கைதி எண் 9658 கறுப்பு நிறத்தில் இருவர் -சி.மகேந்திரன்

ss

றுப்பு நிறத்தில் இரண்டு மனிதர்கள். ஆதி மனிதனின் ஆதி அடையாளமாய் கறுப்பு நிறத்தில் வந்தவர் நெல்சன் மண்டேலா. அதே கறுப்பு நிறத்தில் தென்குமரியை ஒட்டிய ஆதித் தமிழ் மண்ணில் வந்தவர் அய்யா நல்லகண்ணு.

அந்தக் கறுப்பு மனிதனையும், இந்தக் கறுப்பு மனிதனையும் என் மனத்திரை, வண்ணம் குழைத்து ஓவியமாய் வரைந்து பார்க்கிறது. இந்த முரட்டு உருவங்களில் எத்தனை மன ஒற்றுமை.

dd

மண்டேலாவின் கைதி எண் 46664. நல்லகண்ணு அய்யாவின் கைதி எண் 9658. இருவரும் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள். கைதுசெய்யபட்ட பின் கொடும் சித்ரவதையை சந்தித்தவர்கள். நல்லகண்ணு அய்யா

றுப்பு நிறத்தில் இரண்டு மனிதர்கள். ஆதி மனிதனின் ஆதி அடையாளமாய் கறுப்பு நிறத்தில் வந்தவர் நெல்சன் மண்டேலா. அதே கறுப்பு நிறத்தில் தென்குமரியை ஒட்டிய ஆதித் தமிழ் மண்ணில் வந்தவர் அய்யா நல்லகண்ணு.

அந்தக் கறுப்பு மனிதனையும், இந்தக் கறுப்பு மனிதனையும் என் மனத்திரை, வண்ணம் குழைத்து ஓவியமாய் வரைந்து பார்க்கிறது. இந்த முரட்டு உருவங்களில் எத்தனை மன ஒற்றுமை.

dd

மண்டேலாவின் கைதி எண் 46664. நல்லகண்ணு அய்யாவின் கைதி எண் 9658. இருவரும் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள். கைதுசெய்யபட்ட பின் கொடும் சித்ரவதையை சந்தித்தவர்கள். நல்லகண்ணு அய்யா கைது செய்யப்பட்ட போது, அவர் கையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று இருந்தது. இது இவரே தயாரித்த வெடிகுண்டு என்று போலீஸ் குற்றசாட்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நெல்சன் மண்டேலாவுக்கு 27 ஆண்டுகள் சிறை. அய்யா நல்லகண்ணு 1949ஆம் ஆண்டு, டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மாவட்டம் புலியூர் குறிச்சி கிராமத்தில் கைதுசெய்யப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வயது 21. இதன்பின் னர் தலைமறைவு காலம் ஒன்றரை ஆண்டுகள், விசாரணைக் கைதியாக ஒன்றரை ஆண்டுகள்.

திருநெல்வேலி செசன்ஸ் நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஆயுள் தண்டனை 12 ஆண்டுகளும் கைது செய்யும் போது வெடிகுண்டு வைத்திருந்தார் என்பதற் காக ஆறு ஆண்டுகளும் சேர்த்து மொத்தம் 18 ஆண்டுகள் தண்டனை. தலைமறைவுக் காலத் தையும், விசாரணைக் காலத்தையும் சேர்த்தால் மொத்தம் 21 ஆண்டுகள். ஆனால் வேறு சில காரணங்களால் இவர் முன்னரே விடுதலை செய்யபட்டுவிட்டார். நெல்சன் மண்டேலா ரோபன் தீவு சிறை, போல்ஸ்மூர் சிறை, விக்டர் வெஸ்டர்ச்டர் சிறை ஆகியவற்றில் வைக்கப் பட்டிருந்தார். நல்லகண்ணு அய்யாவும் நான்குனேரி சப்-ஜெயில், கொக்கிரக்குளம் ஜெயில், மதுரை சென்ட்ரல் ஜெயில் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்தார்.

மண்டேலே அவர்கள் காந்தியடிகளை வழிகாட்டியாகக் கொண்டவர். ஒரே ஒரு முறைதான் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எல்லோரும் வற்புறுத்தி யும் அடுத்தமுறை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதன்பின்னர் உலகளாவிய சேவை அரசியல் தொடங்கி விட்டது.

dd

அய்யா நல்லகண்ணு அவர்களுடன் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் உடன் பயணம் செய்திருக்கிறேன். அவர் செயலாளர் பொறுப்பிலிருந்த 12 ஆண்டுகளும் நான் துணைச் செயலாளராக செயல்பட்டி ருக்கிறேன். பதவி, அதிகாரத்திற்காக செய்யும் நாற்காலி சூழ்ச்சிகளைப் பார்த்து முகம் சுழித்தார். வாழ்நாள் முழுவதும் கட்சி அரசியலைத் தாண்டி, மக்கள் சேவை அரசியலில் அமைந்த அவரது ஈடுபாடு எத்தகையது என்பதை நானறிவேன்.

அய்யா நல்லகண்ணு அவர்களை மண்டேலாவோடு எனக்கு ஒப்பிடத் தோன்று கிறது. ஆனால் மண்டேலா இமயலை போன்றவர். அவரோடு அய்யா நல்லகண்ணு அவர்களை ஒப்பிடலாமா? என்ற தயக்கமும் எனக்குள் வரத்தான் செய்தது. மண்டேலாவை இமயம் என்றால், அய்யா நல்லகண்ணு அவர்களை பொதிகை மலை என்று கூறக்கூடாதா? என்ற எண்ணம் இதில் வெற்றி பெற்றுவிட்டது.

ss

அவரை உலகத்தின் மண்டேலா என்றால் அய்யா நல்லகண்ணுவை தமிழகத்தின் மண்டேலா என்று கூறமுடியும் என்று நினைக்கிறேன்..

இதனால்தான் அய்யா நல்லகண்ணு அவர்களை தென்னாப்பிரிக்காவின் மண்டேலாவோடு ஒப்பிட்டுப் பார்க்க தோன்றுகிறது.

(தொடரும்)

nkn041224
இதையும் படியுங்கள்
Subscribe