"ஹலோ தலைவரே, புதுவை முதல்வர் ரெங்கசாமியை, ஒரு பாதுகாப்பு அதிகாரி பிடித்துத் தள்ளும் வீடியோ பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''”

"ஆமாம்பா, நானும் அதைப் பார்த்தேன். ஒரு மாநில முதல்வரை, ஒதுங்கி நிக்கச் சொல்லி, ஒரு பாதுகாவலர் பிடித்துத் தள்ளுகிறார்னா அதுக்கு என்ன அர்த்தம்?''”

rr

Advertisment

"உங்களுக்கு இனி நான் மரியாதை தரவேண்டிய அவசியமில்லைன்னு அந்த அதிகாரி உணர்த்துகிறார்னுதான் அர்த்தம். முதல்வரைத் தள்ளியவர், அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாப்பு அதிகாரியாம். மாநில முதல்வர் ரெங்கசாமியோடு அமைச்சர் நமச்சிவாயம் வில்லியனூர் மாதாகோயிலுக்குச் சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. இதுக்குக் காரணம், விரைவில் என்.ஆர்.காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு, பா.ஜ.க.வே குதிரை பேர டெக்னிக்கின்படி, அங்கு ஆட்சி அமைக்கப்போகுதாம். அப்ப முதல்வர் நாற்காலியில் நமச்சிவாயம்தான் அமர இருக்கிறாராம். இதைத்தான் அந்த அதிகாரி இப்போதே சிம்பாலிக்காக உணர்த்தியிருக்கிறார்னு சொல்றாங்க புதுவை அரசியல் வட்டாரத்தினர்.''”

"அமெரிக்க தூதரக அலுவலகத்தின் இரவு விருந்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலின் தமிழ் அமைப்புகள் நடத்தும் விழாவிற்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அது தொடர்பாக விவாதிக்கவே அந்த விருந்து ஏற்பாடு செய்யப் பட்டதாம். அப்போது அமெரிக்க தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை வரவேற்பது குறித்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க விரும்புகிறாராம். அது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள்தான் அந்த விருந்தில் நடந்திருக்கு. இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அரசு ஊழியர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து ஆர்வம் காட்டாத பி.டி.ஆர்., அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுக்கிறாராம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து, திட்டக் கமிஷன் துணைத் தலைவரான ஜெயரஞ்சன், பி.டி.ஆரை சந்தித்து விவாதித்திருப்பதாகத் தெரிகிறது.''”

"அரசின் செய்தித்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, செய்தித்துறையில் 1989-ல் இருந்த தி.மு.க. ஆட்சியின்போது, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாகச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் உயர் பதவியில் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடந்த மாதம் ஓய்வுபெற்று விட்டனர். இதனால் காலியாகும் இடங்களை பதவி உயர்வு மூலம் கைப்பற்ற சிலர் பல்வேறு வழிகளிலும் முண்டியடிக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இவர்களில், செல்வராஜ் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோருக்கு இன்னும் 2 வருடங்கள் சர்வீஸ் இருக்கிறது. இருந்தாலும், துறைரீதியாக சிக்கல் ஏற்படுத்தப்படுகிறதாம். வி.ஆர்.எஸ். வாங்கிக்குங்கன்னு நெருக்கடி கொடுப்பதுடன், ராஜ்பவனுக்கு அனுப்பவும் திட்டமிருக்காம்.''”

"ஓ... அப்படி என்ன திட்டம்?''”

"துறையின் கூடுதல் இயக்குநரான அம்பலவாணன் இந்த மாதம் ஓய்வுபெறுகிறார். அவர் இடத்திற்கு இந்த செல்வராஜ் அல்லது அன்புச்செல்வன் ஆகிய இருவரில் ஒருவரைப் பதவி உயர்வு மூலம் நியமிச்சாகணும். ஆனால் இந்தப் பதவியில் ராஜ்பவனில் செய்தித்துறைக் கூடுதல் இயக்குநராக இருக்கும் சிவசரவணனை கொண்டுவரும் முயற்சி நடக்குதாம்.''”

rr

Advertisment

"அமுதா ஐ.ஏ.எஸ்.சின் செல்வாக்கு கோட்டையில் கிடுகிடுன்னு உயர்வதாகப் பேச்சு அடிபடுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இப்போதெல்லாம் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் நடத்தும் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்களின்போது, அமுதா ஐ.ஏ.எஸ்.ஸை பார்க்க முடிகிறது. அதே போல் இதுநாள்வரை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான கடித உறவு என்பது சுமுகமாக இல்லை. அதனால் இப்போது மாநில அரசின் கடிதங்களை அனுப்பும் பொறுப்பும் அமுதா வசம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல் முதல்வரின் முக்கியமான ஆலோ சனைகளிலும் இவர் பங்கெடுக்கிறாராம். இதனால் அமுதா ஐ.ஏ.எஸ். விரைவில் முதல்வரின் செய லாளராக அமரவைக்கப்பட இருக்கிறார் என்று கோட்டைப் பக்கம் பரபர டாக் இருக்குது.''

"சுகாதாரத்துறையில் சலசலப்பு தெரியுதே?''”

"ஆமாங்க தலைவரே, துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு, புதிய நியமன உறுப்பினர்களாக டாக்டர் சிவராமகண்ணன், டாக்டர் முருகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் திருப்பூர்க்காரரான முருகநாதன், கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தவர். சிவராம கண்ணனும் இவரும் அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி விஜயபாஸ்கருக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதோடு, இவர்கள் பா.ஜ.க.வின் தீவிர அனுதாபிகள் என்கிறார்கள். இவர்கள் மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராகக் காரணம், அதே விஜயபாஸ்கரின் நண்பரான தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்தானாம். இது மருத்துவத்துறைத் தரப்பில் விமர்சனத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக் குது.''”

"கோவை தி.மு.க. மேயர் மீது இப்போதே குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பிச்சிடுச்சே?''”

ss

"ஆமாங்க தலைவரே, கோவை மேயர் கல்பனாவுக்கு தமிழில் சரிவர எழுதப் படிக்கத் தெரியாதாம். அதேபோல் கோப்புகளைப் பார்க்கவும் அவருக்குத் தெரியவில் லையாம். அதிகாரிகள் சொல்வதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில் லையாம். இதனால் பெரும்பாலான மாநகராட்சிப் பணிகள் தேங்கிக் கிடக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள். இங்குள்ள 100 வார்டுகளிலும் பல அடிப்படைப் பிரச் சினைகள் தீர்க்கப்படவில்லை. குவியும் புகார் களுக்கும் மேயர் நடவடிக்கை எடுப்பதில்லையாம். இதற்கிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் தவறுகளையும் மேயரால் கவனிக்க முடியாததால், அங்கே எல்லாப் பக்கமும் சலசலப்பு எழுந்திருக்கு. இதை எல்லாம் நாமக்கல்லில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு போயிடணும்னு கட்சி சீனியர்க நினைக்கிறாங்க. யார் மூலமா சொல்றதுன்னு ரூட் பிடிபடலையாம்.''”

"ம்..''”

"அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சேனலாக வெளிவந்தது ஜெயா டி.வி. ஜெ. மறைவுக்கு பிறகு, தினகரனிடம் அந்த சேனல் சென்றுவிட்டது. இத னால், எடப்பாடி ஆட்சியின்போது அவர்களுக் கென தனி சேனல் இல்லாததால், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி பங்களிப்பில் "நியூஸ் ஜெ.' சேனலை தொடங்கினார் எடப்பாடி. இதன் மொத்த நிர்வாகமும் சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனிடம் இருந்தது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் சேனலைrr நடத்துவதில் தடுமாற்றம் இருந்தது. இந்த நிலையில், சேனலை பா.ஜ.க.வுக்கு குத்தகை என்ற பெயரில் விற்கப்பட்டு விட்டதாம். ஆனால், மற்றொரு தரப்போ, எடப்பாடியை மிரட்டி சேனலை பா.ஜ.க. வாங்கிவிட்டது என்கிறார்கள்.''

"பா.ம.க. தலைவரான பின் அன்புமணி யிடம் அதிக சுறுசுறுப்பு தெரியுதே?''”.

"ஆமாங்க தலைவரே, கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணி நியமிக்கப்பட்ட பிறகு, அவர் கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத் தத் தொடங்கிவிட்டார். பா.ம.க. உருவானபோது, கிராமம் கிராமமாகச் சென்று டாக்டர் ராமதாஸ் எப்படி கள வேலை செய்தாரோ, அதே பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறா ராம் அன்புமணி. எந்த ஊரில் கட்சிக்காரர்கள் வீட்டில் விசேசம் என்றாலும், தாமாகவே அவர் களின் வீடுகளுக்கு அவர் சர்ப்ரைஸ் விசிட் அடித்து, அவர்களை ஆச்சரியப்படவும் வைக்கிறா ராம். இப்படி சுறுசுறுப்பாக ஏரியா வாரியாக விசிச் அடித்துவரும் அன்புமணி, அங்கங்கே உள்ள அரசியல் நிலவரங்களையும், கட்சிக்காரர்களின் மீதான நிறைகுறைகளையும் கூட ஆர்வமாகக் கேட்டறிந்து வருகிறார் என்கிறார்கள்.''”

ff

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். மண் வளம் காக்க 100 நாள் பிரச்சார டூர் அடிப்பதாகக் கூறி, பல பகுதிகளை யும் வலம்வந்த ஈஷா மைய ஜக்கி வாசுதேவ், 21-ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அவரை பிரமாண்டமாக வரவேற்க, அவரது சீடர்களும் சங்பரிவார் அமைப்பினரும் முதல்நாள் வரை ஆட்களைப் பெருமளவில் திரட்டினர். இந்த நிலையில், ஜக்கியால் பாதிக்கப்பட்ட வர்களும் எதிர்ப்பாளர்களும் அவருக்கு கருப்புக்கொடி காட்ட இன்னொரு பக்கம் திரளத் தொடங்கினர். அப்போது அவர்கள், தாறுமாறாக விமர் சிக்கும் கோஷங் களையும் தயார் செய்து பரபரப்பூட்டி னர்.’''