(60) அதிகாரிகளின் உத்தரவு
வலிமை பொருந் திய இரும்புக் கம்பிகளை விட, பலம் பொருந்திய பாதுகாப்புச் சுவர்களின் கட்டமைப்பை விட, சிறை அதிகாரிகளின் உத்தரவுகள் சிறைச்சாலை களில் முதன்மையான தாகக் கருதப்பட்டது. அவர்களின் உத்தரவுக்கு மாற்று என்ற ஒன்று அங்கு இருக்கவில்லை. ஆனால் இதற்கு மாற்றை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கை சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகளிடமிருந் தது.
சுதந்திரத்தையொட் டிய காலத்தில், புதிதாக பொறுப்பேற்றிருந்த ஆட்சியாளர்களுக்கு சில நெருக்கடிகள் இருந்தன. காலனிய ஆட்சிமுறைக் கும் சுதந்திரம் பெற்ற ஒரு தேசத்தின் ஆட்சி முறைக்கும் பெரிய வேறு பாடுகள் இருந்தன. சுதந் திரம் பெற்றுக்கொண்ட நாடுகள் புதிய அரசியல் சட்டத்தின் தன்மைக் கேற்ப தங்கள் ஆட்சி முறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். சிறையில் நடைபெறவேண்டிய திருத்தங் களும் அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் எதார்த்த நிலவரம் வேறுவிதமாக இருந்தது
தங்களுடைய குறைகள் எதையும் கைதிகள் நேரடியாக சிறை அதிகாரிகளிடம் சொல்லக் கூடாது. மீறி யாராவது தங்கள் குறைபாடுகளை அதிகாரிகளிடம் சொன் னால் அது மிகவும் தண்டனைக்குரியது. மிகவும் மோசமான சித்ரவதைகளுக்கு உட்படுவார்கள். தோழர் நல்லகண்ணு இதைப்பற்றி பல தகவல்களை என்னிடம் குறிப்பிட்டிருந்தாலும், முழுத் தகவல்களை தோழர் எம்.வி.சுந்தரம் எழுதிய விடுதலைப் போராளியின் வாழ்க்கைப் பயணம் என்னும் நூலில் தெரிந்துகொண்டேன். இதிலுள்ள சில முக்கிய பகுதிகளை இங்கு பகிர்ந்து கொள்வது அவசியம் என கருதுகிறேன்
அந்த நூலில் "இதற்கு முன்னர் போலீசா ரால் பிடிக்கப்பட்டு தப்பி ஓடியவன் நான். 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நான் எதிர்பாராமல் மீண்டும் அகப்பட்டுக் கொண்டேன். என்னைப் பிடித்த காவல்துறை யைச் சார்ந்தவர்களுக்கு, நான் யார் என்பது தெரிந்திருக்கவில்லை. எனக்கு இது கொஞ்சம் நிம்மதியையளித்தது. விருதுநகர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன். அங்கு என்னை விசாரித்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் பெயர் பவானந்தம். அவர் ஒரு ‘ரிஜிஸ்டரை’ கையில் எடுத்தார். அதி லுள்ள குறிப்புகளையும், என்னையும் ஒப்பிட்டுப் பார்த்தவர், ஒரு நிமிடம் செயலற்று அமர்ந்துவிட்டார். பின்னர் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் காவல்துறையால் தேடப்பட்டு வந்த பிரபல கம்யூனிஸ்டு என்பதில் ஏற்பட்ட அதிர்ச்சி என்பதை புரிந்து கொண்டேன்'’ என்கிறார்.
அதன்பின்னர் அவரது விவரிப்புகள் நம்மை பெரிதும் சங்கடப்படுத்துகிறது. ‘என் கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டி னார்கள். இதை இரண்டையும் இணைப்ப தற்கு ஒரு சங்கிலி உண்டு. இதனை கங்ஹற்ண்ய்ஞ் ஸ்ரீட்ஹண்ய் என்பார்கள். என்னால் சங்கிலியை தூக்கிக்கொண்டு நடந்துசெல்ல முடியவில்லை. இதற்கு முன்னர் காவல்துறை தாக்கியதில் தனது பற்களில் ஒன்று உடைந்துவிட்டது. கண் கண்ணாடி உடைந்துவிட்டது’ என்கிறார். தோழர் நல்லகண்ணு உள்ளிட்டவர்கள் கங்ஹற்ண்ய்ஞ் ஸ்ரீட்ஹண்ய் போட்டு அழைத்து வரப்பட்டிருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
"என்னை போலீஸ் வேனில் உட்கார வைத்து விட்டு, இவர்கள் எனக்கு 15 நாட்கள் ‘ரிமாண்டு’ வாங்கிக்கொண்டு வேனுக்கு வந்தார்கள். என்ன நடக்கிறது என்பதை தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது. நீதிமன்றம் நீதி வழங்கும் இடமா? போலீஸ்காரர்களின் கூடாரமா?’ என்பதில் கொந்தளித்துவிட்டேன்'’என்கிறார். "கம்யூனிஸ்டு கட்சி வாழ்க' என்று முழக்கமிட தொடங்கினேன். முழக்கமிட முழக்கமிட போலீஸ் வேனைச் சுற்றி கூட்டம் கூடத் தொடங்கியது. என்ன செய்வது என்று என்று தெரியாமல் போலீஸ் காரர்கள் திணறிப் போனார்கள்'’ என்கிறார்.
நடந்தது இதுதான்... என்னைத் தாக்கிய போலீஸ், அந்த தடயங்கள் மாஜிஸ்திரேட்டுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் என்னை வேனில் அமரவைத்து ரிமாண்ட் உத்தரவை பெற்றுவந்தார்கள். இவர்களின் இந்த மோசடியை அம்பலப்படுத்திக் காட்டவே நான் முழக்கமிட்டேன். மாஜிஸ்திரேட்டுக்கு இந்த சத்தம் கேட்கிறது. அவர் என்னை அழைக்கிறார். காயங்களைப் பதிவு செய்துகொள்கிறார். இவ்வாறு நான் செய்வேன் என்பதை போலீஸ் எதிர் பார்க்கவில்லை. அவர்கள் கோபப்படுகிறார்கள். ஆனாலும் எதுவுமே செய்ய முடியவில்லை. அதன் பின்னர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன்.
‘ஆனால் சிறையில் இதைவிட மிகவும் மோசமான கொடுமையை நான் சந்தித்தேன்’ என் கிறார். இதை வாசித்தபோது அவருக்கு நிகழ்ந்த இந்தக் கொடுமை என்னை கண்கலங்கச் செய்கிறது. ஒவ்வொரு சிறைப்பகுதி யிலும் கைதிகளை, எண்ணி மாலை 6 மணிக்கெல்லாம் அடைத்துவிடுவார்கள். சிறையில் அடைக்கும் முறையை ‘பைல்’ என்று சொல்லு வார்கள். அன்று எல்லோரையும் என் பிளாக்கில் அடைத்துவிட்டார்கள் . என்னை மட்டும் வெளியே நிற்க வைத்தார்கள். "ஏன் நிற்க வைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை ஏதோ செய்யப் போகி றார்கள் என்பதை மட்டும் நான் தெரிந்துகொண்டேன். சிறை அறையின் ஒவ்வொரு கதவும் பூட்டப்படும் சத்தம் எனக்கு கேட்கிறது' என்கிறார்.
"வார்டர்களும், கன்விக்ட் வார்டர்களும் கையில் தடியோடு ஓடி வருகிறார்கள். உடம்பு முழுவதும் அடி விழு கிறது. தலையில் அடி விழாமல் கையை வைத்து மறைத்துக் கொள்கிறேன்' என்கிறார். இந்தக் கொடுமையான சிறைத்தண்டனையை இவருக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, நமக்கு வேறு சில தகவல்கள் கிடைக்கின்றன. அன்று காலை இவர் செய்த, ஒரு செயலுக்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது.
அன்று காலை நேரம் கைதிகளை அதிகாரிகள் பார்வையிடும் நேரம். அதில் முதலில் மருத்துவ அதிகாரி நடந்து செல்கிறார். அடுத்து மதுரை ஜெயிலர் கலீப் சாயப்பு, இதை அடுத்து சிறைக்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ள சூப்பிரெண்டு ஜெரால்டு வருகிறார். சிறையின் இந்தப் பகுதி முழுவதும் ஒரே அமைதி. தோழர் எம்.வி. சுந்தரம் கைதிகளோடு கைதியாக வரிசையில் நின்றவர், கடைசியாக வந்த சூப்பிரெண்ட்டிடம் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அந்தக் காகிதத்தில் சிறைக்கைதிகளுக்கு என்ன, என்ன குறைபாடுகள் இருக்கின்றன என்று எழுதப் பட்டிருக்கிறது. அவரைச்சுற்றிப் புடைசூழ வந்த சிறைப் பரிவாரங்கள் திரும்பிப் பார்க்கின்றன. இது சிறையின் சட்டதிட்டங்களுக்கு எந்தவிதத்திலும் எதிரானது அல்ல. ஆனால் இதற்கு முன்னர் இவ்வாறு யாருமே செய்யத் துணிந்ததில்லை. பிறர் செய்யத் துணியாததை இவர் செய்தார் என்பதுதான் இவர் மீதான கோபத்திற்கு காரணம். ஆனால் இவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கவில்லை. இவர் கம்யூனிஸ்டு என்பதும், இவர்களின் நியாயத்திற்காக போராடும் வலிமை யாராலும் அளந்துபார்க்க முடியாதது என்பது புரிந்திருக்கவில்லை..
ஒரு கோரிக்கையை நேரில் கொடுத்தார் என்பதற்கே இவ்வாறான தண்டனை உண்டென்றால் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, நம்மால் யோசித்துப் பார்க்க முடிய வில்லை. இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி வரலாறு உண்டு. அதில் ஒன்றை தோழர் நல்லகண்ணு சொல்லியபோது கற்பனை செய்து பார்க்க முடியாத உள்ளடக்கத்தை அது கொண்டிருந்தது.
(தொடரும்)