"ஹலோ தலைவரே, ஸ்மார்ட் சிட்டி ஊழல் விவகாரத்தை விசாரித்த டேவிதார் கமிஷன் அதன் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்திருக் கிறது.''”
"அந்த ரிப்போர்ட்டில் என்ன சொல்லப்பட்டிருக்குதாம்?''”
’"மாஜி மந்திரி வேலு மணியின் இந்த ஊழல் திருவிளையாடலில், அவரோடு மாநக ராட்சி அதிகாரி கள், பொறியாளர் கள், உதவியாளர்கள், காண்ட்ராக் டர்கள்னு 150-க் கும் மேற்பட்ட வர்களுக்கு எதிரான குற்றச்சாட் டுக்கள் இந்த அறிக்கையில் அடுக்கி வைக்கப் பட்டிருக்குதாம். இந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான பல ஆவண ஆதாரங்களையும் முறையாகத் தனது ரிப்போர்ட்டில் இணைத்துள்ளாராம் டேவிதார். இந்த ரிப்போர்ட்டின்படி சம்மந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் ஆக்சன் எடுப்பதற்காக, அதை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைக்க இருக்கிறாராம். அதை தங்கள் கைக்கு வந்ததும், ஊழல் பெருச்சாளிகளான இவர்கள் அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேகமாகப் பாயும் என்கிறது கோட்டை வட்டாரம். இதைப் போல் மற்ற மாஜி மந்திரிகளின் ஊழல்களையும் விசா ரிக்க, முதல்வர் ஆணையத்தை அமைப்பாராங்கிற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கு.''”
"சரிப்பா, அரசு அதிகாரிகளின் பதவி உயர்வுகள் சட்ட விதிகளின்படி முறையாக நடக்க வேண்டும்னு அனைத் துத் துறைகளின் செய லாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி இருந்தாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, தலைமைச் செயலாளர் இறையன்பு அப்படி எழுதிய கடித உத்தரவை அனைத்துத் துறைகளும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சிடிச்சி.''”
"ம்...''”
"சென்னை பெருநகர் மாநகராட்சி செய்தித் துறைக்கான இணை இயக்குநர் பதவி காலியாக இருந்தது. அந்த இடத்தில் ஒரு பெண் மணி நியமிக்கப்பட்டார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனைத் தொடர்பு கொண்டு, சென்னை மாநகராட்சி போன்ற நிர்வாகப் பொறுப்பு மிக்க இடத்தில் நல்ல அனுபவமும் களப்பணியாற்றும் திறமையும் கொண்டவர்களை நியமிக்க வேண்டாமா எனக் கேட்டிருக்கிறார். இன்னும் ஒரு வருசத்துல நாடாளுமன்ற தேர்தல் பணிகளும் ஆரம்பமாகி விடும். இதையெல்லாம் எதிர்கொள்கிற வகையில் அதிகாரி வேண்டும். அதற்கேற்ப நியமன உத்தரவை மாற்றுங்கன்னு சொல்லியிருக்காரு. அமைச்சர் சாமிநாதனோ, அந்த நியமனம் எனக்கே தெரியாதுண்ணே. "உடனே ஆக்சன் எடுக்கிறே'ன்னு அமைச்சர் நேருவிடம் சொன்னாராம்.''”
"உள்ளாட்சி அமைப்புகளில் சாதீய ஒடுக்குமுறைகள் பற்றியும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதி இருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, இது குறித்து கடந்த 20-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருக்கார். அந்தக் கடிதத்தில், தமிழகத்தின் நகராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின தலைவர்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டிருக்கிறார். குறிப்பாக அப்படிப்பட்ட தலைவர்களின் பெயர்ப்பலகை இல்லாத ஊராட்சிகள், நாற்காலியில் தலைவர் அமர முடியாத நிலை, அலுவலகத்தில் அமர முடியாத நிலை, அலுவலகச் சாவி தலைவருக்கு கிடைக்காத கிராமங்கள், துணைத்தலைவர் கையெழுத்துப் போட ஒத்துழைக்க மறுக்கும் ஊராட்சிகள், பெண் தலைவர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஊராட்சிகள் உள்ளிட்ட 15 விதமான பிரச்சினைகள் இருப்பது குறித்தும், இதற்கு சட்டரீதியாக குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு விபரங்களை அனுப்பி வைக்கும்படி கேட்கப் பட்டிருக்கிறது. இது பாதிக்கப்பட்ட ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு.''”
"நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர்' படத்தின் அசத்தல் கெட்-அப் ரிலீஸாகியிருக்குதே..''
"ஆமாம்பா... ரசிகர்கள் இதைப் பார்த்துட்டு குஷியாயிட்டாங்க.''
"அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்தணும்னு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வச்சிருக்காரே?''”
"ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை யில் இயங்கி வருகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். இதில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக் கிறார்கள். இந்த கவுன்சிலின் ஓவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் நடக்கும். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-ஆவது கூட்டத்தை மதுரையில் நடத்தணும்னு நிர்மலா சீதாராமனிடம் கடந்த மாதமே கோரிக்கை வைத்திருந்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன். இதை ஏற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமன், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடத்த ஒப்புக்கொண்டிருந்தார். அனால் அந்தக் கூட்டம் பல்வேறு காரணங்களால் நடக்கலை. அதனால், கூட்டம் நடத்தும் தேதியைத் தெரிவிக்கும்படி, மறு படியும் கேட்டிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.''”
"எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை டெல்லி தீவிரமா குறிவைக்குதே?''”
"பொதுவாக புலனாய்வு அமைப்புகளை டெல்லி தங்கள் கரசேவை அமைப்புகளாக மாற்றி வருகிறது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு எதிராக அவரது அமைச்சரவை சகாக்களை ஊழல் வழக்கில் கைது செய்தது சி.பி.ஐ.. அதேபோல் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக வாள்களைச் சுழற்றியுள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவரும், அவரது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருப்பவரும், துணை முதல்வருமான மூத்த தலைவர் மனீஷ் சிசோடியாவுக்கு எதிரான, மதுபானக் கொள்கை ஊழல் என்கிற அஸ்திரத்தை எடுத்து, அவர்மேல் சி.பி.ஐ. வழக்கைப் பதிவு செய்தது. கூடவே அமலாக்கத்துறை யும் இந்த விவகாரத்தை விசாரிக்கிறது. விரைவில், சிசோடி யாவை சி.பி.ஐ. கைதுசெய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.''
"நானும் இது தொடர்பா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். மேற்குவங்கம், டெல்லிக்கு அடுத்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விரைவில் தமிழகத்தை குறி வைக்கப்போகின்றன என்ற தகவல் டெல்லியில் இருந்து பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் ஒருவித பயத்தில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் சிலர், சீனியர் மந்திரி துரைமுருக னைத் தொடர்புகொண்டு, ’"என்னண்ணே… சி.பி.ஐ. போக்கு ஒரு மார்க்கமா இருக்குதே... இங்கவும் ரெய்டுவிடப்போறாங் களாமே?'ன்னு கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ’"ஆமாம்ப்பா… பார்த்து நடந்துக்குங்க. எல்லாத்திலும் எச்சரிக்கையா இருங்க. கை சுத்தம் முக்கியம்'னு தனக்கே உரிய பாணியில் சொல்லி, அவர்களின் பயத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம்.''”
_____________
இறுதிச்சுற்று
"அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு தொண்டர்கள் யாரும் வரவேண்டாம்' என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்ட நிலையில்... பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறை யீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் 23-08-2022 அன்று விசாரிக்கவுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனுவும், ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த கேவியட் மனுவும் நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் 22-08-2022 திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது ஓ.பன்னீர்செல்வம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது போல அம்மன் வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் எதிர்த்து மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மேல்முறையீடு மனுக்களிலும் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல், விசாரணைக்கு ஏற்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையின் ரகசியங்களே லீக் ஆகிறது என்பதைக் கடந்த மாதம் நாம் நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந் தோம். இதன் பிறகும் இது குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை. எனினும் ராஜ்பவன் இதை ரகசியமாக விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த "அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை' அண்மையில் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் சில பகுதிகள் 2 நாட் களுக்கு முன்பு லீக் ஆகிவிட்டது. அதேபோல, "பல்கலைக் கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா' குறித்து, விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு, கவர்னர் கடிதம் எழுதிய தகவலும் லீக் ஆகியுள்ளது. ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கிடையே நடக்கும் ஈகோ யுத்தங்களால்தான் அரசு ரகசியங்கள் லீக் ஆகின்றன என்கிறது கோட்டை வட்டாரம்.