தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகள், பிராந்தியக் கட்சிகள், விவசாயக் கட்சிகள், மதக் கட்சிகள் மற்றும் சாதிக் கட்சிகள் உள்ளன. இந்த வரிசையில், "அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமை கட்சி' என்ற பெயரில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள சாதிக் கட்சி, "விஸ்வகர்மா ஜெயந்தி விழா' என்ற பெயரில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சமுதாயத்தினரை வரவழைத்து, சிவகாசியில் கூட்டம் நடத்தியது. அந்த மண்டபத்தில் அக்கட்சியினர் வைத்திருந்த அத்தனை பேனர்களிலும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் படம் இடம்பெற்றிருந்தது.
"இது ராஜேந்திரபாலாஜியின் புதுக்கட்சியா?'’எனச் சந்தேகம் எழ, அக்கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “"ராஜேந்திரபாலாஜி இந்தக் கட்சியில் உறுப்பினர்கூட இல்லை''’ என்று ஒரே போடாகப் போட... "பலே அரசியலாக இருக்கிறதே?'’என்ற உறுத்தலுடன், அக்கூட்டத்தில் மைக் பிடித்த சிலரது பேச்சை கவனித்தோம்.
"நம்மை ஆசாரி என்கிறார்கள். ஆனால் நாம் ஆச்சாரியார். அனுமனைவிட நாம் பலசாலிகள் என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் யாருக்கும் பயப்படமாட்டோம். யாரையும் பகைக்கமாட்டோம்''’ என்று பேசிக் குதூகலித்தவர்கள், ‘"ஜெய் விஸ்வகர்மா'’ கோஷம் எழுப்பினார்கள். இடையிடையே ராஜேந்திரபாலாஜி புராணமும் பாடினா
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகள், பிராந்தியக் கட்சிகள், விவசாயக் கட்சிகள், மதக் கட்சிகள் மற்றும் சாதிக் கட்சிகள் உள்ளன. இந்த வரிசையில், "அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமை கட்சி' என்ற பெயரில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள சாதிக் கட்சி, "விஸ்வகர்மா ஜெயந்தி விழா' என்ற பெயரில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சமுதாயத்தினரை வரவழைத்து, சிவகாசியில் கூட்டம் நடத்தியது. அந்த மண்டபத்தில் அக்கட்சியினர் வைத்திருந்த அத்தனை பேனர்களிலும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் படம் இடம்பெற்றிருந்தது.
"இது ராஜேந்திரபாலாஜியின் புதுக்கட்சியா?'’எனச் சந்தேகம் எழ, அக்கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “"ராஜேந்திரபாலாஜி இந்தக் கட்சியில் உறுப்பினர்கூட இல்லை''’ என்று ஒரே போடாகப் போட... "பலே அரசியலாக இருக்கிறதே?'’என்ற உறுத்தலுடன், அக்கூட்டத்தில் மைக் பிடித்த சிலரது பேச்சை கவனித்தோம்.
"நம்மை ஆசாரி என்கிறார்கள். ஆனால் நாம் ஆச்சாரியார். அனுமனைவிட நாம் பலசாலிகள் என்று ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் யாருக்கும் பயப்படமாட்டோம். யாரையும் பகைக்கமாட்டோம்''’ என்று பேசிக் குதூகலித்தவர்கள், ‘"ஜெய் விஸ்வகர்மா'’ கோஷம் எழுப்பினார்கள். இடையிடையே ராஜேந்திரபாலாஜி புராணமும் பாடினார்கள்.
புரட்சி விழாவில், கம்மாள சமுதாய அரசியல் வரலாற்றுப் பிதாமகன், நமது முகவரி, பிரம்மஸ்ரீ கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொள்வார்’ என நோட்டீஸில் அச்சிட்டிருந்தனர். நிகழ்ச்சி தொடங்கி 4 மணி நேரம் கடந்தும் அவர் வராத நிலை யில், அந்தக் கூட்டத்தில் பர பரத்தபடி இருந்த மாரிக்கனியை ஓரம்கட்டி, "இது ராஜேந்திர பாலாஜியின் பினாமி கட்சியா?''’ என சந்தேகத்தை முன்வைத் தோம்.
"அதென்ன இப்படி கேட் டுட்டீங்க?''’என்றவர் "டவுனோ, கிராமமோ, ஆசாரிமார் இல்லாத இடம் இல்ல. ஐந்தொழில் பார்க்கிற ஆதி சமூகம் நாங்க. பூணூல் போட்டாலும், சாதி, மதம் பார்க்கிறது இல்ல. எந்த சாதின்னாலும் தொட்டு மூக்கு குத்துவோம். அந்தக்காலத் துலயே, தீண்டாமை கொடுமைய எங்க சமுதாயம் பண்ணுனது இல்ல. சுயசாதிப் பெருமை பேச இங்கே கூடல. எங்க சமுதாய மக்களுக்கு இன்றைக்கும் சூப்பர் ஸ்டாரா இருக்காரு தியாகராஜ பாகவதர். மொதல்ல அவரு பேருல ஙஃப பேரவைன்னு இருந்துச்சு. இப்ப எங்க சமுதாயத் துல ரொம்ப பிரபலம்னா, அது ஃப ராஜேந்திரபாலாஜிதான். அதனால, கே.டி.ஆர். பேரவைன்னு ஆரம்பிச்சு, கோயம்புத்தூர்ல கூட்டம் போட்டோம்.
எடப்பாடி என்ன சொன் னாருன்னு தெரியல. கே.டி.ஆர். பேரவை வேணாம்னு சொல்லி, எங்கள செயல்பட விடாம பண்ணிட்டாரு ராஜேந்திர பாலாஜி. அதனால பாதிப்பு அவருக்குத்தான். எப்படின்னா... இந்த தி.மு.க. ஆட்சில பொய்க் கேசுல ஒன்றரை வருஷமா அல்லாடுறாரு. கவர்மென்ட் சுப்ரீம் கோர்ட் போனதுனால, இப்பவரைக்கும் அவருக்கு கன்டிஷன் பெயில்தான். இவரவிட ரொம்ப திட்டுன மாஜி அ.தி.மு.க. அமைச்சர்கள தி.மு.க. அரசாங்கம் எதுவும் பண்ணல. இவர மட்டுமே குறி வச்சதுக்கு காரணம், விஸ்வ கர்மா சிறுபான்மை சமுதாயம் கிறதுனாலதான். அந்த மாஜி அமைச்சருங்க சாதிபலம் உள்ளவங்க. அதனால, இவர விரட்டி விரட்டி அரெஸ்ட்பண்ணி ஜெயில்லயும் வச்சாங்க. உங்களுக்கும் இதே கதிதான்னு மற்ற மாஜிக்கள மிரட்டுறதுக்கு, கிள்ளுக் கீரையா தி.மு.க. அரசாங்கத்துக்கு கிடைச்சது ராஜேந்திரபாலாஜிதான். தி.மு.க. மேலிடம் என்ன பெரும்பான்மை சமுதாயமா? ஒரு சிறுபான்மை சமுதாயத்த சேர்ந்த முதலமைச்சரு, இன்னொரு சிறுபான்மை சமுதாய முன்னாள் அமைச்சர இப்படி பண்ணலாமா? இது நடந்ததுல, எங்க சமுதாய மக்களுக்கு ரொம்ப வருத்தம். இப்ப புதுசா ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சதுக்கு காரணமே, தி.மு.க. அரசாங்கத்து மேல இருக்கிற கோபம்தான். கட்சிக் கொடி மஞ்சக் கலர்ல இருக்கணும், அதுல ஆஞ்சநேயர் படம் இருக்கணும்னு டிசைன்பண்ணிக் கொடுத்ததே ராஜேந்திரபாலாஜிதான். எங்க கட்சியின் பொதுச் செயலாளர் ஜம்பு கேஸ்வரனும் ராஜேந்திரபாலாஜியோட நண்பர்தான்''’ என போட்டு உடைத்தார்.
"போட்டோ வேண்டாமே...'’என்று கேட்டுக்கொண்ட முத்து, "உழைக்கும் கைகளே.. உருவாக்கும் கைகளேன்னு எம்.ஜி.ஆர். பாடுனது எங்க சமுதாயத்த மனசுல வச்சித்தான். தஞ்சை பெரிய கோயில்ல இருந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வரைக்கும் கலைப்படைப்புகள்ல எங்க சமுதாய மக்களோட பங்களிப்பு இருக்கு. அ.தி.மு.க.வுக்கு கட்சிக்கொடி வரைஞ்சு கொடுத்தவர் கலை இயக்குநர் அங்கமுத்து ஆசாரி. திருச்சில தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சத்துல மணிமண்ட பம் அமைக்க உத்தரவிட்டது, அ.தி.மு.க. ஆட்சில முதலமைச்சரா இருந்த எடப்பாடி பழனிசாமி. இப்ப ராஜேந்திரபாலாஜி தனி ஆளு இல்ல. அவருக்கு பக்கபலமா விஸ்வகர்மா சமுதாயம் இருக்கு''’எனச் சொன்னபோது, ராஜேந்திரபாலாஜி அந்த மண்டபத்துக்குள் ‘என்ட்ரி’ ஆனார்.
பூரணகும்ப மரியாதையுடன் வர வேற்கப்பட்ட ராஜேந்திரபாலாஜி, மலர் தூவி விஸ்வகர்மா சிலையை வணங்கி விட்டு, மேடையேறி பேசினார்.
"நானும் விஸ்வகர்மாதான். நாம் தொட்டது துலங்கும். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் விஸ்வகர்மா சமு தாய மக்களுக்கு உரிய மரியாதை கிடைச்சது. மற்ற கட்சிகள் நம்மைப் பற்றி நினைக்கிற தும் இல்லை; சிந்திக்கிறதும் இல்லை. உங்க கட்சியின் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் ஒலிக்கணும்னா... நாங்க இருக்கிற பக் கம் உங்க கருணைப் பார்வையை திருப்பி விடுங்க. இந்த இயக்கத்துக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்''”என்றார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், விலைவாசி உயர்வு அதிருப்தி வாக்குகளை யும், ஓ.பி.எஸ். மற்றும் சசிகலாவுக்கு எதிரான பிற சமுதாய வாக்குகளையும் வளைப்பதற்கான முன்னோட்டத்தை, எடப்பாடி பழனிசாமி ஆசியுடன், சிவகாசியில் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்திருக்கிறார்.
_________________
வழக்கு வலிக்கு நிவாரணம்! -பொங்கி வழியுது சாதிப் பாசம்!
இந்தப் புதுக்கட்சி குறித்த அபிப்ராயத்தை விஸ்வகர்மா சமுதாயப் பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம்.
"அதெப்படி? கம்மாளர்கள் எல்லாரும் ராஜேந்திர பாலாஜியை ஏன் ஆதரிக்கணும்? அ.தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கணும்? என்ன இருந்தாலும் அவர் அரசியல்வாதி. தேவைப்பட்டால் மட்டுமே சாதிப் பக்கம் ஒதுங்குறாரு. பத்தாண்டு காலம் அமைச்சரா இருந்தப்ப கம்மாளர் சமுதாயத்துக்கு பெரிசா என்ன பண்ணுனாரு? தி.மு.க. கவர்மென்ட் போட்ட வழக்கு வலிக்கு, இப்ப அவருக்கு நிவாரணம் தேவைப்படுது. அதான்... சாதி பாசம் பொங்கி வழியுது. தமிழ்நாட்டுல எல்லா தொகுதிலயும் கம்மாளர் ஓட்டு ஆயிரக்கணக்குல இருக்கு. வடக்க இருக்கிற மாதிரி தமிழ்நாட்டுல எங்களுக்குன்னு வலுவான சாதி அமைப்பு இல்ல. இதுக்கு முன்னால பாகவதர் லேபில் இருந்துச்சு. இப்ப ராஜேந்திர பாலாஜிக்கு மாறிருக்கு. விஸ்வகர்மா சமுதாய மக்கள் ரொம்பவும் பின்தங்கிய நிலைல இருக்காங்க. ராஜேந்திர பாலாஜி பின்னால ஒரேயடியா போகாம, உண்மையிலேயே எங்க சமுதாயத்தோட பொருளாதாரம், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், இத மீட்டெடுக்குறதுல இந்தக் கட்சி உருப்படியா செயல்பட்டா நல்லது''’என்றார்.