"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சில தலைவர்களின் திடீர் முடி வெடுப்புகளும் கவனம் பெற ஆரம்பித்திருக்கின்றன.''
"ஆமாம்பா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட, தேர்தலை சந்திக்கவில்லை என்கிறார் களே?''”
"உண்மைதாங்க தலைவரே, உ.பி.யில் உள்ள ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றுவந்த சோனியா காந்தி, இந்த முறை உடல்நிலை காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கும் முடிவைக் கைவிட்டிருக்கிறாராம். அதனால் அவருக்கு பதில் அவரது ரேபரேலி தொகுதியில் இந்தமுறை, அவர் மகள் பிரியங்கா காந்தி களம்காண இருக்கிறார் என்கிறார்கள். அதேபோல் இம்முறை ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாகி நாடாளுமன்றம் செல்லவும் அவர் விரும்புகிறாராம். ஆனால் கட்சியின் சீனியர் தலைவர்களோ, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் லோக்சபாவில் களமிறங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களின் ஆதரவோடு நாடாளுமன்றம் சென்றால்தான், கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கமுடியும். மாறாக, ராஜ்யசபா மூலம் எம்.பி.யா வது தொண்டர்களுக்குச் சோர்வையே தரும் என்ற விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த முறை 2 தொகுதியில் போட்டியிட்ட ராகுலுக்கு உ.பி. மாநில அமேதி தோல்வியைத் தந்தது. வயநாடு தான் அவருக்குக் கைகொடுத்தது. ராகுல் உ.பி.யில் சந் தித்த தோல்வியும், சோனியாவின் இந்த ராஜ்யசபா முடி விற்கு காரணம் என்ற பேச்சும் பரவலாக எழுந்திருக்கிறது.''”
"இந்த நிலையில், இங்கே தி.மு.க. காங்கிரஸுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் சுமுக நிலையை எட்டவில்லையே?''”
"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் போது கூட்டணி குறித்த சுமுக முடிவு இரு தரப்பிலும் எட்டப்பட வில்லை. அதனால் காங்கிரஸுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை 13ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தது தி.மு.க. ஆனால் சீட் எண்ணிக் கையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையை காங்கிரஸ் ஏற்காததால், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால், காங் கிரஸ் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த் தைக்கு வரட்டும். அதிகபட்சம் இன்னும் 1 வாரம் காத்திருப்போம் என்று கெடு விதித்திருக்கும் தி.மு.க. தரப்பு, அப்போதும் பேச்சுவார்த்தைக்கு வராவிட் டால், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் பாணியில், இத்தனை சீட்தான் காங்கிரஸுக்கு ஒதுக்க முடியும் என அறிவித்துவிடலாம். அதன்பின் அதை ஏற் பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம் என்கிற மனநிலையில் இருக்கிறதாம
"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சில தலைவர்களின் திடீர் முடி வெடுப்புகளும் கவனம் பெற ஆரம்பித்திருக்கின்றன.''
"ஆமாம்பா. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட, தேர்தலை சந்திக்கவில்லை என்கிறார் களே?''”
"உண்மைதாங்க தலைவரே, உ.பி.யில் உள்ள ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றுவந்த சோனியா காந்தி, இந்த முறை உடல்நிலை காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கும் முடிவைக் கைவிட்டிருக்கிறாராம். அதனால் அவருக்கு பதில் அவரது ரேபரேலி தொகுதியில் இந்தமுறை, அவர் மகள் பிரியங்கா காந்தி களம்காண இருக்கிறார் என்கிறார்கள். அதேபோல் இம்முறை ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாகி நாடாளுமன்றம் செல்லவும் அவர் விரும்புகிறாராம். ஆனால் கட்சியின் சீனியர் தலைவர்களோ, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் லோக்சபாவில் களமிறங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களின் ஆதரவோடு நாடாளுமன்றம் சென்றால்தான், கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கமுடியும். மாறாக, ராஜ்யசபா மூலம் எம்.பி.யா வது தொண்டர்களுக்குச் சோர்வையே தரும் என்ற விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, கடந்த முறை 2 தொகுதியில் போட்டியிட்ட ராகுலுக்கு உ.பி. மாநில அமேதி தோல்வியைத் தந்தது. வயநாடு தான் அவருக்குக் கைகொடுத்தது. ராகுல் உ.பி.யில் சந் தித்த தோல்வியும், சோனியாவின் இந்த ராஜ்யசபா முடி விற்கு காரணம் என்ற பேச்சும் பரவலாக எழுந்திருக்கிறது.''”
"இந்த நிலையில், இங்கே தி.மு.க. காங்கிரஸுக்கு இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் சுமுக நிலையை எட்டவில்லையே?''”
"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே நடந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் போது கூட்டணி குறித்த சுமுக முடிவு இரு தரப்பிலும் எட்டப்பட வில்லை. அதனால் காங்கிரஸுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை 13ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தது தி.மு.க. ஆனால் சீட் எண்ணிக் கையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையை காங்கிரஸ் ஏற்காததால், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால், காங் கிரஸ் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த் தைக்கு வரட்டும். அதிகபட்சம் இன்னும் 1 வாரம் காத்திருப்போம் என்று கெடு விதித்திருக்கும் தி.மு.க. தரப்பு, அப்போதும் பேச்சுவார்த்தைக்கு வராவிட் டால், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் பாணியில், இத்தனை சீட்தான் காங்கிரஸுக்கு ஒதுக்க முடியும் என அறிவித்துவிடலாம். அதன்பின் அதை ஏற் பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம் என்கிற மனநிலையில் இருக்கிறதாம். இப்போது, கூடுதல் சீட் கிடைக்காவிட்டாலும் பரவா யில்லை. கடந்த முறை கிடைத்த 10 சீட்டைக் கொடுத்தாலே போதும் என்கிற நிலைக்கு காங்கிரஸும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே, கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிப்பதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டிவருகிறாராம்.''”
"இந்த நிலையில் சிட்டிங் எம்.பி.க்களுக்கு சீட் தரக்கூடது என்கிற குரலும் காங்கிரசில் வலுத்து வருகிறதே?''”
"தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான தொகுதி உடன்பாடு புதன்கிழமை வரை முடியாத நிலையில், காங்கிரசின் சிட்டிங் எம்.பி.க்கள் பலருக்கும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே எதிர்ப்பு வலுத்திருக் கிறது. இதை காங்கிரஸின் தேசியத் தலைமை அதிர்ச்சியுடனும் கவலையுடனும் கவனித்துவருகிற தாம். தமிழகத்தில் காங்கிரஸுக்கு 8 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இதில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், கரூர் எம்.பி. ஜோதிமணி, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசு, திருவள்ளூர் எம்.பி. டாக்டர் ஜெயக் குமார் ஆகியோர்களுக்கு எதிராக அந்தந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கொடி பிடிப்பதோடு, மீண்டும் இவர்களுக்கு சீட் கொடுக் கக்கூடாது என்றும் வரிந்துகட்ட ஆரம்பித்திருக் கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு ஏன் மீண்டும் சீட் தரக்கூடாது என்கிற காரணங்களை யும் விவரித்து, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு புகார்க் கடிதங்களையும் அனுப்பி, அவர்கள் ஷாக் கொடுத்து வருகிறார்களாம்.''”
"ஓ.பி.எஸ்.சுக்கு முதல்வர் ஸ்டாலின் ஷாக் கொடுத்திருக்கிறாரே?''”
"சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தபோது ஓ.பி.எஸ்.சுக்கு, ஒதுக் கப்பட்ட இடத்தை ரத்து செய்துவிட்டு, அதை, தாங்கள் புதிதாகத் தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவரான உதயகுமாருக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடி வலியுறுத்தி வந்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்தமுறை எடப்பாடி வைத்த கோரிக்கையை ஏற்கும்படி சபாநாய கரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். காரணம், இத்த னை நாள், ஓ.பி.எஸ்.சிடம் முதல்வர் ஸ்டாலின் கருணை காட்டி வந்தா ராம். இப்போது பா.ஜ.க.வுடன் பகிரங்கமாகவே அவர் கூட்டணி அமைத்துக்கொண்ட பின், இனியும் எதற்கு அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்? அவரை விட பா.ஜ.க.வை கொஞ்சமாவது எதிர்க்கும் எடப்பாடியே பரவா யில்லை என்கிற எண்ணத்திற்கு ஸ்டாலின் வந்து விட்டாராம். அதன் எதிரொலிதான் இது என் கிறார்கள். இது ஓ.பி.எஸ்.சை அதிரவைத்திருக்கிறதாம்.''
"கட்சிகளுக்கிடையே கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் களைகட்டிவரும் நேரத்தில், அ.தி.மு.க. தங்கமணியும் பா.ஜ.க. வானதி சீனிவாசனும் நடத்திய சீக்ரெட் பேச்சுவார்த்தை பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, சட்டசபை நடந்த நேரத்தில், அ.தி.மு.க. தங்கமணியும், பா.ஜ.க. வானதி சீனிவாசனும் தனியே வெகுநேரம் பேசிக்கொண்டி ருந்தார்கள். இதுகுறித்து ஊடகத்தினர் கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் குடித்த தேநீரில் சர்க்கரை அதிகம் என்று பேசிக்கொண்டோம்' என்று வானதி மழுப்பினார். ஆனால், அவர்கள் பேசியது பா.ஜ.க. ஒன்றிய அமைச்சரான முருகன் பற்றி தானாம். கடந்தமுறை தமிழக பா.ஜ.க. தலைவ ராக இருந்த முருகன் நீலகிரியில் நின்று எம்.பி.யாகும் எண் ணத்தில் நிறைய செலவு செய்துகொண்டிருந்தா ராம். முருகனுக்காக பா.ஜ.க. வானதியும் அ.தி.மு.க.வில் இருக்கும் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் உதவிபுரிய கைகோர்த் தார்களாம். ஒருவேளை நீலகிரியில் முருகன் எம்.பி.யாகி விட்டால், அவர் தமிழக தலைவர் பதவியில் நிலை பெற்றுவிடுவார் என்று கருதிய பா.ஜ.க. பிர முகர் ஒருவர் குறுக்கு வழியில் களமிறங் கினாராம். இதைத் தொடர்ந்து தான் முருகன், மத்திய பிர தேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினரானாராம். இந்த பழைய கதையைத்தான், தங்கமணியும் வானதியும் பகிர்ந்துகொண்டார் களாம். மேலும், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட் டணி வைக்க வேண்டும் என்று நாங் கள் எவ்வள வோ முயற்சி செய்கிறோம். ஆனால் எடப்பாடி தான் பா.ஜ.க. வேண்டாம் என்று முரட்டுத்தனமான பிடிவாதத்தில் இருக்கிறார் என்றும் தங்கமணி அப்போது வானதியிடம் குறைபட்டுக் கொண்டாராம்.''”
"தமிழகத்தின் மணல் மாஃபியாக்களில் ஒருவரான கரிகாலன், மீண்டும் தமிழகத்தில் தலையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறாரே?''”
"அமலாக்கத்துறையின் ரெய்டு நடவடிக் கைகளால், தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த மணல் அதிபர்கள் அண்டை மாநிலங்களுக்கு எஸ்கேப் ஆனார்கள். இந்த நிலையில் அவர்களில் கரிகாலன், கடந்த சில வாரங்களாக இங்கே பகிரங்கமாக உலவ ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் வந்திருக்கிறார் கரிகாலன். இதற்காக மதுரை விமான நிலையத்துக்கு அவர் வந்தபோது, அதே விமானத்தில் சென்னைக்கு வருவதற்காக ஏர் போர்ட் லௌஞ்சில் காத்திருந்தாராம் எடப்பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன். அவரைப் பார்த்த கரிகாலன், அவருடன் 20 நிமிடங்களுக்கு மேல் அளவளாவி இருக்கிறார். அப்போது ’கரிகாலன், மணல் தொழிலை இப்போதும் நான்தான் கவனித்து வருகிறேன். உங்களுக்கெல்லாம் என்ன தேவையோ அதை வழக்கம் போல் செய்து தருவேன். கவலைப்படாதீர்கள்’ என்றெல்லாம் இளங்கோவனிடம் உரத்த குரலிலேயே சொன் னாராம்.''”
"செய்தித்துறை இயக்குனர் மோகன் மாற்றப்பட்டிருக்கிறாரே?''”
"செய்தித்துறையின் இயக்குநர் மோகன் ஐ.ஏ.எஸ். அசைக்க முடியாத சக்தியாக கோட்டை யில் கோலோச்சி வந்தார். இவரை அதிரடியாக செய்தித்துறையில் இருந்து மாற்றி, முதல்வரின் முகவரி எனும் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறது அரசு. இந்த நியமனத்தின் பின்னணியில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கிறது என்கிறார்கள் கோட்டைத் தரப்பினர். அதாவது, இவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் அரசின் கவனத்துக்கு சென்றதாம். குறிப்பாக, அரசு விளம்பரங்களை ஒதுக்குவதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த விளம்பர ஏஜென்சிகளுக்கே முன்னுரிமை கொடுப்பது, துறையில் பதவி உயர்வு வழங்க டீலிங் நடத்தியது என்றெல்லாம் புகார்கள் குவிந்தனவாம். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அரசின் உரையை முழுதாகப் படிக்காமல், தி.மு.க. அரசின் மீது புகார்களையும் வைத்துவிட்டுக் கிளம்பிய கவர்னர் ஆர்.என். ரவியை, இவர் விசுவாசத்தோடு பவ்வியமாக வணங்கி, இணை இயக்குநர் தமிழ் செல்வராஜ னுடன் அவர் கார்வரை சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் மாற்றல் உத்தரவு பற்றிய தகவல் மோகனுக்குக் கிடைத்த தாம். உடனே அவர் தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவையும், முதல்வரின் செயலாளர் முருகானந்தத்தையும் பார்த்திருக்கிறார். அவர்கள், அவரைக் கண்டித்து அனுப்பிவிட்டார்களாம்.''
"காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பற்றிய சர்ச்சை ஒன்று பூதாகரமாகுதே?''”
"தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த வின்சென்ட் என் பவர் தற்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து வருகிறார். வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக இவர் மீது ஒன்றிய அரசின் வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் புகார் கள் பறந்துள்ளன. இதுகுறித்து அமலாக்கத்துறை ரகசியமாக விசாரித்திருக்கிறது. அப்போது, கலெக்டரின் பெயரைப் பயன் படுத்தி அவர் ஏகத்துக்கும் சம் பாதித்துள்ள விபரம் கண்டறி யப்பட்டிருக்கிறதாம். இதற் கான ஆவணங்களும் வசமாக சிக்கியிருக்கிறதாம், இதை யறிந்த வின்சென்ட், "என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. மேலிடம் சொல்லித்தான் எல் லாத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். எல்லா வற்றையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்' என எகத்தாளமாக பேசி, சென்னை பக்கம் கையைக் காட்டி வருகிறாராம். இந்தத் தகவல் ஆட்சி மேலிடத்தின் கவனத்துக்கு இப்போது சென்றிருக்கிறதாம்.''€
"சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மர ணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, படப்பிடிப்பிற்கு லொக்கேஷன் பார்க்க இமயமலைப் பகுதிக்குச் சென்ற சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி, எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கி, அங்கிருந்த சட்லஜ் நதியில் விழுந்து மரணத்தைத் தழுவியிருக்கிறார். எனினும் அவர் உடலை உடனடி யாக மீட்க முடியவில்லை. காரணம், அந்தப் பகுதியில் ஆற்றில் விழுகிறவர்களின் உடலை, நீருக்குள் உள்ள பனிப்பாறைகளில் ஒளித்து வைத்துவிட்டு, அதை மீட்டுக்கொடுக்க, அதிக அளவில் பணம் கேட்கும் கும்பல்கள் அங்கே அதிகமாம். இதையறிந்த சைதை துரைசாமி, அந்த துயரத்திலும் நேரே ஸ்பாட்டுக்குச் சென்று, ஆற்றில் தேடுதலை நடத்துகிறவர்களுக்கு தினமும் தலா 10 ஆயிரம் வீதம் பணம் கொடுத்ததோடு, மகனின் உடலை மீட்டுக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்துதான் வெற்றியின் உடலை, ஒரு வாரத்திற்குப் பிறகு மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் மர்மம் இருப்பதாக அங்குள்ள காவல்துறையினரே கூறுகிறார்கள். இதேபோல் இங்குள்ள மேட்டுப் பாளையம் பகுதியிலும் ஆற்றில் குளிப்பவர்களை, நீருக்கடியில் இழுத்துச்சென்று சாகடித்து, பின்னர் உடலை மீட்டுத் தருகிற கும்பல்கள் இருக்கின்றன என்று கூறி அதிர வைத்திருக்கிறார் நடிகர் பாக்யராஜ். இதுபோன்ற க்ரைம்களைத் தடுக்க காவல்துறை தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்கள் பலரும்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சிவந்தி ஆதித்தன் பெயரைச் சூட்டவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள நாடார் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. இதை தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வழிமொழிந்து வருகிறார். இதற்கான கோரிக்கை மனுக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், அந்த விமான நிலையத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டவேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இது, நாடார் சமூகத்தினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.''