ராங்கால்- டெல்லியில் இருந்து பிரச்சாரம்! ஸ்டாலின் வியூகம்! மீண்டும் ஐவரணி! ஜெ’ பாணியின் எடப்பாடி அதிரடி! திசைதிரும்புகிறதா கொடநாடு வழக்கு?

stalin

""ஹலோ தலைவரே, தேசிய அரசியல் களமே பரபப்பாக இருக்கிறது.''’’

""ஆமாம்பா ஒரு பக்கம் ஜி 20 மாநாட்டுக் கோலாகலம், இன்னொரு பக்கம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் விவகாரத்தில் கைதுன்னு தேசிய அளவில் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை.''’’

rang

""ஆமாங்க தலைவரே, இதில் கவனிக்கத்தக்க ஒரு விசயம் என்னன்னா, ஜி-20 மாநாட்டைத் தொடர்ந்து குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடுத்த சிறப்பு விருந்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, ஒரு புதிய அனுபவம் காத் திருந்தது. சனாதனத்தை மையமாக்கி அகில இந்திய அளவில் தி.மு.க. வுக்கு எதிராக பெரும் சூறாவளி யை பா.ஜ.க. தரப்பு, எழுப்பி இருக்கும் நிலையில், ஸ்டாலின் டெல்லி செல்கிறாரே என்று பலரது கவனமும் அப்போது அவர் பக்கம் திரும்பியது. டெல்லியில் அவருக்கு எதிராக எந்தவித எதிர்ப் பும் காட்டப்பட வில்லை. மாறாக, அரிதான சர்ப்ரைஸ் ஒன்று அந்த விருந்தில் ஸ்டாலினுக்குக் காத்திருந்தது. இந்த விருந்தின்போது, எதிர்பாராதவிதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஸ்டாலினை பிரதமர் மோடி புன்னகையோடு அறிமுகம் செய்து வைத்தார். உடனே இருவரும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டு, நேசம் பொங்க வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இதை தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கூர்த்து கவனித்தன. இது தி.மு.க. தரப்பை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.''’’

""உண்மைதான்பா. டெல்லியில் இருந்த படியே ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காணொலி வாயிலாக இங்கே ஆரம்பித்திருக்கிறாரே?''’’

""ஆமாங்க தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனின் மகன் திருமணத்தை 10ஆம் தேதி நெய்வேலியில் முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைப்ப தாக இருந்தது. ஆனால், ஜி-20 மாநாட்டிற்காக அவர் டெல்லி செல்ல நேர்ந்ததால், திருமணத்தை உதயநிதி நடத்தி வைத்தார். அதேசமயம், டெல்லியில் இருந்தபடி மணமக்களை காணொலி வழியாக ஸ்டாலின் வாழ்த்தி மணவீட்டாரை நெகிழ வைத்துவிட்டார். அவர் தனது வாழ்த்துரையில், சபா ராஜேந்திரனைப் பாராட்டிவிட்டு, மணமக்கள் தங்களின் வீட்டுக்கு விளக்காக வும், நாட்டுக்கு தொண்டர்களாகவும் விளங்க வேண்டும். நாடு நலம்பெற வேண்டும் என்று நினைத்தால், வரும் நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு அனை வரும் உழைக்க வேண்டும்’ என்று தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாகத் தொடங்கிவிட் டாராம்.''’’

""அ.தி.மு.க.வில் மீண்டும் ஐவரணி அமைக்கப்பட்டிருக்கிறதே?''’’

admk

""அ.தி.மு.க. மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய எடப்பாடி, அதில் ஜெ.’பாணியில் மீண்டும் அ.தி.மு.க.வில் ஐவரணியை அறிவித்திருக்கிறார். அதில் மாஜி மந்திரிகளான தங்கமணி, வேலுமணி, வீரமணி, சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனு சாமி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த ஐவர் அணிதான் புதிய ந

""ஹலோ தலைவரே, தேசிய அரசியல் களமே பரபப்பாக இருக்கிறது.''’’

""ஆமாம்பா ஒரு பக்கம் ஜி 20 மாநாட்டுக் கோலாகலம், இன்னொரு பக்கம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் விவகாரத்தில் கைதுன்னு தேசிய அளவில் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை.''’’

rang

""ஆமாங்க தலைவரே, இதில் கவனிக்கத்தக்க ஒரு விசயம் என்னன்னா, ஜி-20 மாநாட்டைத் தொடர்ந்து குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடுத்த சிறப்பு விருந்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, ஒரு புதிய அனுபவம் காத் திருந்தது. சனாதனத்தை மையமாக்கி அகில இந்திய அளவில் தி.மு.க. வுக்கு எதிராக பெரும் சூறாவளி யை பா.ஜ.க. தரப்பு, எழுப்பி இருக்கும் நிலையில், ஸ்டாலின் டெல்லி செல்கிறாரே என்று பலரது கவனமும் அப்போது அவர் பக்கம் திரும்பியது. டெல்லியில் அவருக்கு எதிராக எந்தவித எதிர்ப் பும் காட்டப்பட வில்லை. மாறாக, அரிதான சர்ப்ரைஸ் ஒன்று அந்த விருந்தில் ஸ்டாலினுக்குக் காத்திருந்தது. இந்த விருந்தின்போது, எதிர்பாராதவிதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஸ்டாலினை பிரதமர் மோடி புன்னகையோடு அறிமுகம் செய்து வைத்தார். உடனே இருவரும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கிக்கொண்டு, நேசம் பொங்க வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இதை தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கூர்த்து கவனித்தன. இது தி.மு.க. தரப்பை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.''’’

""உண்மைதான்பா. டெல்லியில் இருந்த படியே ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காணொலி வாயிலாக இங்கே ஆரம்பித்திருக்கிறாரே?''’’

""ஆமாங்க தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனின் மகன் திருமணத்தை 10ஆம் தேதி நெய்வேலியில் முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைப்ப தாக இருந்தது. ஆனால், ஜி-20 மாநாட்டிற்காக அவர் டெல்லி செல்ல நேர்ந்ததால், திருமணத்தை உதயநிதி நடத்தி வைத்தார். அதேசமயம், டெல்லியில் இருந்தபடி மணமக்களை காணொலி வழியாக ஸ்டாலின் வாழ்த்தி மணவீட்டாரை நெகிழ வைத்துவிட்டார். அவர் தனது வாழ்த்துரையில், சபா ராஜேந்திரனைப் பாராட்டிவிட்டு, மணமக்கள் தங்களின் வீட்டுக்கு விளக்காக வும், நாட்டுக்கு தொண்டர்களாகவும் விளங்க வேண்டும். நாடு நலம்பெற வேண்டும் என்று நினைத்தால், வரும் நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு அனை வரும் உழைக்க வேண்டும்’ என்று தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாகத் தொடங்கிவிட் டாராம்.''’’

""அ.தி.மு.க.வில் மீண்டும் ஐவரணி அமைக்கப்பட்டிருக்கிறதே?''’’

admk

""அ.தி.மு.க. மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய எடப்பாடி, அதில் ஜெ.’பாணியில் மீண்டும் அ.தி.மு.க.வில் ஐவரணியை அறிவித்திருக்கிறார். அதில் மாஜி மந்திரிகளான தங்கமணி, வேலுமணி, வீரமணி, சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனு சாமி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த ஐவர் அணிதான் புதிய நிர்வாகிகளை நியமிப்பது உட்பட கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்குமாம். இந்த ஐவரணியில் மாஜி மந்திரிகளான ஜெயக்குமாருக்கும் விஜயபாஸ்கருக்கும் இடம் தரப்படாதது அவர்கள் தரப்பை அதிர வைத்திருக்கிறது. எனவே, இந்த அணியின் எண்ணிக்கையைக் கூட்டுமாறு எடப்பாடி யை அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரம், பழைய ஐவர் அணி பாணியில் இந்த அணியின ரும், கட்சிப்பதவிகள் தொடங்கி வேட்பாளர் தேர்வுவரை கலெக்சனில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சம் இப்போதே கட்சி நிர்வாகிகளிடம் எழுந்திருக்கிறது.''’’

""தேர்தல் கூட்டணி குறித்தும் எடப்பாடி இப்பவே ஆலோசித்துக்கொண்டு இருக்கிறாரே?''

""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் தலைமையில் தான் தேர்தலுக்கான கூட்டணியை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி, அது குறித்து தங்கள் கட்சியின் சீனியர்களிடம் பேசிவரு கிறார். அதேபோல் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கவேண்டும் என்பதை விட, தங்கள் கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்த்துவிடக்கூடாது என்பதிலும், அக் கட்சியோடு எந்த வகையிலும் உறவே வேண்டாம் என் பதிலும் அவர் உறுதியாக இருக்கிறாராம். இதுகுறித்து மூத்த நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, "பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்தால் அ.தி.மு.க.வுக்கு எந்த பலனும் கிடைக்காது. வட தமிழகத்தில் அவர்களுக்கு உண்மை யாகவே செல்வாக்கு இருந்திருந்தால், கடந்தமுறை வட தமிழகத்தில் கணிசமான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கும். அதேசமயம், நம்முடன் அவர்கள் கூட்டணி வைத்துக்கொண்டதால்தான் போனமுறை 4 இடங்களில் பா.ம.க.வால் ஜெயிக்க முடிந்தது'’என்று கணக்கைப் போட்டு வைத்துக்கொண்டு சொல்கிறாராம்.''’’

""அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் கைகலப்பில் இறங்கியிருக்காங்களே?''’’

""ஆமாங்க தலைவரே, மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டுக்கு கூட்டம் கூட்ட எடப்பாடி தரப்பு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தது ஊரறிந்த ரகசியம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சிக்காக திருச்சி மாவட் டம் துறையூருக்கு மாஜி அ.தி.மு.க. மந்திரி வந்திருக்கார். அப்ப அவரை வரவேற்க வந்த மாஜி மந்திரிகளான பரஞ்சோதிக்கும் சிவபதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருக்கு. அப்ப சிவபதி, பரஞ்சோதி யைப் பார்த்து, "மாநாட்டிற்காகக் கொடுத்த பணத்தை முழுசா அபகரிக்கலாமா?'ன்னு கேட்டு வாக்குவாதம் செய்ய, அது இருவருக்கும் இடையி லான கைகலப்பா மாறிவிட்டதாம். இதைக்கண்டு ஷாக்கான முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன் னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் ஆகியோர் இருவரையும் விலக்கிவிட்டு, சமாதானப்படுத்தி அனுப்பியிருக்காங்க. இதுதான் திருச்சி இலைக் கூடாரத்தில் இப்ப ஹாட் டாபிக்கா இருக்கு.''’’

""இவங்க ரெண்டு பேரும் பதவிக்காகவும் அடிச்சிக்கிட்டதா சொல்லப்படுதே?''’’

""பதவி குறித்த உரசலும் இவங்களுக்குள் இருந்திருக்கு. அதாவது, கட்சியில் நிர்வாகச் சீர் திருத்தம் செய்ய நினைக்கும் எடப்பாடி, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மா.செ.ன்னு 20ஆம் தேதிக்குள் நியமிக்கத் திட்டமிட்டிருக்கார். இதில் பரஞ்ஜோதி வசம் உள்ள துறையூர் மற்றும் முசிறி ஆகிய இரண்டு தொகுதிகளையும் பறித்து, சிவபதியிடம் எடப்பாடி கொடுக்க இருக்கிறாராம். இந்தத் தகவல் வந்ததில் இருந்தே பரஞ்ஜோதிக்கும், சிவபதிக்கும் இடையில் உரசல் ஆரம்பிச்சிடிச்சாம். அந்த உரசல்தான் இருவரும் சந்திச்சிக்கிட்ட நேரத்தில் பண விவகாரமா விஸ்வரூபம் எடுத்து வெடிச்சிடிச்சின்னு அ.தி.மு.க. தரப்பே சொல்லுது. இது கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.''’’

mdmk

""ம.தி.மு.க. தொண்டர்கள் ரொம்ப உற்சாகமாக இருக்கிறார்களாமே?''

""ஆமாங்க தலைவரே, வர்ற 15ஆம் தேதி அண்ணாவோட 115வது பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பா நடந்து கிட்டிருக்கு. இது தொடர்பான பணிகளை துரை.வைகோ நேரில் பார்வையிட்டு ஆலோ சனைகளை வழங்கியிருக்கார். இதுபற்றி ம.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கரு.சுந்தர், "கட்சி தொண்டர்களை கொள்கைரீதியாக தயார்படுத் தவும், உற்சாகப்படுத்தவும் தான் திராவிட இயக்கங்களின் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்துகொள்ளும்போது, தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து, கொள்கை ரீதியாக அவர்களைத் தயார்படுத்த முடியும். சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது போல் அல்லாமல், ம.தி.மு.க. மதுரை மாநாட்டில், சமூக நீதி, மாநில சுயாட்சி, இந்துத்துவாவை வேரறுப்போம், மொழி உரிமை போராட்டம், அண்ணா ஏற்றிய அறிவுச்சுடர், பாராளுமன்றத்தில் வைகோ, திராவிட இயக்கத்தில் மகளிர் உள்ளிட்ட 20 தலைப்புகளில் முக்கிய தலைவர்கள் பேசுகிறார்கள். இறுதியாக, துரை வைகோ, மல்லை சத்யா, வைகோ ஆகியோர் நிறைவுரை ஆற்றவுள்ளனர்' என்றார்.''

""கொடநாடு விவகாரத்தை எடப்பாடி தரப்பு, திசை திருப்பப் பார்ப்பதாக ஓ.பி.எஸ். தரப்பினர் சொல்கிறார்களே?''’’

rr

""கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, டிரைவர் கனகராஜின் அண்ணனான தனபால், பகிரங்கமாகவே எடப்பாடி மீது குற்றம் சாட்டி, அவரை அதிரவைத்து வருகிறார். இந்த நிலையில், எடப்பாடியின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் சேலம் இளங்கோவன், தனபால் மனநிலை சரியில்லாதவர் என்றும் ஓ.பி.எஸ்., தினகரன் தரப்பின் பேச்சைக்கேட்டு, எடப்பாடி மீது பழி போடுவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார். இதற்கிடையே, தனபாலை காவல்துறைதான் எடப்படிக்கு எதிராக பேச வைத்திருக்கிறது என்றும் அவர்கள் தரப்பு புகார் வாசிக்கிறது. இதுகுறித்துக் காவல்துறையினரிடம் கேட்டால், தனபால் மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் எப்படி எங்கள் விருப்பப்படி பேசுவார்? என்கிறார்கள். தனபாலின் அதிரடி வாக்கு மூலங்களை சமாளிக்க முடியாத எடப்பாடி தரப்பு, அவரை மன நோயாளியாக சித்தரிக்க முயல்கிறது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.''’’

""பா.ஜ.க. மாநில நிர்வாகி ஒருவர் மீது கட்சியினரே கடுப்பில் இருக்கிறார்களே?''’’

bjp

""’தமிழக பா.ஜ.க.வில் அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவவிநாயகத்தின் மீது ரொம்ப நாளாகவே பெண்கள் தொடர் பான புகார்கள் இருந்துவருகின்றன. இந்த நிலையில் நிர்வாக விசயங்களில் இவரது குடைச்சலைத் தாங்கமுடியாத கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை உள்ளிட்ட பலரும், அவரது கட்சிப் பதவியைப் பறிக்கவேண்டும் என்ற பல்வேறு வகையிலும் முயன்று வருகின்றனர். தனது பதவியை இறுக்க மாகப் பற்றிக்கொண்டிருக்கும் விநாயகமோ, என்னை எந்த மாநிலத்துக்காவது கவர்னராக அமரவையுங்கள். இந்த வயதான காலத்தில் நிம்மதியாக இருந்துவிட்டுப் போகிறேன் என்று டெல்லித் தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறாராம். இது இங்குள்ள அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்களை மேலும் கடுப்பாக்கி இருக்கிறது.''’’

""தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பற்றிய சர்ச்சைகள் வருதே?''’’

""தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களே நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். எனவே இது பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்பட்டு, அரசியல் செய்துவருவதாக புகார்கள் பரவலாக எழுந்து வருகின்றன. தமிழகத்திலும் அது தி.மு.க. ஆட்சிக்கு எதிரான நிலைப் பாட்டையே பல விசயங்களில் எடுத்தது. குறிப்பாக, சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களில் குழந்தைகள் திருமணம் நடந்ததாக பிரச்சினை எழுந்தபோது, இதை காவல்துறை விசாரித்தது. உடனே இந்த ஆணையம், அது தொடர்பான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட சிறுமிகளுக்கு இரட்டைவிரல் பரிசோதனை நடந்திருக்கிறது என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் தற்போது கடுமையான விமர்சனங்களை சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் இதன் தலைவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீக்கப்பட்டிப்பதும் குறிப்பிடத்தக்கது.''’’

ff

""தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநர் நியமன விவகாரம் சூடுபிடித்திருக்கிறதே?''’’

""ஆமாங்க தலைவரே, தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி காலியாக இருக்கிறது. எனவே புதிய டீனாக தஞ்சை மருத்துவக் கல்லூரி டீனை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு., தகுதியின் அடிப்படையில் சிபாரிசு செய்கிறாராம். இந்த விவகாரத்தில் அமைச்சருடன் வேறுபட்டிருக்கும் துறைச் செயலாளரான செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.சோ, வேறு ஒருவரை அந்தப் பதவியில் உட்காரவைக்கத் துடிக்கிறார். நியமன விவகாரத்தில் அமைச்சருடன், துறைச்செயலாளர் மோதுவது கோட்டைத் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.'' ’’

""அரசுக்கு தவறான ரிப்போர்ட்டுகளைக் கொடுத்த புகாரும் டாக்டர்கள் குழுமீது இருக்கிறதே?''’’

""உண்மைதாங்க தலைவரே, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக டாக்டர் மனோகர், டாக்டர் சுஜாதா, வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் கல்லூரியை ஆய்வு செய்த இந்த குழுவினர், 300 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனை முழுமையாக செயல்படுகிறது என கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக அறிக்கை சமர் பித்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் இணைந்து இந்த மோசடி அறிக்கையை அந்தக் குழு சமர்ப்பித்ததாகவும், இதற்காக பல கோடிகள் கைமாறிய தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை தி.மு.க. அரசு, கண்டுபிடித்தது. இதன் அடிப்படையில், ஆய்வுக்குழுவில் இருந்த அத்தனை பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. இதில் ஒருவருக்கு, துறையின் செக்ரட்டரியான செந்தில் குமார் சப்போர்ட் செய்வதை துறையி லேயே யாரும் ரசிக்கவில்லையாம்.''’’

""சென்னை மாநகராட்சி கவுன் சிலர்கள் மீது ஏகத்துக்கும் புகார்கள் கிளம்புதே?’’

""சென்னை மாநக ராட்சியில் 200 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பலரும் தங்கள் பெயரை ரிப்பேர் ஆக்கிக்கொண்டு வருகிறார்களாம். அவர்களின் முறைகேடும் அத்துமீறலும் அதிகரித்தபடி இருக்கிறது என்கிறார்கள் பலரும். இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு கவுன்சிலர், ஏகத்துக்கும் கரன்சி மழையில் குளிக்கிறாராம். அவரது வளர்ச்சியைக் கண்ட தி.மு.க. மா.செ. ஒருவரும், காங்கிரஸ் மாவட் டத் தலைவர் ஒருவரும் அவரிடம் பர்சண் டேஜ் வாங்கிவந்தார்களாம். தற்போது, பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் சம்பந்தப் பட்ட கவுன்சிலரோடு அந்த இருவரும் மோதி வருகிறார்களாம். தற்போது, இது தொடர்பான பஞ்சாயத்து அறிவாலயம் வரை போய் அதை டென்சனாக்கி இருக்கிறது''’’

""நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பிரபல கிஸ்கால் நிறுவனம், நடிகை நமீதாவை விளம்பர தூதராக நியமித்து விளம்பரத்தில் கலக்கிவருவது தெரிந்த கதைதான். இந்த நிறுவனம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏக செல்வாக்கோடு இருந்தது. அதைத் தொடர்ந்து அரசுத் தரப்பின் கட்டுமானப் பணிகளுக்கு இந்த நிறுவனத்தின் டி.எம்.டி. கம்பெனிகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட் டன. இந்த நிறுவனம், ஆட்சி மாறிய நிலையிலும் தி.மு.க.வின் பவர் புள்ளிகளைக் கவர்ந்து இப்போதும் ஏக செல்வாக்கோடு இருக்கிறதாம். இந்த நிறுவனம் அமைச்சர்கள் சிலருக்கு கார்களை அன்பளிப்பாக வழங்கி, அவர்களுடனான நட்பை இரும்புக்கம்பி போல் உறுதியாக்கியிருக்கிறது என்கிறது வணிக வட்டாரம்''

nkn130923
இதையும் படியுங்கள்
Subscribe