சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழக -கர்நாடக (போலீஸ்) கூட்டு அதிரடிப்படையால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட மலை மக்களுக்கு ஒருபுறம் நியாயம் கேட்கும் குரல் இருந்துகொண்டேயிருக்க... அந்த சித்ரவதையைச் செய்த கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படாமல் கௌரவப் படுத்தப்படுவதில், ஒரு முக்கியமான நபரை இப்போது அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆம்...! அவர்தான் மோகன்நிவாஸ்.
இந்த மோகன்நிவாஸ் 1987-ல் நேரடி எஸ்.ஐ.யாக தேர்வு பெற்று 1990ல் சத்தியமங்கலம் பகுதியில் எஸ்.ஐ.யாக பணியாற்றத் தொடங்கினார்.
1991 முதல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்போது தான் தமிழக -கர்நாடக கூட்டு அதிரடிப்படை உருவாக்கப் பட்டது. அதற்கு தலைவராக காவல்அதிகாரி வால்டர் தேவாரம் பணியமர்த்தப்பட்டார்.
தேவாரம் தலைமையிலான அதிரடிப்படைக் குழுவில் இந்த எஸ்.ஐ. மோகன்நிவாஸ் மிக முக்கியமான நபராக வலம் வந்தார். இவர் செய்கிற எல்லாவிதமான சட்ட மீறல்களையும் தேவாரம் காப்பாற்றி வந்தார். பெண்களை கற்பழித்தாலும், கொலை செய்தாலும் சித்ரவதைக் கொடுமைகள் செய்தாலும், அவர்கள் மீது எந்த விசாரணையும் இருக்காது. அப்படித்தான் மலைப்பகுதியில் அப்பாவி மலைவாசிகள் சொல்லமுடியாத சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்த மோகன்நிவாஸ் செயல்பாடுகளை நம்மிடம் விரிவாக விவரிக்கிறார்கள் தாளவாடி மலைக்கிராம பழங்குடி மக்கள்.
"அது அதிரடிப்படையல்ல, இறந்து போன வீரப்பன் கூறுவதுபோல் அது அரக்கர் படை. அந்த படையில் பெரிய அரக்கராக இருந்தவர்தான் இந்த மோகன்நிவாஸ். ஒரு கிராமத்துக்குள் மோகன் நிவாஸ் வருகிறார் என்றாலே தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட மறைந்து கொள்ளும். அந்த அளவுக்கு மக்கள் பயந்து நடுங்கு வார்கள். ஏனென்றால் அவர் செய்த அட்டூழியங்கள் அப்படி.
"ராமர் அணை' என்ற ஒரு அடர்ந்த வனப்பகுதி யில் ஃபயர் வாட்சராக இருந்த மணி என்பவரை "வீரப்பன் கூட்டத்திற்கு அரிசி பருப்பு கொடுக் கிறாயா?' என்று பொய்யாக ஒரு புகாரைச் சொல்லி, அந்த மணியை வீட்டிலிருந்து சிறிது தூரத்திற்கு கொண்டுவந்து அடித்தே கொன்று தீ வைத்து எரித்தார் இந்த மோகன்நிவாஸ். அந்த மணியின் மனைவி கத்தி கதறியபோது "உன் குடும்பத்தையே கொலை செய்து எரித்துவிடுவேன்... தொலைச்சுப் போடுவேன்' என மிரட்டியதோடு... "உன் கணவன் எங்கே என்று யாராவது கேட்டால் எங்கேயோ ஓடி விட்டான் என்றுதான் கூற வேண்டுமென' மிரட்டி விட்டுப் போனார். அதேபோல்தான் புதுக்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் என்பவரை யும் அடித்தே கொன்று தீ வைத்துக் கொளுத்தினார். அது மட்டுமா? எத்தனை பெண்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தினார்? சொல்ல முடியாத அளவுக்கு கடுமையான சித்ரவதைகளை அவர் நடத்தினார். இதற்கெல்லாம் ஒரே காரணம், இவர் தேவாரத்தின் ஆள் என்பதுதான்.
மோகன்நிவாஸால் பாதிக்கப்பட்ட தங்கம்மாள், "என் ஊரு மேச்சேரி. தொண்ணூத்தி மூணுல கொளத்தூர் பஸ் ஸ்டாண்டுல வெத்தல வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்ப வீரப்பன் பெரியதண்டால இருந்தாராம். நாங்க அவரப் பாத்ததுகூட இல்ல. அப்ப மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டர் பவுனு கலர்ல ஒரு பஸ்சுல வந்து, வயசான மூணுபேரு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தவங்களப் பிடிச்சுத் தூக்கிப் போட்டா
சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழக -கர்நாடக (போலீஸ்) கூட்டு அதிரடிப்படையால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட மலை மக்களுக்கு ஒருபுறம் நியாயம் கேட்கும் குரல் இருந்துகொண்டேயிருக்க... அந்த சித்ரவதையைச் செய்த கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படாமல் கௌரவப் படுத்தப்படுவதில், ஒரு முக்கியமான நபரை இப்போது அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆம்...! அவர்தான் மோகன்நிவாஸ்.
இந்த மோகன்நிவாஸ் 1987-ல் நேரடி எஸ்.ஐ.யாக தேர்வு பெற்று 1990ல் சத்தியமங்கலம் பகுதியில் எஸ்.ஐ.யாக பணியாற்றத் தொடங்கினார்.
1991 முதல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்போது தான் தமிழக -கர்நாடக கூட்டு அதிரடிப்படை உருவாக்கப் பட்டது. அதற்கு தலைவராக காவல்அதிகாரி வால்டர் தேவாரம் பணியமர்த்தப்பட்டார்.
தேவாரம் தலைமையிலான அதிரடிப்படைக் குழுவில் இந்த எஸ்.ஐ. மோகன்நிவாஸ் மிக முக்கியமான நபராக வலம் வந்தார். இவர் செய்கிற எல்லாவிதமான சட்ட மீறல்களையும் தேவாரம் காப்பாற்றி வந்தார். பெண்களை கற்பழித்தாலும், கொலை செய்தாலும் சித்ரவதைக் கொடுமைகள் செய்தாலும், அவர்கள் மீது எந்த விசாரணையும் இருக்காது. அப்படித்தான் மலைப்பகுதியில் அப்பாவி மலைவாசிகள் சொல்லமுடியாத சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்த மோகன்நிவாஸ் செயல்பாடுகளை நம்மிடம் விரிவாக விவரிக்கிறார்கள் தாளவாடி மலைக்கிராம பழங்குடி மக்கள்.
"அது அதிரடிப்படையல்ல, இறந்து போன வீரப்பன் கூறுவதுபோல் அது அரக்கர் படை. அந்த படையில் பெரிய அரக்கராக இருந்தவர்தான் இந்த மோகன்நிவாஸ். ஒரு கிராமத்துக்குள் மோகன் நிவாஸ் வருகிறார் என்றாலே தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை கூட மறைந்து கொள்ளும். அந்த அளவுக்கு மக்கள் பயந்து நடுங்கு வார்கள். ஏனென்றால் அவர் செய்த அட்டூழியங்கள் அப்படி.
"ராமர் அணை' என்ற ஒரு அடர்ந்த வனப்பகுதி யில் ஃபயர் வாட்சராக இருந்த மணி என்பவரை "வீரப்பன் கூட்டத்திற்கு அரிசி பருப்பு கொடுக் கிறாயா?' என்று பொய்யாக ஒரு புகாரைச் சொல்லி, அந்த மணியை வீட்டிலிருந்து சிறிது தூரத்திற்கு கொண்டுவந்து அடித்தே கொன்று தீ வைத்து எரித்தார் இந்த மோகன்நிவாஸ். அந்த மணியின் மனைவி கத்தி கதறியபோது "உன் குடும்பத்தையே கொலை செய்து எரித்துவிடுவேன்... தொலைச்சுப் போடுவேன்' என மிரட்டியதோடு... "உன் கணவன் எங்கே என்று யாராவது கேட்டால் எங்கேயோ ஓடி விட்டான் என்றுதான் கூற வேண்டுமென' மிரட்டி விட்டுப் போனார். அதேபோல்தான் புதுக்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் என்பவரை யும் அடித்தே கொன்று தீ வைத்துக் கொளுத்தினார். அது மட்டுமா? எத்தனை பெண்களை பாலியல்ரீதியாக கொடுமைப்படுத்தினார்? சொல்ல முடியாத அளவுக்கு கடுமையான சித்ரவதைகளை அவர் நடத்தினார். இதற்கெல்லாம் ஒரே காரணம், இவர் தேவாரத்தின் ஆள் என்பதுதான்.
மோகன்நிவாஸால் பாதிக்கப்பட்ட தங்கம்மாள், "என் ஊரு மேச்சேரி. தொண்ணூத்தி மூணுல கொளத்தூர் பஸ் ஸ்டாண்டுல வெத்தல வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்ப வீரப்பன் பெரியதண்டால இருந்தாராம். நாங்க அவரப் பாத்ததுகூட இல்ல. அப்ப மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டர் பவுனு கலர்ல ஒரு பஸ்சுல வந்து, வயசான மூணுபேரு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தவங்களப் பிடிச்சுத் தூக்கிப் போட்டாங்க. அவங்களோட என்னையும் தூக்கி வண்டில போட்டுக் கொண்டுபோனாங்க.
போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள போனதும் ஹெட்கான்ஸ்டபிள் என் முகத்தில் உதைத்தார். "மேட்டூர்ல எட்டாயிரம் போலீஸ்காரங்க... உன்னால சமாளிக்க முடியுமா?' என அசிங்கமாகக் கேட்டார். "இங்க பாரு... எட்டாயிரம் அதிரடிப் போலீஸ் இருக்கறோம். எட்டாயிரம் பேருக்கும் இவ தாங்குவா. ஒடம்பப் பாருன்னு சொல்லிக் கிட்டே அந்த மோகன்நிவாஸ் இன்ஸ்பெக்டர் எட்டி என் வாயிலயே ஒதைச்சார் பாருங்க... என் வாயில உள்ள பல் எல்லாம் கத்திரிச்சுப் போயிருச்சு. ஒதடு கிழிஞ்சு ஒடஞ்சி போச்சு. தொற... தொற... தொற...னு ரத்தம் ஊத்துச்சு.
மோகன் நிவாஸ் இன்ஸ்பெக்டரும் தேவாரமும்தான் இந்தக் கொடுமைகளை செய்வாங்க. ரெண்டு பேரும் என்னை ரொம்பக் கொடுமை செஞ்சாங்க. மேட்டூர் ஐ.பி.ல என்னை பத்துநாள் வச்சி ஒடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம அஞ்சுநாளு கவுந்தே உக்காந்திருந்தேன். துணியப் பூராப் புடுங்கி தூக்கியெறிஞ்சிட்டாங்க.
இன்ஸ்பெக்டர் மோகன்நிவாஸ் என்னை ஒரு ரூமுக்குள்ளே கூட்டிட்டுப் போய் பெஞ்சில படுத்துக்கிட்டார். மதியத்திலிருந்து நடுராத்திரிவர... அவர் உடம்ப பிடிச்சுவிடும்படி என்னை கட்டா யப்படுத்தி செய்யவச்சாரு...'' -இப்படி மோகன் நிவாஸோட கொடூரமான அட்டூழியங்களப் பத்தி சதாசிவம் கமிஷன்ல அந்தம்மா வாக்குமூலமே கொடுத்திருக்கு.
அ.தி.மு.க. விசுவாசியாவும் தி.மு.க. எதிர்ப்பாளராவும் இருந்த மோகன்நிவாஸ் இப்போ நடக்கிற தி.மு.க. ஆட்சியிலேயே உயர்ந்த மரியா தையுடன் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் என்றால்... யாரும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. அதுதான் உண்மை...! இப்போது அவருக்கு அந்த மரியாதை ஏன் கொடுக்கப்பட்டது? அது யாரால் வழங்கப்பட்டது என்பதுதான் கேள்வி.
அது ஒருபுறமிருக்க, அவர் பற்றிய மேலும் சில சம்பவங்களை பார்ப் போம்...
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது அப்போதும் அதிரடிப்படை யில் இந்த மோகன்நிவாஸ் சத்தியமங்கலம் மலைப் பகுதியில்தான் பணியாற்றி னார்.
1997 காலகட்டத்தில் சந்தன வீரப்பன் கர்நாடகா வைச் சேர்ந்த ஒன்பது வன ஊழியர்களை பிணைக் கைதி களாக காட்டுக்குள் கடத்தி வைத்து அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு தூது வராக நமது ஆசிரியரை இரு மாநில அரசுகளும் அறிவித்தன. அந்த நிலையில் தி.மு.க. தலைவர் முதல்வர் கலைஞர் "அந்த ஒன்பது பேரையும் பத்திரமாக மீட்க வேண்டும் இரு மாநில அரசுகளின் செயல்பாடு நல்லிணக்கமாக இருக்கவேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்ற அக்கறையோடு வீரப்பன் விதித்த நிபந்தனைப்படி அதிரடிப்படையின் செயல்பாடுகளை இந்தப் பிரச்சினை முடியும்வரை அமைதிப்படுத்தி வைத்தார்.
ஆனால் இந்த மோகன்நிவாஸ், வீரப்பன் நடமாட்டம் எங்கெல்லாம் இருக்கிறது என்கிற விசாரணையில் தேவாரம் போலீஸ் பலரையும் மலைப்பகுதியில் இறக்கிவிட்டு உளவு பார்க்கச் செய்தார். இதன்மூலமாக வீரப்பனுக்கு கோபம் ஏற்பட்டு பிணைக்கைதிகளை கொல்லவேண்டும் என்பதுதான் மோகன்நிவாஸின் திட்டம். இது அ.தி.மு.க. தலைவியான ஜெயலலிதாவை உற்சாகப்படுத்தும் என்பதுதான். அப்படி பிணைக்கைதிகளாக இருப்பவர்கள் யாராவது இறக்க நேரிட்டால் தி.மு.க. தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பதே தேவாரம் போலீஸான மோகன்நிவாஸின் திட்டமாக இருந்தது.
அதில் ஒரு சம்பவம். சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர் மலைக்கிராமம். அங்கு மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் நஞ்சையன். அந்தசமயத்தில் அந்தப் பகுதியில் ஒரே ஒரு டெலிபோன் மட்டும் அங்கு இருக்கும். நக்கீரன் ஆசிரியர், அரசு தூதுவர் என்பதால் மலைப்பகுதியில் நடக்கிற சில விவரங்களை அரசுக்கு எடுத்துச் சொல் வதற்காக நக்கீரன் அலுவலகத்திற்கு சிலமுறை அங்கிருந்து தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசுவார். அவருக்கு, நஞ்சையன் தொலைபேசியை கொடுத்து உதவினார் என்கின்ற ஒரே காரணத்திற் காக அந்த டெலிபோன் ஆபரேட்டர் நஞ்சையனை, மோகன்நிவாஸ் தனது படையில் உள்ள இரண்டு அதிரடிப்படை வீரர்களை அனுப்பி ஒருநாள் இரவு நஞ்சையனை காட்டுக்குள் தூக்கிச்சென்று மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தி... செத்துட்டான் என தூக்கி வீசி விட்டு வந்துவிட்டார்கள். அடுத்த நாள் அந்த பகுதிக்கு சென்ற மக்கள் குற்றுயிராக கிடந்த நஞ்சையனை தூக்கிக் கொண்டுபோய் மருத்துவ மனையில் வைத்து காப்பாற்றினார்கள். அதன் பிறகு கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று மாதம் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதன்மூலமாக தி.மு.க. அரசுக்கு எதிரான நடவடிக்கையில் வெளிப்படையாக ஈடுபட்டவர்தான் இந்த மோகன் நிவாஸ். அப்போது இந்த தகவலை முதல்வர் கவனத்திற்கு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அலெக்சாண்டர் மூலமாக கொண்டு சென்றோம். உடனடியாக முதல்வர் கலைஞர் இந்த மோகன்நிவாஸை பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடத்திற்கு மாறுதல் செய்தார். அதன் பிறகும் தனக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீண்டும் சத்தியமங்கலத்திற்கு வந்தார் மோகன்நிவாஸ்.''
அடுத்து ஒரு மிக முக்கியமான சம்பவம்.
வீரப்பன் -கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம். அப்போதும் தி.மு.க. அரசாங்கம். முதல்வர் கலைஞர் மிகவும் கவனமாக இந்த விவகாரத்தை கையாண்டார். நக்கீரன் ஆசிரியர் அரசு தூதுவராக நியமிக்கப்பட்டு காட்டுக்குள் வீரப்பனோடு பேச்சுவார்த்தைப் பணிகள் நடைபெற்றது. இரு மாநில அரசுகளின் ஒட்டுமொத்த செயல்பாடும் இதை நோக்கியே இருந்தது. ராஜ்குமார் மீட்புக்கு நக்கீரன் ஆசிரியர் தூதராக செல்லவில்லையென்றால்... கர்நாடகாவில் வாழும் 2 லட்சம் தமிழர்கள் ஒரேநாளில் கொல்லப்படுவார்கள் என்று வெளிப்படையாகக் கர்நாடகாவில் பேசப்பட்டது. தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்திற்காக அப்போது முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், நமது நக்கீரன் ஆசிரியரை கட்டாயப்படுத்தி இந்த பொறுப்பை ஏற்கவைத்தார். தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்கின்ற அந்த நல்ல நோக்கத்திற்காகவே அரசு தூதுவராக செயல்பட்டு நடிகர் ராஜ்குமார் மீட்பில் ஈடுபட்டார் நமது ஆசிரியர். இந்த நிலையில் இந்த மோகன்நிவாஸ் என்கிற கொடுங்கோலன் ஒரு சதி செயலை அரங்கேற்றினார்.
அது என்னவென்றால், சந்தன வீரப்பனைப் பொறுத்தவரை தாக்குதல், கடத்தல், கொலை செய்தல் என பல்வேறு குற்ற நடவடிக்கைகள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் வீரப்பன் மீது யாரும் பழி சொல்ல முடியாத அளவிற்கு அவரது செயல்பாடு இருந்தது, அதை அசிங்கப்படுத்தும் விதமாக ராஜ்குமார் காட்டுக்குள் இருந்தபோது மோகன்நிவாஸ் செய்த ஒரு இழிசெயல், வீரப்பனை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அது நடைபெற்றது. பாலப்படுகு என்ற மலை கிராமத் தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மலைவாசிப் பெண்ணை மிகக்கடுமையாக மிரட்டி சித்ரவதை செய்து, "நீ இப்படிச் சொல்ல வேண்டும்' என்று சொல்லி அந்த திட்டத்தை நிறைவேற்றினார்.
ஒரு கேமராமேன், ஒரு நிருபர் ஆகியோரை அழைத்துவந்து அந்தப் பெண் முன்னால் நிறுத்தப்பட்டு... "சொல்லு' என கூறியிருக்கிறார். போலீஸ் மிரட்டலால் அந்தப் பெண் விஜயலட்சுமி, "நான்தான் வீரப்பனின் இரண்டாவது மனைவி'' என்று இல்லாத பல்வேறு விஷயங்களை... மோகன்நிவாஸ் கூறிய கதைகளை அந்த செய்தியாளர்களிடம் கூறினார். அது சில நாட்களிலேயே அட்டை படத்துடன் "நான் வீரப்பனின் இரண்டாவது மனைவி'' என ஒரு வாரப் பத்திரிகையில் பேட்டியாக வந்தது. அந்தச் செய்தி காட்டுக்குள் இருந்த வீரப்பனை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதை, அப்போது தூதுவராக காட்டுக்குள் சென்ற நமது ஆசிரியரிடம் மிகக் கடுமையாக கூறியிருக்கிறார் வீரப்பன்.
"நான் கொலைகாரன், கடத்தல்காரன் சரி... ஆனால் நான் என் மனைவி ஒருவரைத் தவிர எந்தப் பெண்ணையும் தொட்டதில்லை. ஏன் இந்த தமிழக அரசு என்னிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே என்மேல் அவதூறு பரப்புகிறது? இதற்கு ஒரு பதில் தெரியவேண்டும்'' என நமது ஆசிரியரிடம் கொந்தளித்தார்.
அப்போது "இந்தப்பெண் யார்?' என தேடி கண்டுபிடிக்க மலைப்பகுதிக்கு நாம் சென்றோம். இந்த மோகன்நிவாஸ் அந்தப் பெண்ணை கர்நாடக பகுதிக்கு அனுப்பி யாருக்கும் தெரியாத இடத்தில் இருக்கவைத்தார். அதையும் நாம் கண்டுபிடித்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்த விஜயலட்சுமியைக் கண்டுபிடித்து பேசினோம்.
அப்போது நம்மிடம் கதறி அழுத விஜயலட்சுமி, "மோகன்நிவாஸ்தான் இப்படிச் சொல்லச் சொன்னார். இல்லையென்றால் என் குடும்பத்தையே கொன்றுவிடுவதாக மிரட்டினார். வேறு வழியில்லாமல் அப்படி நான் பொய் சொன்னேன். வீரப்பனை நான் பார்த்ததுகூட கிடையாது...''என்று கூறினார்.
அந்தச் செய்தியை நக்கீரனில் நாம் மிகத்தெளி வாக வெளியிட்டோம். அதன் பிறகுதான் வீரப்ப னின் கோபம் அடங்கியது. ஆக வீரப்பனை கோபப் படுத்தி அதன்மூலமாக ராஜ்குமார் உயிருக்கு ஆபத்து வந்து, தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற சதிச்செயலை செய்ய நினைத்த இந்த மோகன்நிவாஸ்தான்... இப்போது இதே தி.மு.க. ஆட்சியில் மரியாதையோடு விருதுகள் பெற்று வழியனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆம்...! 1987ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.யாக தேர்வு பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டிருக்கிறது. இந்த 1987 பேட்ச்சில் சென்ற 30ந் தேதி 14 பேருக்கு ஏ.டி.எஸ்.பி.யிலிருந்து எஸ்.பி.யாக பதவிஉயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற 13 பேரும் அடுத்த இரண்டு மாதம், மூன்று மாதம் என அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் பணி ஓய்வுபெறவிருக்கிறார்கள். ஆனால் இந்த மோகன்நிவாஸ் மட்டும்தான் மார்ச் 31ந் தேதியுடன் பணி ஓய்வுபெறவிருந்தார். இந்த புரமோஷன் என்பது மோகன்நிவாசுக்காக மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சரியமான உண்மை. பணி ஓய்வுக்கு முதல்நாள் அவருக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு மார்ச் 31ஆம் தேதி பணிநிறைவு செய்யப்பட்டு அவர் ஓய்வு பெற்றிருக்கிறார்.
எந்த தி.மு.க. அரசுக்கு எதிராக, அப்போதைய முதல்வர் கலைஞருக்கு எதிராக இந்த ஒரு போலீஸ் அதிகாரி சட்ட மீறலை செய்து, தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பல்வேறு சதிச் செயல்களைச் செய் தாரோ அதே மோகன்நிவாஸுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான இந்த தி.மு.க. அரசு பதவி உயர்வு வழங்கி, அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருப்பதுதான்... இப்போதைய மிகப்பெரிய ஒரு விவாதப்பொருளாக அமைந்துள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளருமான தோழர் மோகன்குமார்...
"வீரப்பன் தேடுதல் என்ற பெயரில் இரு மாநில கூட்டு அதிரடிப்படையும் மலை மக்களை கொடுமையான சித்ரவதை செய்தது எல்லோரும் அறிந்ததுதான். இதற்காக நீதி வேண்டும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கமும் பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டம், சட்ட போராட்டம் நடத்திய பிறகுதான் சதாசிவம் கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த சதா சிவம் கமிஷன் விசாரணையில் முழுமை யாக எல்லோராலும் பங்கெடுக்க முடிய வில்லை. அந்த விசாரணைக்கமிஷன் முடிவில் "நிவாரணம் கொடுக்கவேண் டும்' என்று மலை மக்களுக்கு ஆணையிட்டது. அதில் 10% கூட நிறைவேறவில்லை. அந்த ஆணையத்தின் முடிவின்படி "பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், பாதிப்பை ஏற்படுத்திய அதிகாரிகளுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்' என கூறியது. ஆனால் தண்டனை வழங்க வேண்டிய ஒரு அதிகாரியான மோகன்நிவாஸுக்கு இப்பொழுது புரமோஷன் கொடுத்திருப்பது, அதுவும் குறிப்பாக அவருக்காகவே அந்த புரமோஷன் கொடுத்திருப்பது குற்றச்செயலுக்கு அரசு அங்கீகாரம் கொடுத்ததுபோல் உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லையா? இது எந்தவகையில் நியாயமாக இருக்கும்? இந்த மக்களின் வேதனையை முதல்வர் ஏன் அறியவில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது'' என்றார்.
தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களின் நடவடிக்கை கள் வெளிப்படைத்தன்மையாக இருக்கிறது. தி.மு.க. அரசின் நிர்வாகமும் வெளிப்படை தன்மையோடு செயல்படுகிறது. அரசின் துறைகளில் மற்ற துறைகளைவிட தொடர்ந்து சர்ச் சைக்குள்ளாவது காவல்துறையின் நடவடிக்கை கள்தான். ஆக... காவல்துறையின் செயல்பாடுகளில் எங்கு குறைபாடுகள் இருக்கிறது என்பதை ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள் மிக கவனமாக பார்க்க வேண்டும்.
இந்த மோகன்நிவாஸின் மலைமக்கள் விரோத செயல்பாடுகள் பற்றி அறிந்த சந்தன வீரப்பன் ஒரு முறை காட்டுக்குள் வைத்து மோகன்நிவாஸ் மீது தாக்குதல் நடத்தினான். அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் மோகன்நிவாஸ். மருத்துவமனையில் இருந்த மோகன்நிவாஸை பார்ப்பதற்காக தனி விமானத்தில் வந்துசென்றார் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்பது மிகவும் குறிப்பிடத் தகுந்த செய்தி.
இந்த மோகன்நிவாஸ் கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா போலீஸான தேவாரம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் அதே மாவட் டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
காவல்துறையின் செயல்பாடுகளைப் பற்றி முதல்வர் தனிக் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.