கடந்த பிப்ரவரி 18ஆம் புதுச்சேரியில் மாநில தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசும்போது, ""எல்லா தொகுதியிலும் தி.மு.க. நிற்பதாக நினைத்து, வரும் தேர்தலில் வேலை பார்க்கவேண்டும். கடந்த தேர்தலில் குறைந்த அளவில் சீட் பெற்று நிறைய இடங்களில் வெற்றி பெற்றோம். நிறைய சீட் வாங்கியவர்கள் குறைவாக வெற்றி பெற்றார்கள்.
இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் இருப்பதற்கு நாம் தலைவரிடம் பேசி, குறைந்தது 20 சீட்டாவது வாங்கி போட்டியிடவேண்டும். அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையென்றால் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்'' எனப் பேசினார். இது "புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைகிறதா?' என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, ""தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்கிறது. புதுச்சேரியில் இண்டியா கூட்டணி ஒன்றிணைந்து எந்த போராட்டமும் செய்வதில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் வைத்தியலிங்கம் பெரியஅளவு வித்தியாசத்தில் வெற்றிபெறக் காரணமே, தி.மு.
கடந்த பிப்ரவரி 18ஆம் புதுச்சேரியில் மாநில தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா பேசும்போது, ""எல்லா தொகுதியிலும் தி.மு.க. நிற்பதாக நினைத்து, வரும் தேர்தலில் வேலை பார்க்கவேண்டும். கடந்த தேர்தலில் குறைந்த அளவில் சீட் பெற்று நிறைய இடங்களில் வெற்றி பெற்றோம். நிறைய சீட் வாங்கியவர்கள் குறைவாக வெற்றி பெற்றார்கள்.
இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் இருப்பதற்கு நாம் தலைவரிடம் பேசி, குறைந்தது 20 சீட்டாவது வாங்கி போட்டியிடவேண்டும். அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையென்றால் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம்'' எனப் பேசினார். இது "புதுச்சேரியில் இண்டியா கூட்டணி உடைகிறதா?' என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, ""தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்கிறது. புதுச்சேரியில் இண்டியா கூட்டணி ஒன்றிணைந்து எந்த போராட்டமும் செய்வதில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் வைத்தியலிங்கம் பெரியஅளவு வித்தியாசத்தில் வெற்றிபெறக் காரணமே, தி.மு.க.வின் உழைப்பு தான். பணம் செலவு செய்தோம், உழைத்தோம். அப்படி யிருந்தும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தி.மு.க.வை சீண்டுவது போலவே தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உள்ளரங்கக் கூட்டத்தில், "2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி. நாம் 20 தொகுதிகளில் நிற்போம். இங்கு சலசலப்பு உருவாக்கு பவர்கள் தனியாக நின்று கொள்ளட்டும்' அப்படின்னு பெயர் சொல்லாமல் தி.மு.க. குறித்து பேசியிருக்கிறார்'' என்றார்கள்.
இதுகுறித்து பொதுவான அரசியல் பிரமுகர்களிடம் பேசியபோது, ""2021 தேர்தலில் காங்கிரஸ் 14, தி.மு.க. 13, சி.பி.ஐ., வி.சி.க. தலா ஒரு இடங்களில் போட்டியிட்டன. காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. அப்போதே இரு தரப்புக்குமான மோதல் உருவானது. அதோடு, இரண்டு கட்சிகளில் உள்ள இரண்டு தலைவர்களின் ஈகோ மோதலால் உரசல் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் "இந்தியா கூட்டணியில் எந்த கட்சி அதிக சீட் ஜெயிக்கிறதோ அதற்குத்தான் முதலமைச்சர் பதவி போகும். முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிடவேண்டும் என காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலைவர்கள் நினைக்கிறார்கள். இதனாலும் உரசல் அதிகமாகிறது.
தனித்து நின்றால் இரண்டு கட்சிகளும் 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமிக்க முடியாத அளவுக்கே அவர்களின் பலம் உள்ளது. அதனால் இண்டியா கூட்டணி உடையாமல் தேர்தலை சந்தித்தால் ஆட்சியைப் பிடிக்கும், இல்லையேல் தோல்விதான். இவர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் கூட்டணி உடைய வாய்ப்பில்லை. முதலமைச்சர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்துக்குச் செல்லும் வழியில் புதுச்சேரியில் ஓய்வெடுத்தபோது... புதுவை காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவரும் அவரை வரவேற்றுப் பேசிவிட்டு வந்தார்கள்.
அதேநேரத்தில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியை உடைக்க தி.மு.க. நிர்வாகிகளுக்கு நெய் ஊற்றுகிறார் ரங்கசாமி. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் 25 இடங்களில் வெற்றிபெறலாம் என தி.மு.க. தலைமைக்கு ரகசிய தூதுவிட்டுள்ளார் என்.ஆர்.'' என் கிறார்கள்.
இதுகுறித்து என்.ஆர். காங்கிரஸாரிடம் பேசியபோது, ""எங்கள் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியுள்ளது. பா.ஜ.க.வால் வந்த அந்த அதிருப்தி, எங்கள் கட்சியைப் பாதிக்கிறது. இதனால் பா.ஜ.க.வுடனான கூட்டணியி லிருந்து விலகிவிடலாமா என ஆலோசித்தார் என்.ஆர். இதை யறிந்து ரங்கசாமியின் இமேஜை உடைக்கவும், புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காமலும் ஆட்சிக்கு எதிராக அமைச்சரவையில் உள்ள பா.ஜ.க. அமைச்சர்களும், சபாநாயகரும் பேசுவது, லாட்டரி மார்டின் மகனை புதுச்சேரியில் இறக்கியது எல்லாம் பா.ஜ.க. அசைன்மெண்ட்தான் எனத் தெரிந்தும் ரங்கசாமி வெளிப் படையாக ரியாக்ட் செய்யாமல் காய்நகர்த்தி பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனால் என்.ஆரை சமாதானப்படுத்த பா.ஜ.க. தலை வர்கள் வரிசை கட்டி புதுவைக்கு வருகிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலின்போது என்.ஆர்.சி. -பா.ஜ.க. கூட்டணி தொடர்ந் தால் 3, 4 தொகுதிகள்தான் வெற்றி பெறமுடியும் என அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் பா.ஜ.க.வை கழட்டிவிட்டு, விஜய்யுடன் சேரலாம் என ஆலோசித்தார். அது சரிவராது எனச் சொன்னதால் தி.மு.க.வோடு கூட்டணி பேச முயல்கிறார்.
"30 தொகுதிகளை சரி சமமாக பிரித்துக்கொள்ளலாம், அமைச்சரவையில் பங்கு தருகிறேன்' என தி.மு.க.வுக்கு சொல்லியுள்ளார். கூட்டணிக்கு தி.மு.க. தயாரென்றால், கூட்டணி அமைச்சரவையில் இருந்துக்கொண்டு, தனது ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. தந்த குடைச்சல்களை பேச தயாராகவுள்ளார் ரங்கசாமி. இது புதுச்சேரி மட்டுமல்ல இந்தியா முழுவதும் எதிரொலிக்கும், அது தி.மு.க.வுக்கு சாதகம்தானே? தி.மு.க.வால், காங்கிரஸை விட்டு வரமுடியாது என்றால், தி.மு.க.வுக்கு என்.ஆர்.சி ஒதுக்கும் 15 இடத்திலிருந்து காங்கிரஸுக்கு பங்கு தரலாம், காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதற்கு, எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமிதான்'' என்கிறார்கள்.
ரங்கசாமியின் திட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புக்கொள்ள சாத்தியமே இல்லை. அதேபோல் புதுச்சேரியில் இண்டியா கூட்டணியை உடைத்தால் அது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் வலிமையான தங்களது அணியை ஏன் சிதைக்கவேண்டும்? 2026-ல் புதுவையிலும் இன்டியா கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். அதனால் ஏன் என்.ஆர்.சியுடன் சேரவேண்டும்? என அமைச்சர், பதவி எனச் சொல்லும் என்.ஆர்.காங்கிரஸ் ஆசையை, தி.மு.க. ஒதுக்கிவிட்டது. "தமிழ்நாட்டில் காங்கிரஸ் முரண்டு பிடித்தால் அப்போது புதுச்சேரி குறித்து யோசிக்கலாம்' என்கிற முடிவில்தான் தி.மு.க. உள்ளது என்கிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில்... புதுச்சேரி அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப் போகிறதோ?
-து.ராஜா