"ஹலோ தலைவரே, ராஜ்பவன்ல மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது.''”
"ஆமாம்பா, சட்டப்பேரவையில் முதல்வர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் அடக்கிவாசிச்ச கவர்னர் ஆர்.என்.ரவி, மறுபடியும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிட்டாரே.''”
"உண்மைதாங்க தலைவரே, பல பெண்களின் தாலியைப் பறித்தும், நிம்மதியைக் கெடுத்தும் வருகிற சூதாட்டமான ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதித்து, 6 மாதத்துக்கு முன்பே சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அதற்கு ஒப்புதல் தராத கவர்னர், தன் மேஜை மேல் அதை வைத்து 165 நாட்களுக்கும் மேலாகத் தாலாட்டுப் பாடிவிட்டு, இப்ப திடீர்னு சுயநினைவுக்கு வந்து, அந்த மசோதாவில் 8 சந்தேகங்கள் இருக்குன்னு சொல்லி, அதைக் கடந்த வாரம் அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். மறுபடியும் கவர்னர் தன் எடக்கு மடக்கைக் காட்டுவதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், ரொம்பவே எரிச்சலாயிட்டார்.''”
"அவர் மட்டுமா எரிச்சலானார்?''”
"உண்மைதாங்க தலைவரே, அரசுத்துறை அதிகாரிகளும், சட்ட வல்லுநர்களும் கூட, எதற்கெடுத்தாலும் கவர்னர் நந்தியா நிற்கிறாரேன்னு கடுப்பாக, தி.மு.க.வின் தோழமைக் கட்சியினர் கவர்னரின் போக்கிற்கு கடும் எதிர்ப்பினைக் காட்டி இருக்காங்க. அதேபோல் ஒட்டுமொத்த தமிழகமும் ராஜ்பவனுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் கவர்னர் அந்த மசோதாவைக் குறித்து எழுப்பிய சந்தேகங்கள் அர்த்தமற்றது என்கிற ரீதியில், அவருக்கு அரசு சார்பில் பதில் அனுப்பப் பட்டிருக்கிறது. மீண்டும் இதே மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கணும்னு முடிவெடுத்த முதல்வர், இதற்காக அமைச்சரவைக் கூட்டத்திலும் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்.''”
"மீண்டும் ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதாவை சட்டப் பேரவையில் வைத்து நிறை வேற்றி அனுப்பினால், அதை கவர்னர் ஏற்றுத்தானே ஆகணும்?''”
"ஆமாங்க தலைவரே, வரும் 20ஆம் தேதி கூட இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில், இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. ஒரே பொருள் குறித்து இரண்டாவது முறையாகவும் பேரவையால் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்படும் மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும். நிராகரிக்க முடியாது. ஆனால், ஏற்காமலும் நிரா கரிக்காமலும் மீண்டும் மசோதாவை அவரால் கிடப்பில் வேண்டுமானால் கொஞ்சநாள் போட முடியும். ஆனாலும் நீதிமன்றங்களின் கண்ட னத்தை அவர் எதிர்கொள்ளவேண்டி இருக்கும். ஒருவேளை கவர்னர் இந்தமுறை காலதாமதம் செய்யாமல் மசோதாவுக்கு ஒப்புதல் தரும் பட்சத் தில், சூதாட்டக் கும்பல், அரசுக்கு எதிராக நீதிமன் றம் போகலாம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால், நீதிமன்றத்தால் கூட தடை செய்ய முடி யாத அளவிற்கு அந்த மசோதாவை மிகக்கவன மாகத் தயாரித்துத் தாக்கல் செய்யப் போகிறது அரசு. அதேபோல் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் சபா நாயகர் ஓம் பிர்லாவிடம் தி.மு.க. மனு கொடுத்திருக் கிறது.''
"சரிப்பா, தயாராகி வரும் தமிழக பட்ஜெட்டில் வரிச்சுமை அதிகம் இருக்குமா?''”
"இப்போது இருக்கும் நிலையில் வரி உயர் வைச் செய்தால் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரும்னு முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். அதோடு, நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவிருப்பதால் 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வரி உயர்வு எதுவும் இருக்காது என்று கோட்டை அதிகாரிகளே சொல்கிறார்கள். முதல்வரின் உணர்வை அதிகாரிகளும் அமைச்சர் களும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே மிகக்கவனமாக, வரிச்சுமை இல்லாத வகையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தயாரித்து வருகிறா ராம். அதற்கான பணிகள் பரபரப்பா நடக்குது. இதற்கிடையே, சில முக்கிய துறைகளின் சார்பில், அதி ரடியாக சில சலுகை அறிவிப்பு களையும் 110 விதியின் கீழ் அறிவிக்க இருக்கிறாராம் ஸ்டாலின். எனவே, என்னென்ன சலுகைகளை, திட்டங் களை அறிவிப்பது என்பது குறித்து, அவர் உயரதிகாரிகளிடம் விவா தித்து வருவதாகவும் கோட்டைத் தரப்பு கூறுகிறது.”
"பா.ஜ.க.வுடன் வரிந்துகட்டும் அ.தி.மு.க.வினரை வருமான வரித்துறை குறிவைத் திருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, எடப்பாடிக்கும் பா.ஜ.க. அண்ணாமலைக்கும் இடையிலான உரசல் உலகறிந்த ரகசியம். இரு தரப்பும் மாறி மாறி எடப்பாடி, அண்ணாமலை உருவ பொம்மைகளை பரவலாக எரித்தனர். இந்த நிலையில் நடந்த, அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் பலரும் பா.ஜ.க.வுக்கு தக்க பதிலடி கொடுத்தாக வேண் டும்னு காட்டமாகப் பேச, எடப்பாடியோ, பா.ஜ.க.வினர் என்ன பேசினாலும் அவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார். காரணம், அ.தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறையை ஏவுவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறதாம். இது எடப்பாடி கவனத்துக்கு வந்ததால்தான் அவர் அடக்கி வாசிக்கச் சொல்லி இருக்கிறாராம். பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, பல ஆயிரம் கோடிகளை மந்திரிகளாக இருந்த வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கிறார்கள். அவர்களை வருமான வரித்துறை தனது ரெய்டுப் பட்டியலில் வைத்திருக்கிறது, அவர்கள் தொடர்பான ஆவணங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் இனி எங்களை எகிறமுடியாது' என்கிறார்கள் கூலாய்.''
"கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் தீவிரமாகிவிட்டதே?''”
"கொடநாடு கொலை கொள்ளை விவகா ரத்தை ஜூனுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு சென்றதால், அதன் விசாரணை தீவிரம் அடைந் திருக்கிறது. இந்த விவகாரத்தில் மாஜி முதல்வரான எடப்பாடிக்கு மிக நெருக்கமான பலரும் சம்பந் தப்பட்டிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. பிரிவு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக எடப்பாடியின் வலது கை போன்ற சேலம் இளங்கோவன் தொடங்கி மாஜி மந்திரி வேலுமணியின் அண்ணன் அன்பரசன், சஜீவன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் எடப்பாடியின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட இருக்கிறதாம். குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேகத்திலேயே சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சம்பவம் நடந்த ஜெ.வின் கொடநாடு பங்களாவில் இருந்த தங்கத்தால் ஆன 2 கிருஷ்ணர் சிலைகளை எடுத்ததாக காவல்துறை அதிகாரிகளான ஐ.ஜி.பாரி, முரளி ரம்பா ஆகியோர் மீதும் நடவடிக்கை பாய இருக்கிறதாம்.''”
"திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. சங்கர், ஆதங்கத்தில் இருக்கிறாரே?''”
"வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த திரு வொற்றியூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பின ராக இருப்பவர் கே.பி.பி. சங்கர். கடந்த ஆண்டு, இவர் ஏரியாவில் சாலை அமைக்கும் பணிகள் நடந்தபோது, அதிகாரிகளிடம் தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது எதிர்க் கோஷ்டியினரும் சந்தர்ப்பம் பார்த்து புகாரைக் கிளப்பினர். இதனால், அவரிடம் இருந்த திரு வொற்றியூர் பகுதிச் செயலாளர் பதவியை கட்சித் தலைமை பறித்தது. புதிய பகுதிச் செயலாளராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தகராறு தொடர்பாக மாநகராட்சி அதிகாரி தந்த புகாரில் எந்த இடத்திலும், எம்.எல்.ஏ. பணம் கேட்டு மிரட்டியதாக புகார் இல்லை. அரசு வகுத் துள்ள விதிகளின்படி சாலைகள் அமைக்கப் படாததை அவர் தட்டிக்கேட்டுத்தான் பிரச்சினை செய்தாராம். இது தி.மு.க. தலைமையின் கவனத் துக்கும் போய்விட்டது. இருந்தும், தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவியைத் தரவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் எம்.எல்.ஏ. இருக்கிறாராம். இது குறித்து அவர் அமைச்சர் உதயநிதியிடம் முறையிடப்போவதாகவும் சொல்கிறார்கள்.”
"ம.தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் சலசலப்பு எழுந்ததே?”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தபோது, ஈழப் பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கும் பதி லளித்தார். அப்போது திருமா, தமிழகத் தலைவர் கள் யாரையும் பிரபாகரன் நம்பவில்லை என்று கூற, அப்போது பேட்டி கண்டவர், வைகோவை கூடவா? என்று கேட்டார். அதற்கு பதில் சொல் லாமல் திருமா கடந்துவிட்டார். இது ம.தி.மு.க.வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி, வைகோவின் மகன் துரை வையா புரி, திருமாவின் கருத்தை மறுக் கும் வகையில் அறிக்கை வெளி யிட்டார். போதாக்குறைக்கு ம.தி. மு.க.வினர் சோசியல் மீடியாக் களில் திருமாவுக்கு எதிராக வரிந்துகட்டினர். பிரச்சினை தேவையிலாமல் பெரிதாவதைக் கண்ட திருமாவளவன், வைகோவை நேரில் சந்தித்தார். உங்களை நான் எந்த வகையிலும் விமர்சிக்கவில்லை. தவறாக நினைக்க வேண்டாம் என்று விளக்கம் கொடுத்தார். வைகோவும், உங்களை எனக்குத் தெரியாதா? எனக்கு உங்கள் மீது எந்த வருத்த மும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். வைகோவுடன் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவும் உடனிருந்தார். இப்போது எல்லா சலசலப்பும் அடங்கிவிட்டது.”
"நானும் ஒரு தகவலைச் சொல்லணும். கடந்த இதழில் மாநில தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணிகள் குறித்து நாம் பேசிக்கிட்டோம். அப்போது ஆணையத்தின் 4 ஆணையர் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர் கள் பற்றி பேசியபோது, வழக்கறி ஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பெயர் தவறுதலாக இடம் பெற்று விட்டது. இந்த செய்திக்கு அவர் மறுப்பும் தெரிவித்திருக்கிறார். (மேலும் 2016-ஆம் ஆண்டே அடிஷனல் ஏ.ஜி. பதவி வந்த போதே மறுத்ததாக வும், 5 வருடம் சசி கலா வழக்குகளுக்கு ஆஜராகி அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொடுத்துள் ளேன், எந்தப் பதவிக்கும் முயற்சி எடுக்கவில்லை எனவும் மறுக்கிறார்). தற்போது கவர்னருக்கு அனுப்பப்பட்டிருக்கும் புதிய தகவல் ஆணையர் களுக்கான பட்டியலில், ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், திருமலை முத்து, பிரியா குமார், டாக்டர் செல்வராஜ் ஆகியோர் பெயர் கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.''’
எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன்! பாராட்டுவிழாவில் முதல்வர் அதிரடி!
விசைத்தறிகளுக்கு 750-லிருந்து ஆயிரம் யூனிட்டாகவும், கைத்தறிகளுக்கு 200-லிருந்து 300 யூனிட்டாகவும் இலவச மின்சாரத்தை உயர்த்தி வழங்கியதற் காக, அத்தொழிலில் ஈடுபடுபவர்களும், விசைத்தறி தொழிற்சங்க கூட்டமைப்பினரும் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவை கோவை கருமத்தம்பட்டியில் 11ஆம் தேதி நடத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருந்தார். விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நான் என் கடமையைத்தான் செய்தேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா? என்று என்னை அழைத்தவர்களிடம் கேட்டேன். கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1953ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி "கைத்தறி ஆதரவு நாள்' என்று, நெசவாளர்களின் துணியை பேரறிஞர் அண்ணா திருச்சி வீதிகளிலும், தலைவர் கலைஞர் சென்னை வீதிகளிலும் விற்றுக் கொடுத்தார்கள். தமிழகம் முழுக்க ஒரு லட்சம் ரூபாய்க்கு தி.மு.க.வினர் விற்றுக் கொடுத்தார்கள். அப்போது ஒரு லட்சம் ரூபாய் என்பதை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.
மேற்கு மண்டலம் என்றால் சிலரது கோட்டை என்பார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அதைத்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி உணர்த்தியுள்ளது. மக்களை திசை திருப்ப சிலர் பொய்களை, வதந்திகளையும் பரப்புகிறார்கள் இதுபோன்ற எத்தனையோ பூச்சாண்டிகளைப் பார்த்தவன் நான். ஏனென்றால், நான் கலைஞருடைய மகன். எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன்'' என்றார்.