"தமிழ்நாடு காவல்துறைக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! இது சாதாரணகன் இல்ல... தமிழ்நாடு டாப்மோஸ்ட் ரவுடி பிளாக் ஜாக்குவார் என்ற ஜேக்கப் லவ்வர் நான். எனக்கு அவரு போட்டோ எடுக்க கொடுத்தாரு. அவர் சென்னையில் சமுதாயத்தைத் தாண்டி பல கொலைக்கு ரூட்டு போட்டுட்டாரு.. நெல்லையில் அவருக்கு எதிரான மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளான தீபக்ராஜா, பாண்டியன், ஊசி பாண்டியன், அதிசய பாண்டியனை இன்னும் ஒரு மாதத்திற்குள் கொன்று தன்னுடைய கால்பதித்த இடத்தை தமிழ்நாட்டுக்குள் நிலைநிறுத்த, தன்னுடைய சமுதாயத்தைத் தாண்டி பல சமுதாயங்கள், பல பழைய ரவுடிகளை அணுகி, அதற்கான அனைத்து வேலைகளும் செய்கிறார். இதை நீங்கள் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்'' என துப்பாக்கியுடன் பெண் ஒருவர் இருப்பதுபோல் இன்ஸ்டாவில் பதிவொன் றும், வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றினையும் பரவவிட கிறுகிறுத்து விட்டனர் நெல்லை மாவட்ட போலீஸார்.

rr

பதிலுக்கு, "வெளியே சுதந்திரமாக சுற்றித்திரியும் கூலிப்படை கொலை காரன் ஜேக்கப்பையும் அவரின் கூட்டாளிகளையும் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்து தண்டனை வழங்கவேண்டும்'' என மாற்று சமுதாய மக்கள் தங்கள் பங்கிற்கு வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டனர்.

இன்ஸ்டா பதிவும், ஆடியோவும் சாதி மோதலை உருவாக்கும். பிரச்சினை பெரிதாகக்கூடாது என நாகர்கோவில் லாட்ஜில் வைத்து 25-01-2024 அன்று ஜேக்கப்பை கைது செய்தது தாழையூத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான டீம். ராக்கெட் ராஜாவையும் வழக்கிற்குள் கொண்டுவந்தனர் போலீஸார்.

Advertisment

"என் பெயர் ஜேக்கப். என்னை ஊரில் எல்லோரும் பிளாக் ஜாக்குவார் என்று கூப்பிடுவார்கள். எனக்கு எங்க சமுதாயத்தின் மீது அதிகப்படியான பற்று உண்டு. ராக்கெட்ராஜா அண்ணன் எங்க சமுதாயத்திற்காகப் போராடு வதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவரது பெயரை என் இடதுபக்க நெஞ்சுப் பகுதியில் பச்சை குத்தியுள்ளேன். அவர் நடத்தும் பனங்காட்டுப் படை கட்சியிலும் உறுப்பினராக உள்ளேன். என்மீது 5 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேவேளையில், எனக்கு ஆதரவாக இருந்த எனது ஊரைச் சேர்ந்த எனது மச்சான் கண்ணனை கடந்த 2021-ஆம் தேதி மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பண்டாரகுளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்தார்கள். அந்த வழக்கில் கோர்ட்டில் விடுதலையாகி எனது மாப்பிள்ளையை கொலை செய்தவர்கள் ஜாலியாக வெளியே வந்துவிட்டார்கள். அவர்களை பழிக்குப் பழி வாங்கியே ஆகவேண்டுமென கொலை வெறியுடன் இருந்துவந்தேன். எனக்கு சமுதாய ரீதியாக நிறைய எதிரிகள் இருப்பதால் எனது பாதுகாப்புக்காக நான் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பிஸ்டல் ஒன்றும் 5 தோட்டாக்களும் வாங்கினேன். துப்பாக்கி சுட்டுப் பழகியபோது 4 தோட்டாக்கள் காலியானது.

திருநெல்வேலிக்கு வந்தால் திசையன் விளை ஆனைகுடியிலுள்ள அண்ணன் ராக்கெட் ராஜா வீட்டில் தங்குவேன். அண்ணன் ராக்கெட் ராஜா வீட்டில் முன்பகுதியிலுள்ள பழைய வீட்டை, என்னைப் போன்று எங்களது சமுதாயத்திற்காக கொலை செய்யும் மற்றும் போராடும் நபர்கள் வந்தால் தங்கிச் செல்வதற்காக ஒதுக்கியுள்ளார்கள். எங்களது ஆயுதங்களையும் அங்குதான் பாதுகாப்பாக வைப்போம். நாகர்கோவிலிலுள்ள எனது நண்பர்களை பார்க்க செல்லவேண்டியிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் சர்ச்சில் வைத்து கொலை நடந்துள்ளதால் அதில் சம்பந்தப் பட்டவர்களை போலீசார் தேடிவந்ததால் துப்பாக்கியுடன் சென்றால் ஏதாவது பிரச்சனை ஆகிவிடும் என்று நான் திசையன்விளை ஆனைக்குடியிலுள்ள அண்ணன் ராக்கெட் ராஜா வீட்டில் நான் எப்போதும் தங்கும் அறையில் என்னிடம் இருந்த நாட்டு கைத்துப்பாக்கி (018001) மற்றும் ஒரு தோட்டாவை காலண்டர் தாளில் சுற்றியும், துப்பாக்கியையும் ஒரு தோட்டாவையும் ஒரு பாலிதீன் கவரில் சுற்றி அதனை மற்றொரு பாலித்தீன் கவருக்குள் வைத்து மறைத்து வைத்துவிட்டேன். அதைத்தான் கைப்பற்றி உள்ளார்கள்'' என்கின்றது ஜேக்கப்பின் வாக்குமூலம்.

Advertisment

rr

ராக்கெட் ராஜாவின் உறவினர்களோ, "ஆணைக்குடியில் உள்ள வீடு 20 பேருக்கும் அதிகமானவர்களின் பொதுவீடு. அப்புறம் எப்படி ராக்கெட் ராஜா பெயரை வழக்கில் சேர்க்க முடியும்? ஜேக்கப்பை கைது செய்தது இரவு 2.30 மணிக்கு. ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியது அதிகாலை 5 மணிக்கு தாழையூத்து காவல்நிலையத்தில். ஆனால் ஜேக்கப்பின் கார் ஆணைக்குடிக்கு வந்தது காலை 9.19 மணிக்கு. இது எப்படி சாத்தியமாகும்..? வேண்டுமென்றே ராக்கெட் ராஜாவை இந்த வழக்கில் சிக்கவைத்துள்ளனர்'' என்கின்றனர்.

"ஜேக்கப்பிற்கு சோனியா, கீர்த்தி என இரு காதலிகள். இரு காதலிகளுடன் பழகும்போது தன்னுடைய இறுமாப்பைக் காட்ட துப்பாக்கியைக் காண்பிப்பது இவனுக்கு வழக்கமான ஒன்று. பிறகு, நான் இப்படி, அப்படி என பல கதைகளையும் அடித்து விட்டிருக்கின்றான். ஒருகட்டத்தில் சோனியா வுடனான காதல் கசக்க, சோனியாவை கழட்டி விட்டுவிட்டு கோவில்பட்டியைச் சேர்ந்த கீர்த்தியுடன் நெருக்கமாகியிருக்கிறான். அதனால் கோபமடைந்த சோனியாவின் வேலை இது'' என்றார் நெல்லை மாவட்ட தனிப்பிரிவு போலீஸார் ஒருவர்.

கலவரக் காதலிகள் கைது எப்போது?