சிறைச்சாலைகளை, கைதிகளின் எண்கள்தான் ஆளுகை செய்கின்றன. நீண்டகாலம் வாழ்தலில் கைதியின் பெயர்கள் காணாமல் போய், கைதியின் எண்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அதிலும் சில புரட்சிக்காரர்களின் எண்களை மட்டும் சிறைச்சாலைகள் நீண்டகாலத்திற்கு ஞாபகத்தில் வைத்திருக்கின்றன. அப்படி ஞாபகப் பதிவில் உள்ள எண்களில் ஒன்றுதான் அய்யா நல்லகண்ணு அவர்களின் கைதி எண் 9658.
வரலாற்றின் இடைக்காலங்களில் சிறைகள் இருந்தன என்றாலும் சிறைக் கைதிகளுக்கு எண்கள் இல்லை. கைதி களின் உடலில் அடையாளங்களை உருவாக்கியிருந்தார்கள். அது பெரும்பாலும் நெருப்பால் சுட்டதாக இருந்தது. அந்த அடையாளங்கள் மேலைநாட்டின் சிறைகளில் tattoos, branding என்று கூறப் பட்டன. தொடக்க காலங்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமில்லை. அதற்கு அடையாளங்களே போதுமானதாக இருந்தது.
உலக அரசியலை யார் தங்கள் கொடிய அதிகாரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் சிறைச்சாலைகள் தேவைப்பட்டன. முதலில் அரசியல் கைதிகளை அடக்கி வைப்பதற்கான சிறைகளை உருவாக்கியவர்கள் மன்னராட்சி காலத்தில் பிரிட்டிஷ்காரர்களாகத்தான் தெரிகிறது.
"டவர் ஆஃப் லண்டன்' ((Tower of London) ) என்பது அரசியல் கைதிகளை நடுநடுங்கச் செய்யும் சிறைச்சாலை. 1078ஆம் ஆண்டிலே லண்டனில் தேம்ஸ் நதியை ஒட்டி கட்டப்பட் டது. போரில் தாங்கள் தோற்கடித்த அரச குடும்பத்தினரை அடைத்துவைக்கும் இடமாக இது அறியப்படுகிறது. இதிலிருந்துதான் ஆங்கிலேயர் அரசியல் கைதிகளை முத்திரை குத்தி கைது செய்யும் சட்டத்தையும், அதற்கான சிறைகளையும் உருவாக்கத் தொடங்கினர்
சிறை உருவாக்கத்தின் அடுத்த கட்டமாக, வரிசை எண்களை (Serial number) உருவாக்கிய தாகக் கூறமுடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சி (British Colonial Rule):19ஆம் நூற்றாண்டில் (1800-1900களில்), நவீன சிறை அமைப்புகளை உருவாக்க ஆரம்பித்தன. ஆங்கிலேயர் கைப்பற் றிய நாடுகள்தோறும் கைதிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிக் கொண்டே சென்றது. இது ஒரு பிரச்சனையாக எழுந்தபோதுதான் இந்த ‘வரிசை எண் முறை’ வந்து சேர்ந்தது.
முந்தைய காலங்களில் ஒரே பெயர், ஊரில் பாதி பேருக்கு இருந்தது. எல்லா நாடுகளிலும் இது இருந்திருக்கலாம். நம் நாட்டில், ஒன்று கடவுளின் பெயரை வைத்திருப்பார்கள் அல்லது முன்னோர்களின் பெயரை வைத்திருப்பார்கள். பலர் கூட்டம் கூட்டமாக ஒரே பெயரை வைத்திருந்தனர். கைதிகளின் எண்ணிக்கை கூடுதலாகப் பெருகிய காலங்களில் இது பல்வேறு குழப்பங்களை உருவாக்கின. குழப் பங்களைத் தவிர்ப்பதற்கு சிறைக்கூடங்களில் கைதி எண்கள் மிகவும் வசதியாக அமைந்தன.
இன்றுகூட, சிறைகளில் கைதி எண்களின் ஆதிக்கம் எந்த அளவில் அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள, சிறைச்சாலைகளை உற்றுக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு சிறையிலும் கைதி எண்கள் மட்டும் மதில் சுவர்களின் உயரத்தைத் தாண்டி வான்வெளிக்கு சென்று திரும்புகின்றன. கைதியின் எண் சொல்லி அழைக்கப்படும் ஓங்கி உயர்ந்த குரல்கள், சிறையின் மதில்சுவர்களில் பட்டு எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்.
சிறைவாழ்க்கை பின்னர் தனி சமூகமாகவே வளர்ச்சியடையத் தொடங்கிவிட்டது. இவர் களுக்கு உணவு, உடை, இருப்பிட பராமரிப்பு நிர்வாகம் தேவைப்பட்டது. நீதிமன்ற விசா ரணைகள், மருத்துவமனைகள், உடலுழைப்பு வழங்கும் தொழிற்கூடங்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த கைதி எண்கள் மட்டுமே சத்தம்போட்டு அழைக்கப்படுகின்றன. நாளடைவில் பெயர்கள் மறக்கப்பட்ட அந்த உலகத்தில், கைதிகள் தங்கள் பெயர்களை மறந்து தங்கள் எண்களை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள்.
கைதி எண் 9658. போராட்ட வாழ்க்கை யை அறிந்து கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு வரும் அவர் வாழ்ந்த கம்யூனிச வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும். தோழர் நல்ல கண்ணு ஒரு சிறந்த வாசிப்பாளர். தலைமறைவில் இருந்தவர். தலைமறைவில் ஒவ்வொரு கம்யூனிஸ்டும், மரணமும், சிறையும் எந்த நேரத்திலும் வரலாம் என்ற முடிவுக்கு வந்திருந்த காலம். சிறை என்றால் என்ன? கைதி என்பவர் யார்? சிறை வாழ்க்கையையும் கடினமான சித்திரவதைகளையும் எதிர்கொள்ளும் மனஉறுதியை எப்படி உருவாக்கி கொள்வது என்பதை அறிவுப்பூர்வமாக அறிந்திருந்தார்கள்.
கைதி எண் 9658-ன் மனஉறுதி சிறைச்சாலை யில் புகழ் பெற்றிருந்தது. காவல்துறையின் விசா ரணைக் குறிப்புகளிலும், சிறைக் குறிப்புகளிலும் இதையறிந்த சிறை அதிகாரிகள் இவரை வியப்போடு பார்த்திருக்கிறார்கள். சக அரசியல் கைதிகளிடம் இவருடைய மனஉறுதி அடிக்கடி பேசப்பட்டு வந்தது.
லஞ்சமும், பதவி சுகத்திற்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டவர்கள் நிறைந்த இன்றைய சூழலில் இவரிடம் அமைந்த மன உறுதி, என்னையும் பல நேரங்களில் அதிர்ச்சியுற வைத்திருக்கிறது. இந்த மனஉறுதிக்கு நேர்மை யான கம்யூனிஸ்டாக நின்று தலைமறைவு வாழ்க்கையிலும் கொடும் சித்ரவதை காலங் களிலும் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்தான் காரணம் என்பதை பின்னர் புரிந்தகொண் டேன். அந்த உறுதிப்பாடு நூறு வயது வரை வாழ்ந்து வருவதை தமிழகத்தின் பெருமையாக கருதி மகிழ்ச்சி கொள்ளலாம்.
சிறையில் இருப்பவர்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றவாளி களாக ஆக்கப்பட்டவர்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியுலகுக்கு அம்பலப்படுத்திய வர்கள் கம்யூனிஸ்டுகள். சிறைகள் ஆளும் வர்க்கத்தின் அழுகிய முடைநாற்றம் கொண்ட, மூடி மறைக்கப் பட்ட பகுதி என்பதை முதலில் வெளிப் படுத்திய ஒரு நூறு இலக்கியங்களை சிறைக் குள் இருந்த கம்யூனிஸ்டுகள் எழுதிவிட்டார் கள்.
அய்யா நல்லகண்ணுவிடம் நான் பெற்றுக்கொண்டவை மிகமிக அதிகம். அந்தமான் செல்லுலார் சிறை பற்றிய விபரங்களை அவர் என்னிடம் பலமுறை உணர்வுப்பூர்வமாக விவரித்திருக்கிறார். நூல்களை வாசிக்கத் தூண்டுதல் தந்துள்ளார். எனக்கு ஏற்பட்ட நெருக்கடி நேரங்களில் அச்சமற்ற இவர்களின் வாழ்க்கை, என் வாழ்க்கைக்கு எப்படியெல்லாம் கை கொடுத்திருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கிறேன். மனதுக்குள் ஒரு புதிய உற்சாகம் பிறக்கிறது.
அந்தமான் ‘செல்லுலார்’ சிறை அடங்க மறுக்கும் மாவீரர்களை சிறுகச் சிறுக கொன்று முடிக்கும் கொலைக்கூடம். அவர்களின் கொண்டாட்டம் விடுதலையில் இல்லை. ஒரு சிறிய சூரியஒளியின் வெளிச்சத்தைப் பார்ப்பதில் இருந்தது. இங்குள்ள ‘செல்’ அறைகளை ள்ர்ப்ண்ற்ஹழ்ஹ் ஸ்ரீர்ய்ச்ண்ய்ங்ம்ங்ய்ற்ள் என்கிறார்கள். இதன் அர்த்தத்தைத் அகராதிகளில் தேடிப் பார்க் கிறபோதுதான் புரிகிறது. மனிதத் தொடர்புகள் அனைத்தும் இழந்து, வெளிச்சமும் காற்றுமில்லாத கூட்டுக்குள் வாழ்ந் திருக்கிறார்கள் என்று. உயிருள்ள மனிதர்களின் சுடுகாடு அது. இருள் மட்டுமே அங்கு வாழ்க்கை நடத்த முடியும்.
‘செல்’ நீளம் 12 அடி, அகலம் 6 அடி. ஒரு ஆள் உள்ளே நுழைவதற்கே சிரமப்படும் வாசல். ஏழு பாகங்களாக சிறை பிரிக்கப்பட்டு, இதில் 698 கைதிகளின் ‘செல்கள். அமைக் கப்பட்டிருந்தன. ஆனால் இத்தனை பாதுகாப்பு இருந்தும் இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இங்கு தன் பெயரை சொல்லிக் கொள்ள உரிமை மறுக்கப்பட்ட கைதி எண்கள்தான் தங்கள் விரல்களால் இந்திய விடுதலைப் போராட் டத்தின் முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருந்தனர்.
(தொடரும்)