மிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற கேள்வி கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கும் நிலையில், கோட்டைக்குள் அமலாக்கத் துறையினர் நுழைய அனுமதித்த விவகாரம்தான் ஐ.ஏ.எஸ். வட்டாரங்களில் இன்னமும் சத்தமில்லாமல் புகைந்து கொண்டிருக்கிறது.

இந்த விவகாரம்தான் கோட்டையில் பர பரப்பாக இப்போதும் பேசப்பட்டு வரும் சூழலில், இது குறித்து நாம் விசாரித்தபோது,”அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், தலைமைச் செயலகத்தில் இருக்கும் அமைச்சரின் அறைக்குள்ளும் நுழைந்து தேடுதல் வேட்டையை நடத்தினர்.

secretary

தலைமைச்செயலகத்துக்குள் அவர்கள் நுழைவார்கள் என அரசு தரப்பும் சரி, ஆட்சி யாளர்களும் சரி, யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், அமைச்சரின் அலுவலகத்தில்தான் பல விஷயங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை ஏற்கனவே துப்பறிந்து வைத்திருந்தார்கள் அமலாக் கத்துறையினர்.

Advertisment

அதன் அடிப் படையில் கோட் டைக்குள் நுழை வதற்கும் ஒரு டீம் தயார் படுத்தப்பட்டிருந்திருக்கிறது. கோட்டைக்குள் நுழைந்த அவர்கள், அமைச்சரின் அலுவலகத்துக்கு சென்ற போது, அங்கிருந்த உதவியாளர்கள், எவ்வித ஆர்டரும் இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்திருக்கிறார்கள். இதனால், தலைமைச் செயலாளரிடம் அமலாக்கத்துறையினர் பேசியிருக்கிறார்கள்.

பொதுத்துறையின் மூலமாகத்தான் அனுமதி பெற முடியும் என்பதால், அத்துறையின் இன்சார்ஜ் செக்ரட்டரியாக இருக்கும் ஜெகன்னாதனிடம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அனுமதி கிடைத்ததும், அமைச்சரின் அறைக்குள் நுழைந் துள்ளனர். குறிப்பாக, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் கமிஷனராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மதிவாணன் ஐ.ஏ.எஸ்., மாதந்தோறும் அமைச்சரிடம் கொடுத்த ரிப்போர்ட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.

மதிவாணன் கொடுத்துள்ள விபரங்களை வைத்து அவரிடமும், அவரது ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ள அமலாக்கத்துறை, விரைவில் அவர்களை தங்களின் வளையத்துக்குள் இழுக்க ஆலோசித்துள்ளனர்.

Advertisment

அன்றைய தினம், காலையில் முதல்வரின் நிகழ்ச்சி ஒன்று தலைமைச்செயலகத்தில் இருந்தது. அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோட்டையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் கிளம்பும் வரை காத்திருந்து அதை உறுதிசெய்து கொண்ட பிறகே கோட்டைக்குள் நுழைந் துள்ளனர். அதனால், கோட்டைக் குள் நுழைய அமலாக்கத்துறைக்கு அனுமதி தந்தது யார்? என்கிற கேள்விகள்தான் கோட் டைக்குள் இப்போ தும் இருக்கின்றன என்கிறது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பு.

stalin

இப்படிப்பட்ட சூழலில்தான், புதிய தலைமைச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டா லின். தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்த மாதம் ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி அவரையே தலைமைச் செயலாளராக வைத்திருக்க லாமா? என்றும் முதல்வர் ஆலோசித்திருக்கிறார். ஆனால், பணி நீட்டிப்பை இறையன்பு விரும்பவில்லை. அதனால், அவரது பணி ஓய்வினை ஏற்றுக்கொள்ளும் முதல்வர், பணி ஓய்வுக்குப் பிறகு அரசின் ஆலோசகராக அவரை நியமிக்கலாமா? என்றும் விவாதித்திருக்கிறார். இந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது குறித்து தமிழக அரசிடம் இன்னும் க்ளியர் பிக்சர் கிடைக்கவில்லை. இந்த வாரத்தில் அதற்கு முடிவு தெரிந்துவிடும். தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

தமிழக அரசில் 330 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கின்றனர். இவர்கள் சப் கலெக்டர் முதல் கூடுதல் தலைமைச் செயலாளர் என்பது வரை பல்வேறு படிநிலைகளில் உள்ளனர். கூடுதல் தலை மைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்களில் இருந்துதான் ஒருவரை தலைமைச் செயலாளராக தேர்வு செய்ய முடியும். அந்த வகையில், தற்போது 1986 பேட்ஜ் முதல் 1992 பேட்ஜ் வரையிலான 29 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கூடு தல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கின்றனர்.

அதாவது, 1986 பேட்ஜில் ஹன்ஸ்ராஜ் வர்மா, 1987-ல் டி.வி. சோமநாதன், 1988-ல் விக்ரம்கபூர், அதுல்யமிஸ்ரா, ஜித்தேந்திரநாத்ஸ்வைன், 1989-ல் கிருஷ்ணன், ராஜா ராமன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, நசிமுதீன், சிவ்தாஸ்மீனா, அனிதாப்ரவீன், 1990-ல் விபுநாயர், பனீந்திரரெட்டி, சாய்குமார், டி.எஸ்.ஜவஹர், 1991-ல் டி.கே.ராமச்சந்திரன், கோபாலகிருஷ் ணன், முருகானந்தம், ரமேஷ்சந்த்மீனா, சந்திரகாந்த்காப்ளே, சுப்ரியாசாகு, 1992-ல் டாக்டர் ராதாகிருஷ்ணன், நீரஜ்மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத்ராம்சர்மா, ப்ரதீப்யாதவ், குமார்ஜெயந்த், டாக்டர் கோபால் ஆகிய 29 பேர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கிறார்கள்.

இந்த 29 பேரில் சோமநாதன், ஜித்தேந்திர நாத்ஸ்வைன், ராஜாராமன், அனிதாப்ரவீன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மத்திய அரசுப் பணியிலும், டி.கே.ராமச்சந்திரன் தூத்துக்குடி துறைமுக கழகத்தின் சேர்மனாகவும் இருக்கின்றனர். இந்த 6 பேரை தவிர்த்துப் பார்த்தால் 23 பேர் நேரடிப் போட்டியில் இருக்கின்றனர்.

தலைமைச் செயலாளர் தேர்வில் சீனியர்- ஜூனியர் என்ற பாகுபாடுகள் இருப்பதில்லை. ஆனால், சீனியராகவும் நிர்வாகத் திறமைமிக்கவ ராகவும் இருப்பவரை தேர்வு செய்வதுதான் நடைமுறையாக இருக்கிறது. இந்த விசயத்தில், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தலைமைச் செயலாளரை மிக கவனமாக தேர்வு செய்திருக் கிறார் கலைஞர். காரணம், திறமை மிக்கவராக இருப்பதினாலேயே ஒரு ஜூனியரை நியமித்தால் சீனியர்களிடம் வேலை வாங்குவது கடினமாக இருக்கும். அதனாலே சீனியாரிட்டியும் இருக்கவேண் டும். திறமை மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

secretary

தலைமைச்செயலாளர் தேர்வு குறித்து ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசியபோது, "நிர்வாகத் திறமை என்பது அரசாங்கத்துக்கு மிக முக்கியம். வெறும் கோப்பு களைப் பார்த்து கையெழுத்து போடுவது மட்டுமல்லாமல், ஆட்சிக்கும் முதல்வருக்கும் நெருக்கடியான பல சூழல்கள் உருவாகும்போது அதனை தீர்த்து வைக்கும் ஆற்றல், மத்திய அரசிடம் கமாண்டிங்காக பேசும் தொடர்பு, அதிகாரிகளிடம் வேலை வாங் கும் திறன், ஆட்சியாளர்களுக்கும் அரசியல் கட்சியினருக்கும் பால மாக இருத்தல், சமயோஜிதமாக முடிவுகளை எடுத்து முதல்வருக்கு சொல்லும் திறன் ஆகியவையே தலைமைச் செயலாளருக்குரிய திறமையாகப் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்டவரையே கலைஞர் விரும்பியிருக்கிறார்.

தற்போதைய அரசியல் சூழல்களில், தி.மு.க. அரசுக்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பல அஸ்திரங்களை வீசிக்கொண்டி ருக்கிறது. இதனை எதிர்கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், கலைஞருக்கு முரசொலி மாறன் இருந்தமாதிரி டெல்லி லாபியை செய்ய ஸ்டாலினுக்கு யாரும் இருக்கவில்லை. அவர் சிலரை நம்பினார். ஆனால், பலனளிக்கவில்லை. பலனளித் திருந்தால் இந்த ரெய்டு, கைது எல்லாம் நடந்திருக்காது. அவரை சுற்றியிருக்கும் அதிகாரிகளுக்கு டெல்லி தொடர்பு சுத்தமாக இல்லை. வெறும் வாய்ஜாலம் காட்டியே முதல்வரை மயக்கி வைத்திருக்கிறார்கள்.

முதல்வருக்கு நெருக்கடிகள் உருவாகாமலும், அப்படியே உருவானால் அது தீவிரமடை யாத வகையில் தீர்த்து வைக்கவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிகாரிகள் அவருக்கு பக்கத்தில் இல்லை. தற்போது தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள கடினமான இந்த சூழல்களில் யார் உதவுவார்கள்? யோசித்தால் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை. கவர்னரை சமாளிப்பதில்கூட அதிகாரிகள் தோற்றுப்போகி றார்கள்.

அதனால் இனியாவது முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் புதிய தலைமைச் செயலாளரை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தேர்வு செய்வது நிர்வாகத்துக்கு நல்லது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதி காரிகள்.

___________

இறுதிச் சுற்று!

மைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா, தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ள னர் என்று தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (22/06/2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் நிஷாபானு, பரதசக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, செந்தில்பாலாஜி சார்பில் ஆஜரான தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்திருக்கிறார்கள். சட்ட விரோத கைதாக இருந்தால் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யலாம். சட்டவிரோத கைது என்பதால் ஆட்கொணர்வு மனுவுக்கு உகந்தது தான்'' என்று உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதங்களை முன்வைத்தார். தொடர்ந்து வாதம் செய்த அவர், "சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடை முறைகளைப் பின்பற்றியே கைது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்; கைதுக்கான காரணங்கள் தெரிவிக் கப்பட வேண்டும். இது அடிப்படை உரிமை என பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் வழக்கில் உச்சநீதி மன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது, ஆனால், செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.

ff

ஒருவரை கைது செய்யும்போது 41 ஏ பிரிவை விசாரணை அமைப்புகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதையும் அமலாக்கத்துறை கடைப்பிடிக்கவில்லை" என்று பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதிட்டார் என்.ஆர்.இளங்கோ. அப்போது, ஜாமீன் மனு மீதான விசாரணையில் முன்வைக்க வேண்டிய வாதங்களை ஆட்கொணர்வு மனுவில் முன்வைக் கிறார் என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரி வித்தார். இரு தரப்பிலும் காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

- இளையர்