ராங்கால் ராமர் Vs மாநில சுயாட்சி! -ரெடியான தேர்தல் வியூகங்கள்! தி.மு.க. எம்.எல்.ஏ.மகன் வீட்டில் சிறுமி சித்திரவதை! க்குக் கொடுமை?

rr

"ஹலோ தலைவரே, ஒரு பக்கம் சேலத் தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு, இன்னொரு பக்கம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபி சேகம்னு எல்லாப் பக்கமும் பரபரப்பா இருக்கு.''”

"ஆமாம்பா, ராமர் கோயில் விவகாரத்தை தேர்தல் பிரச்சாரமா பா.ஜ.க. கையில் எடுக்குதே?''”

rang

"உண்மைதாங்க தலைவரே, ராமரை பிரச்சார ஆயுதமாக பா.ஜ.க. கையில் எடுத் திருக்கும் நிலையில் இங்கே நீட் விவகாரத்தையும் மாநில சுயாட்சி கோரிக்கையையும் தனது பிரச்சார ஆயுதமாக கையில் எடுக்கும் திட்டத்தில் தி.மு.க. இருக்கிறது. சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த நிலையில் கட்சியின் சீனியர்களோடு பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சி விவகாரத்துக்கு இன்று தேவையும், மக்களிடம் பெரும் மதிப்பும் இருக்கிறது. எனவே, எல்லா வகையிலும் மாநில உரிமைகளை நசுக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முகமூடியை இந்தத் தேர்தலில் நாம் கிழித்தாக வேண்டும். அதேபோல் மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு கொள்ளி வைக்கும் நீட் விவகாரத்தை யும் பிரச்சாரத்தில் பிரதானமாக வைத்து, பா.ஜ.க. வினருக்கு தேர்தலில் பலமாக அடிகொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம்.''”

"தன்னை வரவேற்க சென்னை சாலைகளில் திரண்டிருந்த கூட்டத்தில் தி.மு.க. கொடிகள் அதிகமாய் இருப்பதைப் பார்த்து பிரதமர் மோடி திகைத்துப் போனாராமே?''”

"அதுபற்றிச் சொல்றேங்க தலைவரே, மோடி சென்னை வந்த போது, அவரை முதல்வர் ஸ்டாலின், ஏர்போர்ட் அல்லது ஐ.என்.என் அடையாறு ஹெலிகாப்டர் தளம் ஆகிய இரண்டில் ஓர் இடத்தில் வரவேற் பார் என்று முதலில் சொல்லப் பட்டிருந்தது. ஆனால் ஸ்டாலினோ நிகழ்ச்சி நடக்கும் ஸ்டேடியத்துக்கே நேரடியாகச் சென்றுவிட்டார். அப்படி அவர் செல்லும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேரு ஸ்டேடியம் வரை ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினர் இருவண்ணக் கொடிகளுடன் பெருமளவில் திரண்டிருந்தனர். ஸ்டாலினும் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அவர் சென்ற அடுத்த 10 நிமிடத்தில் அதே வழியில் ஸ்டேடியம் நோக்கி சென்ற மோடி, வழிநெடுக தி.மு.க. கொடியுடன் உடன்பிறப்புகள் குவிந்திரு

"ஹலோ தலைவரே, ஒரு பக்கம் சேலத் தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு, இன்னொரு பக்கம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபி சேகம்னு எல்லாப் பக்கமும் பரபரப்பா இருக்கு.''”

"ஆமாம்பா, ராமர் கோயில் விவகாரத்தை தேர்தல் பிரச்சாரமா பா.ஜ.க. கையில் எடுக்குதே?''”

rang

"உண்மைதாங்க தலைவரே, ராமரை பிரச்சார ஆயுதமாக பா.ஜ.க. கையில் எடுத் திருக்கும் நிலையில் இங்கே நீட் விவகாரத்தையும் மாநில சுயாட்சி கோரிக்கையையும் தனது பிரச்சார ஆயுதமாக கையில் எடுக்கும் திட்டத்தில் தி.மு.க. இருக்கிறது. சேலம் இளைஞரணி மாநாடு முடிந்த நிலையில் கட்சியின் சீனியர்களோடு பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சி விவகாரத்துக்கு இன்று தேவையும், மக்களிடம் பெரும் மதிப்பும் இருக்கிறது. எனவே, எல்லா வகையிலும் மாநில உரிமைகளை நசுக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முகமூடியை இந்தத் தேர்தலில் நாம் கிழித்தாக வேண்டும். அதேபோல் மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு கொள்ளி வைக்கும் நீட் விவகாரத்தை யும் பிரச்சாரத்தில் பிரதானமாக வைத்து, பா.ஜ.க. வினருக்கு தேர்தலில் பலமாக அடிகொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம்.''”

"தன்னை வரவேற்க சென்னை சாலைகளில் திரண்டிருந்த கூட்டத்தில் தி.மு.க. கொடிகள் அதிகமாய் இருப்பதைப் பார்த்து பிரதமர் மோடி திகைத்துப் போனாராமே?''”

"அதுபற்றிச் சொல்றேங்க தலைவரே, மோடி சென்னை வந்த போது, அவரை முதல்வர் ஸ்டாலின், ஏர்போர்ட் அல்லது ஐ.என்.என் அடையாறு ஹெலிகாப்டர் தளம் ஆகிய இரண்டில் ஓர் இடத்தில் வரவேற் பார் என்று முதலில் சொல்லப் பட்டிருந்தது. ஆனால் ஸ்டாலினோ நிகழ்ச்சி நடக்கும் ஸ்டேடியத்துக்கே நேரடியாகச் சென்றுவிட்டார். அப்படி அவர் செல்லும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேரு ஸ்டேடியம் வரை ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினர் இருவண்ணக் கொடிகளுடன் பெருமளவில் திரண்டிருந்தனர். ஸ்டாலினும் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அவர் சென்ற அடுத்த 10 நிமிடத்தில் அதே வழியில் ஸ்டேடியம் நோக்கி சென்ற மோடி, வழிநெடுக தி.மு.க. கொடியுடன் உடன்பிறப்புகள் குவிந்திருந்ததைப் பார்த்து திகைத்துப்போய் விட்டாராம். பிறகுதான் அவருக்கு விபரம் சொல்லப்பட்டிருக்கிறது.''”

"காங்கிரஸில் முணுமுணுப்பு பலமாகக் கேட்குதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்காக கட்சி மேலிடம் 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை நியமித்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்களாம். குறிப்பாக, கட்சி செயல்பாடுகளில் இருந்து முதுமை காரணமாக ஒதுங்கியிருக்கும், மூத்த தலைவர் குமரிஅனந்தன், மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரையும் பணிக்குழுவில் நியமித் திருக்கிறார்களாம். அவர் வந்து என்ன தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியும்? கட்சி என்ன முதியவர்களின் கூடாரமா? இளைஞர்களே கட்சியின் கண்களுக்குத் தெரியவில்லையா? எப்போது பார்த்தாலும் நடக்கவே சிரமப்படுபவர்களை எல்லாம் தேர்தல் பணிக்குழுவில் நியமித்தால் எப்படி தேர்தல் வேலை நடக்கும்?’என கட்சியினர் முணுமுணுக் கிறார்கள்.''”

rr

"இருந்தும், தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை விறுவிறுப்பாக காங்கிரஸ் நடத்தியிருக்கே?''”

"தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக அஜோய்குமார் அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பீகார் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். கட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைப்பை தந்த நிலையில், பல்வேறு பதவிகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான், தற்போது தமிழக காங்கிரசில் மேலிட பொறுப்பாளராக சோனியா -ராகுல் சிபாரிசின்படி அவர் நியமிக்கப்படிருக்கிறார். இந்த நியமனத்தின் பிறகு முதன்முறையாக சென்னை வந்த அஜோய், காங்கிரசின் மாநில நிர்வாகி களுடனும், தொகுதிப் பொறுப்பாளர்களுடனும், மாவட்ட தலைவர்களுடனும் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆலோசனைகளை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலரும், "கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளைவிட கூடுதல் சீட்டுகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறவேண்டும், வாரிசுகளுக்கு இந்த முறை சீட் கொடுக்கக்கூடாது, மாவட்ட தலைவர்கள் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு 50 சதம் வாய்ப்புகளைத் தரவேண்டும்'” என்றெல்லாம் அவரிடம் வேண்டு கோளை அடுக்கினார்கள்.''”

"இந்தக் கூட்டத்தில் தி.மு.க. அட்டாக்கும் நடந்திருக்கே?''”

rr

"ஆமாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கூட்டணிக் கட்சி யான தி.மு.க.வுக்கு எதிரான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, இதில் பேசிய பலரும் ‘"நம் கட்சித் தொண்டர்களுக்கு தி.மு.க.வால் எந்த ஒரு பிரயோஜனம் இல்லை. தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிகளுக்கு நாமும் முக்கிய காரணம். அப்படி இருந்தும் காங்கிரசை தி.மு.க. எதிரிக்கட்சி மாதிரிதான் ட்ரீட் பண்ணுகிறது. மோடிக்கு நாம் கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டால் தி.மு.க. அரசு, நம்மைப் பிடித்து வீட்டுக்காவலில் வைக்கிறது. காங்கிரசை அக்யூஸ்ட் மாதிரி அது நடத்துகிறது' என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலளித்த மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரோ, "உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். கடந்தமுறை போட்டியிட்ட இடங்களை விட, கூடுதல் சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்த இருக்கிறேன். நமது ஒரே எதிரி பா.ஜ.க. என்ற எண்ணத்தில் செயல்படுங்கள்'’என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையே, இக்கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர், எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு அஜோய்குமாரை அணுகியிருக்கிறார்களாம்.''”

"தென் மாவட்டங்களின் இதயத்துடிப்பு சரியாக இல்லை என்று க்ரைம் ரேட்கள் சொல்கிறதே?''”

"கடந்த ஒரு வருடமாக தென்மாவட் டங்களில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அதிகரிப்பதோடு பகீரூட்டும் வகையில் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக் கிறதாம். அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சாதி ரீதியாக அதிகம் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்களாம். இதை ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் செய்கிறார்கள் என்ற ரீதியில் காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு அதிகாரிக்கு அவர் மெமோ கொடுத்திருக் கிறார். அதில்,‘இந்தக் கொலைகள் எப்படி நடக்கின்றன? உளவுத்துறை காட்டும் அசட் டையால்தான் இப்படி நடப்பதாகப் புகார்கள் வருகின்றன’என்று குறிப்பிட்டிருந்தாராம். இதற்கு பதிலளித்த அந்த அதிகாரியோ, உளவுத்துறையில் ஒரு சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அவர்களின் நெட்வொர்க் வலிமையாக இருக்க, துறையில் இருக்கும் ஒரு ’தேவ’ அதிகாரிதான் காரணம். இந்த நெட்வொர்க் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் தைரியத்தில்தான் இப்படிப்பட்ட கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறாராம். இதையறிந்து அதிர்ச்சி யடைந்த டி.ஜி.பி., இதுகுறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம்.”

rr

"பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை மையமாக்கி பெரும் சூறாவளி எழுந்திருக் கிறதே?''”

"பல்லாவரம் எம்.எல்.ஏ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும், மருமகள் மார்லினா ஆனியும் சேர்ந்து அவர்கள் வீட்டில் வேலை பார்த்துவந்த ரேகா என்ற பட்டியலினச் சிறுமியை கொடூரமாகத் துன்புறுத்தியதாக காவல்துறைக்குப் புகார் செல்ல, குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகளைக் கைது செய்யவேண்டும் என்ற பரபரப்பாக குரல் எழுந்துவருகிறது. இது குறித்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறையோ, சம்பந்தப்பட்ட அந்தத் தம்பதிகள் தலைமறைவில் இருப்பதாகச் சொல்லிவருகிறது. அதே நேரம், அந்த சிறுமி அவர்கள் வீட்டில் எவ்வளவு சந்தோசமாக இருந்தார் என்பது குறித்து, அவரே தன் கைப்பட எழுதிய கடிதங்களும், குடும்ப பார்ட்டிகளில் அவர் மகிழ்வாகக் கலந்துகொண்ட செய்திகளும் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்தவர் சமூக செயல்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர். அவர் இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பு, ஒரு கும்பல் எம்.எல்.ஏ. மகனிடம் பண பேரத்தில் ஈடுபட்ட தகவலும் இப்போது கசிந்திருக்கிறது. 8 மாதமாக கொடுமை நடந்தது என்றால் அடிக்கடி வெளியே சென்றுவரும் அந்தச் சிறுமி, ஏன் அங்கிருந்து தப்பித்துச் செல்லவில்லை என்ற கேள்வி யையும் சிலர் எழுப்புகின்றனர். எனினும் இந்த விவகாரம் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.''”

"நானும் நடிகை குஷ்பு தொடர்பான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை வந்த பிரதமர் மோடியை, நடிகை குஷ்புவும் அவரது மாமியாரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் மோடியிடம் அப்படி என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ள, படாதபாடு பட்டதாம் தமிழக பா.ஜ.க. வட்டாரம். அதுகுறித்து நாம் விசாரித்தபோது, தமிழக பா.ஜ.க.வில் தனக்கான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று குஷ்பு புகார் வாசித்தார் என்கிறார்கள். இந்த சந்திப்பின் போது, அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிக்கு தன்னால் வர இயலாத சூழலையும் அவர் தெரிவித்தார் என்கிறார்கள்.''

________

மோடி திறந்துவைத்த அயோத்தி ராமர் கோவில்!

rangbox

கடந்த சில மாதங்க ளாகவே அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கான ஏற் பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்றுவந்தது. ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. பல்வேறு கட்சியின ருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பிவந்தது. இந்நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “மதத்தை அரசியலாக்குவதை ஏற்க வில்லை” எனக்கூறி புறக் கணித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியக் கூட் டணிக் கட்சிகளும் இந்த விழாவைப் புறக்கணித்தன. பிரதான சங்காராச்சாரி யார்கள் பலரும் முழுமை யடையாத கோவிலைத் திறந்துவைப்பது சனாதனத்துக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்தனர்.

இத்தனைக்குமிடையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பா.ஜ.க. வினரும் பொதுமக்களும் பெருந்திரளாகக் குவியத் தொடங்கினர். திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அத்வானியின் ரத யாத்திரை மூலம் ஆதரவு திரட்டப்பட்டு பாபர் மசூதி இடிப்பில் தொடங்கிய அரசியல் மைலேஜை, ராமர் கோவிலுக் கான தீர்ப்பு, ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுதல் என வந்து குழந்தை ராமர் பிரதிஷ்டை வரை கொண்டுவந்து பெருமையைத் தட்டிச்சென்றுள்ளார் நரேந்திரமோடி. குழந்தை ராமர் சிலையை மோடி பிரதிஷ்டைசெய்ய அயோத்தி யெங்கும் கோலாகல கொண்டாட்டங்கள் தொடர்கிறது.

-மணி

nkn240124
இதையும் படியுங்கள்
Subscribe