""ஹலோ தலைவரே, தற்போது உயிர்பெற்றிருக்கும் வழக்குகளும் சில சட்டரீதியான நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையும் கதிகலங்க வைத்திருக்கிறது.''’’
""ஆமாம்பா, மாஜி அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குகளைத் தொடரும் விசயத்தில், இறுகிப்போயிருந்த கவர்னரின் கை, பச்சைக்கொடியை அசைத்திருக்கிறதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, ஆளுநர் ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் அதிரடி வழக்கு, ராஜ்பவன் தரப்பை அதன் வேர்வரை அசைத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து ராஜ்பவன் இன்னும் முழுதாக மீளவில்லை. அதனால்தான் அவர், அ.தி.மு.க. மாஜி மந்திரிகளான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பி.வி.ரமணா ஆகிய நால்வர் மீதும் வழக்கு தொடுக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த மாஜி மந்திரிகளில் ஒருவரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்யப்பட்ட நிலையில்தான் அது முடக்கப்பட்டிருந்தது. ராஜ்பவன் மீதான வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்து வருவதோடு, கவர்னர்களின் தேவை குறித்த கேள்வியையும் பரவலாக எழவைத்திருக்கிறது.'' ’’
""சரிப்பா, இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், பா.ஜ.க. அண்ணாம லையின் மைத்துனருடன் சேர்ந்து குவாரி தொழில் செய்து வருவதால், இவரை அண்ணாமலை காப்பாற்றிவருகிறார் என்று புகார் குரல்கள் எழுந்ததே?''’’
""ஆமாங்க தலைவரே, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக அரசியல் செய்துவரும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தரப்பு, இந்தப் புகாரை பலமாக வைத்தும் விஜயபாஸ்கர் தரப்பு அலட்டிக்கொள்ளாமல்தான் இருந்தது. இப்போது, அவரது தலை மீது பலமாக சம்மட்டி அடி விழுந்திருக்கிறது. இதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பெண்டிங்கில் உள்ள எடப்பாடி மீதான 4,500 கோடி ரூபாய் அளவிலான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கையும் இப்போது விரைவுபடுத்து வதற்கான முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் கொடநாடு விவகாரத் தில் கிடைத்த ரகசிய உரை யாடல் அடங்கிய பென் டிரைவ், அந்த வழக்கை தீவிரப்படுத்தியிருக் கிறது. இதே நேரத் தில் ஜெயலலிதாவின் சொத்துக்களை டிசம்பர் இறுதியில் ஏலம் விடுவதற்கான முயற்சியும் கர்நாடகத்தில் நடந்து வருகிறது. இப்படி ஒரே நேரத்தில் எல்லாத் திசையிலிருந்தும் சிக்கல்கள் முற்றுகையிடுவதால் எடப்பாடியும் அவர் தரப்பினரும் ரொம்பவே கதிகலங்கிப்போயிருக் கிறார்கள்.''’’
""இதையெல்லாம் அ.தி.மு.க. தரப்பு எப்படி எதிர்கொள்ளப்போகிறது?''’’
“""இந்த விவகாரம் குறித்தெல்லாம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி மிகுந்த கவலையோடு விவாதித்திருக்கிறார். இப்படி தங்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் வழக்குகள் தீவிரமாவதின் பின்னணியில், பா.ஜ.க. இருப்பதாக நினைக்கிறார் எடப்பாடி. கூட்டணியை முறித்ததற்கு இப்படி எல்லாம் பா.ஜ.க. பழிவாங்குவதாக அவர் கருதுகிறாராம். அதேபோல் மாஜி மந்திரிகள் மீதான ஊழல் வழக்குகளை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க பா.ஜ.க. முயற்சிப்பதும், எடப்பாடியின் சந்தேகத்தையும் பயத்தையும் அதிகரித்திருக்கிறது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட மோடியுடனேயே சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தி, அவர்கள் விரும்புகிறபடி பா.ஜ.க. கூட்டணியில் தொடர லாமா? என்கிற ஆலோசனையிலும் எடப்பாடி இருக்கிறார் என்கிறார்கள் விபரமறிந்த வர்கள். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் பதட்டத்தில் தான் இருக்கிறார்கள். இதை யெல்லாம் ஓ.பி.எஸ். தரப்பும் சசிகலா தரப்பும் ஆர்வமாக கவனித்து வருகின்றன.''’’
""இந்த பதட்டத்தில்தான் அ.தி.மு.க. மா.செ.க் கள் கூட்டத்தில் எடப்பாடி தன் கோபத்தை கட்சி நிர்வாகிகள் மீது கொட்டினாரா?''’’
""சரியாக யூகிச்சிட்டீங்க தலைவரே. அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டம் 21ஆம் தேதி நடந்தபோது, தன் ஆற்றாமையால் எழுந்த கோபத்தை எல்லாம் மா.செ.க்கள் மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்படி அவர் வெளிப்படுத்தும் போது, ’"நான் பலமுறை எச்சரித்தும்கூட நம் மா.செ.க் களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் இடையே இன்னும் நல்லுறவு ஏற்படவில்லை. பல மாவட் டங்களில் எதிரும் புதிருமாக செயல்படும்போது எப்படி உங்களை நம்பி தேர்தலை எதிர்கொள்ள முடியும்? இப்படியே இருந்தால், நீங்கள் எல்லாம் உருப்படவேமாட்டீங்க. உங்கள் நடவடிக்கைகளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது'’என்று எரிச்சலைக் கொட்டியிருக்கிறார். மேலும் அரியலூர், பெரம்பலூர், நாகை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் சென்னையிலும் கூட சரிவர பூத் கமிட்டி அமைக்கப்படாததையும் சுட்டிக்காட்டிவிட்டு, 3ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி விவகாரத்தை முடித்தாகவேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.''’’
""இந்த நேரத்தில் பா.ஜ.க. பிரமுகரான ஆற்றல் அசோக்குமார் அ.தி.மு.க.வில் இணைந்திருக் கிறாரே?''’’
""பா.ஜ.க. ஓ.பி.சி. அணியின் துணைத்தலைவ ரான ஆற்றல் அசோக்குமார் பா.ஜ.க.வில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார். இவர் மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகன் ஆவார். நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் நீங்கள் சீட் கொடுத்தால் உங்கள் பக்கம் வருகிறேன் என்று எடப்பாடிக்கு ரூட் விட்டார். இவரை சேர்த்துக்கொண்டால் தங்கள் மீதான பா.ஜ.க.வின் கோபம் அதிகமாகுமோ என்று எடப்பாடி கொஞ்சம் தயங்கினார். ஆனால் அசோக்கோ, அ.தி. மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையில் நல்லி ணக்கப் பாலமாக இருப்பேன் என்று சொல்லி அவர் தயக்கத்தைப் போக்கியிருக்கிறார். வழக்கம்போல் 20 கோடி கொடுத்தால் நாடாளுமன்ற சீட் தருவேன் என்று எடப்பாடி சொல்ல, நீங்கள் சீட் கொடுத்தால் 100 கோடி வரை செலவுசெய்ய நான் தயார் என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில்தான், அசோக்குமாரை வாரி அணைத்திருக்கிறாராம் எடப்பாடி.''’
""அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறதே?''’’
""உண்மைதாங்க தலைவரே. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, உடல்நலம் மிகவும் மோசமானதால், கடந்தவாரம் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். இவரது ஜாமீன் மனுவை கடந்த 20ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மெடிக்கல் ரிப்போர்ட்டை தாக்கல் செய்யச் சொல்லிவிட்டு, விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது. செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை அவருக்கு கணையம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் கொழுப்புக் கட்டிகள் இருப்பதாக டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு இதயவியல், குடலியல், நரம்பியல் துறை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை யளித்துவருகிறார்கள். அவர் உடல்நிலையைக் கருதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையி லேயே இருப்பார் என்கிறார்கள். அவரது நீதிமன்றக் காவல் டிசம்பர் 4 வரை நீட்டிக்கப்பட்டி ருக்கும் நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிடும்.''’’
""செங்கல்பட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஒன்று கூடி இரு கட்சியையும் டேமேஜ் செய்கிறார்கள் என்று புகார்கள் வருகிறதே?''’’
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ்.ஆறுமுகம். எடப்பாடிக்கு இவர் நெருக்கமான வர். தி.மு.க.வில் அமைப்புரீதியாக இன்னும் செங்கல்பட்டு மாவட்ட தி.மு.க. உருவாக்கப்படாத நிலையில், அங்கே திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியச் செயலாளர் வீ.தமிழ்மணியின் சாதிரீதியி லான அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம். இந்த லட்சணத்தில் அ.தி.மு.க. மா.செ. ஆறுமுகமும், தி.மு.க. ஒ.செ. தமிழ்மணியும் நெருங்கிய தோஸ்து களாம். அதனால் ஒன்றியத்தில் பல உள்ளடி அரசியல்கள் நடந்து கொண்டிருக்கின்றனவாம். குறிப்பாக, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் வைஸ்சேர்மனாக தமிழ்மணியின் பினாமி பச்சையப்பன் இருக்கிறார். அவரிடம் தி.மு.க. கவுன்சிலர்களின் அடாவடி குறித்து அ.திமு.க. கவுன்சிலர்கள் புகார் வாசித்தாலும், அவர் கண்டுகொள்வதில்லையாம். இதனால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த மா.செ. ஆறுமுகத்திடம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனுமதி கேட்டபோது, அவர் தி.மு.க. ஒ.செ. மீதான பாசத்தால், அதை அனுமதிக்க மறுக்கிறாராம். எதிர் தரப்பிலும் இதேதான் நடக்கிறதாம்.''’’
""இவர்களின் பிரச்சினைகளை வைத்து அங்கே பா.ஜ.க. குளிர் காய்கிறதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, செங்கல்பட்டு மாவட்ட தி.மு.க. உருவாக்கப்படாததாலும், அந்தப் பகுதியில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாலும், இந்த இரு கட்சியும் அங்கே பலவீனமாக இருக்கிறது. இதனை உணர்ந்த மாவட்ட பா.ஜ.க.வினர், தி.மு.க.-அ.தி. மு.க. அதிருப்தியாளர்களுக்கு வலைவீசி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அண்மையில் காஞ்சி மாவட்ட தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளரான சோழனூர் ஏழுமலை, அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் ஐக்கியமாகியிருக்கிறார். உத்தரமேருர் பகுதியில் செல்வாக்காக இருக்கும் ஏழுமலையிடமே, செங் கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க.வினருக்கு தூண்டில் வீசிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. இதனால் நொந்து போயிருக்கும் தி.மு.க.வினரோ, முதலில் செங்கல் பட்டு மாவட்ட தி.மு.க.வை உருவாக்கி, புதிதாக மாவட்ட செயலாளரையும் அறிவாலயம் நியமிக்க வேண்டும். இல்லையென்றால் இங்கே தி.மு.க. முழு மையாக வாஷ்அவுட் ஆகிவிடும் என்கிறார்கள்.''’’
""நகைக்கடை அதிபர்களின் புன்னகைகளை உதிர வைக்கிறதே அமலாக்கத்துறை?''’’
""ஆமாங்க தலைவரே, சென்னை சவுக்கார்பேட்டை ஏரியாவில் உள்ள 6 பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் 20ஆம் தேதி சோதனை நடத்தி, அவர்கள் தரப்பை அதிரவைத்தனர். அப்போது அவர்கள் தரப்பு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதைக் கண்டுபிடித்தனர். அடுத்த நாளே, இவர்களோடு வணிகத் தொடர்புடைய திருச்சியில் உள்ள நகைக்கடைகளை முற்றுகையிட்டனர். அங்கே ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜூவல்லரி, விக்னேஷ் ஜூவல்லரி, சூர்யா ஜூவல்லரி, சக்ரா ஜெயின் ஜூவல்லரி ஆகிய 4 பிரபல நகைகடைகளில் அமலாக்கத் துறையினரும் வருமானவரித்துறை யினரும் கைகோத்துக் கொண்டு சலித்தெடுத்த னர். இங்கும், வரி ஏய்ப்பு நடந்ததற்கான ஏகப்பட்ட ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார்களாம்.''’’
""அண்மையில் தீபாவளி நேரத்தில் சென்னை தாம்பரம் பகுதியில் அடுத்தடுத்து 4 கொலைகள் அரங்கேறி, பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் மூன்று கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்கிறார்கள். அதில் கோபாலக்கண்ணன் கொலையும் ஒன்று. இதில் 20 பேர் கொண்ட கும்பல் அரிவாளை கையாண்டிருக் கிறது. ஆனால் 6 பேரை மட்டுமே கணக்கில் காட்டி மற்றவர்களைத் தப்பவைத்திருக்கிறார்கள். இதனால் தப்ப வைக்கப்பட்ட குற்றவாளிகள் அடுத்தடுத்த குற்றங்களுக்குத் தயாராகி வருகிறார்களாம். இதுகுறித்து மேலே ரிப்போர்ட் தரவேண்டிய உளவுத்துறைக் காவலர்கள், லோக்கல் போலீசோடு சேர்ந்து கொண்டு, அவர்களுக்கு சாதகமாக இருப்பதால், தடுக்கப்பட வேண்டிய குற்றங்களும், எளிதாக நடந்துவிடுகிறதாம். எனவே உளவுத்துறையினரின் இந்த போக்கு குறித்த புகார்கள் இப்போது காவல் தலைமையகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறதாம்.''’’
""என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸைப் பிரித்து, தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரும் முயற்சி யைக் கையில் எடுத்திருக்கிறாராம் எடப்பாடி. தனது அரசியல் ஆலோசகரான சுனில் மூலம் இதற்கான வியூகங்களை அவர் வகுத்துவருகிறா ராம். இந்த நிலையில், சென்னை நட்சத்திர விடுதி ஒன்றில் ஒரு ரகசியக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டிருக்கிறது. எடப்பாடிக்கு நெருக்க மான சிலர் உட்பட ஒருசில பத்திரிகையாளர் களும் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். வீடியோகால் மூலம் இந்தக் கூட்டத்தில் சுனிலும் பேசியிருக்கிறார். அங்கு போடப்பட்ட திட்டத் தின் அடிப்படையில்தான், கார்த்தி சிதம்பரத்தை வருங்காலத் தமிழக முதல்வர் என்று குறிப்பிடும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, தி.மு.க. கூட்டணி யில் குழப்பம் உண்டாவதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டதாம். மேலும், கார்த்தி சிதம்பரம், தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸைப் பிரித்துக் கொண்டுவருவார் என்கிற எதிர்பார்ப் போடு பல்வேறு திசைகளிலும் எடப்பாடி தரப்பால் காய்கள் விறுவிறுப்பாக நகர்த்தப் படுகிறதாம்.''’