தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் செல்வப்பெருந்தகை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மறைந்த கக்கன், மரகதம் சந்திரசேகர், இளைய பெருமாள் ஆகியோரைத் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதே சமூகத்தைச் சேர்ந்த செல்வப் பெருந்தகை காங்கிரசின் தலைவராக நியமிக்கப் பட்டிருப்பதை பலரும் உன்னிப்பாகக் கவனிக் கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நியமிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிய திருக்கும் என்கிறார்கள் கதர்சட்டையினர்.
இந்த நிலையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
தேசிய கட்சியின் தலைவராக நியமிக்கப் பட்டிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் எங்கள் தலைவர் ராகுல்காந்தி. இதனை பதவியாக நினைக்கவில்லை... பொறுப்பாக நினைக்கிறேன். பெருமிதமாக உணர்கிறேன். அன்னை சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றி.
கே.எஸ்.அழகிரியின் பதவிப் பறிப்புக்கு பிரத்யேகமான காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறதே?
எந்த ஒரு காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தலைவராகப் பொறுப்பேற்று ஐந்தாண்டு காலத்தை அவர் நிறைவு செய் திருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 14-ந்தேதி அவர் தலைவரானார். பிப்ரவரி 16-ல் தலைவராக என்னை நியமித்திருக்கிறது கட்சி மேலிடம். 2 நாள் வித்தியாசம்தான் காரணம்.
மாநில காங்கிரஸ் தலைவருக்கு பெரும்பாலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடம் தருவதில்லை. அந்த அதிகாரமும், சுதந்திரமும் உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறீர்களா?
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நான் நியமிக்கப்பட்டபோது, கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என எனக்கு நம்பிக்கை கொடுத்தார் ராகுல்காந்தி. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் நான் சுதந்திரமாகத்தான் இயங்கி னேன். எந்த மேலிடமும் அதிகாரம் செலுத்த வில்லை. அதேபோல இப்போது தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுதந்திரமாக செயல்படுங்கள்; கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்த அனைத்து அதிகாரங்களும் உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப சுதந்திரமாக பணி செய்யுங்கள் என அறிவுறுத்தி யுள்ளார் ராகுல்காந்தி.
காங்கிரசில் முதல்கட்டமாக நீங்கள் செய்யவேண்டிய பணிகள் என எதை திட்டமிடுகிறீர்கள்?
சோனியா, ராகுல், கார்கே ஆகியோரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எனது முதல்கட்டப் பணிகள் இருக்கும். தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்சி இன்னும் உயிர்ப்புட னும் உயிரோட்டத்துடனும் இருக்கிறது. அதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் கட்ட மைப்பை உருவாக்குவேன். காங்கிரசுக்காக உழைத்தவர்கள், தூக்கி நிறுத்தியவர்கள் ஏராள மானோர் ஒதுங்கி நிற்பதைப் பார்க்கிறேன். அவர் களை ஒருங்கிணைத்து அவர்களது வழிகாட்டு தல்களுடன் கட்சியின் வளர்ச்சியை நிரூபிப்பதே என் முதல் நோக்கம். தொண்டர்களின் கனவும் இதுதான். அதனை நிறைவேற்றுவேன்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது, காங்கிரசின் வியூகம் என்ன?
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் தலை வரும், முதல்வருமான மு.க. ஸ்டா-னின் தலைமையில் எங்கள் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற் கான வியூகத்தை வகுக்கவிருக்கிறோம். அது சாதாரணமான வெற்றியாக இல்லாமல், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கூட்டணியின் நாற்பது வேட்பாளர்களும் ஜெயிக்கும் அசாத்திய சாதனையாக அந்த வெற்றி இருக்கும். அதற்கான எங்களின் வியூகம் எப்படி இருக்கிறது என்பதை தேர்தல் களம் சொல்லும்.
தேர்தல் நேரத்தில் தலைவராக நியமிக்கப்பட்டி ருப்பதால் பல்வேறு சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என்கிறார்களே?
இந்த தேர்தலில் கட்சிக்கோ, எனக்கோ எவ்வித சவால்களும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த தேசத்திற்குத்தான் பெரிய சவால் இருக்கிறது. அதாவது, பாசிச பா.ஜ.க.வையும் அதன் கூட்டணி சக்திகளையும் வேரோடு மண்ணாக புதைக்க வேண்டிய சவால் மக்களுக்கு இருக்கிறது. மக்களோடு இணைந்து எங்கள் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த சவால்களை முறியடிப்பார். காங்கிரஸ் கட்சி அதற்கு துணை நிற்கும்!
காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடுகள் இன்னும் முடியாமல் இழுபறியாகவே இருக்கிறதே?
முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. எங்களின் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறோம். தி.மு.க. தங்களின் நிலையைச் சொல்லியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஒரே இரவுக்குள் பங்கீடுகளை முடிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லையே. விரைவில் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசவிருக்கிறோம். அப்போது தொகுதிப் பங்கீடுகள் சுமுகமாக முடியும். இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை.
தி.மு.க. கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டா?
கூட்டணியின் தலைவரான முதல்வருக்குத் தான் அது தெரியும். பல்வேறு கட்சிகளும் பேசுவதாக அறிகிறோம். ஆனால், கூட்டணியில் புதிய கட்சியை சேர்ப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார். புதிய கட்சிகள் இணையும்பட்சத்தில் அதனை எங்களுக்கு அவர் தெரிவிப்பார்.
தி.மு.க. கூட்டணியை முறித்துக்கொண்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்துவிடும் என்கிற எதிர்பார்ப் பில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக சொல்லப் படுகிறது. தொகுதிப்பங்கீடுகள் கௌரவமாக இல்லை எனில் கூட்டணியை காங்கிரஸ் உடைக்கும்தானே?
எடப்பாடியின் கனவு வெறும் பகல் கனவாகத்தான் முடியும். இலவு காத்த கிளிபோல காத்திருந்து காத்திருந்து அவர் ஏமாறுவார். தி.மு.க.லிகாங்கிரஸ் கூட்டணி எஃகு கூட்டணி; அந்தளவுக்கு உறுதியானது. தொகுதிப் பங்கீடுகளில் எந்த உரசலும் வராது. பங்கீடுகளில் தி.மு.க. எங்களிடம் திறந்த மனதோடும் பெருந்தன்மையாகவும் இருக்கிறது. அதனால் கூட்டணி உடையாது; உடைக்க வேண்டிய சூழலும் கிடையாது. கூட்டணி உடையாதா என ஏங்கும் பாசிச சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுப்பார் முதல்வர் ஸ்டாலின்.