ராங்கால்! உள்ளடி வேலை செய்த 8 மந்திரிகள்! உளவுத்துறை ரிப்போர்ட்! எடப்பாடி - வேலுமணி மோதலை தீவிரமாக்கிய பா.ஜ.க.!

ss

"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றிருக்கிறார்.''”

"ஆமாம்பா, செய்திகளில் பார்த்தேன்.''”

"ஓய்வில்லாமல் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அவர் கொஞ்சம் ஓய்வெடுத்தாக வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதையொட்டியே அவர் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குச் சென்றிருக்கிறார். ஒருவாரம் வரை அவர் அங்கு தங்கியிருக்கத் திட்டமிட்டிருக்கிறார். இந்த ஓய்வு நேரத்திலும், உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு, தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் தான் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து, அவர் சிலரோடு விவாதிக்க இருக்கிறாராம். குறிப்பாக, தேர்தலில் கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்ட அமைச்சர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என்கிற பேச்சு, முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்திலேயே அடிபடுகிறது.''”

"அப்படிப் பார்த்தால் உளவுத்துறை, உள்ளடி பார்த்த அமைச்சர்கள் என்று 8 பேரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறதே?''”

ss

"உண்மைதாங்க தலைவரே, 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றித்திசையில் இருப்பதாக முதல்வருக்கு அண்மையில் மாநில உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. எனினும் சிலரின் உள்ளடி வேலை களால் தி.மு.க.வின் வாக்கு சதவீதம் குறைவதோடு, எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கூடுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட சுமார் 8 தொகுதிகளில் இருக்கும் மாவட்ட அமைச்சர்களின் தேர்தல் செயல்பாடுகள் சரியில்லை என்று அது குறிப்பிட்டிருக்கிறதாம். குறிப்பாக, அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட அமைச்சரும் அவரது மகனும் அங்கே களமிறங்கிய வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகளைத் தூண்டிவிட்டதோடு, தேர்தல் வேலையில் அக்கறை காட்டவில்லை என்றும் அதில் அழுத்தமாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இதே தொனியில் முதல்வ ருக்கு புகார் அனுப்பிய ஜெகத்தின் ஆதர வாளர்கள், அந்த அமைச்சரின் மகனுக்கு சீட் தரப்படாததால். அவர் உள்ளடி வேலையில் இறங்கியதா

"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின், குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றிருக்கிறார்.''”

"ஆமாம்பா, செய்திகளில் பார்த்தேன்.''”

"ஓய்வில்லாமல் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அவர் கொஞ்சம் ஓய்வெடுத்தாக வேண்டும் என்று அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதையொட்டியே அவர் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குச் சென்றிருக்கிறார். ஒருவாரம் வரை அவர் அங்கு தங்கியிருக்கத் திட்டமிட்டிருக்கிறார். இந்த ஓய்வு நேரத்திலும், உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு, தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் தான் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து, அவர் சிலரோடு விவாதிக்க இருக்கிறாராம். குறிப்பாக, தேர்தலில் கட்சிக்கு விரோதமாக நடந்துகொண்ட அமைச்சர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும் என்கிற பேச்சு, முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்திலேயே அடிபடுகிறது.''”

"அப்படிப் பார்த்தால் உளவுத்துறை, உள்ளடி பார்த்த அமைச்சர்கள் என்று 8 பேரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறதே?''”

ss

"உண்மைதாங்க தலைவரே, 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றித்திசையில் இருப்பதாக முதல்வருக்கு அண்மையில் மாநில உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. எனினும் சிலரின் உள்ளடி வேலை களால் தி.மு.க.வின் வாக்கு சதவீதம் குறைவதோடு, எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கூடுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட சுமார் 8 தொகுதிகளில் இருக்கும் மாவட்ட அமைச்சர்களின் தேர்தல் செயல்பாடுகள் சரியில்லை என்று அது குறிப்பிட்டிருக்கிறதாம். குறிப்பாக, அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட அமைச்சரும் அவரது மகனும் அங்கே களமிறங்கிய வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக மாவட்ட நிர்வாகிகளைத் தூண்டிவிட்டதோடு, தேர்தல் வேலையில் அக்கறை காட்டவில்லை என்றும் அதில் அழுத்தமாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இதே தொனியில் முதல்வ ருக்கு புகார் அனுப்பிய ஜெகத்தின் ஆதர வாளர்கள், அந்த அமைச்சரின் மகனுக்கு சீட் தரப்படாததால். அவர் உள்ளடி வேலையில் இறங்கியதாக குற்றம்சாட்டியிருக்கிறார்களாம். இதையெல்லாம் பார்த்த ஸ்டாலின், முகம் சிவந்துபோனாராம்.''”

"மோடி, தன்னோட ராஜஸ்தான் பேச்சுல இஸ்லாமியர்களுக்கு எதிரா தவறான தகவல் களைப் பரப்பியிருப்பதோடு, காங்கிரஸையும் மட்டம் தட்டிப் பேசியிருக்காரே''…”

"ஆமாங்க தலைவரே, இந்தியாவின் வளங்களெல்லாம் கூடுதலாகக் குழந்தை களைப் பெற்றுக்கொள்கிற இஸ்லாமியர்களுக்கு போய்ச் சேர்கிறது. இந்தியாவின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முன்னுரிமை என்று மன்மோகன்சிங் பேசியதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக் கள், தாலி உட்பட தங்கம் வரை பிடுங்கி முஸ்லிம்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிடும் என்று பேசியிருக்கிறார். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகளும் கண்ட னங்களும் எழுந் திருக்கின்றன. இந்தியா விடு தலை பெற்ற பிறகு முதன் முறையாக 1951-ல் எடுக் கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி மொத்த மக் கள் தொகை யான 36 கோடி யில் இஸ்லா மியர்களின் மக்கள்தொகை 9.8 கோடி. 2011-ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டு 2015-ல் அறிவிக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இஸ்லா மியர் மக்கள்தொகை 17.2 கோடி. 60-க்கும் அதிகமான ஆண்டு களில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 7 கோடிதான் அதிகரித்திருக்கிறது. அதாவது, காங்கிரஸை முஸ்லிம் ஆதரவுக் கட்சியாக அடை யாளப்படுத்துதல், இந்துக்களின் சொத்துக் களைப் பிடுங்கி இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடும் என்று பாமர மக்களிடம் பயத்தை உண்டுபண்ணுதல் என்ற இரட்டைச் சூழ்ச்சி பிரதமரின் பேச்சில் இருப்பதை அடையாளம் கண்டு பலரும் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இத்தனை வெளிப்படையாக பிரதமர் மதரீதியாகப் பேசிய பிறகும் தேர்தல் ஆணையம் மோடியின் பேச்சுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பரவலாக நாடுமுழுவதும் கண்டனங்களும் எதிர்க்குரலும் எழுந்தபிறகும் தேர்தல் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் பா.ஜ.க. தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதைப் பார்த்து பலரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.''

"இதேபோல் அந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகிக்கு எதிராக, சொந்தக் கட்சியிலேயே ஒரு சூறாவளி எழுந்துகொண்டிருக்கிறதே?''”

"தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் செலவுக் காக டெல்லி 1000 கோடி அளவிற்குக் கொடுத்திருந்ததாம். இதை மாநிலப் பொறுப்பில் இருக்கும் அந்த நபர், சரிவர உரியவகையில் வேட்பாளர்களுக்கும் தொகுதி நிர்வாகிகளுக்கும் விநியோகிக்கவில்லை என்று எல்.முருகனும், தமிழிசையும் கட்சித் தலைமையிடம் புகார் வாசித்திருக்கிறார் களாம். இதேபோல் தொகுதிகள் தோறும் உள்ள அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் புகார் எழுப்பிவருகின்றனர்.''

இந்த நேரத்தில் பா.ஜ.க.வின் கே.டி.ராகவனும், அந்த மாநில நிர்வாகி தனது செல்போன்களை ஒட்டுக்கேட்பதாக டெல்லியிடம் முறையிட்டிருக்கிறாராம். இப்படிப்பட்ட பிரச்சினைகளால், நிலைமை தனக்கு எதிராக ஒரு பெரும் சூறாவளியைப் பதுக்கி வைத்திருப்பதை உணர்ந்த அந்த பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி, நடக்க இருந்த தேர்தல் ஆய்வுக் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டாராம்.''”

"தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர்னு டெல்லிக்கு போயிருக்காரே?''”

governor

"தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த மறுநாளான 20ஆம் தேதியே கவர்னர் ரவி டெல்லி விரைவதாக ஒரு தகவல் பரவியது. பின்னர் அது உண்மையில்லை என்று தெரியவந்தது. இதன்பின் 28ஆம் தேதி காலையில் அவர் 3 நாள் பயணமாக டெல்லிக்குச் சென்றார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக அவர் டெல்லி சென்றதாக ராஜ்பவன் வட்டாரங்கள் கூறினாலும், டெல்லியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த அவசரப் பயணத்தை மேற்கொண்டதாக முக்கியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவின்போது ஓட்டுப் போட்டுவிட்டு வந்தவர்களின் மனநிலை குறித்து அறிய விரும்பிய கவர்னர், அந்தப் பணியை ஒரு டீமிடம் ஒப்படைத்திருந்தாராம். அந்த டீமும், இது குறித்த கணிப்பை எழுதி கவர்னரிடம் ரிப்போர்ட்டாகத் தந்திருக்கிறது. அந்த ரிப்போர்ட்டைத்தான் டெல்லி நேரில் எடுத்துக்கொண்டு வரும்படி அவருக்கு உத்தரவிட்டிருந்ததாம். அதை நேரில், பிரதமர் மோடியிடம், கவர்னர் ஒப்படைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.''”

"வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்ததாக உதகையில் இருந்து தகவல்கள் வருகிறதே?''”

"வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 5 அடுக்குப் பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதோடு, அவற்றை அனைத்து அரசியல் கட்சி ஏஜண்டுகளும் சி.சி.டி.வி. கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில், நீலகிரி தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து போக, இதனால் அரசியல் கட்சிகளின் ஏஜண்டுகள் பதறிப்போனார்கள். இது பா.ஜ.க. வேட்பாளரான எல்.முருகன் கவனத்துக்கும் போக, அவரும் இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் விசாரித்துக்கொண்டிருந்த நிலையில்... நீலகிரி ஆட்சியர் அருணாவோ, "காட்சிகள் பதிவாகும் பெட்டி, அதிகமாகச் சூடானதால் இந்தக் கோளாறு ஏற்பட்டது' என்று விளக்கம் அளித்தார். சம்பவ இடத்தில் இருந்த கட்சிப் பிரதிநிதிகளுக்கு அங்கிருந்த அதிகாரிகள், நிலைமையை விளக்கியதோடு, விடுபட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட பதிவுகளைத் தனியே காட்டி, அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்குள் இந்த செய்தி மின்னல் வேகத்தில் பரவி, பல் வேறு வதந்திகளுக்கு வித்திட்டுவிட்டது என்கிறார்கள்.''”

"தேர்தல் ஆணையத்துக்கு தமிழக எம்.எல். ஏ.க்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே?''”

"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது நடைமுறைக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள், ஜூன் 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் நீக்கப்படும். அதுவரை எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் தேர்தல் ஆணையத்தால் மூடப்பட்டுவிடும். அந்த வகையில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் அலுவலகங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதுவரை தங்கள் பணிகளைச் செய்யாமல் எப்படி இருப்பது என்கிற கேள்வியுடன், தமிழக எம்.எல்.ஏ.க்கள் பலரும் ’தேர்தல் முடிந்து விட்டதால் எங்கள் அலுவலகங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும். இதனால் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதில் என்ன முடிவு எடுப்பது என தெரியாத சாஹு, இதை இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தங்கள் அலுவலகங்களை திறக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா? என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது எம்.எல்.ஏ.க்கள் தரப்பு.''

"எடப்பாடிக்கு எதிரான அதிரடிக்கு மாஜி மந்திரி வேலுமணி தயாராகிவிட்டார் என்கிறார் களே?''”

dd

"உண்மைதாங்க தலைவரே, இப்போது வேலுமணியை முழுதாக கையில் எடுத்திருக்கிறதாம் பா.ஜ.க. இதற்கு முழுமையாக வேலுமணி உடன்பட்டதற்குக் காரணம், எடப்பாடியுடன் ஏற்பட்ட மோதல் தானாம். எடப்பாடி இவரிடம், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளின் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்து, நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, பா.ஜ.க. கரையேறிவிடக் கூடாது. அதைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றாராம். ஆனால் கடைசி நேரத்தில் இவரை டெல்லி கையில் எடுத்துக்கொண்டதால், பா.ஜ.க. தரப்பிற்காக வேலை செய்த வேலுமணி, களப்பிரச்சாரத்தில் இருந்த சிங்கை ராமச்சந்திரன் போன்ற வர்களையும் ஆஃப் செய்துவிட்டாராம். இதையறிந்த எடப்பாடி, வேலுமணி யைக் கடுமையாகக் கண்டித்ததோடு, ரிசல்ட் சரியாக வரவில்லை என்றால், கட்சிப்பதவி அல்லது சட்டமன்றக் கொறடா பதவி இவற்றில் ஒன்றை நீங்கள் இழக்க நேரும் என்று சொல்ல, கடுப்பான வேலுமணி டெல்லியைத் தொடர்புகொண்டு, எடப்பாடியை விட்டு வெளியே வர நான் தயார். சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இதுகுறித்து முக்கியமானவர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்று சொன்னாராம். இதைத் தொடர்ந்து ஜூன் 4-க்குப் பிறகு சசிகலா. தினகரன், வேலுமணி ஆகியோர் மூலம் அ.தி.மு.க.வே பிளவு படும் வகையில் பெரும் கலகத்தை அரங்கேற்ற இருக்கிறதாம் பா.ஜ.க''.”

"எனக்கு வந்த ஒரு முக்கியமான தகவலையும் நான் பகிர்ந்துக்கறேன். தமிழகத்தில் பரவலாக அ.தி.மு.க. வேட்பாளர்கள், கட்சித் தலைமை தேர்தலுக்காகக் கொடுத்த கோடிக்கணக்கான பணத்தை சரியாகச் செலவு செய்யவில்லை என்கிற ரிப்போர்ட் எடப்பாடிக்குப் போயிருக்கிறது.குறிப்பாக அவர் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளிலும் சரிவர கரன்சிப்பாசனம் நடக்க வில்லையாம். இதனால் ஷாக்கான அவர் வேட் பாளர்களின் செலவுக்கணக்கு தொடர்பான ஃபைல்களை வாங்கி இருக்கிறாராம். அந்த கணக்குகளை அவரது ஆடிட் டீம் இப்போது தீவிரமாக சரிபார்த்துக்கொண்டிருக்கிறது.''

nkn010524
இதையும் படியுங்கள்
Subscribe