d

(45) தோழர் அஜாய் கோஷ்

சித்ரவதைகள் ஆளும் வர்க்கத்தின் அருவெறுப்புமிக்க பரிசோதனை களாகவே தோன்றுகின்றன. காலந்தோறும் விஞ்ஞான அடிப்படையில் இவை வளர்த்தெடுக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க வைக்கும் சித்ரவதை வந்தது. இன்றைய கணினி உலகில் எத்தனையோ வகையிலான சித்திரவதை கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அவை அனைத்தும் மூளைக்குள் நுழைந்து, ரகசியங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. இதனால் மனித மூளை என்னவாகும்? இதில் அப்பாவிகள் இருக்கலாம் என்பதைப் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை.

Advertisment

ஆனால் அந்தக் காலத்தின் சித்ரவதைகள் முரட்டுத்தனமானவை. இப்பொழு துள்ள மனித உரிமை குறித்த சர்வதேச சட்டங்களோ உள் நாட்டு சட்டங்களோ அப்பொழுது தோன்றவில்லை. மனித உரிமையைப் பற்றி பேசுவற்கு நீதிமன்றத்திலும் இடம் இல்லை. போலீஸ்காரர்கள் தாங்கள் எதையும் செய்வதற்கு உரிமை பெற்றவர்களாக நினைத்துக்கொண் டார்கள். கம்யூனிஸ்டுகளின் உயர் தியாகங்கள், சித்ரவதைகளிலிருந்துதான் பிறப்பெடுக் கின்றன. அவர்களின் மன வைராக்கியம், சித்ரவதைகளைக் கண்டு அச்சமற்று இருப்பதிலிருந்தே ஆரம்பமாகிறது. சித்ரவதை, தியாகம் அர்ப்பணிப்பு என்றவுடன் நினைவுக்கு வருவது பகத்சிங் சிறை வாழ்க்கை. விசா ரணைக்கென்று இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.

அஜாய் கோஷ் மருத்துவக் கல்லூரி மாணவர், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தலைமறைவு கம்யூனிஸ்டாக மாறியவர். அவர் பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராகவும் செயல்பட்டார். பகத்சிங்கு மறைவுக்குப் பின்னர் பல்வேறு விபரங்களை இவரது நூல்தான் வெளியுலகத்திற்கு கொண்டுபோய் சேர்த்தது. அந்த நூலின் பெயர் ‘"பகத்சிங்கும் அவரது தோழர்களும்!'. கம்யூனிஸ்டுகளின் உயர் தியாகத்தை மீண்டும் மீண்டும் இந்த நூல் ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.

தலைமறைவு இயக்கத்தினர் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? எப்படி செயல்படுகிறார்கள் என்று ஆங்கில ஏகாதிபத்தியத்தால் கண்டறிய முடி யாத பல நூறு இளைஞர்கள் தோன்றிக் கொண்டிருந்த காலம். இவர்கள் ஆட்சியைத் தூக்கி எறிவதற்கு களம் அமைத்து தலைமறைவாக செயல்பட்டுக்கொண்டிருந் தார்கள். இதில் பஞ்சாப் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அன்றைய காலத்தின் ஒரு சந்திப்பை பற்றி அஜாய் கோஷ் எழுதுகிறார். ‘"மீசை முளைத்தும், முளைக்காமலும் இருந்த அந்த இளைஞனைப் பார்த்தேன்' என்கிறார். அவர் அப்பாவித்தனமான இருந்தார் என்றும் எழுதத் தொடங்குகிறார். .

Advertisment

ss

‘என்னை அறியாமலேயே மருத்துவக் கல்லூரி மாணவன் என்ற நினைப்பு எனக்கு இருந்திருக்க வேண்டும். அந்த நினைப்பு பூர்ஷ்வா கல்வியால் வந்த அகந்தை. இப்பொழுது அதற்காக மிகவும் வெட்கப்படு கிறேன். அன்று அந்த இளைஞனை நான் கொஞ்சம் ஏளனத்துடன் பார்த்தேன். புரட்சிகரப் பணி என்பது மிகவும் நெருக்கடியானது. அதை புத்திசாலித்தனமாக நிறைவேற்ற வேண்டும். இதை, இந்த அப்பாவியால் எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்று நான் நினைத்தேன் என்கிறார். ஆனால் இன்று பகத்சிங் என்ற அந்த இளைஞனின் பெயர் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் முழுவதும் சூரிய வெளிச் சத்தைப் போல அறியப்பட்ட பெயர். அடிமைப்பட்ட நாடுகள்தோறும் உச்சரிக்கப்படுகிற பெயர்.

இன்று நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறார் என்ற தகவல் கிடைக்கிறது. இரவு தூக்கம் வரவில்லை. சிந்தனை முழுவதிலும் பகத்சிங் நடமாடிக்கொண்டிருக்கிறார். அவரை தவறாக மதிப்பீடு செய்ததற்காக, மனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. அன்று பார்த்த அந்த அப்பாவி இளைஞன் அல்ல, இன்று நான் பார்க்கப்போகும் மாவீரன். அவனுக்கு நிகர் அவன்தான் என்ற மனம் சொல்லிக் கொள்கிறது. கண்கள் அவன் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆனால் நடந்ததை என்னால் சகித்துகொள்ள முடியவில்லை. அதை என் கண்கள் காண மறுத்துவிட்டன. அவர் ‘ஸ்ட்ரெச்சரில்’ கொண்டுவரப்படுகிறார். சித்ரவதையின் ரத்தசாட்சியாக அவர் உடலில் உயிர் மட்டும் இருக்கிறது. என்னால் பார்க்க முடியவில்லை முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன். அங்கே ஒரு காட்சி. பகத்சிங்கை பாதுகாப்பாக அழைத்து வந்த காவல்துறை அதிகாரி கம்பீரமானவர். அவர் கீழே குனிந்து. தன் கண்களில் வெளிப்படும் கண்ணீரை துணி ஒன்றால் துடைத்துக் கொள்கிறார். இந்தியா முழுவதும் இளம் கம்யூனிஸ்டுகள் மீதான சித்ரவதைக்கு இது ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கூறிவிடலாம்.

சித்ரவதைகளில் சிக்கிச் சிதைந்த மாவீரர்களின் கதை, ஒவ்வொன்றாக ஞாபகத் திற்கு வருகிறது. தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்கள் சந்தித்த சித்ரவதை களை இப்பொழுது நினைத்துப் பார்க் கிறேன். கற்பனை செய்து பார்க்க முடிய வில்லை. அத்தனை சித்ரவதைகளையும் மன உறுதியுடன் சந் தித்தனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியுலகம் இன்னமும் சரிவர அறிந்திருக்கவில்லை. இன்னமும் இவை அனைத்தும் சக தோழர்களுக்குக்கூட தெரியாமல் போய்விட்டது.

இவர்களின் சித்ரவதைகளைத் தாக்குப்பிடிக்கும் திறன் பார்த்து உண்மையிலேயே பயந்து போனார்கள். இன்னமும் சொல்லப் போனால், கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறு இந்த சித்ரவதை ரத்தத்தினால் எழுதப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிகாரத்தின் கூப்பாடுகளை வழிபட்டுக் கொண்டிருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது..

தோழர் நல்லகண்ணு மேல் தொடுக்கப்பட்ட சித்ரவதைகளை இதனுடன் ஒப்பிட்டுச் சொல்ல முடியும். அவர்மீது தொடுக்கப்பட்ட சித்ரவதைகளைப் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. வாட்டசாட்ட உடல். அதுவே போலீஸ்காரர்களுக்கு தனியாக கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும். அந்த உடல் வலிமை தங்களுக்கு இல்லையே என்ற பொறாமையா? புரியவில்லை.

ss

அன்றைய சித்ரவதைகள் மிகவும் முரட்டுத்தனமானவை. கால்களை நீட்டி வைத்து பூட்ஸ் காலால் ஏறி மிதிப்பது. மூளை நரம்புகளில் வலி எடுக்க வேண்டும் என்பதற்காக கால் பாதங்களில் தடிகளால் தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருப்பது போன்றவை. இந்த கொடிய செயலால் பலருக்கு மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதும் உண்டு. கால், கை நகங்களில் ஊசி ஏற்றுதல் போன்ற கொடிய வதைகள் நிகழ்ந்துகொண்டேயிருக் கும். மற்றொரு பிரச்சினையும் இவருக்கு இருந்தது. அவரது உடலமைப்பு அடர்ந்த தலை முடியையும், வலிமை மிகுந்த மயிர்க்கால்களையும் கொண்டிருந்ததால் வந்த பிரச்சினை.

தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். கிழிருந்து நெருப்பைக் கொளுத்துகிறார்கள். அதில் புகையிலை போட்டதால் அந்தப் பகுதி முழுவதும் நெடியேறுகிறது. யாராலும் அந்தப் பகுதியில் நிற்க முடியவில்லை. ஒரே நெடி. சுவாசத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்ட தோழரின் சுவாச உறுப்புகள் எத்தகைய திக்குமுக்காடலை அடைந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. அதையும் அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது. அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிப் போன ஒரு செய்தியும் இதில் இருக்கிறது.

இவரது மீசை முடிகள் ஒவ்வொன்றாகப் பிடுங்கத் தொடங்கினார்கள். மீசையின் ஒவ்வொரு முடியையும் பிடுங்கியபோது, மரண வலியின் உச்சத்திற்கே இவர் சென்று திரும்பியிருக்க வேண்டும். எனக்கும் இதில் ஒரு அனுபவம் கிடைத்தது. இதைப்பற்றி சொல்லும்போது தனக்கு நடந்ததாகக் காட்டிக்கொள்ள தயங்குவார். யாருக்கோ நடந்த ஒன்றைப் பற்றி சொல்வதைப் போல, தோழர் கூறியதை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். இது ஒரு அனுபவம் அல்லவா? தன்னல மறுப்பு என்பது எப்படியெல்லாமோ இருப்பதை அறிந்துகொண்டேன்.

(தொடரும்)