்டிக் கூட்டம் சமீபத்தில் கமலாலயத் தில் நடந்தது. இதில் பேசிய அதன் மேலிடப் பொறுப்பாளர் கள், "அ.தி.மு.க.வையும் விஜய்யின் த.வெ.க.வையும் யாரும் விமர்சிக் கக்கூடாது' என்று அழுத்தமாக அறிவுறுத்தியிருக் கிறார்கள். இதன் நோக்கம் கூட்டணி ஆசைதானாம்.''””
"டி.ஜி.பி. உத்தரவை சிவகங்கை எஸ்.பி. கண்டுகொள்ளவில்லை என்கிறார்களே?''”
"காவலர்களின் விருப்பப்படி, அவர்கள் குடும்பத்தோடு இருக்குமாறு, பணி மாறுதல் களை செய்து தரவேண்டும் என டி.ஜி.பி. சங்கர்ஜுவால் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, மதுரை மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்ட காவலர்களுக்கும் அவரவரின் குடும்பம் வசிக்கும் ஊர்களிலேயே பணி மாறுதல் தரப்பட்டுள்ளன. எனினும், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இந்த வாய்ப்பு தரப்படவில்லை. இருக்கும் இடங்களிலேயே மூன்று ஆண்டுகள் அவர்கள் பணிநிறைவு செய்தும், அவர்கள் பரிதவிக்கிறார்கள். அதிலும் மருத்துவ காரணங்களுக்காக கொடுக்கப்பட்ட விருப்ப மனுக்கள் கூட இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. இது அங்குள்ள மாவட்ட காவலர்கள் இடையே மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்திவருகிறது. இது சம்பந்தமாக சிவகங்கை எஸ்.பி. டோங்கிரே பிரவின் உமேஷ் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? என்று கவலையோடு கேட்கிறார்கள் அங்குள்ள பரிதாப காக்கிகள்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கோவை விமான நிலையத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை வழியனுப்பச் சென்ற மகிளா காங்கிரசார் உள்ளிட்ட கட்சியினரை, அதே கட்சியைச் சேர்ந்த பிரமுகரான மயூரா ஜெயக்குமார் தகராறு செய்து தாக்கியது பற்றி, ஏற்கனவே நாம் பேசினோம். அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக மயூரா மீது மகளிர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் புகார் கொடுத்தது பற்றிய தகவலையும் நாம் பகிர்ந்துகொண் டோம். தற்போது அந்த புகாரின் பேரில் மயூரா ஜெயக்குமார் மீது போலீசார் எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்திருக்கிறார்கள். எனவே அவர் "எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம்' என்கிற பரபரப்பு காங்கிரஸ் தரப்பில் இருக்கிறது.''
____________
தி.மு.க. இளைஞ ரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி இந்த இதழில் விளம்பரங்கள் சற்று கூடுதலாக இடம் பெற்றுள் ளன. வரும் இதழில் வழக்கம் போல செய்திகள் இடம் பெறும் என்பதை வாசகர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(ஆர்.)