காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தி, ஏற்கெனவே கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டது காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியை ஏற்படுத்தியதோடு, ராகுல் காந்திக்கு இருந்த எலைட் தோற்றத்தை மாற்றி மக்கள் தலைவராக, எளிமையானவராக அனைவரையும் ஏற்க வைத்தது. இந்திய மக்களின் உள்ளார்ந்த அன்பையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் பற்றிய புரிதல் கிடைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அவரது உணர்வுப்பூர்வமான பேச்சுக்களைக் கேட்டபின்னர், ராகுல் காந்தியை பப்பு என்றும், இளவரசர் என்றும் கிண்டலடித் தவர்கள் திகைத்துப்போயிருக் கிறார்கள். மேலும் இந்த நடை பயணம், அரசியல்ரீதியாக, இமாச்சல் பிரதேசம், கர்நாடகம் மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது.

raghul

இந்நிலையில் தனது நடை பயணத்தின் அடுத்த வெர்சனாக பாரத ஒற்றுமை நியாய நடை பயணத்தை இந்த ஆண்டு ஜன வரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இன்றுவரை பிரதமர் மோடி காலெடுத்து வைக்கவே அஞ்சக்கூடிய மாநில மாக மணிப்பூர் உள்ளது. அங்கே தற்போதுவரை பொது மக்களிலிருந்து ராணுவ வீரர்கள் வரை உயிருக்கு அஞ்சியே வாழக்கூடிய நிலை உள்ளது. இப்படி யான சூழலில், அம் மக்களுக்கு நம்பிக்கையும், ஆறுதலும் அளிக்கும் வகையில் தனது நடைபயணத் தை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் நிறைவுசெய்யத் திட்டமிட்டார் ராகுல்காந்தி. மொத்தம் 15 மாநிலங்களிலுள்ள 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றத் தொகுதி களின் வழியாக, பேருந்து, ஜீப் மற்றும் நடைபயணமாக 66 நாட்கள் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டு, வெற்றிகரமாகத் தனது நடைபயணத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.

ராகுல் காந்தியின் நடை பயணத்துக்கு மேற்கு வங்கத்தில் மட்டுமே மம்தா எதிர்ப்பாக செயல்பட்டார். மற்ற மாநிலங் களில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ராகுல் காந்தியோடு கரம்கோர்த்தனர். குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவுடன் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் வரலாறு காணாத அளவில் பொதுமக்கள் கலந்துகொண்டது, யோகியையே மிரட்டியுள்ளது. அதேபோல், பீகாரில் தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தியை தனது ஜீப்பில் அழைத்துச் சென்று வரவேற்பளித்தார். அங்கு இருவரும் இணைந்து கலந்துகொண்ட பொதுக்கூட்டத்திலும் பிரமாண்டமாக மக் கள் திரண்டனர். ராகுல் காந்தி தனது பயணத் தின் இடையே பள்ளி, கல் லூரி மாணவர்கள் மத்தியிலும், விவசாயிகள், பெண்கள் மத்தியிலும் உரையாடியது பெருத்த வரவேற்பையும், ராகுல் காந்திமீதான எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.

இந்நிலையில், ராகுன் நடைபயணம், தேர்தல் காரண மாக திட்டமிட்டதைவிட முன்னதாக, மார்ச் 17ஆம் தேதியே மும்பை சிவாஜி பூங்காவில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற் கும் பிரமாண்ட பொதுக் கூட்டமாக நிறைவடைய வுள்ளது. இந்த பொதுக் கூட்டம், இந்தியா கூட்டணியின் வெற் றிக்கான அச்சாரமாக அமையுமா என் பதை காலம் சொல்லும்!